Sunday 24 May 2009

எனது வலைப்பதிவு மாயமானது இருந்தும் புதிய வலைப்பதிவில் உங்களை சந்திக்கின்றேன் பல புதிய விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன் அத்தோடு எனது முந்திய பதிவுகளும் உங்களை வந்து சேர இருக்கின்றது எனது முந்திய பதிவின் சில கவிதைகள் புதிய வலைப்பதிவில்....
நான் ஒருபோதும்
மரணத்துக்கு பயந்தவனல்ல
இன்று பயப்படுகின்றேன்.
நான் மரணித்தால் - என்
இதயத்திளிருக்கும் - உன்
நினைவுகளும்
என்னுடன் சேர்ந்து
மரணித்துவிடும் என்பதால் .
*************************************************************************************
உன் இதயத்தில்
ஓரிடம் கேட்டு
தவமிருந்தேன்
பலகாலம்
இன்றுதான்
அறிந்தேன்
உன் இதயம்
உன்னிடம்
இல்லை என்று............
**************************************************************************************
என் கவிதைகள்
பிடிக்கும்
என்றுசொன்னாய்
தினமும் எழுதினேன்
அத்தனையையும்
பத்திரப்படுத்தினாய்
இன்றுதான்
அறிந்தேன் -நி
பத்திரப்படுத்தியது-உண்
காதலனுக்கு
கொடுப்பதறகாகவேன்று-இன்று
என் பேனா
எழுத மறுக்கிறது
உன் இதயத்தில்
நான் இல்லை
என்பதனால்.
*************************************************************************************

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 comments: on " "

Sinthu said...

காதல் கவிதையுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள்... வாழ்க.. கவனம்.. காதல் அனுபவம் இருக்கிறதா?

Admin said...

உங்கள் வருகைக்கு நன்றி சிந்து தொடருங்கள்... .

Admin said...

காதல் அனுபவம் உள்ளவங்கதானா காதல் கவிதல் எழுதலாம் எல்லாம் நண்பர்களை பார்த்து அறிந்தவைதான்...

Post a Comment