Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Saturday, 3 July 2010

google தமிழ் செய்திகளை வலைப் பதிவில் கொண்டு வருவது எப்படி

நாம் எமது வலைப் பதிவை மற்றவரைக் கவரக் கூடிய வகையில் வைத்துக்கொள்ளவே விரும்புவோம். எமது வலைப்பதிவிலே நாம்  பல செய்திகளையும், தகவல்களையும் எமது வலைப்பதிவிலே இணைத்துக் கொள்வதன் மூலமாக எமது வலைப்பதிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கூட்டிக்கொள்ள முடியும்.

google  தமிழ்  செய்திகளை எமது வலைப்பதிவிலே இடம்பெற  செய்வதன் மூலமாக எமது வலைப்பதிவுக்கு வருபவர்களுக்கு நாம் மேலும் பல செய்திகளையும் தகவல்களையும் வழங்க முடியும்.

எமது வலைப்பதிவில்
   Dashboard ==>> Layout ==>>add gadget ==> feed  செல்லுங்கள்
feed என்பதை கிளிக் பண்ணுங்கள். கீழே உள்ள படத்தில் உள்ளது போன்று தோன்றும். அதிலே Feed URL என்பதில் கீழே நான் தருகின்ற கோடுகளை இட்டு CONTINUE கொடுங்கள் 
கீழே படத்தில் உள்ளதுபோல் தோன்றும்.  Save பண்ணிக் கொள்ளுங்கள்.
முக்கிய செய்திகள் செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.

http://news.google.co.in/news?cf=all&ned=ta_in&ict=ln


உலக செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=w&ict=ln

 இலங்கை  செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=sn&ict=ln

இந்திய செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=ietn&ict=ln

விளையாட்டு செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=s&ict=ln
 
பொழுதுபோக்கு செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=e&ict=ln

தமிழக செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=tn&ict=ln

வணிக  செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.

ஒவ்வொரு வகையான செய்திகளுக்கும் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டும்.
read more...

Sunday, 22 November 2009

இப்படியெல்லாம் நடக்கிறது..

திருந்தாத திருட்டுப் பதிவார்கள்...


 என் வலைப்பதிவிலே நான் இடுகையிட்டு சில மணி நேரத்திலே அப்படியே வேறொரு வலைப்பதிவிலே திருடிப்போடப்படுகின்றன. அவரிடம் பல தடவை அப்படி செய்யவேண்டாம் என்று சொல்லியும் எந்த பயனும் இல்லை இன்னும்   திருட்டு நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்த பதிவுத்திருட்டு தொடர்பிலே எனக்கு இருக்கும் சந்தேகத்தை உங்களிடம் கேட்கிறேன். பதிவை திருடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா? அதற்கு ஏதாவது நடை முறைகள் இருக்கின்றதா? (நான் சட்ட நடவடிக்கை எடுக்க இல்லை அறிந்து கொள்வதற்காக கேட்கிறேன்)

என்னடா இவர் பெரிய பதிவு போடுறாரு திருடுறவங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று யோசிக்காதிங்க   அப்படியெல்லாம் ஒன்றும்  இல்லை. இன்று பதிவார்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சனை என்பதனால் இது தொடர்பான விபரங்களை அறிந்து கொண்டால் பிரயோசனமாக இருக்கும்  என்றுதான்.

திருட்டுப் பதிவார்கள் மிது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா? இது தொடர்பிலே ஏதாவது பிரமாணங்கள் இருக்கிறதா? உங்கள் கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்.

இப்படியும் அதிகாரிகள்....

சிறுவர்களின் கல்வி நடவடிக்கையிலே பல்வேறு செயத்திட்டன்களை மேற்கொண்டு வரும் ஒரு சமுக சேவை அமைப்பு ஒரு பாராளுமன்ற உறுப்பினரிடம். அவர்களின் செயத்திட்டங்களுக்காக சில உதவிகள் பல பல தடவைகள் கேட்டதன் பயனாக அந்த பாராளுமன்ற உறுப்பினர் இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு கணணி உபகரணம் வாங்குவதற்கு  வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்கியிருந்தார்.

இந்த சமுக சேவை அமைப்பானது. வறிய, பின்தங்கிய மாணவர்களுக்கு உதவி செய்தல், பாடசாலையை விட்டு மாணவர்கள் இடை விலகுதல் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு இடை விலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலையில் சேர்த்தல் போன்ற பல செயற்பாடுகளிலே இடுபட்டு வருகின்றது. அத்தோடு தினமும் 300 மாணவர்களுக்கு இரவு நேர வகுப்புக்களையும் நடாத்தி வருகின்றது. இவை அத்தனைக்குரிய செலவையும் அந்த அமைப்பின் உறுப்பினர்களே செய்து வருகின்றனர். இந்த விடயங்கள் அனைத்தையும் அறிந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர். ஒதுக்கிய நிதி வெறும் 80000 ரூபாதான் . இந்த அமைப்பின் மாதாந்த செலவு அதைவிட அதிகம்.

இது இவ்வாறிருக்க பாராளுமன்ற உறுப்பினரால் பணம் ஒதுக்கப்பட்டு இரண்டரை மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் பிரதேச செயலக அதிகாரிகள் கணணி இயந்திரம் வாங்கித் தருவதாக இல்லை. திங்கட்கிழமை வாருங்கள், திங்கட்கிழமை போனால் புதன்கிழமை வாருங்கள் என்று ஏமாற்றி வருகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினரால் பணம் வழங்கப்பட்டு இரண்டரை மாதமாகியும் இன்னும் கணணி உபகரணம் வாங்கி கொடுக்கப்படாததன் காரணம் என்ன? இதிலே சில சுத்து மாத்துக்கள் இருப்பதுபோன்று தோன்றுகின்றது.

வீதி அபிவிருத்தியும் சுருங்கும் வீதிகளும்.

இன்று மகிந்த சிந்தனைத் திட்டத்தில் பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் முன்னெடுத்து வரப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே துரிதமாக வீதி அபிவிருத்தி இடம் பெற்று வருகின்றன.

உள் வீதிகள் கொங்கிரீட் வீதிகளாக மாறி வருகின்றன. நல்ல விடயமாக இருந்தாலும். இந்த வீதிகள் 10 அடி அகலத்திலே போடப்படுகின்றன. ஆரம்பத்தில் இந்த வீதிகள் 20 அடிக்கும் மேல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 20 அடி அகலமான வீதி 10 அடியாகக் குறைக்கப்படுகின்றது. இதனால் வாகனங்கள் பிரயாணம் செய்வதிலே பல சிக்கல்கள் இருக்கின்றன.


இரண்டு வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்வது, எதிரெதிராக வரும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை என்பன ஏற்படுகின்றன. இது தொடர்பிலே உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துவது நல்லதே.


இங்கேயும் போகலாம்..

பேசாத பிள்ளைகளை பேச வைப்பவர்
read more...

Wednesday, 15 July 2009

இப்படியும் நடக்கிறது... இப்படியொரு திருட்டு...




இன்று பல்வேறு வழிகளில் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இதில் அதிகமாக பாதிக்கப் படுவது. ஏழை மக்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

நேற்று இடம் பெற்ற சம்பவம் ஒன்றிலே பலர் பல இலட்சம் ரூபாய்களை இழந்து நிக்கின்றனர்.

இன்று வியாபாரப்போட்டியின் காரணமாக பல நிறுவனங்கள் தமது பொருட்களை வீடுகளுக்கே கொண்டு வந்து விற்பனை செய்வது அதிகரித்துவிட்டது.

நேற்று ஒரு கிராமத்திலே வருகை தந்த சிலர் தாங்கள் கொழும்பிலே ஒரு கம்பனியிலே இருந்து வருவதாகவும், இன்று கல்முனையிலே தமது கிளையினை திறக்க இருப்பதாகவும், மிகவும் குறைந்த விலையிலே மின் உபகரணங்களை விற்பனை செய்ய இருப்பதோடு. அவர்களிடம் உடனடியாக முற்பணம் செலுத்துபவர்களுக்கு விசேட விலைக்கழிவில் பொருட்கள் வழங்கப்படுவதோடு. அப்பொருட்கள் இன்று தங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

குறைந்த விலையில் பொருட்கள் என்றால் வாங்குவதற்கு ஆசை வரும்தானே. அதுவும் இவர்கள் சற்று பின்தங்கிய மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு சென்று பல ஆசை வார்த்தைகளை கூறி அவர்களை நம்பவைத்து இருக்கின்றார்கள். இவர்கள் தவனைக்கட்டன முறையிலே மின்சார உபகரணங்களை வழங்கப்போவதாகவும் குறிப்பிட்ட ஒரு தொகை பணத்தினை உடனடியாக செலுத்தும் படியும் கூறி இருக்கின்றனர்.

அவர்கள் சந்தேகப்படும் அளவிலும் இருக்கவில்லை. இதனால் பலர் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை அவர்களிடம் கொடுத்துவிட்டனர். ஒவ்வொருவரும் பல மின்சாரப்போருட்களை பெறுவதற்கு. விண்ணப்பித்து இருந்தனர்.

இன்று காலை ஒன்பது மணிக்கு பொருட்கள் கொண்டு வருவதாக சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் பிற்பகல் இரண்டு மணியாகியும் பொருட்கள் வரவில்லை. அவர்களால் வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை மேற்கொண்டால் அந்த இலக்கம் போலியான இலக்கம்.

பலர் தமது நகைகளை அடகு வைத்துக்கூட காசு கொடுத்திருக்கின்றார்கள். (திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது) திருந்துவார்களா இவர்கள்...
read more...

Saturday, 30 May 2009

இலங்கையில் தொடரும் அடாவடிகளும் அட்டூழியங்களும்...

இன்று இலங்கையில் அதிகம் மலிந்து இருப்பது கொலை, களவு, ஆட்கடத்தல், சிறுவர் இல்லங்கள், அகதி முகாம்கள். இப்படி கெட்டவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம் இவைகளை பார்க்கும் பொது ஏன் இலங்கையில் பிறந்தோம் என்றாகி விட்டது. அதுவும் என் தமிழனாய் பிறந்தோம் இன்று நினைக்க தோன்று கின்றது...

அண்மைய நாட்களில் நடந்த சில சம்பவங்களை இந்த பதிவினுடாக தருகின்றேன்.

சித்திரை மாதம் என்றாலே தமிழர்கள் வாழ்வில் வசந்த காலம்தான் இலங்கையில் அது இல்லை இன்று நினைக்கின்றேன். விடயத்துக்கு வருகிறேன். சித்திரைமாதம் என்றதும தமிழர்களது கலாச்சார நிகழ்ச்சிகள் விளையாட்டு விழாக்கள் என்பன நடப்பது அனைவரும் அறிந்தது. கிராமங்கள் என்றால் சொல்லவே தேவை இல்லை. ஒரே குதுக்கலாம்தான்.

நானும் கிராமப்புறத்தை சேர்ந்தவன்தான். கிராமிய கலை கலாச்சாரங்கலொடு பின்னிப்பினைந்தவன்.ஈடுபாடு அதிகம் என்று சொல்லலாம்.

எனது கிராமத்தில் ஒரு விளையாட்டு விழாவிற்கு எனக்கும் அழைப்பு வந்திருந்தது.அந்த விளையாட்டு விழா மிக பிரமாண்டமான முறையில் அன்றைய தினத்துக்கு முன் தினமே விளையாட்டு மைதானம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இத்தநைக்கும் காரணம் அது ஒரு விளையாட்டு விழா மட்டுமன்றி ஒரு கலாச்சார விழாவிம் கூட. அது ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் பல கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்குபற்ற இருந்தார்கள்.

நானும் கலை நிகழ்வு நடை பெறுவதற்கு முதல் நாளே சென்று துரிதமான ஏற்பாடுகள் நடை பெறுவதை பார்த்தவன். மிக அழகாக பார்வையாளர்கள் இருந்து பார்ப்பத்தட்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

கலை நிகழ்வு இடம்பெறும் தினம் சென்றேன். முதல் நாளில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் எதுவும் இல்லை. அனைத்தும் அலங்கோலமாக அடித்து நொறுக்கப்பட்டு இருந்தன.

அங்கெ நின்றவர்களிடம் விசாரித்தேன். பலரும் பல தரப்பட்ட கருத்துக்களை சொன்னார்கள்.

இத்தனைக்கும் முதல் ஒன்றை சொல்லவேண்டும் நிகழ்வு நடைபெற இருந்த விளையாட்டு மைதானம் கிராமத்துக்கு சொந்தமல்ல பிரதேச சபைக்கு சொந்தமானது. இந்த நிகழ்வில் பல கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கு பெறுகின்றார்கள்...

அங்கெ நின்றவர்கள் சொன்ன கருத்துக்கள்......

கிராமத்தின் தலைவருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை....
கிராமத்தில் உள்ள விளையாட்டு கழகத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை...
கிராமத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை...
இதனால்தான் யாரோ இப்படி இரவோடு இரவாக செய்து இருக்கிறார்கள்... என்று சொன்னார்கள் எனக்கு சிரிப்புத்தான் வந்தது..

பொது விளையாட்டு மைதானத்தில் பிரதேச சபையிடம் அனுமதி பெற்று நடைபெறும் விழாவுக்கு கட்டாயம் கிராமத்தின் தலைவருக்கோ விளையாட்டு கழகத்துக்கோ அழைப்பிதழ் கொடுக்க வேண்டியது அவசியமா. எதை முடிவெடுக்க வேண்டியது ஏற்பாட்டாளர்கள் அல்லவா.

இத்தநைக்கும் முன் இந்த அரச சார்பற்ற நிறுவனம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லாவிதமான வசதிகளுடன் வீடுகளை அமைத்துக்கொடுத்த ஒரு நிறுவனமாகும் பல சமுக செயற்பாடுகளில் ஈடுபடும் ஒரு நிறுவனம்...

இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான செயலால் அந்த விழா இடம்பெறவில்லை அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். இப்படி காட்டுமிராண்டித்தனமான வேலை செய்பவர்கள் இருக்கத்தான் வேண்டுமா.

நேற்று நடந்த ஒரு சம்பவம்...

ஒரு கிராமம் அங்கே ஒரு சாதாரண குடும்பம் தாய் தந்தை வயது போய் விட்டது இதனால் மகள் ஒரு சிறு கடை வைத்து நடாத்தி அன்றாட வாழ்க்கையை நடாத்திக்கொண்டு இருக்கிறார்.

இந்த கடையில் சுதந்திரமாக ஆயுதங்களுடன் நடமாடி மக்களை விரட்டும் சிலர் தொலைபேசி அட்டைகளை கடனுக்கு வாங்குவதுண்டு பல ஆயிரம் ரூபாய்கள் அவர்கள் கொடுக்கவேண்டி இருக்கிறது நேற்று கடனுக்கு கேட்டபொழுது அந்த பெண் கடனுக்கு இல்லை. ஏற்கனவே நீங்கள் நிறைய காசு தர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

அவர் கடனுக்கு இல்லை என்று சொன்னதனால் அவருக்கு கிடைத்த தண்டனை அவர் 1 ம திகதிக்குமுன் கடையை முட வேண்டும்

இது எந்த விதத்தில் ஞாயம் அவர் கடன் வாங்கி கடை வைத்து நடத்துகின்றார். இந்த கடயினால்தான் தமது அன்றாட வாழ்க்கை போகிறது.
அவர் தட்கொலை செயும் அளவில் இருக்கிறார். இந்த அடாவடித்தனங்களை கேட்க யாரும் இல்லையா....


read more...