திரும்பும் திசை
எங்கும் கொடுமைகள்
என்றிருந்தேன் - அந்த
கொடுமைகளை
மறக்கச் செய்தவள் நீ....
உன் ஒரு வார்த்தைக்காய்
தவமிருந்தேன் பலகாலம்
அந்த வார்த்தைகளால்
கட்டப்பட்ட கற்பனைக்
கோட்டை - இன்று
உன் ஒரு வார்த்தையால்
தகர்க்கப்பட்டன....
என் கனவுகளுக்கும்
கற்பனைகளுக்கும்
சிறகு தந்தவள் நீ - அன்று
என் கண் கலங்கினாலே
கண்ணீர் விட்டவள் நீ - இன்று
என் கண்ணீருக்கே
காரணமானாய்...
அன்று நீ என்னோடு
பழகிய நாட்களை
திரும்பிப் பார்க்கிறேன்
நினைவுகள் கண்ணீராக
பல கதைகள் சொல்கின்றன....
அன்று கதை கதையாய்
சொன்னவள் நீ - இன்று
என் கதையையே
முடிக்க நினைப்பது
நியாயமா?
நான் பணமில்லாதவன்
என்பதால் இன்று
உன்னால் தூக்கி
வீசப்பட்டபோது
சும்மா பகவானிடம்
சென்றேன் வரம் பெற.....
சும்மா பகவானோ
என்னிடம் சும்மா
வரவேண்டாம்
பணமிருந்தால் வா
என்று சொல்லிவிட்டார்...
பகவானே பணம்
கேட்கும்போது - நீ
பணம் கேட்பதில்
தவறில்லை என்னிடம்
பணமில்லை என்பதுதான்
தப்பு....
நாளை நானும் பகவானாகி
பணம் உழைத்துவிட்டு
மீண்டும் உன்னோடு
வருகின்றேன் - என்னிடம்
இருக்கும் பணத்துக்காய்
என்னை அரவணைப்பாய்
என்ற நம்பிக்கையில்....
read more...
எங்கும் கொடுமைகள்
என்றிருந்தேன் - அந்த
கொடுமைகளை
மறக்கச் செய்தவள் நீ....
உன் ஒரு வார்த்தைக்காய்
தவமிருந்தேன் பலகாலம்
அந்த வார்த்தைகளால்
கட்டப்பட்ட கற்பனைக்
கோட்டை - இன்று
உன் ஒரு வார்த்தையால்
தகர்க்கப்பட்டன....
என் கனவுகளுக்கும்
கற்பனைகளுக்கும்
சிறகு தந்தவள் நீ - அன்று
என் கண் கலங்கினாலே
கண்ணீர் விட்டவள் நீ - இன்று
என் கண்ணீருக்கே
காரணமானாய்...
அன்று நீ என்னோடு
பழகிய நாட்களை
திரும்பிப் பார்க்கிறேன்
நினைவுகள் கண்ணீராக
பல கதைகள் சொல்கின்றன....
அன்று கதை கதையாய்
சொன்னவள் நீ - இன்று
என் கதையையே
முடிக்க நினைப்பது
நியாயமா?
நான் பணமில்லாதவன்
என்பதால் இன்று
உன்னால் தூக்கி
வீசப்பட்டபோது
சும்மா பகவானிடம்
சென்றேன் வரம் பெற.....
சும்மா பகவானோ
என்னிடம் சும்மா
வரவேண்டாம்
பணமிருந்தால் வா
என்று சொல்லிவிட்டார்...
பகவானே பணம்
கேட்கும்போது - நீ
பணம் கேட்பதில்
தவறில்லை என்னிடம்
பணமில்லை என்பதுதான்
தப்பு....
நாளை நானும் பகவானாகி
பணம் உழைத்துவிட்டு
மீண்டும் உன்னோடு
வருகின்றேன் - என்னிடம்
இருக்கும் பணத்துக்காய்
என்னை அரவணைப்பாய்
என்ற நம்பிக்கையில்....