Monday 20 December 2010

கடவுளின் பெயரால் ஏமாற்றப்படுகின்றோமா?

இன்று சிலர் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆசாமிகளென்றும் மந்திரவாதிகளென்றும் பல விதத்திலே மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

இதன் காரணமாக கடவுள்மீது மக்களுக்கிருந்த நம்பிக்கை குறைந்து கொண்டு வருகின்றது.

இது ஒருபுறமிருக்க அண்மைக் காலத்திலே இடம் பெற்ற சில சம்பவங்களைப் பார்க்கின்றபோது.... என்னவென்று சொல்லத் தெரியவில்லை. நாம் ஏமாற்றப் படுகின்றோமா அல்லது உண்மையாகவே  இவை எல்லாம் நடக்கின்றனவா என்று எண்ணத் தோன்றுகின்றன.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே கடவுள் அதிகமாக நடமாடுகின்றார் போன்று இருக்கின்றது. பல இடங்களிலே பல சம்பவங்கள் இடம் பெற்றிருக்கின்றன. மரத்தில் பால் வடிதல் பிள்ளையார் வடிவில் மரக்கிளை பிள்ளையார் வடிவில் மாங்காய் வீட்டிற்குள் தங்கத்தாலான சிலை தோன்றுதல் என்று பல சம்பவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இவற்றிலே சில சம்பவங்கள் நம்பக்கூடியதாக இருப்பினும் பல சம்பவங்கள் மனிதர்களை முட்டாள்களாக்கும் சம்பவங்களாக இருக்கின்றன. 

சாமியார்கள் காலம் மாறி இப்போ மனிதக் கடவுளர்கள் காலம் வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. பலர் தெய்வங்களாக மாறி தெய்வம் ஆடி கட்டுச் சொல்லுகின்ற நிலை காணப்படுகின்றது. இதில் எந்தளவில் உண்மை இருக்கின்றதோ தெரியவில்லை.

அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள்.....

இரவு ஏழு மணியளவில் ஒரு வீட்டை நோக்கி கூட்டம் கூட்டமாக எல்லோரும் சென்று கொண்டிருந்தனர். என்ன என்று விசாரித்தபோத. ஒரு வீட்டிலே சாமி அறையில் ஜந்து தலை நாகம் படமெடுத்து ஆடிய நிலையில் ஆதி பராசக்தி அமர்ந்திருக்கிறார். அதனை பார்க்கவே ஓடிக்கொண்டிருந்தனர். 

நானும் பார்க்கலாமே என்று போனேன் சனக்கூட்டமாக இருந்தது. உள்ளே சென்றேன். ஆதிபராசக்தியின் படம்தான் என் கண்ணுக்கு தெரிந்தது. எல்லோரும் செல்லிடத் தொலைபேசியை வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தொலைபேசியின் வீடியோவில்தான் தெரிகிறது என்று சொன்னார்கள். பல தொலைபேசிகளில் பார்த்தேன். சாமி அறையில் வைத்திருக்கின்ற ஆதிபராசக்தியின் படத்தினைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே. 

அங்கே வந்தவர்களில் பலர் வீட்டுக்காரர்களுக்கு திட்டிக்கொண்டு திரும்பிச் சென்றதை காணமுடிந்தது. 

இன்று பரபரப்பாக எமது பகுதியிலே பேசப்படுகின்ற விடயம். 12 வயது சிறுமி தெய்வம் ஆடி கட்டுச் சொல்லி செய்வினை சூனியம் எடுத்துக் கொண்டிருப்பதுதான். அந்த சிறுமியை நாடி கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். 
இவை எல்லாம் சாத்தியமா? அல்லது நாம் ஏமாற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றோமா?

அண்மையில் பிள்ளையார் வடிவிலான மாங்காய் என்று இணையத்தளங்களிலே படத்தினைப் போட்டிருந்தபோது என் நண்பர்களிடம் நான் சொன்னேன் என் நண்பன் ஒருவனுடைய வயிறு பிள்ளையாரின் வயிற்றைப் போன்று இருக்கின்றது. அவனை ஒரு மரத்தடியில் அமர வைத்து கோவில் கட்டி கும்பிடப் போகிறேனென்று.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "கடவுளின் பெயரால் ஏமாற்றப்படுகின்றோமா?"

raam said...

namma sanankalai thiruththirathu romba kastam. ithai neenka velila sonneenka endaal enkalai thaan muddaal endu solluvaanka.

Philosophy Prabhakaran said...

சந்தேகமே இல்லை... ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்... நாம்தான் விழித்துக்கொள்ள வேண்டும் ....

ம.தி.சுதா said...

ஆஸ்திகரே நாஸ்திகரை உருவாக்குகிறோம்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
எனைக் கவர்ந்த கமல் படம் 10

நிலாமதி said...

ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்... நாம்தான் விழித்துக்கொள்ள வேண்டும் ....

Post a Comment