Thursday 4 October 2012

மதச் சண்டை போடும் மதம் பிடித்தவர்களே சண்டையை நிறுத்துங்கள்


இது என்னுடைய 500வது பதிவு

மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் வலைப்பதிவுகளை கடந்த 10 நாட்களாக வலம் வந்தேன். பதிவுலகத்தில் என்ன நடக்கின்றது என்பதனை அறிந்துவிட்டத்தான் எனது 500 வது பதிவை எழுதவேண்டும் என்ற எண்ணத்தில் 10 நாட்களும் பதிவுலகை வலம் வந்தேன். நீண்ட நாட்களாக அரசியல் தவிர்ந்த ஏனைய பதிவுகளை எழுதவில்லை என்பதனால் நிறைய விடயங்களை எழுதவேண்டும் எதனை எழுதுவது என்ற திண்டாட்டமும் இருந்தது.

வலைப்பதிவுகளைப் பார்க்கின்றபோது எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன். மதச் சண்டைகள் ஓய்ந்தபாடில்லை மதத்துக்காகச் சண்டை மதச்சண்டை நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது.. இதில் வேடிக்கை என்னவென்றால் அன்று கிழக்கிலே தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகள் பற்றியும் தமிழ் பெண்களை முஜஸ்லிம் இளைஞர்கள் காம இச்சைகளை தீர்த்துக் கொள்ள பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆதாரங்களுடன் எழுதியிருந்தேன் அவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிராக நான் எழுதியதற்கு முதன் முதலில் போர்க்கொடி து+க்கியவர்களே இன்று இஸ்லாமிய மதத் தீவிரவாதிகளுக்கு  எதிராக மதச் சண்டை செய்கின்றனர்.

மதங்கள் புனிதமானவைவதான் ஆனால் சில மத வெறியர்கள் மதத்தைவைத்து மதவெறி பிடித்து அலைகின்றனர் என்பதே உண்மை. 

இதில் இஸ்லாம் மட்டுமல்ல அனைத்து மதத்திலும் மதவாதிகள் இருக்கின்றனர். ஆனாலும் இஸ்லாத்தில் மத தீவிரவாதிகள் அதிகம் என்றுதான் என்னுள் தோன்றுகின்றது. அமேரிக்காவில் இஸ்லாத்திற்கு எதிராக ஒரு திரைப்படம் வெளியிடப்படுகின்றது என்றால். எதற்காக இலங்கையில் வீதியால் செல்லும் வாகனங்களுக்கு கல்லெறிய வேண்டும். ஒருவருக்கு மத சுதந்திரம் இருக்கலாம் ஆனால் அது இன்னொருவரின் மூக்கில் கை வைக்கும் அளவிற்கு இருக்கக்கூடாது.

வலைப்பதிவில் எழுதுவதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன அவற்றை எழுதலாம் வெறுமனே மத வெறியர்கள் போல் சண்டை பிடிப்பதை விட்டுவிடுங்கள். ஒருசிலர் மதத்தை வைத்து வலைப்பதிவில் சண்டை பிடிப்பது நல்ல விடயமல்ல. பல இணையத்தளங்கள் மதம் சார்ந்து எழுதுகின்றன அவை இவ்வாறு சண்டை பிடிப்பதாகத் தெரியவில்லை. ஒருசில இஸ்லாமிய நண்பர்கள் இஸ்லாமிய மதம் சார்ந்து எழுதுகின்றோம் என்று ஏனைய மதங்களையும் சாடுவது தவறானது. 

இந்து மதம் பற்றி பலர் எழுதுகின்றனர் அவர்கள் இஸ்லாத்தை சாடுகிறார்களா? இல்லையே. நான் இந்து மதத்தை அதிகம் நெசிப்பவன் என்னாலும் இந்து மதத்தை முன்னிலைப்படுத்தி ஏனைய மதங்களை சாடி எழுத முடியும் ஆனாலும் ஏனைய மதங்களையும் நேசிக்கின்றேன். 

மதத்தை வைத்து வலைப்பதிவுலகில் சண்டை பிடிப்பவர்கள் மதச் சண்டைகளை நிறுத்துங்கள் 

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

5 comments: on "மதச் சண்டை போடும் மதம் பிடித்தவர்களே சண்டையை நிறுத்துங்கள்"

Angel said...

தம்பி சந்ரு
ஐநூறாவது பதிவிற்கு வாழ்த்துகள் ..

திண்டுக்கல் தனபாலன் said...

தானாக மாறினால் தான் உண்டு...

500 - மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

pravin said...

nalla பதிவு nanpare.

pravin said...

nalla பதிவு nanpare.

மயில்வாகனம் செந்தூரன். said...

500 aavathu pathivukku vaazhththukkal.... /americavil movie veliyiddaal srilankavil road aal pogum oru vaaganaththukku ean kallu erivaan?/ sinthikka vaichchiddeenga boss...

Post a Comment