Showing posts with label தொடர்பதிவு. Show all posts
Showing posts with label தொடர்பதிவு. Show all posts

Wednesday, 11 November 2009

கேள்விக்கென்ன பதில்

நண்பர்கள் சுபாங்கன் மற்றும் ஸ்டார்ஜன் இருவரும் என்னை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கின்றனர். ஸ்டார்ஜன் அழைத்து ஒரு ஒரு மாதத்துக்கு மேலாகின்றது.


விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.

தமிழுக்கே முதலிடம்

அன்புக்குரியவர்கள்: அம்மா, தங்கைகள்,

ஆசைக்குரியவர்: எனக்காகக் காத்திருப்பவள் (எங்கேயோ இருப்பாள்தானே)

இலவசமாய் கிடைப்பது: தாயின் அன்பு

ஈதலில் சிறந்தது: வலது கை கொடுப்பதை இடது கை அறியாதது

உலகத்தில் பயப்படுவது: கடவுளுக்கு மட்டுமே.

ஊமை கண்ட கனவு: பேசுவதாய்

எப்போதும் உடனிருப்பது: துணிவும், தன்னம்பிக்கையும்

ஏன் இந்த பதிவு: நண்பர்களின் அன்பினால்

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: கல்வி, செல்வம், வீரம்

ஒரு ரகசியம்: இரகசியமாகவே இருக்கட்டுமே. (சொன்னால் அது இரகசியமாகாதே.)

ஓசையில் பிடித்தது: ஒரு நதிக்கரையில் இருக்கும்போது அங்கே வருகின்ற அந்த அருவியின், இயற்கையின் இனிய ஓசை

ஔவை மொழி ஒன்று: அறம் செய்ய விரும்பு.

(அ)ஃறிணையில் பிடித்தது: நிறையவே இருக்கிறது.


1. A – Avatar (Blogger) Name / Original Name : யோகராஜா சந்திரகுமார்
2. B – Best friend? : இல்லாமல் இருக்குமா?
3. C – Cake or Pie? : Cake ரொம்பப்பிடிக்கும்.

4. D – Drink of choice : அடிக்கடி ஏதாவது அருந்துவதுண்டு (அப்படியான பாணங்கள் அல்ல, நான் ரொம்ப நல்லவன்)

5. E – Essential item you use every day? : என்ன பணம்தான் (பணத்தால் எதையும் செய்யலாமல்லவா)

6. F – Favorite color ? : நீலம்

7. G – Gummy Bears Or Worms : இது வேண்டாம்

8. H – Hometown? : மட்டக்களப்பு

9. I – Indulgence? : சொல்லாதே யாரும் கேட்டால்.

10. J – January or February? : இரண்டுமே இல்லை நவம்பர் பிடிக்கும்

11. K – Kids & their name : இன்னும் திருமணமாகவில்லை

12. L – Life is incomplete without : சமுகத்துக்கு ஏதாவது நல்லதை செய்யவேண்டும்.

13. M – Marriage date? இன்னும் இல்லை. பிறந்தது 23. 03

14. N – Number of siblings : எல்லையற்றது...

15. O – Oranges or Apples : இரண்டுமே


16. P – Phobias/Fears? : சொல்லமாட்டேன்

17. Q – Quote for today? : வாழ்ந்து பார்க்க வேண்டும் மனிதனாக

18. R – Reason to smile? :உலகம் போகிற போக்கைப் பார்த்தால் சிரிப்பு வருது.

19. S – Season? : வசந்த காலம்..


20. T – Tag 4 People? : யோகா , தர்சாஜனி ,முனைவர் கல்பனா சேக்கிழார் , சுபானு

21. U – Unknown fact about me? : நீங்களே சொல்லுங்க

22. V – Vegetable you don't like? : பசிவந்தால் எதுவானாலும் சாப்பிடலாம்.

23. W – Worst habit? : அப்படியே விட்டுவிடுகிறேன்.


24. X – X-rays you've had? : இல்லை

25. Y – Your favorite food? : எதுவானாலும் நாவுக்கு சுவையாய் இருந்தால் ஒரு பிடி பிடிக்கலாம்.

26. Z – Zodiac sign? : இது எல்லாம் இரகசியம் வந்தி சோதிடருக்கு தெரிந்தால் ராசி மாற்றங்களை பதிவிட்டுவிடுவார்.

read more...

Monday, 9 November 2009

இவர்கள்தான் அவர்கள்

பதிவுலக நண்பர் வந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கின்றார். அவர் இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துவோம்


நண்பர் அக்பர் (சிநேகிதன்) என்னை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கின்றார். சிநேகிதனுக்கு நன்றிகள்.

1 . அர‌சிய‌ல் த‌லைவ‌ர்

பிடித்தவர் : இன்னும் எவரும் இல்லை - சுய நலமின்றி மக்களுக்காக சேவை செய்தவர்கள் இல்லை

பிடிக்காதவர் : கருணாநிதி - தமிழுக்காக, தமிழருக்காக என்று சொல்லிலே தமிழனை ஏமாற்றி அரசியல் நடத்துவது


2 . எழுத்தாள‌ர்

பிடித்தவர் : சுஜாதா
பிடிக்காதவர் : தலைக்கனம் பிடித்தவ எழுத்தாளர்களை


3. க‌விஞ‌ர்

பிடித்தவர்: பா.விஜய் இவரது பாடல்கள் பல என்னைப் பாதித்ததுண்டு.
பிடிக்காதவர் : அதிகம் இரட்டை அர்த்தங்களோடும், வேற்றுமொழி கலந்தும் பாடல்களை எழுதுவோரை


4. பாடகர்

பிடித்தவர் : ஹரிஹரன்
பிடிக்காதவர் : சந்ரு


5. பாடகி

பிடித்தவர் : சித்ரா
பிடிக்காதவர் : தமிழை தமிலாய் படுபவர்களை


6. இய‌க்குன‌ர்

பிடித்தவர் : சீமான் - இயக்கிக்கொண்டிருப்பதனால் (எதனை என்று கேட்கவேண்டாம்)

பிடிக்காதவர் : தமிழ் படங்களை தமிழ் படமாக தராதவர்களை


7. நடிகர்

பிடித்தவர் : யாரு நம்ம விஜய்தான்

பிடிக்காதவர் : நடிக்கத் தெரியாதவர்கள்


8. நடிகை

பிடித்தவர் : த்ரிஷா

பிடிக்காதவர் : நயன்தாரா (பொறாமைதான்)

9. விளையாட்டு

பிடித்தது :உதைபந்தாட்டம்

பிடிக்காதது : எதுவுமில்லை


10. பேச்சாளர்



பிடித்தவர் :இருக்கிறார்கள் சொன்னால் பிரச்சனை

பிடிக்காதவர்: தங்களைப் பற்றி அதிகம் பேசுபவர்கள்


இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க .

நான் அழைப்பது.....


பிறந்தநாள் பரிசு பெறுவதற்காக

1. வந்தி


2. கீர்த்தி

3. க.கோபி கிருஷ்ணா.

4. சுபாங்கன்

5. மேனகாசத்தியா

read more...

Wednesday, 16 September 2009

என்னவென்று சொல்வேன்...

என்ன இந்த வாரம் தொடர் பதிவாகவே இருக்கின்றது. நண்பர்கள் விடுவதாக இல்லை. நண்பர் யோகா மற்றும் மருதமூரான் ஆகியோர் என்னை “காதல்-அழகு-கடவுள்-பணம்” எனும் தொடர் பதிவிற்கு அழைத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.

“காதல்-அழகு-கடவுள்-பணம்” நான்குக்கும் ஒரு தொடர்பு இருப்பதாகவே உணர்கின்றேன்.

காதல்


காதலில்லாமல் உலகமில்லை. காதல் என்பது அன்பு . ஒருவர் தன் தாய் மீது வைக்கின்ற அன்பும் காதலே. காதலிமீது வைக்கின்ற அன்பும் காதலே. காதலால் சரித்திரம் படைத்தவர்க்களுமுண்டு. காதலால் காணாமல் போனவர்களுமுண்டு.
காதல் புனிதமானது. இன்று காதலின் புனிததைக் கெடுப்போருமுண்டு. காதலை வாழவைப்போருமுண்டு.

காதலை நான் அமுதென்பதா?
விசமென்பதா? - அன்று
காதலித்தேன்...
ஒவ்வொரு நிமிடங்களிலும்
சொர்க்கத்தின் வாசற்படிகள்
என்னை வரவேற்றன. - இன்று
அவளால் கைவிடப்பட்டேன்
மரண வேதனை உணர்கின்றேன்.
சொல்லுங்கள் காதலைப்பற்றி
நான் என்ன சொல்ல.


அழகு

ஒருத்தியிடம் என் காதலைச் சொன்னேன். நான் அழகில்லை என்றாள் .இன்னொருத்தி என்னை காதலிப்பதாய் சொன்னாள்.
எதனால் வந்த காதல் என்றேன். என் அழகைப்பார்த்து வந்தது என்றாள். சொல்லுங்கள் நான் அழகா? அழகில்லையா?

அழகு அவரவர் இரசனையைப் பொறுத்தது. ஒருவருக்கு அழகாகத் தெரிவது இன்னொருவருக்கு அழகில்லாமல் இருக்கலாம். ஆனால் நான் எல்லோருக்கும் அழகாகவே தெரிகின்றேன்.

கடவுள்
கடவுள் இருக்கின்றார் என்று சொல்பவனுக்கு அவனுள்ளே இருக்கின்றார். கடவுள் இல்லை என்று சொல்பவனையும் கைவிடமாட்டார்.

இன்று கடவுளின் தொழில்களை மனிதன் கையிலெடுத்துவிட்டதனால். அமைதியாக அவதானித்துக்கொண்டிருக்கின்றார். ஆடும்வரை ஆடட்டுமே என்று.

பணம்

பணம் பத்தும் செய்யும் என்பது அந்தக்காலம். எதையும் செய்யும் என்பது இந்தக்காலம். இன்று பணமிருந்தால் எல்லாமே நம் காலடியைத் தேடி வருகின்றன. பணம் இல்லை என்றாள் உற்ற நண்பனே நீயாரடா என்று கேட்பான். நான் அனுபவ ரீதியாக நான் அறிந்திருக்கின்றேன். பணம் இல்லாதபோது சொந்தங்களே நம்மைவிட்டு விலகும். பணமிருந்தால் அயலவரே சொந்தம் கொண்டாடுவார்கள்.

பணம் ஒருசிலரின் உற்ற நண்பன்.

ஏழைகளின் எதிரி.

சரி எப்படி “காதல்-அழகு-கடவுள்-பணம்” நான்குக்கும் தொடர்பு இருக்கின்றது என்று கேட்கின்றீர்களா? ஏதோ ஒரு வகையில் அழகைப்பார்த்து காதல் வருகின்றது. காதலர்கள் ஏழை பணக்காரன் பார்க்கவில்லை என்றாலும் காதல் திருமணம் வரைக்கும் செல்ல வேண்டுமென்றால் பெற்றோர் பணத்துக்கே முதலிடம் கொடுப்பார். எத்தனை காதலர்கள் பணத்தினால் உயிரை விட்டிருக்கின்றனர். இவை அனைத்துக்கும் துணை இருக்க கடவுள் நம்பிக்கை வேண்டும். நம்பினால் கடவுள் கைவிடார்.



சில நாட்களுக்கு முன் என் வலைப்பதிவு திருடப்பட்டு மீட்டெடுத்தேன். எனது கூகுள் விளம்பரக்கணக்கும் (google adsense)முடக்கப்பட்டது ஏனென்று தெரியவில்லை. இரு நாட்கள் முயற்சி செய்தும் கணக்கினை மீளப்பெறுவதிலே சிக்கல் இருக்கின்றது . இரு நாட்கள் அதனால் நண்பர்களின் பதிவுகளுக்கு வரமுடியவில்லை.
read more...

Monday, 14 September 2009

என்னைத் தேடி வந்த தேவதை..

ஆசை இல்லா மனிதர்கள் இல்லை. எனக்கு அதிகமான ஆசைகள் இருக்கின்றது என்பது நிலாமதி அக்காவுக்கு தெரிந்துவிட்டது போலும். என்னிடம் வரம் தரும் தேவதையை அனுப்பிவிட்டார். என்னை பத்து வரங்கள் மட்டுமே கேட்க வேண்டும் என்றும் நிபந்தனையும் விதித்துவிட்டார்.

சரி நிறையவே ஆசைகள் எந்த வரத்தை முதலில் கேட்பது. எனக்கு இருக்கின்ற ஆசைகளை பட்டியலிடுகின்றேன்.

1. பாரதி மீண்டும் பிறக்கவேண்டும் பாரதியிடம் நான் தமிழ் படிக்க வேண்டும்.
பாரதியின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டவன் பாரதியின் கண்ணன் பாடல்களில் அடிக்கடி தொலைபவன். இன்று பாரதி இல்லையே என்று கவலைப்படுபவன்.

2. யுத்தத்தின் கொடுமையால் தாய், தந்தை, சொந்தங்களை இழந்து சிறுவர் இல்லங்களிலே தவிக்கின்ற அந்தச் சிறுவர்களின் தாய், தந்தையர்கள் மீண்டும் கிடைக்கக் வேண்டும்.

இன்று எத்தனை சிறுவர் இல்லங்கள் சிறுவர் இல்லங்களிலே நம் சிறார்கள் படும் இன்னல்கள்தான் எத்தனை. அவர்களின் ஏக்கங்கள்தான் என்ன? அவர்களின் எதிர் காலம் பற்றி சிந்திக்க உரியவர்கள் முன்வரவில்லை என்பது கவலைக்குரிய விடயமே. இல்லங்களிலே இருக்கின்ற ஆண்சிறார்களைவிட பெண் பிள்ளைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவர்களின் எதிர்கால நிலை என்ன?

3. உலகில் இருக்கின்ற மொழிகளிலே தமிழ் மொழி முதலிடத்தில் இருக்க வேண்டும்.

உலக மொழிகளிலே தமிழ் மொழி முதலாவது மொழியாக அங்கிகரிக்கப்பட வேண்டும். உலகெங்கும் தமிழ் மொழி கட்டாய பாடமாக பல்கலைக்கழகங்களிலே சேர்க்கப்பட வேண்டும்.

4. ஏழைகள் இல்லாத பூமி வேண்டும்.
பணம் இருந்தால் எதனையும் செய்யமுடியும் ஏழையிடம் பணமில்லை அவன்படும் வேதனை அவனுக்குத்தான் தெரியும். கஷ்டப்பட்டு படித்து, பட்டம் பெற்று என்ன பயன் வேலை கிடைப்பதென்றால் பணம் கொடுக்கவேண்டும். எத்தனை ஏழைகள் நிம்மதியைத் தொலைத்தபடி...

5. மறைந்து தமிழர் கலைகளை வளர்க்க கேட்பேன்.
மறைந்து வரும் தமிழர் கலைகளை வளர்க்கவேண்டும் என்ற ஆசை நம் கலைஞர்களை ஒன்று திரட்டி சில கலைத்துறை படைப்புக்களை வெளி உலகுக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. அதற்கு உதவும்படி கேட்பேன்.

6. சாதி, மத பேதமற்ற உலகம் வேண்டும்.
இன்று உலகில் சாதி, மதம் என்று எத்தனை பிரச்சனைகள். எத்தனை உயிர்கள் பறிக்கப்படுகின்றன.

7. மீண்டும் என் இளமைக்காலம் வேண்டும்.
என் தந்தை என் சிறு வயதிலே இறந்து விட்டார் சாதாரண குடும்பத்தை சேர்ந்த எனக்கு சிறு வயதிலே குடும்ப சுமைகள் காரணமாக என் தந்தையின் வழியில் பிழைப்புக்காக விவசாயத்திலே ஈடுபடவேண்டிய கட்டாய சூழ்நிலை. இளமைக்காலங்கள் விவசாயத்தோடும் படிப்போடும் கடந்துவிட்டது. சிறுவர்கள் அனுபவிக்க வேண்டிய எதனையும் அனுபவித்ததில்லை. மற்றைய சிறுவர்களை பார்த்து கவலைப்பட்டதுண்டு.

8. கவலைகள் இல்லாத மனது வேண்டும்.
என் மனது நிறைய கவலைகள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை சந்தோசங்கள் சில நேரங்களில் வந்து எட்டிப்பார்த்துவிட்டுச் செல்கின்றன.

9. தமிழரை அழிப்பவர்களும், அழிக்க நினைப்பவர்களும் மறு பிறவியில் தமிழராய் பிறக்க வேண்டும்.
அப்பொழுதுதான் தமிழர் பண்பாடு , தமிழின் இனிமை , தமிழர் வேதனை ...... என்று எல்லாவற்றையும் அவர்கள் அறிவார்கள்.

10. நான் கடவுளாய் நினைக்கின்ற ஒரு மனிதர் என்றும் இறவாத வரம் வேண்டும்.


இலங்கையில் இருக்கும் பல பதிவர்களுக்கு நிறையவே ஆசை இருப்பதை அறிந்தேன். என்னிடம் வந்த தேவதையை அவர்களில் ஐவரிடம் அனுப்புகின்றேன்.

உஞ்சலில் ஆடும் சுபானு
******************************


எனது மருமகள் ஏழாம் தரம் படிக்கின்றார். படிப்பு மட்டுமல்ல எல்லாவற்றிலும் கெட்டித்தனம். அவளது நீண்டநாள் ஆசையினை நிறைவேற்றி இருக்கின்றேன். தானும் வலைப்பதிவு ஆரம்பித்து சிறுவர்களுக்கு பயனுள்ள தகவல்களை பதிவிட வேண்டுமென்பது என்பது அவரது ஆசை...



எனது உதவியோடு சிறுவர் உலகம் என்றும் வலைப்பதிவினை ஆரம்பித்துவிட்டார். இனி அவரும் எங்களோடு....
read more...