Sunday 31 May 2009

கிறுக்கல்கள்...

எனது தொலைந்துபோன வலைப்பதிவில் நான் பதிவு செய்த கவிதை ஒன்று புதிய வலைப்பதிவில் மீண்டும் உங்களுக்காக...

ஏன் இந்தக்
கவிஜர்கள் எல்லாம்
பெண்களின் கண்களை
பற்றி பாடுகிறார் என்று
யோசித்த நாட்கள் பல
இன்று நானே - உன்
கண்களை பற்றி
கவிதை எழுதுகிறேன் - உன்
கண்களினால்தான் - நான்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

பெண்களின் கண்களில்
இத்தனை சக்தி
இருப்பதை இன்றுதான்
உணர்கிறேன்
உன்னை காதலிப்பதால்

இந்த உலகத்தில்கூட
ஒரு பெண்ணின்
கடைக்கண் பார்வை
பட்டு இருக்கிறது
போலும் இவ்வளவு
வேகமாக சுற்றுகின்றதே...

நான் நினைக்கிறேன்
இரவுகள் கூட
இருளாக இருப்பது - நீ
தூங்கி விடுவதால்
உன் பார்வை
படாததனால்தானோஎன்னவோ...

எனக்கு ஒருஆசை
இருக்கிறதுஉன்னை
பாலை வனத்துக்கு
அழைத்து செல்லவேண்டும்
பாலைவனம்கூட
பசுமையாகிவிடுமல்லவா...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "கிறுக்கல்கள்..."

Suresh said...

மிக அழகான கவிதை

Admin said...

வாழ்த்துக்களுக்கு நன்றி சுரேஷ்...
தொடருங்கள்.....

Post a Comment