Showing posts with label பார்வைகள். Show all posts
Showing posts with label பார்வைகள். Show all posts

Friday, 11 September 2009

ஏன் இந்தப் புறக்கணிப்பு?

இலங்கையின் பொருளாதாரத்திலே பெரும் பங்கு வகிக்கின்ற தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறுபட்ட இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் படும் அவலங்களை உரியவர்கள் பார்க்காமல் இருப்பது போன்று தெரிகின்றது.

இன்று தொட்டத்தொளிலாளர்கள் தொடர்பில் பேசப்படுகின்ற விடயம்தான் சம்பள உயர்வுப் பிரச்சனை. இன்று அவர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த சம்பளம் 290 ரூபா. இன்று இலங்கையின் பொருட்களின் விலை என்ன? ஒரு டீ குடிக்க 25 ரூபா வேண்டும். இந்த 290 ரூபா ஒரு நாள் சாப்பாட்டுக்கே போதுமானதாக இல்லை. இந்த 290 ரூபாவை வைத்துக்கொண்டு இவர்களால் என்ன செய்ய முடியும்.

ஒரு குடும்பத்தலைவன் இந்த 290 ரூபாவை வைத்து என்ன செய்ய முடியும். தான் மட்டும் சாப்பிட்டு காலத்தை கடத்துவதா? தன குடும்பத்தில் உள்ளவர்களின் அத்தனை தேவைகளையும் எப்படி சமாளித்துக் கொள்ள முடியும்.

இன்று இலங்கையிலே ஏனைய பிரதேசங்களிலே ஒரு கூலித்தொலிலாலிக்கு வழங்கப்படும் குறித்த பட்ச கூலி 500 ஆகவும் இருக்கின்றது. சில இடங்களில் 1000 ஐயும் தாண்டுகின்றன. இது இவ்வாறிருக்க ஏன் இவர்கள் மட்டும் புறக்கணிக்கப்படுகின்றனர்.

அன்று தொட்டு இன்று வரை தொட்டத்தொளிளார்கள் தமது கூலி தொடர்பிலே பல போராட்டங்களை நடாத்தியும் நல்ல தீர்வு கிடைத்ததாக இல்லை. இது தொடர்பில் சில அரசியல்வாதிகள் சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க பின்னிப்பதேன். தோட்டத் துரைமார்களை பகைக்கும்போது தமது அரசியல் எதிர் காலம் பாதிக்கப்பட்டு விடும் என்பதாலா?

இன்று எல்லோரும் ஒரு நாட்டு மக்கள் என்று பேசிக்கொண்டிருப்பவர்களிடம் கேட்கின்றேன் மலையகம் என்பது தனி ஒரு நாடா? நாம் எல்லோரும் இலங்கையர்கள் எனும் போது ஏன் இந்த மக்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். ஏனைய பிரதேசங்களைப் போல் இந்த மக்களுக்கும் வசதிகள், சலுகைகள் வழங்கப்படலாம் தானே.

பிரதேச அபிவிருத்தி பிரதேச அபிவிருத்தி என்று பேசிக்கொண்டு இருக்கின்றோம். இன்று எத்தனை தொழிலாளர்கள் பல கஸ்ரங்களை அனுபவித்து வருகின்றார்கள். இவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு குறைந்த பட்சம் கூலியையாவது அதிகரித்து வழங்க முடியாமல் இருப்பது ஏன்?

சரியான முறையிலே வாழ்க்கைச் செலவுக்கேற்ற கூலி வழங்கப்படாதவிடத்து அவர்கள் மட்டுமல்ல அவர்களது எதிர்கால சந்ததியே பாதிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவுக்கேற்ற கூலி வழங்கப்படாதபோது சிறுவர்களின் கல்வி, போசாக்கு உட்பட அனைத்துமே பாதிக்கப்படுகின்றன.

நண்பர் யோ (கா) குறிப்பிட்டது போன்று தோட்டத் தொழிலாளர்களை பலரும் ஏளனமாகப் பார்க்கின்ற ஒரு நிலை இருக்கின்றது. இந்த நிலை மாற வேண்டும். பிரதேச வாதம் என்பது எம் மனங்களில் இருந்து முற்றாகக் களையப்பட வேண்டிய ஒன்று. தமிழரின் இன்றைய நிலைக்கு பிரதேச வாதமே முக்கிய காரணமாகும். தோட்டத் தொழிலாளர்கள் என்று ஏளனமாகப் பார்ப்பதை விடுத்து அனைவரும் தமிழர்கள் என்ற சிந்தனை வர வேண்டும்.

இன்று வலையுலகத்திலும் தொட்டத்தொளிலாளர்களின் பிரட்சனைகள் பற்றி பேசப்படுவது மிக மிகக் குறைவு. மலையகத்திலே பதிவர்கள் குறைவு என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும் ஏனைய பதிவர்கள் மலையகம் பற்றி தங்களுக்கு தெரிந்த விடயங்களை ஏனைய பதிவர்களோடு பகிர்ந்து கொள்ளலாமல்லவா?

நண்பர் யோ (கா) அவர்களின் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வியல் போராட்டம் எனும் இடுகைக்கு வந்த பின்னூட்டங்களைப் பார்க்கும் போது கவலைப்பட வேண்டிய விடயமாக இருந்தது. அவரது பதிவுகளுக்கு வழமையாகக் கிடைக்கின்ற பின்னுட்டங்களைவிட மிக மிகக் குறைவாக இருந்தது. இதற்கு என்ன காரணம் பதிவர்களாகிய நாங்களும் தோட்டத் தொழிலாளர்களை ஏளனமாகத்தான் பார்க்கின்றோமா?

தோட்டத்தொளிலாளர்களும் எம்மைப் போன்ற தமிழர்களேதான். எமது உறவுகள்தான் நாம் அவர்களுக்காக எம்மாமால் முடிந்தவற்றை செய்வோம்
read more...

Tuesday, 14 July 2009

இன்றைய சிறுவர்களின் கல்வி நிலைதான் என்ன....


இந்தப்பதிவு மூலமாகவும் சிறுவர்கள் பற்றியே பேசப்போகின்றேன். என்னடா இவன் சிறுவர்கள் பற்றியே பேசிக்கொண்டு இருக்கின்றான் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. எமது சிறுவர்கள் பல்வேறு வழிகளிலே பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.அவர்களைப் பற்றிவும் அவர்களின் எதிர்காலம் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் எமது சிறுவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகுகின்ற வீதம் அதிகமாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளிலேதான் இந்நிலை அதிகமாகக் காணப்படுகின்றது

நாட்டில் இடம் பெற்ற உள்நாட்டு யுத்தம் முக்கிய காரணம் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதற்கில்லை. இதைத்தவிர இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.


ஆறாம் ஏழாம் தரங்களிலே கல்வி கற்கின்ற சிறுவர்களே அதிகமாக பாடசாலையை விட்டு இடை விலகிச் செல்கின்றனர். இதன் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்த பொழுது ஆறாம், ஏழாம் தரங்களுக்கு வருகின்றபோதே அவர்களுக்கு சமுகத்தை பற்றிய உணர்வு தோன்றுகின்றது. அவர்கள் ஆறாம்,ஏழாம் தரங்களை அடையும் வரை அவர்கள் தாங்கள் எழுத வாசிக்க தெரியாமல் இருக்கின்றோமே படிக்கவேண்டுமே என்று சிந்திக்காமல் விளையாட்டுத்தனமாக இருந்து விடுகின்றனர்.
இவர்கள் சமுகத்தை பற்றிய உணர்வு வருகின்ற போது. தாங்கள் எழுத வாசிக்க தெரியாமல் இருக்கின்றோமே, என்ற ஒரு சிந்தனை தோன்றுகின்றது. இவர்கள் பாடசாலையை விட்டு விலக நினைக்கின்றார்கள். காரணம் வகுப்பிலே இருக்கின்ற சக மாணவர்கள் தங்களை கேலியாக பார்ப்பார்கள், தாங்கள் கேலி நிலைக்கு சென்று விட்டோமே என்ற ஒரு மனப் பாண்மை தோன்றுகின்றது. இதனால் படிப்படியாக பாடசாலையை விட்டு இடை விலகுகின்றனர்.

இவ்வாறு இடை விளகுகின்றவர்களின் நிலை .கேள்விக்குறியாகின்றது இவர்கள் பல்வேறு பட்ட பிரட்சனைகளை எதிர் நோக்குகின்றனர். இது ஒரு புறமிருக்க. இவர்கள் இவ்வாறு இடை விலகுவதை தவிர்ப்பதற்குரிய வழிகளை ஆராய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.


இவ்வாறு இடை விளகுபவர்களின் வீதம் கிராமப்புரங்களிலேதான் அதிகமாகக் காணப்படுகின்றன. இவர்களை பற்றி ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது. இவர்களது பெற்றோரும் கல்வியிலே பின் தங்கி இருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. இவர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியிலே அக்கறை செலுத்தாதவர்களாக இருக்கின்றனர். முதலிலே இப்படியான பெற்றோருக்கு சிறுவர்களின் கல்வியின் அவசியம் பற்றி. பல விழிப்புணர்வுக் கருத்தரங்கு போன்ற பல்வேறு செயற்பாடுகளை செயட்படுத்த வேண்டி இருக்கின்றது.
அத்தோடு நாங்கள் உடனடியாக இடைவிலகிய சிறுவர்களை பாடசாலையில் சேர்த்துக் கொள்வதனால் அவர்கள் மீண்டும் இடை விலகக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுக்கின்றன. முதலிலே இவர்களை தனிப்பட்ட ரீதியிலே அணுகி இவர்களை எழுத வாசிக்க பழக்க வேண்டும். பல சிறுவர்கள் நன்றாக படிக்கக்கூடியவர்கள் இன்று பாடசாலையை விட்டு இடை விலகியவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கண்டறியப்பட்டு இன்று கல்வியிலே முன்னிலையில் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை தனிப்பட்ட ரீதியிலே எழுத வாசிக்க பழக்கிய பின்னர் அவர்களை பாடசாலையில் சேர்க்கின்ற போது அவர்களது மனதிலே இருந்த படிக்கத் தெரியாதவர்கள் என்ற குற்ற உணர்வு நீங்குகின்றது. கல்வியிலே முன்னிலைக்கு வரக்கூடிய சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றன. இதில் பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்கள் தொடர்பாக பல்வேறு செயத் திட்டங்களை மேற்கொண்டு வரும் களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியம் வெற்றியும் கண்டுள்ளது. பல இடை விலகிய மாணவர்களின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களை பாடசாலைகளிலே மீண்டும் சேர்த்து இன்று கல்வியிலே நல்ல நிலையில் இருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது.

இன்னும் பல காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். காரணங்களையும் தடுப்பதற்குரிய வழிவகை என்ன?... அவ்வப்போது உங்களுக்காக வந்து சேரும்.
read more...

Sunday, 5 July 2009

வீதியோர நவின பிச்சைக்காரர்கள்.....

இந்தப்பதிவிநூடாக நான் எவர் மனதினையும் புண்படுத்தவில்லை. என் கண்ணனில் பட்ட சம்பவங்களை பதிவிடுகிறேன். அவ்வளவுதான்...


இன்று இலங்கையின் பல பிரதேசங்களிலும் தெருவோர பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகரித்து விட்டது. இந்தப்பதிவிநூடாக நான் உண்மையான பிச்சைக்காரர்களை பற்றி அல்ல போலி பிச்சைக்காரர்களை பற்றியே குறிப்பிடுகிறேன்...


இன்று எங்கு பார்த்தாலும் போலி பிச்சைகாரர்களின் தொல்லைதான் தாங்க முடியவில்லை. பொது இடங்கள், குறிப்பாக வாகனங்களில் பிரயாணம் செயும்போது பிரயாணிகள் படும்பாடு....


உண்மையிலேயே உழைக்க முடியாத ஒருவருக்க பிச்சை கொடுப்பது நியாயமே. ஆனால் நன்றாக உளைக்கக்கூடியவர்கள் போலி சாட்டுக்களை வைத்து பிச்சை எடுக்கின்றார்கள். இவர்கள் உண்மையிலேயே உழைக்க முடியாமல் இருக்கும் உண்மையான பிச்சைக்காரர்களின் பிளைப்பில்கூட மண் அள்ளி போடுகின்றார்கள்.


ஆனால் நன்கு உளைக்கக்கூடியவர்கள் பல்வேறு வேசமிட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். அண்மையில் நான் கண்ட சிலவற்றை தருகிறேன்.....


நான் அடிக்கடி வாகனத்திலே பிரயாணம் செய்பவன். இப்படிப்பட்ட போலி பிச்சைக்காரர்களின் தொல்லை வாகனங்களிலேயே அதிகமாக இருக்கும். பெண்களாக இருந்தால்குட மனமிரங்கி ஏதாவது செய்யலாம் ஆனால் நன்கு உளைக்கக்கூடிய இளைஜர்களே கைகளில் கால்களில் கட்டுப்போட்டுக்கொண்டு கால் கைகள் இல்லாதவர்கள் போல் நடித்து பிச்சை எடுக்கின்றனர். எதற்காக. என்று பார்த்தால் குடிப்பதற்காக....


என்னும் சில பெண்கள் கைக்குளந்தைகலுடன் பிச்சை எடுப்பார்கள். அவர்களை பார்த்தால் மனத்தாபபடுவோம் அனால் பிச்சை எடுக்கும் பணம் போதைப்போருளுக்கே பயன்படுத்துகின்றனர். பிச்சை எடுப்பவர்களில் அதிகமானவர்கள் பிச்சை எடுப்பது வரும் வருமானத்தை கொண்டு போதைப்பொருள் வாங்குவதற்கே.



ஒரு பேருந்து தரிப்பிடத்திலே ஒரு வயது போன அம்மா பிச்சை எடுப்பார் நான் அவருக்கென்று தினமும் குறிபிட்ட தொகை ஒன்றை கொண்டுபோய் கொடுப்பேன். ஒரு நாள் பின்னேரம நான் வந்த வாகனத்திலே ஏறினார் அவரோ மதுபான சாலையில் இறங்கி விட்டார் நான் அன்று முதல் அவருக்கு பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டேன்...


இன்று அவர்கள் புதிய முறை ஒன்றை பயன் படுத்துகின்றனர். அவர்களும் நவின உலகுக்குள் நுழைந்து விட்டார்கள். எத்தனைதரம்தான் அம்மா, தாயே என்பது அச்சடிக்கப்பட்ட கடதாசிகளை வாகனங்களிலே இருப்பவர்களிடம் கொடுப்பது அதிலே தங்களது குடும்ப நிலை தனது நிலை என்பன இருக்கும். இதில் அச்சடிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் உண்மை இல்லை என்பது ஒரு புறமிருக்க எல்லா பிச்சைக்காரர்களுமே இதனையே கொப்பி எடுத்து வைத்து இருப்பார்கள்...


சிறுவர்களை பொறுத்தவரை பிச்சை எடுப்பார்கள் ஆனால் அவர்கள் பிச்சை எடுப்பது அவர்களை சென்றடைவதில்லை அவர்களை வழிநடத்த வேறு ஒருவர் இருப்பார். அவருக்கே எல்லாம் சென்றடையும்....



சிறுவர்களை பொறுத்தவரை பிச்சை எடுப்பார்கள் ஆனால் அவர்கள் பிச்சை எடுப்பது அவர்களை சென்றடைவதில்லை அவர்களை வழிநடத்த வேறு ஒருவர் இருப்பார். அவருக்கே எல்லாம் சென்றடையும். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்


இவர்கள் எல்லோரையும் ஏமாற்றி பிழைப்பு நடத்துவதுடன் உண்மையாக உழைக்க முடியாதவர்களின் பிழைப்பை கெடுத்துக்கொண்டு இருக்கின்றனர்.

read more...

Wednesday, 1 July 2009

திருந்துவார்களா இவர்கள் - களுதாவளைக்கிராமத்தின் நாளைய நிலை என்ன?

இந்தப்பதிவினை எனது கடந்த பதிவின் தொடராகவே தருகின்றேன். இலங்கையின் கிழக்கு மாகாண மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற களுதாவளை கிராமம் ஒரு விவசாயக்கிராமமாகும் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒரு பெரிய கிராமம் என்று சொல்லலாம். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரை தீர்மானிக்கும் ஒரு கிராமம் என்று சொல்வார்கள் அதுதான் உண்மையும் கூட. அப்படி பெரிய ஒரு கிராமம்.


இக்கிராமத்திலே பல துறை சார்ந்தவர்கள் இருக்கின்ற அதே வேளை விவசாயம் முக்கிய இடத்தினை பெறுகின்றது. இங்கு உயர் பதவிகளிலே இருப்பவர்கள் கூட விவசாயத்திலே ஈடு படுவது ஒரு சிறப்பு அம்சமாகும். விவசாயம் என்கின்றபோது களுதாவளை என்றால் வெற்றிலை என்பார்கள் அந்த அளவிற்கு வெற்றிலை செய்கைக்கு பேர் பெற்ற ஒரு இடமாகும். அத்தோடு மிளகாய் செய்கை, வெங்காயம், கத்தரி, வேண்டி போன்ற பயிர் செய்கைகளில் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபடுகின்றனர். ஒரு நாளைக்கு பத்தாயிரம் கிலோவிட்குமேல் மிளகாய் பறிக்கப்படுகின்றது. அந்த அளவிற்கு பெரிய ஒரு பெரிய விவசாயக் கிராமமாகும்.


இன்று இக்கிராமத்தின் எதிர்கால நிலை எவராலும் தீர்மானிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது. இன்று இக்கிராமத்தினுடைய நீர்வளத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கின்றது. இவ் விவசாய கிராமத்தினுடைய நீர் உவர் நீராக மாறி வருகின்றது. இதனால் இன்று விவசாயச் செய்கை வெகுவாக குறைவடைந்து உள்ளதோடு விவசாயிகள் பல பிரட்சனைகளை எதிர் நோக்கயுள்ளனர்.


இதட்குரிய காரணத்தை பார்க்கின்றபோது இந்த நீர் பிரட்சனைக்கு அக்கிராம மக்களும் முக்கிய காரணமாக இருக்கின்றார்கள். இக்கிராமத்திலே ஒவ்வொரு விவசாயியும் 4 5 ஏக்கர் நிலப்பரப்பிலே பயிரிட்டுள்ளனர். இதன் காரணமாக நீரை விரைவாகவும் தொடர்த்சியாகவும் பெற வேண்டும் என்ற நோக்கோடு குழாக்கினறுகளை 40, 50 அடி ஆழத்துக்கு அமைத்து இருக்கின்றனர் இதனால் நிலக்கீழ் நீர் தொடர்த்சியாக உறிஞ்சப்படுவதனால் நீர் உவர் நீராக மாறுகின்றது.

மற்றுமோர் காரணம் இருக்கின்றது. இந்தப்பிரதேசத்திலே மக்கள் குளங்களை பிடித்து. அவற்றி நிரப்பி குளம் இருந்த இடம் இல்லாமல் செய்து தங்களது தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர். இதை செய்வது வேறு யாருமல்ல இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய உயர் அதிகாரிகளும் அவர்களின் குடும்பத்தினருமே. இதனை மக்கள் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டபோது. அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தோடு வந்து பார்த்து இருக்கின்றார்கள். நிலைமையை உணர்ந்து விட்டார்கள். வந்த அதிகாரிகள் எதுவும் பேசாமல் பொய்விட்டனராம். ஏதாவது பேசி இருந்தால் தமது வேலையும் போய் இருக்கும் என்பதனால். இப்படி எல்லாம் நடக்கிறது இதனால் பாதிக்கப்படுவது ஏழை விவசாயிகள்தான்.


இது தொடர்பான படங்கள் விரிவான விபரங்களை அடுத்தடுத்த பதிவுகளில் எதிர் பாருங்கள் இன்றுதான் இவர்கள் திருந்துவார்களோ??????????


என் பார்வைகள் தொடரும்....

read more...

Tuesday, 30 June 2009

திருந்துவார்களா இவர்கள்.....

இன்று இலங்கையை பொறுத்தவரை எல்லாமே ஒட்டு மொத்தத்தில் இன்று சாதாரண மக்களை விட படித்து பெரிய பதவிகளில் இருப்பவர்களில் சிலர்தான் பல குற்றச் செயல்களிலும் லஞ்சம் வாங்குதல் போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர்.

இன்று பல்வேறுபட்ட விடயங்கள் பற்றி இந்த பதிவினுடாக தர இருக்கின்றேன். என்று லஞ்சம் வாங்குதல் என்பது இலங்கையையும் தொற்றி விட்ட ஒன்றாக மாறி இருக்கின்றது. இன்று இந்த காரியங்களில் பல உயர் அதிகாரிகளும், அரசியல் வாதிகளுமே அதிகம் ஈடுபடுகின்றார்கள் என்று சொல்லலாம். இன்று உயர் அதிகாரிகளை பொறுத்தவரை (எல்லோரும் இல்லை நல்ல அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்) எதற்கு எடுத்தாலும் லஞ்சம் வாங்கிக்கொண்டு இருக்கின்றார்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழை மக்கள்தான்.

இன்று பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம். பணம் படைத்தவர்களுக்கு எல்லாமே சர்வ சாதாரணமாகிவிட்டது. காசிருந்தா வாங்கலாம் எல்லாவறைறயும். இன்று இலங்கையை பொறுத்தவரை உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதனால் அதிகம் பாதிக்கப்படுவது கீழ்மட்ட மக்களே.

இன்று என்ன நடக்கின்றது எதற்கு எடுத்தாலும் லஞ்சம். இன்று படித்த இளைஜர்கள் வேலை இல்லாமல் திண்டாடிக்கொண்டு இருக்கின்றார்கள். அதிலும் சாதாரண குடும்பத்தில் பிறந்து படித்து பட்டம் பெற்ற ஒரு பட்டதாரி படும்பாடு கேட்கவேண்டியதில்லை. அவன் படிப்பதற்கோ அவன் பட்ட கஷ்டம் வேறு. எப்படியோ கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்று வெளியே வந்து வேலைக்கு போகலாம் என்று நினைத்தால் அவன் ஏறி இறங்காத அலுவலகமில்லை போகாத நேர்முக பரிட்சை இல்லை. வேலைதான் கிடைத்த பாடில்லை. ஆனால் கஷ்டப்பட்டு படிக்காமல் குறுக்கு வழியில் வந்த இன்நொருத்தனுக்கு அந்த வேலை கிடைக்கிறது. எப்படித்தான் இவன் படித்து பட்டம் பெற்றாலும் இவனிடம் பணம் என்னும் தகுதி இருக்கவில்லை.
இங்கே என்ன நடக்கிறது உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இருக்கும் வேலைகளை பேரம்பேசி விற்கின்றனர். தங்களது குடும்ப உறவுகள் அல்லது வேண்டப்பட்டவர்களுக்கு அந்த பதவிகளை கொடுக்கின்றனர். மற்றவர்களை ஏமாற்றுவதற்காக நீர்முகப்பரிட்சை நடாத்திவிடுவார்கள் ஆனால் ஏற்கனவே வேலை பேரம் பேசப்பட்டு விடும்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த இவனால் என்னதான் செய்யமுடயும். அந்த பதவிகளுக்கு அமர்த்தப்படுபவர்கள் சரியான தகுதியோடு வந்திருக்கிரார்களா என்று பார்த்தால் அவர்கள் அலுவலகங்களிலே படும் பாட்டை பார்த்தால் புரிகிறது.
அதுமட்டுமல்ல இன்று சில அரச அலுவலகங்களிலே மக்கள் சிறிய வேலைகளை செய்வதாக இருந்தாலும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த காரியம் நிறைவடையும். உயர் அதிகாரிகள் மட்டுமல்ல சில கீழ்மட்ட அதிகாரிகளும் இதிலே கில்லாடிகள். இவர்களிடம் அதிகம் மாட்டுப்படுவது கிராமப்புற மக்களே.
லஞ்சத்தை ஒழிக்க வேண்டியவர்களே லஞ்சம் வாங்குவது சர்வ சாதாரணமாகிவிட்டது. இன்று ஒருசில பொலிஸ் அதிகாரிகள் நன்றாகவே உழைக்கின்றார்கள். பல்வேறு வழிகளில்...... (வேண்டாம் சொன்னால் சிக்கலில் மாட்டிவிட்டேன் என்றால்.....)
அதேபோல் சிலர் முக்கிய பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக இருப்பார்கல் ஆனால் அவரோ பல ஊளல்களில் ஈடுபடுவார். இயட்கையை பாதுகாக்க வேண்டியது எமது கடமையல்லவா. இன்று எமது வளங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த இயட்கை வளங்களை நாசம் செய்வதிலே பல உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஈடுபடும் போது அவர்களை தட்டிக்கேட்பதற்கு மக்களோ மற்றும் அதனோடு தொடர்புடையவர்களுக்கோ முடியாத காரியம்........ என்ன நடந்தது.... அடுத்த அடுத்த பதிவுகளில் தொடரும்....
read more...

Monday, 29 June 2009

இன்றைய நம் சிறுவர்களின் எதிர்காலம்??????



இன்று இலங்கையிலே மிஞ்சி இருப்பது என்ன கிராமத்துக்கொரு சிறுவர் இல்லங்களேதான். (அநாதை இல்லம் என்று சொல்லவேண்டாம் அவர்கள் அனாதைகள் இல்லை அனாதைகள் ஆக்கப்பட்டவர்கள்) நாட்டில் நடந்து வந்த உத்த சூழ்நிலையின் காரணமாக இன்று சிறுவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.



இவர்கள் தாய் தந்தையரை இழந்த நிலையில் சிறுவர் இல்லங்களிலே ஏங்கிக்கொண்டு இருக்கின்றார்கள் தனது தாய் தந்தையரோடு, உறவினர்களோடு சந்தோசமாக வாழ வேண்டியவர்கள் இன்று பல இன்னல்களுக்கு மத்தியிலும் தமது வாழ் நாளைகளித்துக்கொண்டு இருக்கின்றார்கள். எத்தனை சிறுவர்கள் தாய் பாசத்துக்காக ஏங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். ஏனைய சிறுவர்கள்போல் தாங்களும் வாழ வேண்டுமே என்று ஏங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். இந்தச் சிறுவர்களால் தங்களது ஆசா பாசங்களை கட்டுப்படுத்தி எப்படித்தான் வாழ முடயும். சந்தோசமாக வாழ வேண்டிய சிறுவர்கள் இன்று விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்


சந்தோசமாக தமது வாழ்நாளைகளிக்க வேண்டிய நாளைய நம் தலைவர்கள் சந்தோசமாக சிறுவர் இல்லங்கல்ளிலே வாழ்வார்களா? அவர்களால் படிப்போ அது சார்ந்த செயற்பாடுகளிலோ எப்படி ஈடுபட முடயும். எப்போதும் அவர்களை தாங்கள் அனாதைகள் என்றும் தங்களுக்கு யாரும் இல்லையே என்ற ஏக்கமுமே இருக்கும். சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற சிறுவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை ஏனைய சிறுவர்கள்போல் பெற்றுக்கொள்ளத்தான் முடயுமா


இந்த சிறுவர் இல்லங்களிலே ஆண் பிள்ளைகள் மட்டுமல்ல பெண் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். இந்த பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி யோசித்துப்பாருங்களேன். ஆண் பிள்ளைகளோ ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் எல்லாம் சரியாகிவிடும் ஆனால் பெண் பிள்ளைகளைப் பொறுத்தவரை பல பிரட்சனைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படுகின்றது. தங்களது வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு கவலையும் விரக்தியும் அதிகரிக்கின்றது. தங்களுக்கு யாரும் இல்லையே என்ற ஏக்கம் வருகின்றது. தங்கள் எதிர் காலத்தை பற்றி சிந்திக்க தொடங்கி மனதை குழப்பிக்கொண்டே இருப்பார்கள்




அவர்களது எதிர்காலத்தை பற்றி அவர்களை விட நாமே சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இன்றைய கால கட்டத்தில் பணக்கார வீட்டு பெண்களுக்கே சீதனம் என்ற ஒன்றினால் திருமணம் தள்ளப்பட்டுக்கொண்டு போகும் இந்த காலத்தில் இவர்களின் நிலை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்

இந்த பெண் பிள்ளைகள் தங்களது பருவ வயதை அடைந்ததும் பல பிரட்சனைகளை எதிர் நோக்குகின்றனர். இன்று நாகரிக மோகத்தில் இளம் பெண்கள் நாகரிகமான உடை, (நடை), அலங்காரங்களோடு திரிவதை கண்டால் இவர்களது மனதிலே எப்படி கவலை வராமல் இருக்கும்.
இந்த சிறுவர்கள், பெண் பிள்ளைகள் பற்றி யாரும் கவலைப்படுவதாகத்தெரியவில்லை அவர்களின் எதிர் காலம் பற்றி எவரும் சிந்திப்பாரும் இல்லை.

இந்த இடத்திலே நான் ஒன்றை குறிப்பிட வேண்டும் நான் இந்த பதிவினை மேற்கொள்ள துண்டியது எனக்கு தெரிந்த ஒரு அக்காவின் தாராள மனசுதான். அவரோ ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் தேயிலை தோட்டங்கள் எல்லால் இருக்கின்றன அந்தளவிற்கு பணம் படைத்தவர். ஆனால் ஏழைகளுக்கு உதவி செய்பவர். அவர் அடிக்கடி என்னிடம் கூறுவார் இந்த சிறுவர் இல்லங்களில் இருக்கின்ற பெண் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி தான் சிந்திப்பதாகவும் கவலை அடைவதாகவும்.


அவர் அண்மையில் என்னிடம் கூறிய ஒருசில விடயங்களை என்னால் நம்ப முடியவில்லை அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்கள் இருவரையும் சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற பெண் பிள்ளைகளுக்கே திருமணம் செய்து வைக்க நினைத்து இருப்பதாகவும். இதனால் அந்த பிள்ளையின் உறவுகளை இளந்த கவலை இல்லாமல் போவதோடு அந்த பிள்ளையின் எதிர் காலம் வளம் பெரும் என்றும். தாய் பாசத்துக்காக ஏங்கிய அந்த பிள்ளைக்கு தான் ஒரு தாயக இருக்க போவதாகவும் கூறினார். தனது மகன் கூட சம்மதம் தெரிவித்து விட்டார் என்பது சந்தோசமான விடயம்.


இப்படி எல்லோரு இருப்பார்களானால் இவர்களின் வாழ்க்கை வளப்படுமல்லவா.
read more...

Friday, 19 June 2009

இன்றைய இளைஐர்கள் போகிற போக்கில்...

இன்று நவின தொழினுட்ப வளர்த்சியினால் உலகம் சுருங்கிவிட்டது எனலாம்.நவின உலகுக்கு நாமும் மாறவேண்டி இருக்கின்றது. நவின உலகத்திற்கு ஏற்றாற்போல் மாறவேண்டும் என்பதற்காக மனம் போகிற போக்கிலும் கால் போற போக்கிலும் போக முடயுமா?....

இந்த நாகரிக உலகில் பெஷன் என்பது அனைவராலும் முணுமுணுக்கப்படும் ஒன்று. எதற்கு எடுத்தாலும் இதுதான் பெஷன் என்பார்கள். நவ நாகரிகத்துக்கு ஏற்றாற்போல் மாறவேண்டும் என்பதுக்காக பெஷன் என்று சொல்லும் எல்லா விடயங்களும் ஏற்றுக்கொள்ளத்தான் முடயுமா.

இந்த பெஷன் என்கின்ற நாகரிக மோகம் பலரை பாழாக்கிக்கொண்டு இருக்கின்றது. இந்த நாகரிக மோகத்தில் அதிகம் சிரளிக்கப்படுபவர்கள் இளைஜர்கள் என்றுதான் சொல்லலாம். இன்றைய இளைஜர்கள் நாகரிக மோகத்தால் தங்களது வாழ்க்கையை பாளாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். (நீங்க என்ன திட்டுறது புரியுது நம்ம யுவதிக்களும்தான் அவங்களுக்கு வேற பதிவு இருக்குங்க.)

நாகரிகம் என்கின்ற போர்வையில் இன்றைய இளைஜர்கள் மேல்நாட்டு நாகரிக மோகம் கொண்டு பல போதைப்பொருளுக்கு அடிமையாகி தாங்கள் மட்டுமல்ல சமுகததையும் சீரழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
மதுபானம் சிகரெட் கஞ்சா என்னும் பலவற்றுக்கு அடிமையாகி இருக்கின்றார்கள். இளையர்கள் மட்டுமல்ல பாடசாலை செல்லும் சிறுவர்களும் இதட்கு அடிமையாகிவிட்டதுதான் கவலைக்குரிய விடயம்.
எது எப்படி இருப்பினும் இவர்கள் மதுவுக்கு அடிமயாததனால் குடிக்கவும் குடித்தபின்னும் நடக்கும் திருவிழாக்களை பார்ப்போம்.

இவர்கள் குடித்தபின்னும் என்ன பாடு படுத்துகிறார்கள் தினமும் சாப்பிடுரான்களோ இல்லையோ குடித்துவிடுவாங்க அதுவும் சொந்த காசில் குடிப்பது குறைவு என்னைப்போல் அப்பாவிங்க மாடடுவாங்க (உண்மைதான் நான் நல்லவன் நம்புங்க) யாரை பிடிப்பது காசு பறிக்க என்று இருப்பாங்க சிலர மாலை 6 மணிக்கு பிறகு நல்ல நிலையில் இருக்கமாட்டார்கள். குடித்துவிட்டு எங்களை தூங்க விடுறாங்களா இல்லையே.

இன்னுமொரு நாகரிகம் இருக்கிறது என்ன ஒரு சின்ன விடயம் நடந்தாலும் பார்ட்டி போடவேண்டும். கல்யாணம் கட்டினால், குழந்தை பிறந்தால், குழந்தைக்கு பெயர் வைத்தால், வெளியூர் போனால், பரிட்சையில் சித்தி பெற்றால், ..........இன்னும் இருக்குங்க ஏன் யாராவது மரணமடைந்தால் அவரது உறவினர் பார்ட்டி போடா வேண்டும். என்ன பார்ட்டி என்று கேட்காதிங்க தண்ணி பார்ட்டிதான்.
இவர்களது இந்த செயல்களை பார்த்து மற்ற சிறுவர்களும் இவர்கள் பாதையில் செல்கின்றார்கள். இன்று சிகரெட் பிடிப்பதும் ஒரு நாகரிகமாக மாறிவிட்டது இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அனைத்தையும் சிந்தித்து நல்ல பழக்க வழக்கங்களை நல்ல சமுகத்தை சிரளிக்காத நாகரிகத்துக்கு இன்றைய இளயர்கள் மாறுவது நல்லதே.


read more...

Thursday, 18 June 2009

தொல்லை தரும் தொலைபேசிக் கலாச்சாரம்... பதிவு 2

இன்று கையடக்க தொலை பேசிகளின் பாவனை அதிகரித்து விட்டது என்பது நாம் அறிந்தது. சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவர் கையிலும் இன்று தவழ்ந்து பலரை சீரழித்துக்கொண்டு இருக்கிறது இந்தத் தொல்லைபேசி என்று சொல்லலாம்.

கையடக்க தொலைபேசி நல்ல விடயங்களுக்கு பயன் படுத்தும் காலம் மாறி இன்று தொலைத்துதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் போட்டியின் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பட்ட சேவைகளை போட்டி போட்டுக்கொண்டு வழங்குகின்றன.

எது எப்படி இருப்பினும் இந்த தொலைபேசி உரையாடல்கள் முலம் நடந்த சில சுவையான, யோசிக்கவேண்டிய சில சம்பவங்கள் இப்பதிவிநூடாக தருகிறேன்.

ஒரு நண்பர் தனது நண்பி ஒருவருக்கு இரவு 9 மணியளவில் அவசர செய்தி ஒன்று சொல்வதற்காக அழைப்பினை எடுத்து இருக்கிறார். அந்த நண்பி வேய்ட்டிங்கில் இருந்திருக்கிறார் நண்பரோ அவசர செய்தி சொல்லவேண்டியவர் பலதடவை அழைப்பினை எடுத்து பார்த்தார் அழைப்பு கிடைக்கவில்லை வேய்டிங்தான். நண்பரும் விடவில்லை நள்ளிரவு 1.30 போல் நண்பிக்கு அழைப்பு கிடைத்தது. நண்பர் கேட்டார் 9 மணிமுதல் 1.30 வரை இந்த இரவில் யாரோடு பேசுனிங்க என்று. நண்பி சொன்ன பதில் அண்ணாவோடு பேசினேன் என்றார். நண்பர் நினைத்தார் அண்ணா எதோ வெளி நாட்டில் இருக்கிறார் என்று. அண்ணா எங்கே இருக்கிறார் என்று கேட்டார். நண்பி சொன்னார் அண்ணா பக்கத்து ரூம்ல இருக்கிறார் என்று . நண்பருக்கு கோபம் கோபமாக வந்ததாம். ஒரு வீட்டில் இருந்து கொண்டு பக்கத்து ரூம்ல இருக்கும்இந்த நேரத்துல ...... கடவுள்தான் காப்பாத்தணும்

பெரிய தேன்னை மரங்களிலே தேங்காய் பறிப்பவர்கள் மரத்திலே ஏறி தேங்காய் பறிக்கும் போது ஒரு தேங்காயை பறித்து கிழே போடுவார் கிழே நிற்பவர் அது தேங்காயா என்று பார்த்து சத்தம் போட்டு சொல்லுவார் மரத்தில் இருப்பவரும சத்தம் போட்டு தேங்காயா என்று கேட்பார் அது அந்த பிரதேசத்தில் எல்லோருக்கும் கேட்கும்படியாக இருக்கும். இது அந்தக்காலம். இன்று மரத்தில் ஏறுபவரும் கிழே நிற்பவரும் தொலை பேசியில் உரையாடுகின்றார்கள்.

இன்று வாகனங்களிலே பிச்சைக்காரர்களின் தொல்லை அதிகரித்து விட்டது. அது ஒருபுறமிருக்க. ஒரு தெருவோர பிச்சைக்காரன் ஒரு பேருந்து தரிப்பிடத்திலே. யாருமற்ற ஒரு பக்கம் சென்றான் என்ன செய்கிறான் என்று பார்த்தேன் தொலைபேசியை எடுத்து தனது மற்ற நண்பனிடம் சொல்கிறான் பஸ்சில் சனக்கூட்டம் அதிகமாக இருக்கிறது உடனே வரவும் என்று.

தொலைபேசி முலமாக நண்பர்களிடையே பல சுவாரஸ்யமான சம்பவங்கள் எடம் பெறுவதோடு சில வேளைகளில் அவர்களது நட்புக்கும் பாதிப்பு ஏற்படுவதுண்டு. அதே போன்று ஒரு சம்பவம்தான் இது.

ஒரு நண்பர் தன்னுடைய ஒரு நண்பரை கலாய்க்க விரும்பினார். அதற்கு தனது காதலியை துரும்பு சீட்டாக பயன் படுத்தினார். அது வேறு விபரிதமாகிவிட்டது.

ஒருவர் தனது காதலியிடம் தனது நண்பனின் தொலைபேசி இலக்கத்தினை கொடுத்து.தனது நண்பருக்கு அழைப்பினை எடுத்து யார் என்று சொல்லாமல் காதலிப்பது போல் கலாய்க்க சொல்லி இருக்கிறார். 2, 3 நாட்கள் நன்றாகவே நண்பரை குழப்பி இருக்கிறார்கள். அத்தோடு முடியவில்லை காதலியோ காதலனுக்கு தெரியாமல் அடிக்கடி அழைப்பினை எடுத்து கதலனின் நண்பனோடு காதலனுக்கு தெரியாமல் பேச ஆரம்பித்து விட்டார். இன்னும் சொல்ல வேண்டுமா?........

இன்று குரல்களை மாற்றிப்பேசும் தொலைபேசிகள் முலமும் நிறையவே நம்ம பசங்கள பசங்களே பெண்களாக நடித்து ஏமாற்றிக்கொண்டு இருகாங்க. பெண்கள் ஏமாற்றியது போதாதா நண்பர்களே நீங்களும் ஏமாற்றனுமா...

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் சொல்ல முடியாத விசயமும் நிறையவே இருக்குங்க...
read more...

Wednesday, 3 June 2009

கேள்விக்குறியாகும் சிறுவர்களின் எதிர்காலம்...

எனது தொலைந்த வலைப்பதிவில் இருந்து ஒரு பதிவு எனது புதிய வலைப்பதிவில்...

இன்றையசிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்று சொல்லப்படுகிறது. சிறுவர் உரிமைகள் பற்றி எல்லாம் பேசுகின்றார்கள்ஆனால் இன்று பல காரணங்களினால் சிறுவர்கள் பல இன்னல்களை எதிர் நோக்கி வருகின்றார்கள். கட்டாயமாக வழங்கப்படவேண்டிய கல்விகூட பாதிக்கப்படுகின்றது. இன்று பாடசாலையை விட்டு இடை விலகுகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவைத்தடுப்பதட்குரிய வழிவகைகளை பல்வேறுபட்ட அமைப்புகள் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுக்கின்ற போதிலும் சில காரணங்களினால் மாணவர்கள் இடை விலகும் வீதம் குறைந்த பாடில்லை. இந்த பதிவினுடாக மாணவர்கள் இடை விலகுவதற்கான காரணங்கள் அவர்கள் எதிர் நோக்கும் பிரட்சனைகள்அவற்றுக்குரிய திர்வுகள் பற்றி பேச இருக்கின்றேன்.

இன்று மாணவர்கள் இடை விலகுகின்றவீதம் ஏனைய இடங்களை விட வடக்கு , கிழக்கிலேயே அதிகமாக இருக்கின்றது இதட்கு முக்கிய காரணம் நாட்டில் இடம் பெற்றுவரும் யுத்தம் என்பது அனைவரும் அறிந்த விடயம்.

இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றை தடுப்பதற்கான காரணங்களை அறிவதற்காக பல அமைப்புக்கள், நிறுவனங்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு மாணவர்கள் இடை விலகுகின்ற வீதத்தினை குறைப்பதட்க்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

கல்வி, கலை, கலாச்சாரம் , மற்றும் சிறுவர்களில் அக்கறை கொண்ட ஒரு அமைப்பாக ஒரு தசாப்தமாக சேவையாற்றி வரும். களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியம் இருவர்கள் கல்வியில் இருந்து இடை விலகுவது தொடர்பாக ஒரு ஆய்வினை மேற்கொண்டது.

சிறுவர்கள் இடை விலகுவதற்கு உள்நாட்டு யுத்தம் ஒரு காரணம் அது பற்றி நான் சொலலவே தேவை இல்லை எல்லோருக்கும் தெரிந்த விடயம். இடை விலகும் சிறுவர்களின் எண்ணிக்கை கிராமப்புறங்களிலேயே அதிகமாக இருக்கின்றது.இவற்றுக்குபல பல காரணங்கள் இருக்கின்றது. தனது தாய் தந்தையர் படிப்பறிவு அற்றவர்கள் ஆதலால் தாய் தந்தையர் தனது பிள்ளைகளை படிப்பிப்பதில் அக்கறை காட்டாமை. மற்றும் கிராமப்புறங்களிலே போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படாமை. வறுமை என பல காரணங்கள் இருக்கின்றன.

கிராமப்புறங்களிலே வறுமையின் காரணமாக பாடசாலை போக வேண்டிய வயதில் விவசாயம் போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர். கிராமப்புற பெற்றோர் படிப்பறிவு குறைந்தவர்கள் அவர்களுக்கு தகுந்த விழிப்புணர்வு இல்லை விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும்.

என்னுமொரு முக்கிய விடயமிருக்கின்றது பல வழிகளில் விழிப்புணர்வுகள் ஏறபடுத்தப்பட்டாலும் இடை விலகும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்த செல்கின்றபோது பல பிரட்சனைகளை எதிர் நோக்க வேண்டி வருகிறது ஒரு வகையில் இடை விலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலையில் சேர்ப்பதாக வைத்துக்கொள்வோம். இடை விலகும் மாணவர்களில் அதிகமானவ்கார்கள் தரம் 6, 7 மாணவர்களே இந்த 6, 7 தரங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த வயதில்தான் சமுகத்தை உணர்ந்து கொள்கின்றார்கள். தாங்கள் 6, 7 தரம் படிக்கும் பொது தங்களுக்கு எழுத வாசிக்க தெரியாமல் போவதனால் பாடசாலையை விட்டு விலகுகிறார்கள். இது தங்களை சக மாணவர்கள் கேலி நிலைக்கு நினைப்பார்கள் என்ற ஒரு தாழ்வு மனப்பாண்மை காரணமாக இருக்கின்றது.

இப்படி இடை விலகும் மாணவர்களை மிண்டும் பாடசாலையில் சேர்த்தாலும் அவர்கள் மீண்டு இடை விலகும் சந்தர்ப்பங்கள் அதிகம் அவர்களை நல்ல முறையில் ஆசிரியர்களோ, பெற்றோரோ, சிறுவர் நலனில் அக்கறை உடைய தரப்பினரோ அடிப்படை கல்வியை வழங்கி அவர்களை பாடசாலையில் சேர்க்க முன்னர் எழுத வாசிக்க பழக்க வேண்டிய தேவை இருக்கின்றது

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் எது எப்படி இருப்பினும் எல்லா வகையிலும் பாதிக்கப்படுவது எமது சமுகமே........
read more...

Saturday, 30 May 2009

இலங்கையில் தொடரும் அடாவடிகளும் அட்டூழியங்களும்...

இன்று இலங்கையில் அதிகம் மலிந்து இருப்பது கொலை, களவு, ஆட்கடத்தல், சிறுவர் இல்லங்கள், அகதி முகாம்கள். இப்படி கெட்டவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம் இவைகளை பார்க்கும் பொது ஏன் இலங்கையில் பிறந்தோம் என்றாகி விட்டது. அதுவும் என் தமிழனாய் பிறந்தோம் இன்று நினைக்க தோன்று கின்றது...

அண்மைய நாட்களில் நடந்த சில சம்பவங்களை இந்த பதிவினுடாக தருகின்றேன்.

சித்திரை மாதம் என்றாலே தமிழர்கள் வாழ்வில் வசந்த காலம்தான் இலங்கையில் அது இல்லை இன்று நினைக்கின்றேன். விடயத்துக்கு வருகிறேன். சித்திரைமாதம் என்றதும தமிழர்களது கலாச்சார நிகழ்ச்சிகள் விளையாட்டு விழாக்கள் என்பன நடப்பது அனைவரும் அறிந்தது. கிராமங்கள் என்றால் சொல்லவே தேவை இல்லை. ஒரே குதுக்கலாம்தான்.

நானும் கிராமப்புறத்தை சேர்ந்தவன்தான். கிராமிய கலை கலாச்சாரங்கலொடு பின்னிப்பினைந்தவன்.ஈடுபாடு அதிகம் என்று சொல்லலாம்.

எனது கிராமத்தில் ஒரு விளையாட்டு விழாவிற்கு எனக்கும் அழைப்பு வந்திருந்தது.அந்த விளையாட்டு விழா மிக பிரமாண்டமான முறையில் அன்றைய தினத்துக்கு முன் தினமே விளையாட்டு மைதானம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இத்தநைக்கும் காரணம் அது ஒரு விளையாட்டு விழா மட்டுமன்றி ஒரு கலாச்சார விழாவிம் கூட. அது ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் பல கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்குபற்ற இருந்தார்கள்.

நானும் கலை நிகழ்வு நடை பெறுவதற்கு முதல் நாளே சென்று துரிதமான ஏற்பாடுகள் நடை பெறுவதை பார்த்தவன். மிக அழகாக பார்வையாளர்கள் இருந்து பார்ப்பத்தட்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

கலை நிகழ்வு இடம்பெறும் தினம் சென்றேன். முதல் நாளில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் எதுவும் இல்லை. அனைத்தும் அலங்கோலமாக அடித்து நொறுக்கப்பட்டு இருந்தன.

அங்கெ நின்றவர்களிடம் விசாரித்தேன். பலரும் பல தரப்பட்ட கருத்துக்களை சொன்னார்கள்.

இத்தனைக்கும் முதல் ஒன்றை சொல்லவேண்டும் நிகழ்வு நடைபெற இருந்த விளையாட்டு மைதானம் கிராமத்துக்கு சொந்தமல்ல பிரதேச சபைக்கு சொந்தமானது. இந்த நிகழ்வில் பல கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கு பெறுகின்றார்கள்...

அங்கெ நின்றவர்கள் சொன்ன கருத்துக்கள்......

கிராமத்தின் தலைவருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை....
கிராமத்தில் உள்ள விளையாட்டு கழகத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை...
கிராமத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை...
இதனால்தான் யாரோ இப்படி இரவோடு இரவாக செய்து இருக்கிறார்கள்... என்று சொன்னார்கள் எனக்கு சிரிப்புத்தான் வந்தது..

பொது விளையாட்டு மைதானத்தில் பிரதேச சபையிடம் அனுமதி பெற்று நடைபெறும் விழாவுக்கு கட்டாயம் கிராமத்தின் தலைவருக்கோ விளையாட்டு கழகத்துக்கோ அழைப்பிதழ் கொடுக்க வேண்டியது அவசியமா. எதை முடிவெடுக்க வேண்டியது ஏற்பாட்டாளர்கள் அல்லவா.

இத்தநைக்கும் முன் இந்த அரச சார்பற்ற நிறுவனம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லாவிதமான வசதிகளுடன் வீடுகளை அமைத்துக்கொடுத்த ஒரு நிறுவனமாகும் பல சமுக செயற்பாடுகளில் ஈடுபடும் ஒரு நிறுவனம்...

இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான செயலால் அந்த விழா இடம்பெறவில்லை அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். இப்படி காட்டுமிராண்டித்தனமான வேலை செய்பவர்கள் இருக்கத்தான் வேண்டுமா.

நேற்று நடந்த ஒரு சம்பவம்...

ஒரு கிராமம் அங்கே ஒரு சாதாரண குடும்பம் தாய் தந்தை வயது போய் விட்டது இதனால் மகள் ஒரு சிறு கடை வைத்து நடாத்தி அன்றாட வாழ்க்கையை நடாத்திக்கொண்டு இருக்கிறார்.

இந்த கடையில் சுதந்திரமாக ஆயுதங்களுடன் நடமாடி மக்களை விரட்டும் சிலர் தொலைபேசி அட்டைகளை கடனுக்கு வாங்குவதுண்டு பல ஆயிரம் ரூபாய்கள் அவர்கள் கொடுக்கவேண்டி இருக்கிறது நேற்று கடனுக்கு கேட்டபொழுது அந்த பெண் கடனுக்கு இல்லை. ஏற்கனவே நீங்கள் நிறைய காசு தர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

அவர் கடனுக்கு இல்லை என்று சொன்னதனால் அவருக்கு கிடைத்த தண்டனை அவர் 1 ம திகதிக்குமுன் கடையை முட வேண்டும்

இது எந்த விதத்தில் ஞாயம் அவர் கடன் வாங்கி கடை வைத்து நடத்துகின்றார். இந்த கடயினால்தான் தமது அன்றாட வாழ்க்கை போகிறது.
அவர் தட்கொலை செயும் அளவில் இருக்கிறார். இந்த அடாவடித்தனங்களை கேட்க யாரும் இல்லையா....


read more...

Friday, 29 May 2009

தொல்லை தரும் தொலைபேசி கலாச்சாரம்... ...

இன்று கையடக்கத்தொலைபேசி இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றாகி விட்டது. கையடக்கத்தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தமது பாவனயளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த கையடக்க தொலைபெசிப்பாவனயால் நன்மைகள் இருந்த போதும் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

எது எப்படி இருப்பினும் இந்தப்பதிவில் எனது நண்பர்களுக்குள் நிகழ்ந்த சில கையடக்கத்தொலைபேசி உரையாடல் தொடர்பான சுவாரஸ்யமான பல சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

இன்று இலங்கையில் வலயமைப்புகளிடையே பல ஆயிரக்கணக்கான நிமிடங்கள் வெளித்செல்லும் அழைப்புகள் இலவசம் என்றதுமே எனது நண்பர்களுக்கு சந்தோசம் சொல்லவே தேவை இல்லை. எனக்கும்தான்....
நானும் நண்பர்களும் அடிக்கடி எங்கள் ஊரில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற ஆலயத்துக்கு வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் செல்வோம் கடவுளின் தரிசனத்துக்காக அல்ல வேறு தரிசனம் கிடைப்பதுக்காக. இரு நாட்களிலும் பக்தர்கள் அதிகமாக வருவார்கள். அதனால் எப்படியோ சென்று விடுவோம்.
அங்கு ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு உதவி செய்வது. என்ன உதவி என்று கேட்காதிங்க சொல்றன் பொங்கல் பொங்கி கொடுப்பது..... இதிலும் எனது நண்பர்கள் படு கில்லாடிகள் அழகான பெண் பிள்ளைகளுடன் வந்திருக்கும் பக்தர்களுக்கு அதிகமாகவே உதவி செய்வார்கள்.

அது மட்டுமல்ல அந்த பெண் பிள்ளைகளுடன் எப்படியோ கதைத்து தொலைபேசி இலக்கத்தை வாங்கிக்கொள்வார்கள். இனி என்ன நடக்கும் நான் சொல்லத்தேவை இல்லை....

இப்போ விடயத்துக்கு வருகிறேன் ஒருஞாயிற்றுக்கிழமை நண்பர்களும் நானும் கோவிலுக்கு சென்றிருந்தோம். ஆலயத்தில் நடந்த சில உண்மை சம்பவங்கள்.....

ஆலயத்தில் பொங்கல் பானைகள் பக்கத்தில் பக்கத்தில் இருக்கும் ஒரு நண்பன் ஒரு இடத்திலும் மற்ற நண்பன் என்னொரு இடத்திலும் இருக்கிறார்கள் ஒரு நண்பன் மற்ற நண்பனிடம் அழைப்பை எடுத்து சொன்னான் அடுப்பு எரியவில்லை பாருடா என்று அவர்களுக்கு இடைப்பட்ட துரம் 5 மீற்றர்தான்.

எனது ஒரு நண்பனின் ஒரு நண்பி ஆலயத்துக்கு வந்து இருந்தார். அப்பொழுது பூசை நேரம் எனது நண்பர் தனது நண்பிக்கு அழைப்பை எடுத்தார். அவர் அந்த நண்பியிடம் கேட்டார் என்ன கேட்டு கும்பிடுறிங்க எனக்கும் ஒரு நல்ல கேர்ள் பிரென்ட் கிடைக்கணும் எண்டு கும்பிடுங்க என்று.

கடவுளுக்கே கோல் பண்ணி பேசுவாங்க போல இருக்கிறது....
விட்டுக்கு வந்தா விடுறாங்களா இரவில் நித்திரை செய்வதுக்கு. இரவு பகலாக மிஸ் கோல் நள்ளிரவில் கோல் பண்ணி தேவை இல்லாமல் கதைத்து வெறுப்பு ஏற்றுவது

என்னும் ஒரு பழக்கம் பல பசங்களிடம் இருக்கிறது யாராவது பெண் பிள்ளைகளின் தொலைபேசி இலக்கத்தை எப்படியோ எடுத்துன் மிஸ் கோல் பண்ணுவது இரவிலே தூங்க விடாமல் வெறுப்பு ஏற்றுவது
பசங்க மட்டுமா நம்ம சில பெண்களும்தான் சில பொண்ணுகளுக்கு இரவில் கோல் பண்ணினா வேய்டிங்தான் இரவு 12 , 01 மணிக்கும் வேயிட்டிங்க்தான்... என்னதான் நடக்கிறதோ தெரியல்ல... என்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

எங்க போய் முடயுமோ தெரியல்ல இந்த கையடக்க தொல்லைபேசி கலாச்சாரம்

நடப்பது நல்லபடியாக நடக்கட்டும்....




read more...