Showing posts with label வலைப்பதிவு. Show all posts
Showing posts with label வலைப்பதிவு. Show all posts

Monday, 9 January 2012

கிழக்கு மாகாண வலைப்பதிவர்கள் எழுத்தாளர்கள் சந்திப்புக்கான அவசியம் என்ன?


கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற வலைப்பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சந்திப்பு ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற இருக்கின்றது என்று பதிவு போட்டதும் பலரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இச் சந்திப்புத் தொடர்பான இன்னும்பல விடயங்களை இப் பதிவினூடாக தருகின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவர் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது ஆசை . காரணம் கிழக்கு மாகாணத்திலிருந்து பதிவு எழுதுபவர்கள் மிக மிகக் குறைவு இதற்குக் காரணம் வலைப்பதிவு தொடர்பாக பலருக்கு தெரியாது அல்லது வலைப்பதிவு எழுதுவது தொடர்பாக போதிய அறிவு இன்மை. வலைப்பதிவர் சந்திப்பொன்றை செய்கின்றபோது இன்னும் பலரை பதிவுலகத்திற்குள் உள்வாங்கலாம் என்பது என் நோக்கம்.

இன்று பலர் கிழக்கு மாகாணத்தில் வலைப்பதிவெழுதுகின்றனர். ஆனாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே வெளி உலகிற்கு தெரியும்படி இருக்கின்றனர். இவ்வாறான சந்திப்புக்கள் மூலம் அவர்களை  வெளிக்கொண்டு வரமுடியும். அதிகமான பதிவர்கள் வெளி உலகிற்கு தெரியாமல் இருப்பதற்குக் காரணம் வலைப்பதிவு மற்றும் தொழிநுட்பங்கள் தொடர்பான போதிய அறிவின்மையாகும். பலருக்கு திரட்டிகளில் இணைக்கக்கூட தெரியாது. 

நான் பல புதிய பதிவர்களை உருவாக்கியிருக்கின்றேன் அவர்கள் இடைநடுவில் பதிவெழுதாமல் விடவேண்டிய நிலையில் இருக்கின்றனர். பலருக்கு எழுதவேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்றது. ஆனாலும் பதிவிடுதல் சார்ந்த தொழிநுட்ப அறிவு இன்மையால் அக்கறை இல்லாதவர்களாக இருக்கின்றனர்.

அடுத்து கிழக்கு மாகாணத்தில் அதிகமான எழுத்தாளர்கள் கலைஞர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு தமது படைப்புக்களை இணையத்தில் பகிர்வது தொடர்பாக எந்தவித அறிவுமற்றவர்களாக பலர் இருக்கின்றனர். கிழக்கிலே இருக்கின்ற வலைப்பதிவர்களையும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் ஒன்று திரட்டி  சந்திப்பொன்றை ஏற்பாடு செய்வதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் இணைய எழுத்தாளர்களை அதிகரிக்க முடியும்.

கிழக்கு மாகாணம் என்ற வரையறை எதற்கு?

மட்டக்களப்பில் பதிவர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ய வேண்டுமென்பது எனது அவாவாக இருந்தது. கிழக்கு மாகாணத்தில் வலைப்பதிவு எழுதுபவர்கள் மிகக் குறைவு பதிவர் சந்திப்புடனான கருத்தரங்கு ஒன்றினை மட்டக்களப்பில் செய்யலாமா என்று இலங்கையில் இருக்கின்ற சில பதிவர்களிடம் ஆலோசனை கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன் ஒரிரு பதிவர்கள் பதில் அனுப்பியிருந்தனர் நான் எதிர்பார்த்தவர்கள் பதில் அனுப்பவில்லை.

இலங்கை வலைப்பதிவர் குழுமத்தில் விரைவில் பதிவர் சந்திப்பொன்றை நடாத்துவது நல்லதென கேட்டிருந்தேன்  குழுமத்தில் இருப்பவர்களில் பலர் பதில் போடவில்ல. ஒரு சிலரது கருத்துக்களிலும் பதிவர் சந்திப்பு சாத்தியமற்றது என்பது போல் இருந்ததனை உணர்ந்தேன். 

உடனடியாக கிழக்கிலே இருந்து பதிவெழுதும் மற்றும் இணைய எழுத்தாளர்கள் ஒரு சிலரிடம் மட்டக்களப்பில் பதிவர் சந்திப்பினை நடாத்துவது தொடர்பாக பேசினேன் அவர்கள் பூரண ஆதரவு தெரிவித்ததுடன் கட்டாயம் செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். மட்டக்களப்பில் பதிவர் சந்திப்பை செய்வோமா என்று நான் முதலாவதாக கேட்ட மட்டக்களப்பு பதிவர் சொன்ன பதில் இதற்குமுதல் பதிவர் சந்திப்பில் எதனைச் சாதித்தீர்கள் என்பதாகும். 

அதே போன்று கிழக்கு மாகாண செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு செய்திகள் இணையத்தள நிர்வாக நண்பருடன் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பு தொடர்பாக பேசியபோது அவர் தனது பூரண ஆதரவினையும் ஏற்பாடுகளை செய்வதற்கு தானும் முன்வருவதாக சொன்னார். பின்னர் பிரபாவுடன் தொடர்பு கொண்டேன் அவரும் பச்சைக்கொடி காட்டினார். 

கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற பதிவர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் விபரங்களை திரட்டிவருகின்றோம். கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற பதிவர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.

இச் சந்திப்பானது வெறுமனே சந்திப்பாக மாத்திரம் அமையாது. பயனுள்ள விதத்திலே வடிவமைக்கப்பட வேண்டும் என்பதில் நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இச் சந்திப்பின் நோக்கம் பல புதிய பதிவர்களை பதிவுலகிற்குள் உள்வாங்கிக் கொள்வதாகும். எனவே உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்கள்  கலைஞர்கள் தொடர்பு கொள்ளுங்கள் (வெளிநாட்டில் உள்ளவர்களும்)

தொடர்புகளுக்கு :- 

info@battinews.com
shanthruslbc@gmail.com

read more...

Saturday, 3 July 2010

google தமிழ் செய்திகளை வலைப் பதிவில் கொண்டு வருவது எப்படி

நாம் எமது வலைப் பதிவை மற்றவரைக் கவரக் கூடிய வகையில் வைத்துக்கொள்ளவே விரும்புவோம். எமது வலைப்பதிவிலே நாம்  பல செய்திகளையும், தகவல்களையும் எமது வலைப்பதிவிலே இணைத்துக் கொள்வதன் மூலமாக எமது வலைப்பதிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கூட்டிக்கொள்ள முடியும்.

google  தமிழ்  செய்திகளை எமது வலைப்பதிவிலே இடம்பெற  செய்வதன் மூலமாக எமது வலைப்பதிவுக்கு வருபவர்களுக்கு நாம் மேலும் பல செய்திகளையும் தகவல்களையும் வழங்க முடியும்.

எமது வலைப்பதிவில்
   Dashboard ==>> Layout ==>>add gadget ==> feed  செல்லுங்கள்
feed என்பதை கிளிக் பண்ணுங்கள். கீழே உள்ள படத்தில் உள்ளது போன்று தோன்றும். அதிலே Feed URL என்பதில் கீழே நான் தருகின்ற கோடுகளை இட்டு CONTINUE கொடுங்கள் 
கீழே படத்தில் உள்ளதுபோல் தோன்றும்.  Save பண்ணிக் கொள்ளுங்கள்.
முக்கிய செய்திகள் செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.

http://news.google.co.in/news?cf=all&ned=ta_in&ict=ln


உலக செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=w&ict=ln

 இலங்கை  செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=sn&ict=ln

இந்திய செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=ietn&ict=ln

விளையாட்டு செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=s&ict=ln
 
பொழுதுபோக்கு செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=e&ict=ln

தமிழக செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=tn&ict=ln

வணிக  செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.

ஒவ்வொரு வகையான செய்திகளுக்கும் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டும்.
read more...

Friday, 2 July 2010

வலைப்பதிவுக்கு மிகவும் பிரயோசனமான Apture Tool Bar ஜ வலைப்பதிவிலே இணைப்பது எப்படி

நான் வலைப்பதிவு தொடர்பான எந்தவிதமான தொழிநுட்ப அறிவும் இல்லாமலே வலைப் பதிவுலகுக்கு வந்தேன். ஆனால் வலைப் பதிவு தொழிநுட்பங்களை நிறையவே நாள்தோறும் தேடித் பெற்றிருக்கின்றேன்.

நான் அறிந்த விடயங்களை, தேடித் பெற்றுக் கொண்ட விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். Facebook , Twitter , மின்னஞ்சல் என்பவற்றுக்கு எமது பதிவுகளை பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவுக்கு மிகவும் பிரயோசனமான Apture ToolBar இனை இவ்வாறு எமது வலைப் பதிவிலே இணைத்துக் கொள்ளலாம் என்பதனைப் பார்ப்போம்.

முதலில் http://www.apture.com/ செல்லுங்கள் கிழே படத்தைப் பாருங்கள்



FREE Get Started என்பதனை கிளிக் பண்ணுங்கள்.  கிளிக் பண்ணியதும் கீழே  படத்தில் உள்ளதுபோல் தோன்றும்.
Your website address: என்பதில் உங்கள் வலைப்பதிவு முகவரியை இடுங்கள்.
Your email: உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள்
Upload a Logo or Set Title உங்கள் வலைப்பதிவின் லோகோ  அல்லது வலைப்பதிவு பெயரை கொடுங்கள். 
Pick your bar color ToolBar வர்ணத்தை தெரிவு செய்யுங்கள் 
Get  My  Bar என்பதை கிளிக் பண்ணி கிடைக்கும் HTML ஜ
உங்கள் வலைப்பதிவில்  Dashboard ==>>Layout ==>>Edit html செல்லுங்கள்  
< /body > க்கு கீழே அந்த HTML  ஜ இட்டு Save பண்ணிவிடுங்கள்.
read more...

Thursday, 1 July 2010

வலைப்பதிவு இடுகைத் தலைப்புக்களின் எழுத்து பல வர்ணங்களில் மாறி,மாறி (Multi Color Effect ) காட்சி தர வேண்டுமா?

எமது வலைப்பதிவிலே நாம் இடுகின்ற இடுகைகளுக்கான  தலைப்பு அதிகமாக ஏதாவது ஒரு வர்ணத்திலேதான் இருக்கும். சிலர் நினைக்கலாம் தலைப்பினுடைய வர்ணம் பல வர்ணங்களில் (Multi Color Effect ) மாறிக்கொண்டு இருந்தால் அழகாக இருக்கும் என்று நினைக்கலாம்.




Dashboard ==>> Layout ==>> Edit html  செல்லுங்கள்

</head> எங்கே இருக்கின்றது என்று தேடுங்கள்.

</head> க்கு மேல் கீழே தருகின்ற HTML உள்ளிட்டு Save வே பண்ணுங்கள்




<script type='text/javascript'>

//<![CDATA[

var rate = 20;

if (document.getElementById)
window.onerror=new Function("return true")

var objActive; // The object which event occured in
var act = 0; // Flag during the action
var elmH = 0; // Hue
var elmS = 128; // Saturation
var elmV = 255; // Value
var clrOrg; // A color before the change
var TimerID; // Timer ID

if (document.all) {
document.onmouseover = doRainbowAnchor;
document.onmouseout = stopRainbowAnchor;
}
else if (document.getElementById) {
document.captureEvents(Event.MOUSEOVER | Event.MOUSEOUT);
document.onmouseover = Mozilla_doRainbowAnchor;
document.onmouseout = Mozilla_stopRainbowAnchor;
}

function doRainbow(obj)
{
if (act == 0) {
act = 1;
if (obj)
objActive = obj;
else
objActive = event.srcElement;
clrOrg = objActive.style.color;
TimerID = setInterval("ChangeColor()",100);
}
}


function stopRainbow()
{
if (act) {
objActive.style.color = clrOrg;
clearInterval(TimerID);
act = 0;
}
}


function doRainbowAnchor()
{
if (act == 0) {
var obj = event.srcElement;
while (obj.tagName != 'A' && obj.tagName != 'BODY') {
obj = obj.parentElement;
if (obj.tagName == 'A' || obj.tagName == 'BODY')
break;
}

if (obj.tagName == 'A' && obj.href != '') {
objActive = obj;
act = 1;
clrOrg = objActive.style.color;
TimerID = setInterval("ChangeColor()",100);
}
}
}


function stopRainbowAnchor()
{
if (act) {
if (objActive.tagName == 'A') {
objActive.style.color = clrOrg;
clearInterval(TimerID);
act = 0;
}
}
}


function Mozilla_doRainbowAnchor(e)
{
if (act == 0) {
obj = e.target;
while (obj.nodeName != 'A' && obj.nodeName != 'BODY') {
obj = obj.parentNode;
if (obj.nodeName == 'A' || obj.nodeName == 'BODY')
break;
}

if (obj.nodeName == 'A' && obj.href != '') {
objActive = obj;
act = 1;
clrOrg = obj.style.color;
TimerID = setInterval("ChangeColor()",100);
}
}
}


function Mozilla_stopRainbowAnchor(e)
{
if (act) {
if (objActive.nodeName == 'A') {
objActive.style.color = clrOrg;
clearInterval(TimerID);
act = 0;
}
}
}


function ChangeColor()
{
objActive.style.color = makeColor();
}


function makeColor()
{
// Don't you think Color Gamut to look like Rainbow?

// HSVtoRGB
if (elmS == 0) {
elmR = elmV; elmG = elmV; elmB = elmV;
}
else {
t1 = elmV;
t2 = (255 - elmS) * elmV / 255;
t3 = elmH % 60;
t3 = (t1 - t2) * t3 / 60;

if (elmH < 60) {
elmR = t1; elmB = t2; elmG = t2 + t3;
}
else if (elmH < 120) {
elmG = t1; elmB = t2; elmR = t1 - t3;
}
else if (elmH < 180) {
elmG = t1; elmR = t2; elmB = t2 + t3;
}
else if (elmH < 240) {
elmB = t1; elmR = t2; elmG = t1 - t3;
}
else if (elmH < 300) {
elmB = t1; elmG = t2; elmR = t2 + t3;
}
else if (elmH < 360) {
elmR = t1; elmG = t2; elmB = t1 - t3;
}
else {
elmR = 0; elmG = 0; elmB = 0;
}
}

elmR = Math.floor(elmR).toString(16);
elmG = Math.floor(elmG).toString(16);
elmB = Math.floor(elmB).toString(16);
if (elmR.length == 1) elmR = "0" + elmR;
if (elmG.length == 1) elmG = "0" + elmG;
if (elmB.length == 1) elmB = "0" + elmB;

elmH = elmH + rate;
if (elmH >= 360)
elmH = 0;

return '#' + elmR + elmG + elmB;
}

//]]>

</script>


அவ்வளவுதான் உங்கள் இடுகைகளின் தலைப்பும் இப்போ பல வர்ணங்களில்.

read more...

Saturday, 26 June 2010

வலைப்பதிவிலே டிவிட்டர் கஜெட் (gadjet ) மிக இலகுவாகவும் அழகான படங்களுடனும் இணைக்கலாம்.



இன்று டிவிட்டரை (twitter ) பலரும் பயன் படுத்தி வருகின்றோம். அதிலும் வலைப்பதிவர்களில் அதிகமானோர் பயன்படுத்தி வருவதுடன்.  தங்களை பின்தொடர சொல்லி தமது வலைப்பதிவுகளிலே இணைப்பு கொடுத்திருப்பார்கள்.
read more...

Wednesday, 6 January 2010

அலைகிறது என் இதயம்


அன்று நான் கேட்காமலே
உன் இதயத்தை என்னிடம்
தந்துவிட்டாய்  - என்
இதயத்தையும் திருடிவிட்டாய்...

இன்று என் இதயத்தை
தூக்கி எறிந்துவிட்டாய்
இன்னும் என்னிடம்
 வந்து சேரவில்லை
என் இதயம் -உன்னை
சுற்றியே அலைகிறது
உன்னோடு வாழ்வதற்கு...

 என்னிடம் இருக்கும் -உன்
இதயத்தை தட்டிப் பறிக்க
நினைக்கின்றாய் - ஏன்
இன்னொருவன் - உன்
கண்களால் கைது
செய்யப்பட்டு விட்டானா?...

உன் இதயம்
என்னிடமே இருக்கட்டும்
அவனும் என்னைப்போல்
அவஸ்த்தைப்பட வேண்டாம்.

************************************

என் வாழ்க்கை
மதுவோடுதான்
போகிறது - அன்று
என் காதலி
மதுவோடு வாழ்க்கை
வசந்தமானது -அவள்
கை விட்டதால் - இன்று
 மது கிண்ணத்தோடு
என் வாழ்க்கை

வாரம் ஒரு வலை உலா..

உறு பசி

இன்றைய வலைப்பதிவு அறிமுகத்திலே இலங்கையிலே இருந்து பதிவிடுகின்ற பெண்பதிவர் தர்ஷாயணீ (உறு பசி) அவர்களின் பதிவுகள் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இவரது உறு பசி எனும் வலைப்பதிவிலே கவிதைகள், தமிழ் மொழியோடு, தமிழ் இலக்கியத்தோடு சார்ந்த பல இடுகைகளை  தந்து வருகின்றார்.  தமிழ் மொழியின்பால் தனக்கு இருக்கின்ற பற்றினை இவரது பதிவிலே காணமுடிகின்றது.

அத்தோடு, சமகால நிகழ்வுகள், நகைசுவை சார்ந்த பதிவுகள், சமூகம் சார்ந்த கட்டுரைகள் என்று பலதரப்பட்ட விடயங்களை பகிர்ந்து வருகின்றார்.

எனக்கு அவரது பதிவுகள் அனைத்தும் பிடித்திருந்தாலும். எனக்கு மிகவும் பிடித்த சமகாலத்துக்கு பொருத்தமான கவிதை  ஒன்றை தருகிறேன்.

புத்தம்...

புத்தனை
போதையில் சந்தித்தேன்.
இன்று அவனிடம் எதுவுமில்லை
ஒரு ,காவியையும் ,
சதக் காகாசுகளையும் தவிர.


காலத்தின்அழுகிய நாற்றத்தால்
போதியில் சந்திக்க
வேண்டிய அவனை ..............................

பொம்மைகளின் யாசகர்கள் பற்றியும்,
வானம் வழுக்கி விழுந்த தடம் பற்றியுமாய்
அவன் பதில்கள் இருக்கவில்லை.
'வாசவதத்தை' பற்றியும்,
தீண்டப்ப டாத, வீணை பற்றியுமாய் இருந்தது....

புனையப்படாத ஓவியத்திலிருந்து வரும்
அவனின் பௌர்ணமி,
பெருத்துப் போன பெருச்சாளி போன்றிருந்தது....!
அவனுக்கும் தெளிவில்லை ,
எனக்கும், தெளிவில்லை.....
காவிக்கும் , கர்த்தாவுக்குமான உட்கிடக்கையில்...........

அரச மரத்துஅணில் சொன்னது,
இவன் நெடுகாலமாய் இங்குதான் கிடக்கிறான்.....
வேலையத்த பயல்!
மௌனத்தின் காற்று வெளி -
படபடத்தது....


அவனுக்கு மூல வியாதி வரக்கூடாமைக்கு வேண்டி -
மீண்டு வந்தேன்.
அவன் சீடன் சொன்னான்,
நானும் புத்தனாகி விட்ட கதை.....


திரும்பிப் பார்த்தேன்...........,,
அவன் அமர்ந்திருந்த இடம் -
சவக் கிடந்க்காய் கிடந்தது...


புத்தத்துக்கு பின்னாலும் ,
சரணத்துக்கு பின்னாலும் 'ஆமி'
தான் நின்றார்கள்.

அனைத்து பதிவுகளையும்  உறு பசி வலைப்பதிவுக்கு சென்று பாருங்கள்.
http://urupasi.blogspot.com/
read more...

Thursday, 24 December 2009

இதயத்தின் வலியும் சிதறல்களும்

வலையுலகில் என்னை உச்சாகப் படுத்துகின்றவர்களுள் ஒருவரான   சிங்கபூரில்  இருக்கின்ற கலாவின் கவிதை இது. 





இதயத்தின் வலி 






விரல் இடுக்குகளில் பிடித்து
சில இளவயசுகள்
நொடிக்கொரு தரம்
இழுக்கும் புகை
இரு வழி வரும் போது
என் இருதயம் வலிக்கின்றது


மருத்துவராய் வருவாயென
மடி சுமந்த மங்கை ஏங்க...உன்
உடலில் ஊசி ஏற்றி
செயல்பாடு செயலிழக்க
போதைப் புளங்கியாய்_நீ
பொசுங்கிக் கருகையிலே..
என் கருவறையும் வலிக்கின்றது


குடிவழி வந்த மதியிருந்தும்
மதுக் கோப்பைப் புதைகுழியில்
வாழ்க்கைப் புதையலைத் தொலைத்து
மயானத்தில் கல் பதிக்கும் போது
என் கண்மணி வலிக்கின்றது


கட்டுப்பாடில்லாக் காளையர்கள்
கண்ணிருந்தும் குருடாய்
காவலில்லாத் தோட்டத்தில்
ஆட்கொல்லி எயிட்ஸ் மலரை
அள்ளி நுகர்கையிலே...
ஆட்டம் கண்டு
என் தண்டுவடம் வலிக்கின்றது


வேக வீதியிலே விவேகம் இல்லாமல்
விரைந்து நீ செல்ல_காலனும்
கவ்வி உன்னைக் குதறிக் கொல்ல...
உதிரிப் பாகங்களாய் உடல் சிதற
என் உடல் பாகம் பாகமாய்
வலிக்கிறது


தமிழ் பேசுவதுஅநாகரீகம்
என்று....
நாகரீகம் நவிலும் போது
என் செவிப்பறை செம்மையாய்
வலிக்கிறது.



வாரம் ஒரு வலைப்பதிவு உலா 2 


வாரம் ஒரு வலைப் பதிவினை அறிமுகம் செய்து வருகின்றேன். என் வலைப்பதிவுக்கு வருபவர்கள் அந்த வலைப்பதிவினை அறிந்து கொள்ளட்டுமே என்ற எண்ணமேதான் 


சிதறல்கள் வலைப்பதிவிலே பல்வேறு பட்ட விடயங்களை பதிவிடப்படுகின்றன. கவிதைகள், கட்டுரைகள், படங்கள், அழகிய காட்சிகள், செய்திகள் என்று நல்ல பல விடயங்கள் பதிவிடப்படுகின்றன. சிதறல்கள் வலைப்பதிவை நீங்களும் சென்று பார்க்கலாமே.


அண்மையில் சிதறல்களிலே வெளியான ஒரு கவிதை இது. 

அவனும் அவர்களும் 
புல்லாங்குழல், வயலின்
இவற்றை இவனிடம்
கொடுக்கத்தேவையில்லை
எஸ்.எம்.எஸ், தொலைபேசி போதும்
மனம் விரும்பும்
கானம் வரும்

இவன் ஒரு
அறிவிப்பாளன்
தமிழ்
வலைப்பதிவாளன்
தமிழ் சொல்லி
தமிழ் வளர்ப்பவன்

இவன் அடிக்கடி
அங்கிருந்தால்தான்
நமக்கு நல்ல
பாட்டுவரும்
காது குளிரும்

தொண்டு செய்பவன்
அனானிகள் கண்டு
தமிழ் முண்டி வருபவன்

ஒல்லிக்குச்சி உடம்புக்காரன்
சொல்லியடிக்கும் தமிழ்
'கில்லி'க்காரன்

ஒலிவாங்கி முன் இருப்பதால்
விவாதமேடைகள் இவனுக்கு
விபரீதமல்ல - நல்ல
வாதியும் இவனே
நாதியற்றவர்களுக்கு
நீதியும் இவனே....

நீங்கள்
கத்திகொண்டு கீறலாம்
இவன்
புத்தி மாறப்போதில்லை
வீரம் விளைந்த மண்ணில்
ஈரம் கொண்டு முளைத்தவன்
காரம் நிறைந்தவன்

ஆதலால்
இவன்
அவனேயாக
ஆனதால்
அனானிகளே!
சற்று அமரலாம்

பட்டுச்சேலைகளே...
வேட்டிகளே...
முட்களில் விழுந்தால்
உங்கள்
முகத்திரை கிழிவதுதான்

நிச்சயம். 



read more...

Monday, 10 August 2009

இலங்கைப் பதிவர்களுக்கோர் அழைப்பு.

இலங்கைப் பதிவர்களிடையே தப்போது அதிகமாகப் பேசப்படுகின்ற விடயம்தான் இலங்கைப் பதிவர்கள் சந்திப்பு. சந்திப்புக்கான நேரம், இடம், நோக்கங்கள் என்பன தீர்மானிக்கப் பட்டுவிட்டன.


எதிர்வரும் 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு கொழும்பு தமிழ் சங்க வினோதன் மண்டபத்திலே இடம்பெற இருக்கின்றன.

இப் பதிவர் சந்திப்பு இலங்கைப் பதிவர்களுக்கோர் முக்கிய திருப்பு முனையாக அமைய இருக்கின்றன. நீண்ட காலமாக எதிர் பார்க்கப்பட்ட விடயம் தற்போது கை கூடியிருக்கிறது.

இச் சந்திப்பிலே பல முக்கிய விடயங்கள் பற்றி ஆராயப்பட இருக்கின்றன.

மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.
லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com



இந்த பதிவர்கள் சந்திப்புக்கு வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

சந்திப்புத் தொடர்பான அனைத்து விபரங்களையும் லோஷனின் வலைப்பதிவில் பார்வையிடவும்.

அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

read more...