Tuesday, 24 January 2012

நாகரிகமற்ற நாதாரிகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை வழிநடாத்துகின்றவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா சம்பந்தன் அவர்களுக்கு புதிய ஆண்டின் முதல் நாளிலே ஓர் பகிரங்க மடலை எழுதி இருந்தார்.
உண்மையில் அந்த கடிதத்தை பிள்ளையான் எழுதியதன் நோக்கம் தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வின் வெளிப்படைத்த தன்மையுடன் கூடிய உண்மை நிலையினை மக்களுக்கு தெரியப்படுத்துவதாக நான் கருதுகின்றேன். அதாவது அரசியல் கட்சிகளுக்குள் ஒருபோதும் ஒருமித்த கருத்துக்கள் நிலவப் பொவது இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருந்தும்கூட பிள்ளையான் அவர்கள் தனது பெருமனதின் அடிப்படையிலே சம்பந்தனுக்கு அக்கடித்தினை எழுதியிருந்தார். அதற்கு 15நாட்களுக்குள் பதில் எழுதும்படியும் கேட்டிருந்தார். அதனையும் இந்த தமிழ் தேசிய கூட்டைப்பு செய்யவில்லை.ஆனால் புலிகளுக்கு துதிபாடும் இணையத்தளங்களுக்கு பொய்யான அதுவும் திரிவுபடுத்தப்படட் செய்தியினை அதவாவது பிள்ளையான் அனுப்பிய கடிதம் தொடர்பில் தெரிவித்திருந்தார்கள்.அதுவும் மட்டக்களப்பிலே இல்லாத ஓர் அமைப்பினை உருவாக்கி அதன் பெயரிலே செய்தியினை வெளியிட்டிருந்தார்கள்.
பாருங்கள் கிழக்கு மாகாண மக்களே ஓர் பொறுப்புமிக்க மக்கள் கட்சி என்று சொல்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தையே ஆட்சி செய்து கிழக்கு மாகாணத்தினை பலவழிகளிலும் அபிவிருத்தி காணச் செய்தவரும் முதலமைச்சர் கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்களுக்கான தனிப்பெருங்கட்சியின் வழிநடாத்தகின்றவருமான பிள்ளையான் அவர்களுக்கு ஓர் பதில் கூட எழுதாமால் நாகரிகம் அற்ற முறையிலே தமிழ் தேசிய கூடட்மைப்பு நடந்திருப்பதானது. கிழக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும்  அவமானப்படுத்தும் செயலாகும்.
 அந்த கடித்திலே உண்மையிலே குறிப்பிடப்பட்டுள்ளதாவது. பிள்ளiயான் சார்ந்த தனிப்பட்ட பிரச்சினைகள் அல்ல ஒட்டுமொத் தமிழ் மக்களின் அதிகாரம் எதிர்காலம் பற்றிய விடங்களாகும். இதற்கு மதிப்பளித்து பதில் அனுப்பாத தேசிய கூத்தமைப்பு எமது மாகாண மக்களுக்கு என்ன பண்ணிப் படைக்கப்போகுது.
இன்றிலிருந்து எமது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களிடம் நான் உரிமையோடு கேட்டுக் கொள்வது என்னவென்றால், எமது மட்டக்களப்பானை வடக்கான் ஏமாற்றியதும் அவர்களது கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமையும்தான் இன்றைய இந்த நிலைக்கு முக்கிய 1வதுகாரணம் என்பது இந்தச் செயலூடாக ஒருகணம் மீண்டும் புலப்பட்டிருக்கிறது.
காலங் கலமாக எம்மக்களையும் எமது மாவட்ட அரசியல் தலைமைகளையும் ஏமாற்றி வரலாறு, அன்று ராஜதுரை முதல் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே அதிகப் படியான வாக்களைப் பெற்று தமிழ் தேசிய கூத்தமைப்பின மானத்தை காப்பாற்றிய யோகேஸ்வரனுக்கு  தேசிய பட்டியலில் தேர்வான வடக்கான் சுமந்திரன் பச்ச தூசனத்தால் பேசி அனைத்து பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் வெளியாகி இருந்ததது. இவ்வாறு எம்மை மட்டம் தட்டுவதுதான் இவர்களின் வேலை.
பிள்ளயான் என்று மாகாண சபையை பொறுப்பேற்றாரோ அன்றிலிருந்து அதிகாரம் பற்றி பேசி பல தடவைகள் அரசுடன் முரண்பட்ட சம்பவங்களும் எமக்கு தெரிந்ததே. அதே நேரம் பிரபாகரனின் வாலைப் பிடித்து தொங்கிகொண்டிருந்த தமிழ் தேசிய கூத்தைமைப்பு இன்று பிரபாகரன் இல்லாது போன பின்னர் அதிகாரம் பற்றி பேசுகின்றார்கள். அன்று பிரபாகரன் உயிருடன் இருக்கும்போது தமிழீழம் என்றவர்கள் இன்று மாகாண சபை அதிகாரம் என்கின்றார்கள்.
இவர்கள் என்னதான் பேசினாலும் எமது மட்டக்களப்பிலே ஓர் பழமொழி இருக்கு அயலூர் அழகனை விட உள்ளுர் முடவன் மேலானவன் என்று. அப்டித்தான் காலங்காலமாக ஏமாற்றயி இந்த கூட்டைமைப்பக்குள் சிக்குண்ட எமது மாவட்ட தமிழ் தசிய கூட்டைப்பு எம்பிக்களை நாம் எப்படியாவது பிhரித்தெடுத்து எமது மாகாணத்தை நாமே ஆளுவோம். இதற்கு பிறகாவது நாம் அனைவரும் சிந்தித்து ஒன்றிணைவோம்.
நன்றி

மட்டு நரசிம்மன்
read more...

Monday, 23 January 2012

கிழக்கு மாகாண முதலமைச்சர் சம்பந்தனுக்கு எதற்காக கடிதம் அனுப்பினார்

தமிழ் தேசியத்தையும் தமிழ் மக்களையும் சிங்களத்திடம் விற்றவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்கக் கூடாது!- கிழக்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் வேண்டுகோள் எனும் தலைப்பில் தமிழ்வின் இணையத்தளத்தில் செய்தி ஒன்று வெளியாகி இருக்கின்றது. இச் செய்தியில் குறிப்பிடப்படுகின்ற விடயங்கள் உண்மைக்குப் புறம்பான விடயமாக இருக்கின்றது.

கிழக்கு வெகுஜன அமைப்பு என்று ஒன்று இருக்கின்றதா? அப்படி ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு அமைப்பு இருந்தால் அவர்கள் யார்? கடந்த 01.01.2012 அன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களினால் இரா சம்பந்தன் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது. சம்பந்தனால் முதலமைச்சருக்கு இதுவரை எந்த பதிலும் அனுப்பப்படவில்லை. ஆனால் அக் கடிதம் தொடர்பில் கிழக்கு வெகுஜன ஒன்றியம் அறிக்கை வெளியிட்டிருக்கின்றது. 

கிழக்கு வெகுஜன ஒன்றியம் யார்? சம்பந்தன் அவர்களுக்கு முதலமைச்சர் அனுப்பிய கடிதத்திற்கு வெகுஜன ஒன்றியம் அறிக்கை விட்டிருக்கின்றது. இரா. சம்பந்தனும் கிழக்கு வெகுஜன ஒன்றியமும் ஒன்றா? முதலமைச்சர் அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்ற விடயங்களை திரிவுபடுத்தி அவர்களின் அறிக்கை அமைந்திருக்கின்றன. 

மக்களின் ஆதரவு கூட்டமைப்புக்குத்தான் இருக்கின்றது என்பதனை உணர்ந்த முதலமைச்சர் அக் கடிதத்தில் தான் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது. உண்மையில் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் கடிதத்தின் பிரதியுடன் வெளியிட்டிருக்க வேண்டும்.

அக் கடிதத்தில் அரசுக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்புக்களின்போது வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த பொலிஸ் காணி விடயங்கள் பற்றி பேசுகின்றபோது தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படும் கட்சி என்ற ரீதியில் ஆதரவு வழங்குவதாகவும். குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் முதலமைச்சர் பதவியினை பொறுப்பேற்ற நாள் முதல் மாகாண சபைக்கு பொலில் காணி அதிகாரங்கள் வேண்டும் என்று கேட்டுவருகின்றார். ஒருபோதும் பொலிஸ் காணி அதிகாரங்களை மாகாணசபைக்கு வழங்கக்கூடாது என்று சொல்லவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழீழம் தான் தமது இறுதி தீர்வு என்று இருந்தவர்கள் இன்று அரசுடன் மாகாணசபை பொலிஸ் காணி அதிகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் நிலைக்கு வந்திருக்கின்றனர். முதலமைச்சர் அவர்கள் வடக்கு கிழக்கு தவிர்ந்த மாகாணசபை முறமை மற்றும் மாகாணசபைக்கான பொலிஸ் காணி அதிகாரங்கள் தொடர்பில் ஆரம்பம்முதலே பேசி வருகின்றார்.

தமது மக்கள் சார்ந்த மக்களின் நலன்சார்ந்த எந்தவொரு விடயமாக இருந்தாலும் கட்சி வேறுபாடுகளை மறந்து அதற்கு ஆதரவு வழங்க வேண்டியது மக்களின் நலனின் அக்கறையுள்ள தலைவரின் பொறுப்பாகும். அரசு - கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் எதிர்காலத்தில் பொலிஸ் காணி அதிகாரங்கள் பற்றியும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இவ் வேளையில் பொலிஸ் காணி அதிகாரங்கள் தொடர்பில் ஆதரவு வழங்குவதாக கடிதம் அனுப்பும் பொழுது அதனை தவறாக திரிவுபடுத்தி செய்தி வெளியிடப்பட்டிருப்பது வருந்தத்தக்க விடயம். 

இன்று மாகாணசபை முறமை மூலம் கிழக்கு மாகாணம் துரிதமாக வளசர்ச்சி அடைந்து வருவதை எவராலும் மறுக்க முடியாது. 

முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்கள் இரா. சம்பந்தன் அவர்களுக்கு அனுப்பிய கடிதம் இதோ...



read more...

யார் இந்தப் பிள்ளையான்?


மாற்றுக் கருத்துக்கள் வேறு நட்பு வேறு மாற்றுக் கருத்துக்களுக்காககவும் கருத்து மோதல்களாலும் நட்பினைப் பிரியவும் விரோதிகளாகவும் மாறவேண்டாம். கருத்துக்களை கருத்துக்களால் வெல்வோம்.
இக் கட்டுரையில் என்னைப்பற்றிய சில விடயங்களை முதலில் குறிப்பிடுகின்றேன். பதிவுலகு மூலம் ஆரம்பகாலத்தில் எனக்கு நண்பர்களாக இருந்த சிலர் இன்று நண்பர்களாக இல்லை. அத்தோடு சிலர் என்னை கருணா பிள்ளையானின் கைக்கூலி என்றும் அவர்கள் போடும் பணத்துக்காக செயற்படுவதாகவும் சொல்வதும் நினைப்பதும் உண்டு. மறுபுறத்தில் எனக்கு எதிராக துரோகி என்றும் கைக்கூலி என்றும் எழுதியவர்களும் உண்டு.

என்னைப்பற்றிய சில விடயங்கள்...

நான் மரணத்துக்கு பயந்தவனல்ல. தமிழ்மொழிமீது அதிக பற்றுக் கொண்டவன் அதேபோல் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள் ஒடுக்கு முறைகளை பார்த்துக்கொண்டிருக்கும் மனநிலையும் எனக்கு இல்லை. பிரதேசப்பற்று அதிகம் கொண்டவன். யார் தவறு செய்தாலும் பயமின்றி தைரியமாக சுட்டிக்காட்டவும். தட்டிக் கேட்கவும் தயங்காதவன். 

வலைப்பதிவுலகிற்கு நான் வந்ததன் நோக்கம் பொழுதுபோக்குக்காக அல்ல எமது மக்கள் படுகின்ற அவலங்களை வெளியிடவேண்டும். தவறு செய்பவர்களுக்கெதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதுமாகும். முடிந்தவரை எனது வலைப்பதிவினை எனது சமூகத்தின் குரலாக வைத்துக்கொள்ள முயன்றுகொண்டிருக்கின்றேன்.

நான் பிரதேசவாதம் பேசுகின்றேன். பிள்ளையானின் கைக்கூலி என்று சொல்பவர்கள் எனது அத்தனை பதிவுகளையும் படித்துப் பாருங்கள்... நான் ஒருத்தருக்கு ஆதரவாக எழுதுகின்றேன் என்றால் நான் அவரின் கைக்கூலி இல்லை. பிள்ளையானுக்கு எதிராக பல பதிவுகள் இட்டிருக்கின்றேன். யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டும் அதேவேளை நல்ல விடயங்கள் செய்தாலும் அவற்றையும் சுட்டிக்காட்டுவேன். இலங்கையின் ஜனாதிபதிக்கு எதிராக எழுதி இருக்கின்றேன். கருணாவிற்கு எதிராக எழுதி இருக்கின்றேன். முள்ளிவாய்க்கால் படுகொலைகளின்போது இலங்கையிலிருந்து இவ் அவலங்களுக்கு எதிராக அதிகமான பதிவுகளை இட்டவன் நான்.

என்மிது சில நண்பர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கின்றது. நான் இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலியா? அல்லது கருணாவின் கைக்கூலியா? பிள்ளையானின் கைக்கூலியா என்பதுதான் அந்தச் சந்தேகம். பலர் என்னை கைக்கூலி என்றும் துரோகி என்றும் விமர்சிக்கின்றனர். இன்று தமிழர்கள் இந்தளவிற்கு அழிவுகளை சந்திக்கக் காரணம் எமது முன்னைய அரசியல் தலைவர்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. கடந்தகால அரசியல் தலைவர்கள் பல வரலாற்றுத் தவறுகளைச் செய்திருக்கின்றனர். அவர்களால் விடப்பட்ட தவறுகளை புரட்டிப் பார்க்கின்றபோது எமது சமூகம் இனிமேலும் அவ்வாறான தவறுகளை தவிர்த்துக் கொள்ள முடியும்.

அதனடிப்படையிலே கடந்தகால அரசியல்தலைவர்களின் வரலாற்றுத் தவறுகளை ஆதாரங்களுடன் தொடர்பதிவு இட்டபோது சிலர் எதிர்ப்பலைகளையும் பிரதேசவாதம் பேசுகின்றான் எனும் மாயையை தோற்றுவித்திருந்தனர். 

நான் பிள்ளையானின் கைக்கூலியா?

இன்று கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு சார்பாக பல விடயங்களை எழுதி வருபவன் நான். நான் ஒரு விடுதலைப் போராளியோ அல்லது கருணா குழுவோ பிள்ளையான் குழுவையோ சார்ந்தவன் அல்ல. விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகச் செயற்பட்டவனும் அல்ல. தமிழீழம் மலரும் என்று கனவு கண்டவன்.

எதனையும் மறைக்க விரும்பவில்லை நேரடியாகவே சொல்கின்றேன். நான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினதும் முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களதும் தீவிர ஆதரவாளன். முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களுக்காக உயிரைக்கூட கொடுக்க தயங்காதவன்.
முன்னர் சந்திரகாந்தனுக்கு எதிராக பல தடவைகள் பதிவிட்டிருக்கின்றேன். அன்று உண்மைகளும் சந்திரகாந்தன் அவர்களுடைய நோக்கங்களும் செயற்பாடுகளும் கொள்ளைகளும் எனக்கு தெரியாது. அவருடனான தொடர்பு எனக்கு இல்லை. ஊடகங்கள் சொல்கின்ற செய்திகளையும் பிரச்சாரங்களையும் நம்பினேன். ஊடகங்கள் அதிலும் குறிப்பாக தமிழ் ஊடகங்கள் சந்திரகாந்தன் தொடர்பாக பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன என்ற விடயங்கள் எனக்கு தெரியாது. ஊடகங்கள் சொல்வதனை வைத்து நானும் சந்திரகாந்தனுக்கு எதிராக எழுதிக் கொண்டிருந்தேன். என்போன்றுதான் பலரின் நிலை ஊடகங்கள் சொல்வதனை நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

நான் சமூக சேவை நோக்கம் கொண்டவன். எமது பிரதேச மாணவர்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக சில உதவிகளை பெறுவதற்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களை நானும் எனது நண்பர்களும் சென்றோம். அப்போது நாம் கேட்ட உதவிகளை உடனுக்குடன் பெற்றுத் தந்ததுடன் அவர் அன்று எங்களுடன் பேசியபோது அவர் எமது பரதேச அபிவிருத்தி தொடர்பிலும் கல்வி அபிவிருத்தி தொடர்பிலும் அதிக அக்கறை கொண்ட ஒருவர் என்பதனை என்னால் உணர முடிந்தது. 

தொடர்ந்து அவரைப்பற்றிய விடயங்களையும் அவரின் கொள்கைகள் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயத் தோடங்கினேன். பல தடவைகள் அவரைச் சந்தித்து பல அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாகவும் எமது சமூகம் தொடர்பிலும் பல கருத்துக்களை நாம் முன்வைத்தபோது நாம் நினைத்ததனைவிட  அதிகமாக அவரின் செயற்பாடுகள் அமைந்திரந்தன. 

அப்போது மிகவும் கவலைப் பட்டேன் எமது மக்களுக்காக  பிரதேச அபிவிருத்திக்காக பாடுபடும் ஒருவரை தவறான செய்திகள் மூலம் நானும் தவறாக புரிந்து வைத்திருக்கின்றேனே என்று. அப்போது நான் முடிவெடுத்தேன் இவரின் செயற்பாடகளில் நானும் பங்கெடுக்க வேண்டும் என்று.

இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினதும் தலைவர் சந்திரகாந்தனதும் தீவிர ஆதரவாளனாக செயற்படும் நான் எந்தவிதமான பிரதிபலனும் இல்லாமல் சமூக சேவை மற்றும் எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். 

முதலமைச்சரவர்கள் அரசியலில் இருந்து சொத்துச் சேர்க்க வேண்டும் என்று அரசியலுக்கு வரவுமில்லை செயற்படவுமில்லை. பிரதேச அபிவிருத்தியிலும் மக்கள் நலனிலும் அதிக அக்கறையோடு இரவு பகலாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இன்று கிழக்கு மாகாணத்திலே துரிதமாக அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்பாக ஊடகங்கள் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்வது ஏன்?
இறுதியிலும் சொல்கின்றேன் நான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினதும் முதலமைச்சர் சந்திரகாந்தனதும் தீவிர ஆதரவாளர். ஆனாலும் அனைவருடைய கருத்துக்களையும் விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்கவமுடையவன். மாற்றுக் கருத்தக்கள் கொள்கைகள் இருக்கலாம் கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டும். மாற்றுக் கருத்துக்களும் கருத்து மோதல்களும் இடம்பெறும் பொழுதுதான் உண்மைகள் வெளிவரும்.

இப்போது பல நண்பர்களுக்கு சந்தேகம் திர்ந்திருக்கும் என்று நினைக்கின்றேன். 

read more...

Friday, 20 January 2012

திருமணத்தின் பின்னும் பெண்களை கவர சில ஆலோசனைகள்



என்னுடைய முன்னைய இடுகை ஒன்று மீண்டும் உங்களுக்காக.... எல்லோருக்கும் பயனுள்ள ஆலோசனைதானே ...



01. உங்களுக்கு திருமணம் நடந்த விடயத்தை திருமண நாள் அன்றோடு மறந்து விடுங்கள், உங்களுக்கு திருமணம் நடந்து விட்டது என்று தெரியாதவர்களுக்கு திருமணம் நடந்த விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம்.

02 . மனைவி பிள்ளைகளோடு வெளியில் செல்வதை தவிருங்கள்.

03. நீங்கள் எப்போதும் திருமணமாகாத இளம் நண்பர்களோடு மட்டுமே பழகுங்கள். அப்போது மற்றவர்கள் உங்களையும் திருமணமாகாத ஒருவர் என்று நினைத்து விடுவார்கள்.

04. எப்போதும் நாகரிகமான ஆடைகளை அணியுங்கள் அடிக்கடி இளம் பெண்கள்  அதிகம் நடமாடும் இடங்களுக்கு சென்று உங்கள் வழமையான சில்மிசங்களை செய்யுங்கள்.

05. இளம் பெண்களுக்கு உதவிகள் தேவைப்படும்போது அந்தப் பெண்கள் உங்களிடம் உதவி கேட்காமலேயே நீங்களாகவே சென்று உதவி செய்யுங்கள். அப்போது அந்தப் பெண்ணின் மனதிலே இலகுவில் இடம் பிடிக்கலாம்.

06. சில காலம் குழந்தை பெறுவதை தவிர்க்க வேண்டும். காரணம் பிள்ளைகளின் தொல்லை அதிகமாகும் அப்போது வெளியில் நீங்கள் கல்யாணமானவர் என்பது தெரிய வரலாம். அப்போது இளம் பெண்கள் உங்களை கண்டாலே ஓடி விடுவார்கள்.

07. உங்கள் மனைவி வெளியில் சென்று வருவதற்கு ஒரு காரினையும் (மகிழுந்து) ஒரு சாரதியையும் ஏற்பாடு செய்து வையுங்கள். ( உங்கள் மனைவியை அந்த சாரதி ஏற்பாடு செய்தால் நான் பொறுப்பல்ல)

08. மூஞ்சி   புத்தகத்தில் (face book) அதிகம், பெண் நண்பிகளை தேடிக்கொள்ளுங்கள்.அல்லது அதிகம் பெண் நண்பிகளை சேர்க்க துடிக்கும் சந்ரு போன்றோரின் ஆலோசனைகளைப் பெறுங்கள்.

09. திருமண, பிறந்தநாள் போன்ற விசேட நிகழ்வுகளுக்கு மனைவியுடன் செல்வதை தவிர்த்து தனியாக செல்லுங்கள். ஏல்லும்போது கம்பிரமான தோற்றத்தோடு செல்லுங்கள். அங்கேயும் பல இளம் பெண்களை கவர முடியும்.

10. இதுதான் மிக முக்கியமான ஒன்று ஏற்கனவே திருமணமான மூத்த பதிவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று அவர்களது அனுபவத்துடன் கூடிய ஆலோசனைகளை பெறுங்கள்.

இதையும் பாருங்க http://www.shanthru.com/2012/01/blog-post_19.html
read more...

Thursday, 19 January 2012

உயிருக்ரைக் காப்பாற்ற கைகொடுங்கள்



நண்பர்களே ஒரு மாணவனின் உயிரைக் காப்பாற்ற உதவுங்கள் என்று இரண்டு பதிவுகள் போட்டும் சிலர் உதவுவதாக சொல்லி இருக்கின்றனர். இருந்தும் எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை விரைவில் குறித்த மாணவனுக்கு சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றார். முந்திய பதிவை அப்படியே தருகிறேன்.

வலைப்பதிவு எழுதும் நாம் எழுத்துக்களுடன் நின்று விடாது சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். சில பதிவர்கள் இதனைச் செய்து வருகின்றனர். நானும் சமூக சேவை செய்து வருபவன் எனும் வகையில் உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். 

 தற்போது உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவனுக்கு இருதய நோய் இருக்கின்றது. உடனடியாக இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றார். உடனடியாக சத்திரசிகிச்சை செய்யாவிட்டால் உயிராபத்து ஏற்படும் நிலையில் இருக்கின்றார். இருதய சத்திர சிகிச்சைக்காக இலங்கை ரூபா ஐந்து இலடசத்திற்குமேல் செலவாகும்.


ஆனாலும் அம்மாணவனின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருக்கின்றது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் இவரின் உயிரைக் காக்க உதவி செய்யுங்கள். இவர் மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்தவர் பெயர் இராஜேந்திரம் நிமல்ராஜ் மட்களுதாவளை மகா வித்தியாலயத்தில் உயர்தரம் படிக்கின்றார். மாணவனின் உயிரைக்காக்க உதவ நினைப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் நேரடியாக குறித்த மாணவனுடன் தொடர்புபடுத்தி விடுகிறேன்.

எனது மின்னஞ்சல் :-shanthruslbc@gmail.com
 தொலைபேசி இலக்கம் : - 0094778548295







read more...

Sunday, 15 January 2012

சிவசேனா கட்சியினர் உலகப் பயங்கரவாதிகளா?

அண்மையில்   கேரளா நாட்டின் திருவானந்தபுரம் பத்மநாபா சுவாமி கோயில் முன்றலில் ஆரம்பித்த சமாதான யாத்திரையானது 69 கிலோ மீற்றர் தூரம் வரை சென்றது. இவ்விடயம் தொடர்பா சில இணையத்தளங்களில் ஆசாமி யோகேஸ்வரன் சிவசேனா பயங்கரவாதிகளுடன் கூட்டணி எனும் தலைப்பில் செய்திகள் வெளியாகி இருந்தன. எனக்கும் மின்னஞ்சல் வந்திருந்தது அதனை அப்படியே தருகின்றேன். 


கேரளா நாட்டு மாநில சிவசேனை அமைப்பின் தலைவர் பூஜ்ஜியம் புவனேந்திரா ஜு அவர்களும் தமிழ் நாட்டு மாநில சிவசேனை அமைப்பு தலைவர் உயர் நீதிமன்ற சட்டத்தரணி எஸ்.இராஜேஸ்வரன் அவர்களும் இணைந்து இரு மாநிலங்களின் சிவசேனை அமைப்புக்களை ஒன்றிணைத்து கேரளா நாட்டின் திருவானந்தபுரம் பத்மநாபா சுவாமி கோயில் முன்றலில் ஆரம்பித்த சமாதான யாத்திரையானது 69 கிலோ மீற்றர் தூரம் வரை சென்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தலைமை தாங்கிய உலக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரசியல் பிரதிநிதியும் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் மட்டக்களப்பு மாவட்;ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டு காவிக் கொடியை அசைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் தொடர்ந்து இரு மாநிலங்களிலும் வழங்கப்பட்ட வரவேற்புகளை ஏற்று சமாதான யாத்திரை முடியும் வரை விஜயத்தை மேற்கொண்டார்.

இவ் நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கேரளா தமிழ் நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் இருந்து கலந்து கொண்டதுடன் ஆயிரக் கணக்கான வாகனங்களும் தொடரணியாக சென்றன 

இந்தியாவில் இடம் பெறும் அனைத்து இந்து முஸ்லிம் கலவரங்களின் சூத்திரதரிகளான  விஷ்வ ஹிந்து பரிஷத் ,சிவசேனை அமைப்புக்கள் திராவிட எதிர்ப்பிலும் முன்னணி வகிப்பன. இந்தியாவை ஆக்கிரமித்த ஆரியர்களின் அரசியல் வாரிசுகளான இவர்கள் இந்தியாவிலுள்ள திராவிடர்களின் முதல் எதிரிகளாவர்.இந்து சமயம் என்கின்ற போர்வையில் இந்தியாவின் பூர்வீக குடிகளை அடிமைகளாக்கி சாதி பிரிவினைகளை உருவாக்கிய ஆரியர்களின் இன்றயதொடர்ச்சியே இந்த சிவசேனை கூட்டமாகும் .மகாத்மா காந்தியை சுட்ட இந்த சிவசேனை கூட்டத்தினர் பல வருடங்களாக இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தனர் இந்தியாவின் பல்லின கலாசாரத்தை ஏற்றுக்கொள்ளாத இந்த இந்துத்துவவாதிகள் இந்து மதம் எனும் போர்வையில்  இந்தியாவிலுள்ள பலவித வழிபட்டு முறைகளையும் உட்கொண்டு செரித்தவர்கள் 

.பாம்பையும்,பார்ப்பானையும்கண்டால் பார்ப்பனை முதலின் அடி என்று உரத்து சொன்ன தந்தை பெரியார் இவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் .அந்த பெரியாரின் அரசியல் ,கலக  செயல்பாடுகள் நிறைந்திருந்தமை காரணமாகவே இன்றுவரை இந்த இந்துத்துவ பயங்கரவாதிகளால் தமிழ் நாட்டில் கால் ஊன்ற முடியவில்லை ஆயிரம் விமர்சனங்கள் இருந்த போதும் தமிழ் நாட்டை மாறி மாறி திராவிட கட்சிகளே ஆண்டு வர முடிகின்றது.தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக இரண்டற கலந்து வள முடிகின்றது .இந்தியாவில் இருக்கின்ற எந்த ஒரு அரசியல் முற்போக்கு சக்திகளும் இந்த  விஷ்வ ஹிந்து பரிஷத் ,சிவசேனை அமைப்புகளுடன் ஒட்டி உறவடுவதில்லை உழைக்கும் மக்களுக்காக போராடும் எந்த ஒரு இடது சாரி கட்சிகளோ கம்யுனிஸவாதிகளோ இவர்கள் பக்கமே செல்வதில்லை .ஏன்அதிகம் வேண்டாம் புலிகளின் விசுவாசிகளான நெடுமாறனோ வீரமணியோ திருமாவளவனோ  விடுதலை இராசெந்திரனோ ,தியாகுவோ இவர்களில் ஒருவர்கூட இந்த இந்து பாசிச கும்பலின் பக்கம் தலை வைத்தே படுப்பதில்லை .இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இடம்பெறும் தேசிய இன போராட்ட அமைப்புக்களோ .தலித் போராளிகளோ இந்த விஷ்வ ஹிந்து பரிஷத் ,சிவசேனை கும்பலை எதிரிகளாகவே கணிப்பதுண்டு .ஆனால்அரசியலில் வலதோ இடதோ ஏதும் அறியாத தற்குறி பிரபாகரனால் வளர்க்கப்பட்ட கூட்டமைப்பினர் இன்று விஷ்வ ஹிந்து பரிஷத் கும்பலுடன் உறவு தேடி ஆசாமி யோகேஸ்வரனை தூது அனுப்பியுள்ளனர் 

.கிழக்கு மாகாணத்தில் மீண்டும் ஒரு முறை இனகலவரங்களை துண்டி விடும் ஆலோசனைகளும் பொருளாதார உதவிகளும் கூட இந்த இந்து பார்ப்பனிய பாசிச கும்பலால் யோகேஸ்வரன் எம்பி ஊடாக கூட்டமைப்பினருக்கு  வழங்கபடலாம்.
கு .சாமித்தம்பி 
read more...

பொங்கலோ பொங்கல்

அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
free ecards

free ecards
read more...

Saturday, 14 January 2012

இலங்கை முஸ்லிம்கள் உண்மையான முஸ்லிம்களா? அல்லது தமிழர்களா?

இன்று மட்டக்களப்பில் தமிழர் பிரதேசங்களில் முஸ்லிம்கள் காணி பிடித்தல் சிலை உடைப்பு என்று பல பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கிழக்கிலே குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக முஸ்லிம்கள் வேண்டுமென்றே சில அரசியல்வாதிகளின் பின்னணியில் தமிழர் பிரதேச நிலங்களை பிடித்து  வருகின்றனர். இவ்வாறு தொடர்ச்சியாக பல விடயங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஆனால் இலங்கையில் இருக்கும் முஸ்லிம்கள் உண்மையில் முஸ்லிம்களா அல்லது தமிழர்களா? 


மட்டக்களப்பில் இன்றுள்ள தமிழர்களில் பெருபான்மையாக இருப்பவர்கள் முற்குகர்களேயாகும். இவர்கள் கூட மட்டக்களப்பின் முற்குடிகள் அல்ல. அதற்குமுன்பே இங்கே வாழ்ந்திருக்கக் கூடிய திமிலர்கள் எனும் மீன்பிடியை தொழிலாக கொண்டவர்கள் துரத்தியடித்த பின்னே இவர்கள் இங்கு குடியேறியுள்ளனர். இலங்கையின் பூர்வீக குடிகளில் ஒன்றான இயக்கர்களும் மீன்பிடித்தலையே தொழிலாக கொண்டிருந்தனர் என்பதுவும் இங்கே நோக்கற்பாலது.
எனவே காலப்போக்கில் இந்த இயக்கர்களே திமிலர் என அடையாளப்பட்டிருந்தல் கூடும். திமிலதீவு, வலையிறவு போன்ற மட்டக்களப்பு வாவியின் கரையோர கிராமங்கள் இந்த திமிலர்களின் அடையாளங்கள் ஆகும். இவர்களுடன் அடிக்கடி புதிதாக குடியேறிய முற்குகர்கள் கொண்ட சண்டையானது இறுதியில் அவ்வேளை வியாபார நிமித்தம் ஆப்கானிஸ்தான், துருக்கி போன்றவற்றிருந்து இங்கு வந்து சென்ற பட்டாணிகள் உதவியுடனேயே முடிவுக்கு வந்துள்ளது.
திமிலர்களால் முற்குகர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இவர்களே தடுத்து நிறுத்தியுள்ளனர்.மட்டக்களப்பின் வடக்கே அமைந்துள்ள ‘ஏறாவூர்’ எனுமிடம் திமிலர்கள் ஊருக்குள் நுழையாமல் ஏற்படுத்தப்பட்ட தடை குடியிருப்பு ஆகும். அதாவது முக்குகர்கள் தமது சகோதரிகளை பட்டாணிகளுக்கு மணம் முடித்து கொடுத்து காவல் காப்பதற்காக ஏறாவூரில் இருத்தினராம். இதைதாண்டி திமிலர்கள் உள்நுழைய கூடாது என்பதற்காக ‘ஏறாவவூர்’ என அழைக்கப்படலாயிற்று என விபரிக்கிறது மட்டக்களப்பு மான்மீக கல்வெட்டுபாடல்.
இங்கு முக்குகர்களின் குடியேற்றம் என்று ஆரம்பித்ததோ அன்றே மட்டக்களப்பு பட்டாணியர்களின் (இன்றைய முஸ்லிம்களின் மூதாதையர்) வரவும் ஆரம்பித்திருக்கிறது. அவர்கள் மட்டக்களப்பின் காவர்களாக தமது உதிரத்தை சிந்திய மண் இது. ழூதிமிலரை துரத்தி சென்று திரும்பிவரும்போது பலரும் சந்தித்த வெளி சந்திவெளி எனவும் எதிரியை கொன்ற இடம் சத்துருகொன்றான் எனவும், சண்டையின் பின் வந்தேறிய (ஆறிய) இடம் வந்தாறுமூலை எனவும் மட்டக்களப்பில் முற்குகர்களும் பட்டாணியர்களும் நிலைகொண்டு வாழ்வதற்காக நடத்தியபோரின் வரலாற்றுத் தடயங்கள் கிராமங்களின் பெயர்களாகி இன்றும் காணப்படுகிறது.
அதுமட்டுமன்றி இந்த பட்டாணியர்கள் மணமுடித்துகொண்ட முற்குல பெண்களினு காவப்பட்டு வரும் குடிப்பெயர்கள் இன்று வரை மட்டக்களப்பு முஸ்லிம்களிடையேயும் காணப்படுவதும் மட்டக்களப்பு தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே தாயின் பிள்ளைகள் என்பதை சொல்லி நிற்கிறது.
மட்டக்களப்பானது தமிழர்களுக்கு தன்னோடுள்ள பாத்தியதைக்கு என்ன எல்லையை கொண்டுள்ளதோ அந்த எல்லைவரை இன்றைய முஸ்லிம்களுக்கு மட்டக்களப்பு ீதுள்ள பாத்தியதையும் செல்லும் என்பதை இங்கே நாம் காண தவற கூடாது.இன்றைய உலகில் உள்ள மிக தொன்மையான ப10கோள வரை படங்களுள் முக்கியமானதொன்று தொலமி வரைந்த படமாகும். இதில் இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளதோடு கி.மு.147 வரையப்பட்ட இப்படத்தில் கல்முனை உள்ள இடம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்முனை துறைமுகத்தை அன்றைய கடலோடி வியாபாரிகள் தரிசித்துள்ளனர் என்பதற்கான மிகத் தொன்மையான ஆதாரமாகும். அப்போது வந்த பாரசீக வியாபாரிகளே இலங்கைக்கு இந்த முகவரியை தேடி தந்தவர்கள். .
வியாபார நோக்கத்துடன் வந்த பட்டாணிகள் தமிழ் பெண்களை கல்யாணம் முடித்திருக்கின்றனர் என்பதனை வரலாறு சொல்கின்றது. பட்டாணி ஆணுக்கும் தமிழ் பெண்ணுக்கும் பிறந்த சந்ததி முஸ்லிம் சந்ததியா தமிழ் சந்ததியா? 

read more...

Thursday, 12 January 2012

சுவாமி விவேகானந்தருடைய கை, கால்கள் உடைக்கப்பட்ட வரலாறு



கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் உறவை சீர் குலைத்து அரசியல் நடாத்த சில தீய சக்திகள் செயற்பட்டு வருகின்றனர். வேண்டுமென்றே கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணிகள் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரு சிலரின் பின்னணியில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் தமிழ் மக்களை சீண்டிப் பார்க்க நினைக்கின்ற பல கைங்கரியங்களையும் சில முஸ்லிம்கள் செய்து வருகின்றனர். உதாரணமாக காத்தான்குடி பிரதேச குப்பைகளை வேண்டுமென்று ஆரையம்பதியில் தேசிய கல்வியற் கல்லூரிக்கு பக்கத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் கொட்டப்பட்ட விடயங்களைக் குறிப்பிடலாம். பல விடயங்களை முன்னர் சுட்டிக்காட்டியிருந்தேன்.

கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி அடைந்து வரும் நிலையில் பிரதான வீதியும் அழகாக வடிவமைக்கப்பட்டு வருவது யாவரும் அறிவர். அதன் ஒரு கட்டமாக அண்மையில் காத்தான்குடி ஆரையம்பதி எல்லையில் சுவாமி விவேகானந்தருடைய அழகிய சிலை ஒன்று வைக்கப்பட்டது. அன்று இரவோடு இரவாக அச்சிலை உடைக்கப்பட்டிருக்கின்றது. இச் சிலை உடைப்பின் நோக்கம் என்ன? என்ன காரணத்துக்காக உடைக்கப்பட்டன.

காத்தான்குடி ஆரையம்பதி எல்லை நிர்ணயம் தொடர்பில் பல காலமாக பிரச்சினைகள் இடம்பெற்று வருவது யாவரும் அறிவர். முஸ்லிம்கள் ஆரையம்பதியின் தமிழர் காணிகளை பலவந்தமாக அபகரித்ததன் காரணமாகவும் எல்லையை நிர்ணயிப்பதில் பிரச்சினைகள் இருந்து வந்தன. ஆனாலும் தற்போது எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. அதன்பிரகாரம் காத்தான்குடி ஆரையம்பதி எல்லையில் இச்சிலை வைக்கப்பட்டது.

இரவோடு இரவாக இச்சிலை உடைக்கப்பட்டிருப்பது தமிழ் மக்கள் மட்டுமல்ல ஒவ்வொரு இந்துவும் கவலைப்படவேண்டிய விடயம். சுவாமி விவேகானந்தர் யார் அவரின் கருத்துக்கள் போதனைகளை அறியாத காட்டுமிராண்டிகளின் ஒரு செயலாகவே இச் செயல் இருக்கின்றது. சிலையை உடைக்கும்போது நேரில் கண்டவர் முஸ்லிம்களால்தான் உடைக்கப்பட்டதை உறுதிப்படுத்தி இருக்கின்றார். உடைத்தவர்களிடம் ஒன்றைக் கேட்கின்றேன் இதுதான் மதத்தின் தர்மமா? 

இன்று உலகமே போற்றிக்கொண்டிருக்கின்ற ஒரு மகானுடைய சிலையை உடைக்கும் அழவிற்கு கிழ்த்தரமானவர்களாக நீங்கள் இருப்பதையிட்டு நான் கவலைப்படுகின்றேன். இப்படிப்பட்ட கீழ்த்தரமானவர்கள் இருக்கும் தேசத்தில் நான் இருக்கின்றேனே என்பதனை நினைத்து. அன்று சிகாகோ நகரமே சுவாமி விவேகானந்தருக்கு தலை வணங்கியது. உலகமே போற்றும் உத்தமரின் கை கால்களை உடைக்கும் நீங்கள் மனிதர்களா? 

இச் சிலை உடைப்பு விடையத்தில் ஊடகங்களும் இந்து அமைப்புக்களும் அறிக்கை மன்னர்களும் அடக்கி வாசிப்பது ஏன்? சிலை உடைக்கப்பட்டது மட்டக்களப்பில் என்பதனாலா? அன்று யாழ்ப்பாணத்தில் சிலை உடைக்கப்பட்டபோது பொங்கி எழுந்தீர்கள். திருகோணமலையில் தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்டபோது போங்கி எழுந்தீர்கள். மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தரின் சிலை உடைக்கப்பட்டபோது மட்டும் அடக்கி வாசிப்பது ஏன்?

இப்பதிவிலும் பிரதேசவாதம் பேசுகின்றேன் என்று சொன்னால் அது உங்கள் முட்டாள் தனம். என் மன ஆதங்கத்தை எழுதுகிறேன். சிலை உடைக்கப்பட்ட அன்றிலிருந்து இன்றுவரை மனதில் நிம்மதியில்லை நான் நேசிக்கும் ஒரு மகானின் நிலை இந்த அளவிற்கு வந்திருக்கின்றதே. 

அன்று யாழ்ப்பாணத்தில் சிலை உடைக்கப்பட்டபோது மட்டக்களப்பிலிருந்து எத்தனையோ கண்டன அறிக்கைகள். ஊடகங்கள் அனைத்தும் தொடர்ந்து சிலை உடைப்பு தொடர்பாக கண்டனங்களையும் செய்திகளையும் வெளியிட்டன. அதே போன்று திருகோணமலையில் தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்டபோது மட்டக்களப்பிலிருந்து பல கண்டன அறிக்கைகள் ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டன. அவைகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இச் சிலை உடைப்பிற்கு ஊடகங்களும் அமைப்புக்களும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை ஏன்?

முன்னர் உடைக்கப்பட்ட சிலைக்குரியவர்களை விட சுவாமி விவேகானந்தர் முக்கியத்துவமற்றவராக நீங்கள் கருதுகின்றீர்களா? இச் சிலை உடைப்பு விடயத்தில் இந்து அமைப்புக்கள் மெளனம் சாதிப்பது ஏன்? 








read more...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்


வணக்கம் நண்பர்களே..

இன்று முதல் நானும் .com க்கு மாறுகின்றேன். blogspot ல் இருந்து எதனையோ சாதிச்ச மாதிரி இப்போ .com க்கு மாறிஇருக்கிறாரு என்று நீங்க சொல்வது புரிகிறது.

இன்று முதல் www.shanthru.com

இதுவரை எதையும் சாதிக்கவில்லை இனிமேலாவது எதையாவது சாதிக்க வேணும் என்று நினைக்கிறன். எதனைச் சாதிப்பது? 

சமூகம் சார்ந்து சீரியசாக எழுதினால் எவரும் நம்ம வலைப்பதிவு பக்கம் தலை வைத்தும் படுக்கமாட்டார்கள். சரி மொக்கைப் பதிவுகள் எழுதுவம் என்று எழுதினால் சிலர் திட்டுகிறார்கள் உங்களிடமிருந்து இந்தப்பதிவை எதிர்பார்க்கவில்லை என்று சொல்கின்றனர். யாரையாவது பிழை பிடித்து எழுதினால் கூட்டத்தோட வந்து தாக்குறாங்க இப்படி இருந்த எப்படி நான் பிரபலமாகிறது.
இனிமேலாவது உருப்படியா எழுத ஏதாவது ஐடியா (இங்கிலிசு வார்த்தை வருது) சொல்லுங்க

நன்றிகள் - www.battinews.com
read more...

Wednesday, 11 January 2012

ஊடக அதர்மம் 02


ஊடக அதர்மம் - 01 பார்க்க 


தமிழ் மொழியின் சக்தி என்று தமக்குத் தானே மகுடம் சூட்டும் சக்தி. தமிழ் மொழிக்காக என்ன செய்கிறது. தமிழை கொச்சைப் படுத்துவதைத் தவிர? கலைஞர்களையும் கலைத்துறையையும் வளர்க்கின்றனராம். எங்கே வளர்க்கின்றனர் என்று சொல்லுங்கள். வெறுமனே இந்தியத் தொலைக்காட்சிகளின் தொடர்நாடகங்களை பெற்று இரவு பகலாக அத் தொடர்களைப் போட்டு எமது சமூகத்தின் கல்வியையும் இல்லாதொழிக்கின்றனர். 

பல நிகழ்ச்சிகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கின்றனர். இலங்கையில் நல்ல கலைஞர்கள் இல்லையா? படைப்பாளிகள் இல்லயைா? இலங்கையில் நல்ல கலைஞர்கள் படைப்பாளிகள் இருக்கின்றனர். இந்திய தயாரிப்பு நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் பணத்தில் சிறு தொகையினை கொடுத்தாலே போதும் நல்ல நிகழ்ச்சிகளை தரக்கூடிய சிறந்த கலைஞர்கள் இருக்கின்றனர் இலங்கையில். சக்திக்கு இது தெரியாமல் இல்லை அவர்களின் நோக்கம் இலங்கையில் இருக்கின்ற தமிழர்களின் கலை கலாசாரங்களை இல்லாமல் செய்வதுதான். 

ஏன் சக்தி சுப்பர் ஸ்ரார் மூலம் பல கலைஞர்களை உருவாக்குகின்றார்கள்தானே என்று சொல்கின்றீர்களா? இந்நிகழ்ச்சி மூலம் பெருந்தொகைப் பணத்தை SMS மூலம் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் செய்யப்படும் நிகழ்ச்சிதான் இது கலைஞர்களை உருவாக்க வேண்டும் எனும் நோக்குடன் செய்யப்படும் நிகழ்ச்சி அல்ல. இந் நிகழ்ச்சியில் இடம்பெறும் தில்லுமுல்லுகள் ஏராளம்.



SMS நிகழ்ச்சிகளே ஏராளம் நேயர்களின் கண்ணைப் பொத்தி அடிக்கும் SMS நிகழ்ச்சிகள் ஒரு SMS அனுப்பிப்பார்த்தால் தெரியும் ஒரு SMS க்கு எவ்வளவு பணம் வெட்டுகிறார்கள் என்பது. 

இது ஒரு புறமிருக்க சக்தியின் செய்திப் பிரிவு லூசுத் தனமாகச் செயற்படுவதுதான் வேடிக்கை. தங்களுக்கு யாரைப் பிடிக்கவில்லையோ அவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக செய்திகளை வெளியிடல். செய்திகளில் கேலித்தனமாக செய்திகளை வெளியிடல். உதாரணமாக  இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை தலைவர் பதவியிலிருந்து துரத்துவதற்கு சக்தி தொலைக்காட்சி எவ்வாறெல்லாம் செயற்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். 30 நிமிட செய்தியில் 20 நிமிட செய்தி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான செய்தியாகவே இருக்கும். 

அதே போன்றுதான் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை சக்தி குழுவினருக்கு கண்ணில் காட்ட முடியாது. காரணம் சந்திரகாந்தன் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்தவர் என்பதனால் அல்ல. சக்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் எமது சமூகத்தை வேறொரு திசைக்கு கொண்டு செல்கின்றன என்று சக்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் தொடர்பில் கருத்து தெரிவித்ததுதான் காரணம்.

இது ஒரு புறமிருக்க இவர்களின் செயல்கள் வடி கட்டிய முட்டாள்களின் செயல்கள் போல் அமைந்திருக்கின்றன. முதலமைச்சரால் ஏற்பாடு செய்யப்படுகின்ற கலந்து கொள்கின்ற நிகழ்ச்சிகளுக்கு சக்தியின் ஊடகவியலாளர்கள் செல்வார்கள். செய்தி போடுவார்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சி இடம்பெற்றது என்று மட்டும் சொல்வார்கள். யார் ஏற்பாடு செய்தது என்பதோ முதலமைச்சர் கலந்து கொண்டார் என்பதனையே சொல்லமாட்டார்கள். முதலமைச்சரை காட்டாது வீடியோவை காட்டுவார்கள். இதுதான் இவர்களின் ஊடக அதர்மம்.

இன்னுமொரு விடயம் சக்தி செய்திகளில் காட்டபபடும் சக்தியின் தேடல். சக்தியின் தேடல்  மக்களை முட்டாள்களாகவே நினைக்கும் சக்தியின் மற்றுமொரு முயற்சி. எந்த விடயத்துக்கு நிதி ஒதுக்கப்படுகின்றது என்பதனை அவதானித்து அறிந்து செயற்படுவது. உதாரணமாக ஒரு வீதி மோசமான நிலையில் இருந்தால் அவ் வீதி திருத்தப்பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டு விட்டதாக அறிந்தவுடன் சக்தி குழுவினர் கமராவை தூக்கிக் கொண்டு குறித்த வீதிக்குச் சென்று மக்களையும் வீதிகளையும் பேட்டி எடுத்து போட்டு விடுவார்கள். செய்தியின் முடிவில் குறித்த அதிகாரியின் கவனத்திற்கு என்றும் போட்டுவிடுவார்கள். 

உண்மையில் பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது குறித்த வீதியின் திருத்தப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டவிடயம் அறிந்து இவர்கள் நாடகம் ஆடுகின்றனர் என்பது தெரியாது. திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதும் குறித்த மக்களைச் சந்தித்து எங்களால்தான் இது நடக்கின்றது என்று சொல்வார்கள் திருத்தப்பணிகளையும் வீடியோ எடுத்து எங்களால்தான் சக்தியின் தேடலால்தான் வேலைகள் நடக்கின்றது என்று காட்டிக்  கொள்வார்கள். சக்தியின் தேடலில் வரும் ஒவ்வொரு விடயமும் இவ்வாறுதான் நடக்கின்றது. 

தொடரும்
read more...

Monday, 9 January 2012

கிழக்கு மாகாண வலைப்பதிவர்கள் எழுத்தாளர்கள் சந்திப்புக்கான அவசியம் என்ன?


கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற வலைப்பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சந்திப்பு ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற இருக்கின்றது என்று பதிவு போட்டதும் பலரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இச் சந்திப்புத் தொடர்பான இன்னும்பல விடயங்களை இப் பதிவினூடாக தருகின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவர் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது ஆசை . காரணம் கிழக்கு மாகாணத்திலிருந்து பதிவு எழுதுபவர்கள் மிக மிகக் குறைவு இதற்குக் காரணம் வலைப்பதிவு தொடர்பாக பலருக்கு தெரியாது அல்லது வலைப்பதிவு எழுதுவது தொடர்பாக போதிய அறிவு இன்மை. வலைப்பதிவர் சந்திப்பொன்றை செய்கின்றபோது இன்னும் பலரை பதிவுலகத்திற்குள் உள்வாங்கலாம் என்பது என் நோக்கம்.

இன்று பலர் கிழக்கு மாகாணத்தில் வலைப்பதிவெழுதுகின்றனர். ஆனாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே வெளி உலகிற்கு தெரியும்படி இருக்கின்றனர். இவ்வாறான சந்திப்புக்கள் மூலம் அவர்களை  வெளிக்கொண்டு வரமுடியும். அதிகமான பதிவர்கள் வெளி உலகிற்கு தெரியாமல் இருப்பதற்குக் காரணம் வலைப்பதிவு மற்றும் தொழிநுட்பங்கள் தொடர்பான போதிய அறிவின்மையாகும். பலருக்கு திரட்டிகளில் இணைக்கக்கூட தெரியாது. 

நான் பல புதிய பதிவர்களை உருவாக்கியிருக்கின்றேன் அவர்கள் இடைநடுவில் பதிவெழுதாமல் விடவேண்டிய நிலையில் இருக்கின்றனர். பலருக்கு எழுதவேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்றது. ஆனாலும் பதிவிடுதல் சார்ந்த தொழிநுட்ப அறிவு இன்மையால் அக்கறை இல்லாதவர்களாக இருக்கின்றனர்.

அடுத்து கிழக்கு மாகாணத்தில் அதிகமான எழுத்தாளர்கள் கலைஞர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு தமது படைப்புக்களை இணையத்தில் பகிர்வது தொடர்பாக எந்தவித அறிவுமற்றவர்களாக பலர் இருக்கின்றனர். கிழக்கிலே இருக்கின்ற வலைப்பதிவர்களையும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் ஒன்று திரட்டி  சந்திப்பொன்றை ஏற்பாடு செய்வதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் இணைய எழுத்தாளர்களை அதிகரிக்க முடியும்.

கிழக்கு மாகாணம் என்ற வரையறை எதற்கு?

மட்டக்களப்பில் பதிவர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ய வேண்டுமென்பது எனது அவாவாக இருந்தது. கிழக்கு மாகாணத்தில் வலைப்பதிவு எழுதுபவர்கள் மிகக் குறைவு பதிவர் சந்திப்புடனான கருத்தரங்கு ஒன்றினை மட்டக்களப்பில் செய்யலாமா என்று இலங்கையில் இருக்கின்ற சில பதிவர்களிடம் ஆலோசனை கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன் ஒரிரு பதிவர்கள் பதில் அனுப்பியிருந்தனர் நான் எதிர்பார்த்தவர்கள் பதில் அனுப்பவில்லை.

இலங்கை வலைப்பதிவர் குழுமத்தில் விரைவில் பதிவர் சந்திப்பொன்றை நடாத்துவது நல்லதென கேட்டிருந்தேன்  குழுமத்தில் இருப்பவர்களில் பலர் பதில் போடவில்ல. ஒரு சிலரது கருத்துக்களிலும் பதிவர் சந்திப்பு சாத்தியமற்றது என்பது போல் இருந்ததனை உணர்ந்தேன். 

உடனடியாக கிழக்கிலே இருந்து பதிவெழுதும் மற்றும் இணைய எழுத்தாளர்கள் ஒரு சிலரிடம் மட்டக்களப்பில் பதிவர் சந்திப்பினை நடாத்துவது தொடர்பாக பேசினேன் அவர்கள் பூரண ஆதரவு தெரிவித்ததுடன் கட்டாயம் செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். மட்டக்களப்பில் பதிவர் சந்திப்பை செய்வோமா என்று நான் முதலாவதாக கேட்ட மட்டக்களப்பு பதிவர் சொன்ன பதில் இதற்குமுதல் பதிவர் சந்திப்பில் எதனைச் சாதித்தீர்கள் என்பதாகும். 

அதே போன்று கிழக்கு மாகாண செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு செய்திகள் இணையத்தள நிர்வாக நண்பருடன் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பு தொடர்பாக பேசியபோது அவர் தனது பூரண ஆதரவினையும் ஏற்பாடுகளை செய்வதற்கு தானும் முன்வருவதாக சொன்னார். பின்னர் பிரபாவுடன் தொடர்பு கொண்டேன் அவரும் பச்சைக்கொடி காட்டினார். 

கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற பதிவர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் விபரங்களை திரட்டிவருகின்றோம். கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற பதிவர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.

இச் சந்திப்பானது வெறுமனே சந்திப்பாக மாத்திரம் அமையாது. பயனுள்ள விதத்திலே வடிவமைக்கப்பட வேண்டும் என்பதில் நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இச் சந்திப்பின் நோக்கம் பல புதிய பதிவர்களை பதிவுலகிற்குள் உள்வாங்கிக் கொள்வதாகும். எனவே உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்கள்  கலைஞர்கள் தொடர்பு கொள்ளுங்கள் (வெளிநாட்டில் உள்ளவர்களும்)

தொடர்புகளுக்கு :- 

info@battinews.com
shanthruslbc@gmail.com

read more...

ஊடக அதர்மம் - 01


ஊடகங்கங்கள் பக்கம்சாராது நடுநிலையாக செயற்பட வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. ஆனாலும் இன்று இலங்கையைப் பொறுத்தவரை ஊடகங்கள் நடுநிலையுடன் செயற்படுகின்றனவா? என்றால் அது கேள்விக்குறிதான். இது ஒரு புறமிருக்க இலங்கையின் தமிழ் ஊடகங்கள் தமிழர்களை மூட்டாள்களாக நினைத்துக்கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம். இலங்கையின் சில தமிழ் ஊடகங்கள் தமிழை வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு தமிழை அழிக்கும் கைங்கரியங்களை செய்து கொண்டு வருகின்றனர். இத் தொடர் மூலம் இலங்கையின் தமிழ் ஊடகங்கள் மக்களை மடையர்களாக நினைத்து செயற்படும் விடயங்களை உடனுக்குடன் சுட்டிக்காட்ட இருக்கின்றேன். 


சரி... ஊடகங்கங்களை பிழை பிடிக்க உனக்கு அருகதை இருக்கிறதா? தகுதி இருக்கிறதா என்று சில மேதாவிகள் கேட்பது புரிகிறது. நான் உங்கள் போல் பெரிய மனுஷன் இல்லதான். சாதாரண ஒரு மனிதனும் பிழை பிடிக்க முடியும். இருந்தாலும் இத் தொடரில் ஊடகத்துறையின் மறு பக்கங்களையும் புரட்டிப்போட இருப்பதனால் என்னைப் பற்றியும் சில விடயங்களைக் குறிப்பிடுகிறேன். காரணம் எதிர்காலத்தில் என்னுடன் சண்டை பிடிக்க இருப்பவர்களுக்கு அந்த நேரத்தில் சொல்ல வேண்டியதை இப்போதே சொல்கின்றேன்.


2004 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராக காலடி எடுத்து வைத்தவன். எனக்கென ஒரு இரசிகர் கூட்டம் இருக்கின்றது. அதனைவிட இலங்கை மற்றும் சர்வதேச ஊடகங்கள் சிலவற்றின் ஊடகவியலாளனாக இருக்கின்றேன். இத் தொடர் எழுதுவதற்கு தகுதியானவன் என்று நினைக்கின்றேன். தகுதியற்றவன் என்று சொன்னால் அப்போது நிருபிக்கின்றேன். 


என்னுடைய வானொலி நிகழ்ச்சிகளை ஒருபோதும் நான் ஒலிப்பதிவு செய்யவில்லை. இருந்தாலும் எனது மடிக்கணிணியில் திறந்த வெளியில் வைத்து ஒலிப்பதிவு செய்யப்பட்ட எனது குரலை கேளுங்கள். நான் அறிவிப்பாளனாக இருப்பதற்கு தகுதியற்றவன்தானே? சில அறிவிப்பாளர்களின் மறு பக்கங்கள்கூட புரட்டப்பட இருக்கின்றது. அப்போது நீ அறிவிப்பாளனுக்கு தகுதியானவனா என்று கேட்காமல் இருப்பதற்காக இதனைக் கேளுங்கள்.


வெளிநாடுகளில் இருந்து வீர வசனம் பேசி மக்களை மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டாம் by puthiyavidiyal
ஊடகங்களினால் தமிழ் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளை ஒரு சில ஊடகத்துறை சார்ந்தவர்கள் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். எப்படி எல்லாம் சீரழிக்கின்றனர்? ஒரு சிலர் செய்யும் செயலால் ஒட்டுமொத்த அறிவிப்பாளர்களையும் சமூகம் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை இருக்கின்றது. இவற்றை கண்டும் காணாதவர்களாக உயர் அதிகாரிகள் இருப்பதும் அவர்களை மட்டுமல்ல புதியவர்களையும் ஏன் என்பது தெரியவில்லை. 

இலங்கையின் தனியார் வானொலி தொலைக்காட்சிகள் தமிழர்களை முட்டாள்களாக நினைத்துக்கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழர்களுக்கு நாம் எதனைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நிலையில் இருக்கின்றது. 

தமிழ் மொழியினை இல்லாதொழித்து தமிழர்களின் கலை கலாசாரங்களையும் குழி தோண்டிப் புதைக்கும் முயற்சியில் சக்தி தொலைக்காட்சி மற்றும் சக்திவானொலியும் செயற்பட்டு வருகின்றது. இவர்கள் தங்களுக்கு தங்களே கொடுத்திருக்கும் அடைமொழி தமிழ் மொழியின் சக்தி. தமிழ் மொழியின் சக்தியாக இருந்து இவர்கள் என்ன செய்கின்றனர்? தமிழ் மொழியை கொலை செய்து வருவதுடன் இலங்கையில் தமிழ் மொழி என்றொரு மொழி இல்லாமல் தமிழ் மொழியும் ஆங்கில மொழியும் கலந்த புதிய ஒரு மொழியை கொண்டுவரவும் தமிழர்களின் கலை கலாசார பாரம்பரியங்களை இல்லாதொழிக்கவும் பாரிய வேலைத்திட்டங்களை செய்து வருகின்றனர்.

இன்று சக்தி தொலைக்காட்சி மற்றும் சக்தி வானொலியில் கடமையாற்றும் எத்தனை அறிவிப்பாளர்களுக்கு அறிவிப்பாளருக்குரிய தகுதி இருக்கின்றது??????? எங்கள் வீட்டில் சக்தி தொலைக்காட்சி போட நான் தடை விதித்துவிட்டேன்  ஆனாலும் நான் இல்லாத நேரத்தில் போடுவார்கள். சக்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும்போது என்னை அறியாமலே கோபம் வருவதுண்டு. அவர்கள் பயன்படுத்துவது தமிழா???? பார்ப்பவர்களை அருவருப்பூட்டக்கூடியவிதமான பேச்சுகளும் நளினங்களும். 

இலங்கையில் திறமையானவர்கள் நன்கு தமிழல் பேசக்கூடியவர்கள் இல்லையா? அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு பெயரே ஆங்கிலத்தில்தானே வைத்திருக்கின்றனர். அப்படி இருக்கிறது நிலை ஆனால் தமிழ் மொழியின் சக்தி எனும் அடைமொழி வேறு. சில வேளைகளில் மாலை நேரங்களில் பார்ப்பதுண்டு ஒரு அறிவிப்பாளர்  நேயர்களோடு  பேசுவார் வாய்க்குள் ஏதோ வைத்தக்கொண்டு பேசுவதுபோன்று பேசுவார் என்ன பேசுகின்றார் என்பதே புரிவதில்லை. பதது வீதமான சொற்கள்கூட தமிழல் பயன்படுத்தமாட்டார். இப்படியானவர்களை எதற்காக சேர்த்தக் கொண்டனர்? 

அடுத்தடுத்த பதிவுகளில் அலசுவோம் அதுவரை இதனையும் பாருங்கள்.


தமிழ் மொழி தமிழ் மொழியாகவே இருக்கிறதா? தமிழா நீ பேசுவது தமிழா?


நான் இப்போது அடிக்கடி கேட்கும் பாடல் ஒன்று இது மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் கலைஞர் ஒருவரின் படைப்பு இது.



..
read more...

முஸ்லிம்களால் தமிழர்களுக்கு எதிராக கிழக்கில் தொடரும் அடாவடித்தனங்கள்

பாசிக்குடாவில் திட்டமிட்ட காணி அபகரிப்பு தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு

பாசிக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த விநாசித்தம்பி என்னும் தமிழ் நபருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி இஸ்லாமியர் ஒருவரினால் அரசியல் பின்புலத்துடன் வலுக்கட்டாயமாக சுவீகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் மற்றும் நீதி மன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்திருக்கும் போதும் அவர்கள் கட்டுபாட்டை மீறி அந்தக் காணியினுள் துப்பரவு வேலைகளை செய்துவருகின்றனர்.

இது போன்ற செயற்பாடுகள் மீண்டும் இரு சமூகங்களுக்கும் இடையில் இன முறுகலை ஏற்படுத்துவதற்காக செய்யப்படும் திட்டமிட்ட செயற்பாடாக இருக்கலாம் என மக்கள் அஞ்சுகின்றனர். இது போன்ற செயற்பாடுகளை அதிகாரிகளும், அரசியல் தலைமைகளும் தலையிட்டு முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அரசியல் தலைமைகளிடம் முறைப்பாடு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்குப் பின்புலமாக ஒரு முஸ்லிம் அரசியல்வாதி இரு்பது குறிப்பிடத்தக்கது

ஆரையம்பதி காத்தான்குடி எல்லை வளைவுக் கோபுரத்துக்கு மீண்டும் வழக்கு தாக்கல்

மண்முனைப்பற்று பிரதேசத்தில் ஆரையம்பதி காத்தான்குடி எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட போதும் அந்த எல்லை நிர்வாக பகிர்வில் மிக நீண்ட காலமாக இழுபறிநிலை ஏற்பட்டுவருகின்றது. இதன் காரணத்தால் அடிக்கடி இரு இனங்களுக்கும் இடையில் பரஸ்பரங்கள் பாதிக்கப்பட்டு குழப்பங்கள் ஏற்படுவதும் பின்பு பொலிஸ் அதிகாரிகளும், அரசியல் தலைமைகளும் பேசி தற்காலிக தீர்வுக்கு வருவதும் தொடர்கதையாகவே உள்ளது. மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்திலும் இவ் எல்லை அதிகாரம் வழங்கப்படுவது தொடர்பாக பிரஸ்தாபங்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் வேண்டுகோளின் அடிப்படையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கீழ் மண்முனைப்பற்று பிரதேச சபையினால் எல்லையினை வரையறுக்கும் வளைவுக் கோபுரம் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதனை நிறுத்தி ஆரையம்பதி பக்கம் பின்னோக்கி நகர்த்துமாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது . இது தொடர்பான வாத பிரதிவாதங்களின் அடிப்படையில் நீதிமன்ற தீர்ப்பில் திருப்தி அடையாத ஆரையம்பதி பிரதேச சபை எதிர்காலத்தில் ஆரையம்பதி காத்தான்குடி எல்லையில் குழறுபடிகள் ஏற்படுவதை தடுப்பதற்கு எல்லையை வரையறுத்து வளைவு தூபியினை குறித்த எல்லையில் அமைப்பதற்கு அனுமதி கோரி பிரதேச தவிசாளரான மேரி கிறிஸ்றினா அவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த எல்லை வளைவு அமைக்கப்படுமிடத்து எதிர்காலத்தில் இரு சமூகங்களுக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளை ஓரளவு சீர்படுத்த முடியும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் பொதுமக்கள், பொது நிறுவனங்கள், ஆலயங்கள் எல்லை வளைவு தூபியினை குறித்த இடத்திலேயே அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தளவாய் நீரோடையில் அடாவடித்தனமாக கழிவுகள் கொட்டப்பட்டமை

செங்கலடி பிரதேச தளவாய் பகுதியில் மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தும் நீரோடையில் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த கோழி வர்த்தக விற்பனையாளர் கோழிக் கழிவுகளை பலாத்காரமாக கொட்டிவிட்டு சென்றது தொடர்பாக கிராம சேவையாளர் மற்றும் பிரதேசவாசிகளால் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்களின் பாவனைக்காக பயன்படும் நீரோடையில் கழிவுகளை கொட்டியதால் இந் நீரோடை மிக மோசமான நிலையில் காணப்பட்டதுடன் இப்பகுதி மக்கள் நீராடுவதற்கும் சுத்தமான நீர் இல்லாமல் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
தமிழ் முஸ்லிம் உறவுகளை மேம்படுத்த வேண்டும என அரசியல் தலமைகளும், அரச அதிகாரிகளும் முயன்றுவரும் வேளையில் இதுபோன்ற திட்டமிட்ட செயற்பாடுகள் மீண்டும் இனமுறுகலை ஏற்படுத்த முயற்சிப்பதாக அமைகின்றது. எனவே இதில் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
read more...

கிழக்கு மாகாண வலைப்பதிவர்கள் எழுத்தாளர்களுக்கிடையிலான சந்திப்பு


கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற வலைப்பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்குமிடையிலான சந்திப்பு விரைவில் மட்டக்களப்பில் இடம்பெற இருக்கின்றன. இச் சந்திப்பில் தொழில்நுட்பம் சார்ந்த பல விடயங்களும் எழுத்தாளர்கள் எவ்வாறு இணையத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பற்றிய பல விடயங்கள் ஆராயப்பட இருக்கின்றன.

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற வலைப்பதிவர்கள் எழுத்தாளர்கள் வலைப்பதிவு மற்றும் எழுத்துத் துறைக்கு வருவதற்கு ஆர்வமுள்ளவர்கள் கலைஞர்கள் தொடர்பு கொண்டு உங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

வெளிநாடுகளில் இருக்கின்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பதிவர்கள்  மற்றும் எழுத்தாளர்களும் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் தொடர்புகளுக்கு
info@battinews.com
shanthruslbc@gmail.com
read more...

Thursday, 5 January 2012

பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி சில ஆலோசனைகள்.

நம்ம ஐடியா மணி தாத்தா காதல் என்பது மனித உரிமை மீறலா? என்று ஒரு பதிவைப் போட்டிருக்கின்றார் அப்பதிவைப் பார்த்ததும் என்னுடைய முன்னைய பதிவு ஒன்று ஞபகத்தக்கு வந்தது. அப்பதிவை தூசுதட்டி மீண்டும் தருகிறேன்.


ஆண்களுக்குத்தான் அதிகமாக ஆலோசனைகள் வழங்குகிறேன் ஆனால் பெண்களுக்கும் நல்ல ஆலோசனை தரவேண்டும் என்று பல பெண்கள் வேண்டிக்கொண்டனர். சில நன்பிகளோ என்னோடு பேசுவதே இல்லை அவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

இன்று சில (பல) பெண்கள் ( பெண்கள் என்னை திட்டவேண்டாம் எல்லோரும் இல்லை என்று சொல்ல்கிறேன்). ஆண்களை ஏதோ ஒரு வகையில் தன் பின்னால் அலைய வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சில அப்பாவி ஆண்கள் நாய் போல் அலைந்து. கடைசியில் எல்லாம் இழந்து, எல்லாம் புரிந்து..... என்னவோ எல்லாம் நடக்குது...

சில பெண்கள் தங்கள் நண்பிகளிடம் கேட்டுக்கொள்வார்கள் "அடப்பாவி எப்படிடி இப்படி உன்னாலமட்டும் இப்படி ஆண்களை உன் பின்னால அலைய வைக்க முடியும் என்று" அது பெரிய வேலை இல்லை தங்களால் முடியவில்லையே என்று கவலைப்படுபவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள். 

பெண்கள் ஆண்களை தன் பின்னால் அலைய வைப்பது எப்படி

01 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.

02. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள்.

03 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை... அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.

04 . நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள். 

05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.

06 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது ஹாய் மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள். 

07 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல் பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள் காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக பழகுவது போன்றே பழகுங்கள்.

08. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.

09. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள விடவேண்டாம். 

10 . இதுதான் முக்கியமானது.... எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.


நிறைய பொண்ணுங்களுக்கு பயனுள்ள பதிவாக இருந்திருக்கும் என்று நம்புறன். 
read more...