Showing posts with label பதிவர்கள். Show all posts
Showing posts with label பதிவர்கள். Show all posts

Thursday, 5 January 2012

பதிவர்களே ஜாக்கிரதை பிரதேசவாதத்தை தூண்டும் பதிவர்கள் வலையில் சிக்க வேண்டாம்.


தற்போது சில நாட்களாக பதிவுலகில் பேசப்படுகின்ற ஒரு விடயம். பிரதேசவாதத்தை தூண்டும் பதிவர்கள், தமிழ் முஸ்லிம் உறவை சீர் குலைக்க நினைக்கும் பதிவர்கள். பிரதேசவாதம் என்பது என்ன? பிரதேசவாதம் என்பதன் வரையறை என்ன? இலக்கணம் என்ன? 

நான் பிரதேசவாதம் பேசுகின்றேன் என்று இலங்கை தமிழ் வலைப்பதிவர்கள் சில காலம் எனக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தனர். நான் பிரதேசவாதம் பேசுபவன் எனும் மாயையை தோற்றுவித்து என்னை பதிவுலகிலிருந்து விரட்டியடித்தவர்கள். புது வருடத்திலிருந்து பதிவெழுதலாம் என்று வந்தால் மீண்டும் என்னை நோக்கி போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர்.

சில விடயங்களை குறிப்பிட்டாகவேண்டும். அநீதிகளை யார் செய்தாலும் தட்டிக் கேட்கும் குணமுடையவன். மரணத்துக்கு மட்டும் பயப்படுபவனல்ல. ஒருவருடைய கருத்து முரண்பாடாக இருக்கலாம் மாற்றுக் கருத்தாக இருக்கலாம். முரண்பாடான கருத்தாக இருக்குமானால் சுட்டிக் காட்டினால் சரியானதாக இருக்கும் பட்சத்தில் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பாண்மையும் என்னிடம் இருக்கின்றது. அதனைவிடுத்து பொய்களைச் சொல்கிறான் என்று பிரதேசவாதம் எனும் நஞ்சை ஊட்டி அவனை பழிவாங்க நினைப்பது தவறானது.

கடந்த காலங்களில் என் வலைப்பதிவில் நடந்தவை என்ன என்று பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அரசியல் சார்;ந்த தொடர் பதிவொன்றை எழுதினேன். அதில் கடந்தகால அரசியல் தலைவர்கள் விட்ட தவறுகளை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால் சிலர் பொய்களை எழுதுகிறேன் என்று போர்க்கொடி தூக்கினர். எது பிழை என்று சுட்டிக்காட்டச் சொன்னபோது எவரும் சுட்டிக் காட்டவில்லை. தொடர்ந்த பதிவுகளில் 24 க்கு மேற்பட்ட புத்தகங்களையும் கட்டுரைகளையும் ஆதாரமாக வெளியிட்டேன். இதுவரை நான் பொய்யாக எழுதிய விடயம் எது என்று சுட்டிக்காட்டவில்லை. பிரதேசவாதம் பேசுகின்றேன் என்று ஒரு மாயையை தோற்றுவித்தமைதான் மிச்சம். எனது தொடர் பதிவிற்கு கிழக்கைச் சேர்ந்தவர்களைவிட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகமானவர்கள் ஆதரவு தந்தார்கள். இது பழைய கதை

இன்று மீண்டும் பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் பிரதேசவாதம் தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் முயற்சியில் பதிவர்கள். சிங்கள பேரினவாதத்திற்கும் கருணா பிள்ளையான் போன்றோருக்கு விலைபோன பதிவர்கள் எனும் விடயங்கள்.

இவ்வாறான கதைகள் வரக் காரணம் என்ன? நான் புது வருடத்தில் மீண்டும் பதிவுலகிற்கு வந்து கிழக்கு மாகாணத்திலே முஸ்லிம்களால் தமிழர்களுக்கு எதிராக செய்யப்படுகின்ற பல அராஜகங்களை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தேன். கிழே கொடுக்கப்படும் பதிவுகளை பார்க்கவும்.

http://shanthru.blogspot.com/2011/12/blog-post_14.html

http://shanthru.blogspot.com/2011/12/blog-post_20.html

http://shanthru.blogspot.com/2011/12/blog-post_31.html

கிழக்கு மாகாணத்திலே தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்களால் அரங்கேற்றப்படுகின்ற கொடுமைகளை ஆதாரங்களுடன் வெளியிட்டேன். கிழக்கு முஸ்லிம்களால் தமிழர்களுக்கு செய்யப்படுகின்ற கொடுமைகள் வெளிவருவதில்லை. காரணம் கிழக்கிலே இவற்றை வெளியிடக்கூடிய ஊடகங்கள் இல்லை. வலைப்பதிவர்கள் இல்லை. அதற்காக எனது சமூகம் அடக்கி ஒடுக்கப்படும்போது என்னாலும் மௌனித்துக் கொண்டு இருக்க முடியாது.

உண்மைச் சம்பவங்களை வெளியிட்டிருக்கின்றேன். தமிழ் முஸ்லிம் பிரச்சினையை ஏற்படுத்த நினைக்கின்றேன் என்று சொல்பவர்களிடம் ஒரு கேள்வி மட்டக்களப்பில் இடம்பெற்ற சம்பவங்கள்போல் உங்கள் அக்கா தங்கைகளுக்கு இடம்பெற்றிருந்தால் சும்மா இருப்பீர்களா? எமது சமூகத்தில் இடம்பெறுகி;ற பிரச்சினைகளை வெளிப்படுத்தக்கூட உரிமை இல்லையா? 

இதனை புதாகரமாக்கி பதிவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்க சில இணையத்தளங்களும் வலைப்பதிவர்களும் முயற்சி செய்து வருகின்றனர். அவர்கள் பிரதேசவாதம் எனும் நஞ்சை ஊட்டி மோதவிட நினைக்கின்றனர். முன்னர் எனக்கு பிரதேசவாதம் பேசுபவன் என்று சேறு பூசப்பட்டதன் காரணமாக பிரதேசவாதத்தை கையிலெடுக்க நினைக்கின்றனர்.
இதில் சிந்திக்கவும் இணையத்தளம் பதிவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றது. சில பதிவர்கள் சிங்கள பேரினவாதத்திற்கும் கருணாவிற்கும் விலை போய்விட்டதாகவும்  பிரதேசவாதத்திற்கு துணைபோவதாகவும் தமிழ் முஸ்லிம் மோதலை ஏற்படுத்துவும் முயற்சி செய்வதாகவும் எழுதி இருக்கின்றனர். 

சிந்திக்கவும் இணையத்தள நிர்வாகிகள் எந்தெந்தப் பதிவர்கள் சிங்களப் பேரினவாதிகளிடமும் கருணாவிடமும் எவ்வளவு எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்பதனை வெளியிட முடியுமா? தமிழ் முஸ்லிம் உறவை சீரழிக்க நினைக்கின்றனர் என்று குறிப்பிட்டிருக்கும் சிந்திக்கவும் இணையத்தள நிர்வாகிகள் கிழக்கின் உண்மை நிலைகளை அறிந்தார்களா? கிழக்கில் இடம்பெறும் பிரச்சினைகள் தொடர்பாக எப்போதாவது ஏதாவது எழுதி இருக்கின்றார்களா? ஒன்றை மட்டும் சொல்கிறேன் சிந்திக்கவும் இணையத்தள நிர்வாகிகள் தமது அக்கா தங்கை தனைவி மக்களை முஸ்லிம்களுக்கு கூட்டிக் கொடத்துவிட்டு முஸ்லிம்களுக்கு வக்காளத்து வாங்குங்கள் முஸ்லிம்களினால் கிழக்கு மக்களுக்கு செய்யப்படும் கொடுமைகளை மூடி மறையுங்கள்.

நான் பிரதேசவாதம் பற்றிப் பேசுகின்றேன். முஸ்லிம்களுக்கு எதிராக எழுதுகின்றேன் என்று சொல்பவர்களிடம் சொல்கின்றேன். நான் எவர் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பவன் அநீதிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர நினைப்பவன். எனது கடந்தகால பதிவுகளைப் பாருங்கள். கருணாவிற்கு எதிராக பல பதிவுகள் எழுதி இருக்கின்றேன். கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு எதிராக எழுதி இருக்கின்றேன். இலங்கை அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக பல பதிவுகளை எழுதி இருக்கின்றேன்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கையிலிருந்து அதிக பதிவுகளை இட்டவன் நான். முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கலைஞருக்கு ஒரு கடிதம் எனும் தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன் அப்பதிவு என்னை பல சிக்கல்களில் மாட்டியிருந்தது. அப்பதிவை புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்கள் பல வெளியிட்டிருந்தன. அதன் காரணமாக பல உயிரச்சுறுத்தல்கள்கூட வந்திருந்தன். பல பதிவர்கள் அப்பதிவை நீக்கும்படி கூறியும் நான் நீக்கவில்லை. நான் பிரதேசவாதம் பேசுகின்றேன் என்று சொல்கின்ற ஒரு பதிவர்கூட அப் பதிவை நீக்கும்படி சொல்லி இருந்தார். ஆனாலும் நான் இதுவரை நீக்கவில்லை.

வலைப்பதிவுலகில் அதிக உயிரச்சுறுத்தலுக்கு மத்தியில் எழுதும் பதிவர் நானாகத்தான் இருக்கும். பல உயிரச்சுறுத்தலுக்கு மத்தியில்  சில மாதங்கள் மறைந்திருந்து எழுதிய காலகட்டங்களும் இருக்கின்றன்.

நான் என்பாட்டுக்கு எழுதிக்கொண்டிருக்கலாம் என்று நினைத்தால் அனானிகள் விடுவதாக இல்லை. துப்பாக்கிக்கு மிரளாத நான் உங்கள் அனானி பின்னூட்டங்களுக்கு மிரளப் போவதில்லை. உங்கள் பின்னூட்டங்கள் என் எழுத்தின் வேகத்தை அதிகரிக்கும். தலையில் துப்பாக்கி வைத்தாலும் உண்மைகளை எழுதிக்கொண்டே இருப்பேன்.

மற்றுமொரு விடயம் பதிவுலகில் எனக்கும் மருதமூரானுக்கும் யாழ்தேவி திரட்டி விடயத்தில் கருத்து முரண்பாடு இருந்தது. வலைப்பதிவிலும் நான் தாறுமாறாக எழுதி இருந்தேன். ஆனாலும் நட்பு விடயத்தில் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துணர்வுடனும் நண்பர்களாகவும் இருக்கின்றோம். இது பலருக்குத் தெரியாது. எப்பொழுது இருவரையும் மீண்டும் மோதவிடலாம் என்றும் சிலர் நினைக்கலாம். ஆனாலும் நாம் நண்பர்களாகவே இருப்போம்.

இந்த இடத்தில் மருதமூரான் பற்றிய விடயம் ஏன் வருகின்றது என்று கேட்கின்றீர்களா? அண்மையில் நண்பர் நிருபனுடைய பதிவொன்றில் இலங்கையில் இருந்து சமூகம் சார்ந்து பதிவுகளை இடும் ஒரு பதிவர் உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி எனும் வகையில் சமூகத் தளம் ஒன்றில் பெண்களுடன் செக்ஸ் ரீதியான அரட்டை அடித்த ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றது என்று குறிப்பிட்டிருந்தேன்.

மருதமூரான் சமூகம் சார்ந்து எழுதுபவர். இதனை வைத்து என்னையும் மருதமூரானையும் மீண்டும் மோதவிட சில நினைத்திருக்கின்றனர். நான் பின்னூட்டமிட்டதும் நண்பர் மருதமூரான் என்னுடன் தொலைபேசியில் பேசினார். நான் மருதமூரானைத்தான் குறிப்பிட்டிருப்பதாக சிலர் நினைப்பதாக கூறினார். பலருடயை மின்னஞ்சல்கள் ஹக் பண்ணப்பட்டன தனது மின்னஞ்சலும் ஹக் பண்ணப்பட்ட விடயத்தையும் குறிப்பிட்டார். (எனது மின்னஞ்சலும் ஹக் பண்ணப்பட்டு பல பெண்களுக்கு செக்ஸ் படங்கள் அனுப்பப்பட்ட வரலாறுகளும் உண்டு ஹக் பண்ணப்பட்ட மின்னஞ்சலை இன்னும் என்னால் மீளப்பெற முடியவில்லை வேறு ஒருவர் பயன்படத்திக் கொண்டிருக்கின்றார்)

மருதமூரான் நல்ல ஒரு நண்பர் அவர்பற்றி இதுவரை நான் தவறாக எந்தஒரு விடயத்தையும் அறியவில்லை. நான் குறிப்பிட்ட பதிவர் தொடர்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றேன். அவரின் நடவடிக்கைகளை வைத்தே அவரின் மறு முகத்தை வெளியிடுவதா இல்லையா என்பதனை தீர்மானிக்க முடியும். 






read more...

Sunday, 1 January 2012

பதிவுலக சாதனைகளும் வேதனைகளும் காமத்தில் சிக்குண்டவர்களும்



புதிய ஆண்டை வரவேற்றிருக்கும் இவ் வேளையில் நாம் கடந்த வருடம் எதனைச் சாதித்தோம் என்பதனை கடந்த வருடத்தின் பக்கங்களை புரட்டிப்பார்க்க வேண்டும். கடந்த வருடத்தில் நாம் சாதிக்க நினைத்தவை நாம் விட்ட தவறுகள் தடைக்கற்கள் என்பவற்றை புரட்டிப்பார்க்கின்றபோது இவ் வருடத்தில் அச் சவல்களையுடம் தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்ற முடியும்.

ஆனாலும் எனது கடந்த வருட அனுபவங்களை நான் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை. கடந்த வருடம் என்னை ஒரு பரதேசியாக மாற்றிய வருடம். எனது ஊரைவிட்டு எங்கும் நான் போக விரும்புவதில்லை ஆனாலும் கடந்த வருடம் எனது வீட்டில் நிம்மதியாக இருக்க விடாத வருடம். நான்கரை மாதம் கட்டாரில் திண்டாட்டம். இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். 

பதிவுலகத்தால் எதனையும் சாதிக்க முடியும் எனும் அளவிற்கு பதிவுலகம் வியாபித்திருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய பதிவர்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றனர். பதிவர்கள் தினமும் பல விடயங்களை பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒபதிவுலகத்தைப் பொறுத்தவரை பல துறை சார்ந்தவர்கள் இருக்கின்றனர். எவ்வளவோ விடயங்களைச் சாதிக்க முடியும். ஆனாலும் பதிவுலகம் கடந்த வருடம் எதனைச் சாதித்திருக்கின்றது. 

எம்மில் பலர் சமூகம் சார்ந்து பல விடயங்களை எழுதிக் கொண்டிருக்கின்றோம். ஆனாலும் நம் எழுத்துக்கள்போல் செயலில் காட்டுகின்றோமா? உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி என்பதற்கமைய பலர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். வெறுமனே எழுத்துக்களோடு மட்டும் இல்லாமல் சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும். சில பதிவர்கள் எழுத்தில் மட்டுமல்லாது சமூகம் சார்ந்த செயலிலும் இறங்கியிருக்கின்றனர். இவர்கள் பாராட்டப்பட வேண்டும். 

இலங்கைப் தமிழ் பதிவர்களைப் பொறுத்தவரை இதுவரை எதனைச் சாதித்திருக்கின்றனர்?????? பல பிரிவுகளையும் குழுக்களையும் தோற்றுவித்திருக்கின்றனர். இன்று இலங்கையில் எத்தனையோ பதிவர்கள் இரக்கின்றனர். பலர் சமூகம் சார்ந்தும் எழுதுகின்றனர். அவர்கள் எழுதுவதனைப்போல் சமூகத்துக்கு ஏதாவது செய்திருக்கின்றனரா? வெறுமனே மற்றவர்களை கவர்வதற்காகவா எழதுகின்றனர். 

இந்தியப்பதிவர்கள் பல விடயங்களைச் சாதித்திரக்கின்றனர். இலங்கைப் பதிவர்களிடையே போட்டியும் பொறாமையும் இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். இலங்கைப் பதிவர்களிடையே பல குழுக்கள் எதற்கு? பழைய பதிவர்கள் புதிய பதிவர்கள் என்ற வேறுபாடு எதற்கு? இலங்கைப்  பதிவர்கள் பலர் பதிவுலகுக்குள் பிரவேசித்திருக்கின்றனர். அவர்களில் பலர் சிறந்த எழுத்தாளர்களாக எழுதிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் எழுத்துக்களைப் பார்த்து நான் வியப்பதுண்டு. 

வெறுமனே எழுத்துக்களோடு மட்டும் நின்று விடாது சமூகத்துக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும். ஒரு சிறுவனுடைய இருதய சத்திரசிகிச்சைக்காக அவசரமாக உதவுங்கள் என்று சிறுவனுடைய மருத்துவ சான்றிதழ் விடயங்களை பதிவிட்டிருந்தேன். பல நாட்களாகியும் இதுவரை எவரும் உதவவில்லை என்பது கவலைக்குரிய விடயம். ஒரு உயிரைக் காப்பாற்ற உதவி செய்ய முடியத நாம் சமூகம் சார்ந்து எழுதுவதில் பயனில்லை.

நண்பர் மதிசுதா சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் எனும் நோக்கோடு பதிவுலகிற்கு வந்த ஒருவர். அவர் தன்னால் முடிந்த ஏற்பாடுகளை செய்வதாக என்னிடம் சொல்லி இருக்கின்றார். நிருபனும் இச் சிறுவனுக்கு உதவிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அக்கறையோடு செயற்படுகின்றார். 

இலங்கைப் பதிவர்கள் கடந்தகால கசப்புணர்வுகளை மறந்து இவ்வருடத்தில் ஆக்கபூர்வமான விடயங்களை நோக்கிச் சிந்திக்க வேண்டும். இலங்கைப் பதிவர்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். ஒன்றிணைய வேண்டும். சமூகம் நோக்கி சிந்திக்க வேண்டும். சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரை எமது தமிழ் சமூகத்திற்கு நாம் செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. இலங்கையின் வடக்குக் கிழக்கிலே பல ஆயிரக்கணக்கான விதவைகள் பல கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பொருளாதார சூழல் காரணமாக பல சிறார்கள் கல்வியை இழந்து நிற்கதியாகி இருக்கின்றனர். இவர்கள் தொடர்பில் இலங்கையில் இருக்கின்ற ஒவ்வொரு பதிவரும் சிந்திக்க வேண்டும். எமது சமூகத்தின் நாளைய நிலை கேள்விக்குறியாக இருக்கின்றது. எமது சமூகத்துக்கு நாம் உதவி செய்ய முன்வராதபோது வெளிநாட்டுப்பதிவர்கள் எப்படி முன்வர முடியும்.

இலங்கைப் பதிவரிடையே ஒரு கெட்ட குணமிருக்கின்றது. ஒவ்வொருவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். அதற்காக நட்பினை முறித்துக் கொள்வது மனிதனுக்கு அழகல்ல. கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டும். இலங்கைப் பதிவர்களைப் பொறுத்தவரை பதிவுகளில் இடம்பெறும் மாற்றுக்கருத்து தொடர்பில் கருத்து மோதல்கள் ஏற்படுகின்றபோது நட்பை முறித்துக் கொள்கின்றனர். இவை மாற வேண்டும். 

என்னுடன் நெருங்கிய நண்பர்களாக இருந்த சிலர் கருத்து முரண்பாடு காரணமாக வலைப்பதிவில் இடம்பெற்ற கருத்து மோதல்களினால் என்னுடன் பேசுவதனையே நிறுத்தி விட்டனர். ஆனாலும் நான் அவர்களுடன் பேசுவதற்கு பல தடவை முயற்சி செய்தும் பலநில்லை. சிலருக்கு மின்னஞ்சல்களை அனுப்பினேன் பதில்கூட இல்லை. இப்படி இருந்தால் எப்படி ஒற்றுமைப்படுவது.

பதிவுலகில் அதிகம் நான் கருத்து மோதலில் ஈடுபட்ட ஒருவர் வால்ப்பையன் அருண் அவர்கள். அவர் கடவுள் நம்பிக்கை அற்றவர் நான் இந்து தீவிரவாதி இருவரும் வலைப்பதிவில் மோதிக்கொண்டு இருப்போம். ஆனாலும் ஜீமெயில் அரட்டையில் நட்பாகப் பேசிக்கொண்டிருப்போம். பதிவர்கள் என்பது அப்படி இருக்க வேண்டும். 

இவ்வாறு இலங்கையிலும் சில பதிவர்கள் இருக்கின்றனர் அவர்கள்போல் எல்லோருடைய மன நிலையும் மாற வேண்டும். அவர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை குறிப்பிட்டால் அது வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும். அந்தளவிற்கு இருக்கின்றது இலங்கைப்பதிவுலகம்.

எனது எதிர்பார்ப்பு இவ்வருடம் இலங்கைப் பதிவர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும். விரைவில் இலங்கை தமிழ் பதிவர் சந்திப்பு இடம்பெற வேண்டும். விரைவில் மட்டக்களப்பில் பதிவர் சந்திப்பு இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இருக்கின்றது. அதற்குரிய ஏற்பாடுகளை திருகோணமலை மட்டக்களப்பு அம்பாரை மாவட்டத்தில் இருக்கும் பதிவர்களோடு எனைய பதிவர்களோடு பேசி ஏற்பாடு செய்ய இருக்கின்றேன். இதற்கு அனைத்து பதிவர்களினதும் ஒத்துளைப்பு இருக்கும் என்று நினைக்கின்றேன்.
பிழை பிடிக்கின்றேன் என்று நினைக்க வேண்டாம் வெறுமனே பொழுது போக்குக்காக வலைப்பதிவெழுத நான் வரவில்லை வலைப்பதிவு மூலம் சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றுதான் பதிவுலகப் பக்கம் வந்தேன் இதுவரை எதனையும் சாதிக்கவில்லை என்ற குற்ற உணர்வு என்னுள் இருக்கின்றது.

அடுத்து பதிவுலகில் கவலைக்குரிய விடயம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்று சமூகம் சார்ந்து எழுதிய பதிவுகளை பார்ப்பவர்கள் மிக மிகக் குறைவானவர்களே. ஆனாலும் தலைப்பிலே காமம் என்றிருந்தால் முண்டியடித்துக் கொண்டு பார்ப்பார்கள். என்னுடைய பதிவுகளிலே காமம் என்று தலைப்புப் போட்ட பதிவுகளை வாசித்தவர்களின் தொகை மிக மிக அதிகம். 

நான் எமது சமூகத்தின்பால் அதிக அக்கறை கொண்ட ஒருவன் என்னால் முடிந்த உதவிகளை சமூகத்திற்கு செய்து வருகின்றேன். ஆனாலும் கவலைக்குரிய விடயம் இருதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவி செய்யுங்கள் என்று நான்  பதிவிட்டபோது உதவ எவரும் முன்வராமை கவலைப்பட வேண்டிய விடயம். இதன் பிரதிபலிப்பாக நானும் எனது நண்பர்களும் சேர்ந்து உதவும் கரங்கள் எனும் அமைப்பினை உருவாக்கி இருக்கின்றோம். அதன் மூலம் சமூகத்துக்காக கஸ்ரப்படுகின்ற மக்களுக்காக பல உதவிகளை செய்ய இருக்கின்றோம். அதற்கென ஒரு வலைத்தளமும் உருவாக்க இருக்கின்றோம் விரைவில் விபரங்களை பகிர்ந்து கொள்வேன் சமூக அக்கறை கொண்ட எவரும் எம்மோடு இணைந்து கொள்ள முடியும்.

பிறந்திருக்கும் வருடம் அனைவருக்கும் சந்தோசம் நிறைந்த ஆண்டாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவதோடு அனைவருக்கும் புது வருட வாழ்த்தக்களையும் தெரிவித்தக் கொள்கின்றேன்.

பிற்குறிப்பு - இருதய சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய சிறுவன் பற்றிய விபரங்களை தனது வலைப்பதிவில் வெளியிட்டிருக்கும் மதிசுதாவிற்கு நன்றிகள். இன்னும் பல பதிவர்கள் பதிவிட இருப்பதாக சொல்லி இருப்பது சந்தோசப்பட வேண்டிய விடயம்.
read more...

Sunday, 25 December 2011

இலங்கைப் பதிவர்களின் அராஜகமும் தலைக்குமேல் ஏறிய ஏழரைச் சனியனும்

இது என்னுடைய 400 வது பதிவு


Christmas Myspace Graphics

அனைத்து நண்பர்களுக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்.



நான் பதிவுலகிற்கு வந்து நிறைய விடயங்களை கற்றிருக்கின்றேன். பல மனச் சங்கடங்களை எதிர் கொண்டீருக்கின்றேன். என் வாழ்க்கையின் எல்லா விடயங்களிலும் தலைக்கு மேல் ஏறிக்கொண்டிருக்கும் ஏழரைச் சனியன் வலைப்பதிவிரும் என்னை விடுவதாக இல்லை.
நான் வலைப்பதிவில் எழுதுவதும் அடிக்கடி காணாமல் போவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. எல்லாம் என் குடும்ப சூழ்நிலை. அது ஒரு பக்கம் இருக்கட்டும் விடயத்துக்கு வருகின்றேன் எனது இந்த 400 வது பதிவிலே சில விடயங்களை மனம் விட்டு பேச நினைக்கின்றேன்.
இலங்கையில் அதிகமாக அனானித் தாக்குதலுக்கு இலக்கான பதிவர் நானாகத்தான் இருக்க முடியும். 400 பதிவுகளை தந்திருந்தாலும் நான் எதனையும் சாதிக்கவுமில்லை. தலைக்கனமும் எனக்கு இல்லை. புதிய பதிவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உடையவன் பலரை ஊக்கப்படுத்தி இருக்கின்றேன். 

இப்போதெல்லாம் அதிகமான நேரம் இணையத்தில் எனது பொழுதைப் போக்கினாலும் வலைப்பதிவெழுத மனம் வருவதில்லை. காரணம் நான் வாங்கிய அனானித் திட்டுக்களும். இலங்கை பதிவர்களின் போக்கும் ஒரு காரணமாகும்.

இப் பதிவில் என்னைப் பற்றி சில விடயங்களை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இவ் வலைப்பதிவினை வெறுமனே பொழுது போக்குக்காக இல்லாமல் எமது சமூகத்தின் அவலங்களையும் பிரச்சினைகளையும் வெளிப்படத்தும் ஒரு தளமாகவே பயன் படுத்துகின்றேன். தொடர்ச்சியாக எமது சமூகத்தின் பிரச்சினைகளை எழுதி வருகின்றேன். 

ஒவ்வொருவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது. ஒவ்வொருவருக்கும் வௌ;வேறு மாற்றுக் கருத்துக்கள் இருக்கும் கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டும். மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றபோதுதான் உண்மைகள் வெளிவரும். எனது கருத்துக்களை நான் எனது வலைப்பதிவில் எழுதுகின்றபோது அக் கருத்துக்களில் எங்கே தவறிருக்கின்றது என்பதனை சுட்டிக்காட்டினால் நான் ஏற்றுக் கொள்ள தயங்கப் போவதில்லை. 

நான் மறைக்கப்பட்ட துரோகங்கள் எனும் அரசியல் சார்ந்து தொடர் பதிவொன்றை எழுதியிருந்தேன். அத் தொடர் பதிவினை ஒரு சிலர் எதிர்த்தனர் பொய்யான தகவல்களை வழங்குவதாக. எந்த இடத்திலே பொய் இரக்கின்றது என்று சுட்டிக் காட்டச் சொன்னேன் குற்றம் சாட்டிய எவரும் எது பொய்யான தகவல்கள் என்று சுட்டிக்காட்டவில்லை. ஆனாலும் ஆதாரமாக தொடர்ந்த பதிவுகளில் 24 க்கு மேற்பட்ட புத்தகங்களையும் கட்டுரைகளையும் ஆதாரம் காட்டியிருந்தேன்.

குறித்தவர்கள் என்னை குற்றம் சாட்டுவதற்காகவும் என்னுடன் ஏனையவர்கள் பகைத்துக் கொள்வதற்காகவும் கையாண்ட விடயம் நான் பிரதேச வாதம் பேசுகின்றேன் என்பதாகும். நான் மட்டக்களப்பைச் சேர்ந்தவன் என்பதனாலும் அரசியல் சார்ந்து தொடர்பதிவு எழுதியதனாலும் பிரதேசவாதம் பேசுகின்றான் என்று; என்னுடன் பதிவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைத்தவர்களும் இருக்கின்றனர். 

ஆனாலும் என்னுடைய மறைக்கப்பட்ட துரோகங்கள் எனும் தொடர் பதிவிற்கு எதிர்த்த குழுவினரைத் தவிர பலர் மத்தியிலே வரவேற்பு இருந்தது. அத் தொடர் பதிவானது கடந்தகால அரசியல் வரலாறுகளை புரட்டிப் பார்க்கும் ஒரு பதிவாக அமைந்திருந்தது. 60 பகுதிகளுக்குமேல் எழுதி இருந்தேன். இந்த இடத்தில் ஒன்றை சொல்கின்றேன் நான் பொய்களை எழுதுகிறேன் என்று என்னுடன் சண்டைக்கு வந்தவர்கள் எந்த இடத்தில் பொய் சொல்லி இருக்கின்றேன் என்பதனை இப்பொழுதாவது சுட்டிக்காட்ட முடியுமா?

இது ஒருபுறமிருக்க இலங்கையின் பதிவர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது வெட்கித் தலைகுனியவேண்டிய நிலையில் இருக்கின்றது. ; இலங்கையிலிருந்து புதியவர்கள் பலர் பதிவுலகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர். நல்ல பல பதிவுகளைத் தந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். 

இலங்கையில் வலைப்பதிவர்களிடையே ஒற்றுமை இல்லை. பல குழுக்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலை காணப்படுகின்றது. பல புதிய பதிவர்கள் வந்திருக்கின்றபோதிலும் பழையவர்களுக்கும் புதியவர்களுக்குமிடையில் ஒரு புரிந்துணர்வு இல்லாத நிலை காணப்படுகின்றது. 

இலங்கையின் இன்றைய நிலையினைப் பொறுத்தவரையில் எவ்வளவோ முக்கியமான விடயங்களை பதிவிட வேண்டிய அவசியமிருக்கின்றது. இருந்தும் வெறுமனே மொக்கைப் பதிவுகளையும் கும்மிப் பதிவுகளையும் எழுதிக் கொண்டிருக்கின்றனர். பதிவெழுதுவது எதை எழுதுவதென்பது அவரவர் விருப்பம். ஆனாலும் இவ்வாறான பதிவெழுதுபவர்கள் தாங்கள்தான் இலங்கையின் சிறந்த பதிவர்கள் என தங்களை காட்டிக்கொள்ள நினைப்பதுதான் கேலிக்கிடமானது. இலங்கை பதிவர்களைப் பொறுத்தவரை ஒருவரை ஒருவர் மாறிமாறி தங்களை தாங்களே புகழ்ந்து எழுதிக் கொள்ளும் செயற்பாடு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இலங்கையின் புதிய தமிழ் வலைப்பதிவர்களிடம் கேட்கின்றேன். இலங்கை தமிழ் வலைப்பதிவர் குழுமம் என்று ஒன்று இருக்கின்றது. அதில் பலர் சேர்ந்து கொள்ளாமல் இருக்கின்றனர். சேர்ந்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்ன? குறித்த சிலரே குழுமத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பலர் இக் குழுமத்தில் இணைந்து கொள்ளவில்லையாயின் எதற்காக இலங்கை தமிழ் வலைப் பதிவர் குழுமம் என்று சொல்ல வேண்டும். 

இலங்கை தமிழ் மக்களின் சமூக கலை கலாசார பாரம்பரியங்களை ஆவணப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது. எமது கலை கலாசார பாரம்பரியங்கள் இன்று அழிவடைந்து வருகின்றன. இவற்றை பேணிப் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்குடன்தான் ஈழத்து முற்றம் எனும் தளம் உருவாக்கப்பட்டது என்று நினைக்கின்றேன். இதில் பல இலங்கை பதிவர்கள் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நானும் ஈழத்து முற்றத்திலே பதிவிடவேண்டும் சந்தர்ப்பம் கிடைக்காதா என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஆனாலும் அது நிலைக்கவில்லை. மிக மிகக் குறிகிய காலமே ஈழத்து முற்றத்தில் உறுப்புரிமையுடன் இருக்க முடிந்தது நான்கு இடுகைகளே இட்டிருக்கின்றேன். 

நான் எனது வலைப்பதிவில் அரசியல் சார்ந்து எழுதியதனால் ஈழத்து முற்றத்திற்கான எனது உறுப்புரிமை என்னிடம் சொல்லாமலே பறிக்கப்பட்டது. அரசியல் பதிவெழுதும் அல்லது மாற்றுக் கருத்துள்ள ஒருவனுக்கு தனது சமூகம் சார்ந்த கலை கலாசாரம் சார்ந்த விடயங்களை எழுத உரிமை இல்லiயா? அல்லது அவன் எழுதக் கூடாதா? 

இன்று இலங்கை தமிழ் வலைப்பதிவர்களிடையே அதிகம் பேசப்படுகின்ற விடயம் ஈழவயல் ஈழவயலானது பல நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்க விடயம். ஈழத்தின் கலை கலாசார பாரம்பரியங்களை ஆவணப்படுத்தும் தளமாகவும். தளத்தில் பதியப்படும் விடயங்களை நூலுருவில் ஆவணப்படுத்தல். நிதியம் ஒன்றினை ஆரம்பித்து பல சமூக சேவைகளைச் செய்யவும் என்று பல நல்ல நோக்கங்களோடு உருவாக்கப்பட்டிருப்பதாக ஈழவயல் குழுவினர் அறிவித்திருக்கின்றனர். இவர்களின் இச் சேவை பாராட்டத்தக்கது.

ஆனாலும் சிலர் ஈழவயல் தளத்தின் வருகையை பொறுத்துக் கொள்ள முடியாமல் கொக்கரித்துக் கொண்டிருக்கின்றனர். ஈழத்து முற்றம் இருக்கும்போது ஈழவயல் எதற்கு என்று கேட்கின்றனர். ஈழத்து முற்றம் புதியவர்களை உள்வாங்குவதுடன் சரியாக செயற்பட்டிருந்தால் இன்னொரு தளத்தின் தேவை உணரப்பட்டிருக்காது. 

ஈழத்து முற்றம் இருக்கும்போது எதற்கு ஈழவயல்  என்று கேட்டிவர்களின் மனநிலையை பார்த்தீர்களா? தமிழர்களின் கலை கலாசார பாரம்பரியங்களை எழுத பல தளங்கள் இருந்தால் எமக்குத்தானே பெருமை. இவர்கள் வரவேற்க வேண்டியவர்கள். எதிர்க்கின்றனர். உண்மையான நல்ல மனமுள்ளவர்கள் நல்ல விடயம் இரண்டிலும் பதிவிடுவோம் என்று வரவேற்றிருக்க வேண்டும்.

ஒரு சிலர் வேண்டுமென்று திசை திருப்பி என்னுடன் சில பதிவர்களை மோதவிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்த நினைக்கின்றனர். ஈழவயல் தளம் சந்ருவுக்காகவா உருவாக்கப்பட்டது என்று இலங்கை வலைப்பதிவர் குழுமத்திலே கேள்வியினைத் தொடுத்து விவாதத்ததை என் பக்கம் திசை திருப்பியிருந்தனர். இது எனக்காக உருவாக்கப்பட்ட தளமல்ல. புதிய தளத்தின் தேவை உணரப்பட்டதன் வெளிப்பாடாக ஈழவயல் குழுமத்தினர் உருவாக்கியிருக்கின்றனர். என்னிலும் என் எழுத்துக்களிலும் நம்பிக்கை இருந்தால் ஈழவயல் குழுமத்தினர் என்னை அழைக்கட்டும். அழைத்தார்களானால் அவர் என்ன நோக்கத்திற்காக ஈழவயலினை உருவாக்கினார்களோ அந் நோக்கத்திற்கமைய செயற்படுவேன்.

இன்று இலங்கையைப் பொறுத்தவரை பதிவர் சந்திப்பு ஒன்று மிக மிக அவசியம் இலங்கைப் பதிவர்கள் சந்திப்புப்பற்றி சிந்திக்க வேண்டும். இச் சந்திப்பு மட்டக்களப்பில் இடம்பெறுவது நல்லதென நான் நினைக்கின்றேன். காரணம் நான் மிகவும் கவலைப்படுகின்ற விடயம் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் பதிவெழுதுபவர்கள் மிக மிகக் குறைவு இதற்கு காரணம் வலைப்பதிவு பற்றி பலருக்கு தெரியாது. மட்டக்களப்பிலே பதிவர் சந்திப்பு ஒன்றினை செய்கின்றபோது ஒரு விழப்புணர்வினை ஏற்படுத்த முடியும். (இதனையும் பிரதேசவாத முத்திரை குத்த வேண்டாம்)

இனிவரும் காலங்களில் தொடர்ந்தும் பதிவிட நினைத்திருக்கின்றேன். இன்று முதல் உங்கள் பதிவுகளுக்கும் வலம் வர இருக்கின்றேன்.




read more...

Saturday, 19 December 2009

வேட்டைக்காரனும் பிரபலமாகும் பதிவர்களும்




வேட்டைக்காரன் விமர்சனம் மூலம் வேட்டையாடப்படும் பதிவர்கள்

வேட்டைக்காரன்  வெளிவருவதற்கு முன்னரே வேட்டைக்கரனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் வேமர்சனங்கள் அதிகமாக இருந்தது. இதனால் வேட்டைக்காரனை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் அதிகரித்து இருந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்று வேட்டைக்காரன் விமர்சனங்களை பதிவர்கள் வேக வேகமாக பதிவிட்டு வருகின்றனர். சிலரோ வேட்டைக்காரன் விமர்சனம் என்று சொல்லி தான் பிரபல்யம் அடைவதற்காகவும், பதிவர்களை வம்புக்கு இழுப்பதட்காகவும் வேட்டைக்காரன் விமர்சனம் என்ற பெயரில் ஏதோ விமர்சனம் செய்து பதிவர்களை வம்புக்கு இழுத்திருக்கின்றனர். இது எப்படி இருப்பினும் வேட்டைக் காரனைப் பாருங்கள் பார்த்துவிட்டு வேட்டைக்காரனை விமர்சனம் செய்யுங்கள். தாம் பிரபலமாவதட்கான விமர்சனமாக வேட்டைக்காரனை பயன்படுத்த வேண்டாம்.

 என் பெயர் சரியா? தவறா?

நான் பதிவெழுத வந்த காலம் தொடக்கம் இன்று வரைக்கும் என் பெயரிலே சிறு சர்ச்சை ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. நான் எனது பெயரை எழுதும் முறை தவறானது என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

நான் எனது பெயர ஆரம்பம் முதல் சந்ரு என்றே பயன் படுத்தி வருகின்றேன் ஆனால் இது தவறானது. சந்த்ரு என்றுதான் வர வேண்டும் என்று சிலர் அடிக்கடி சொல்லி வருகின்றனர். சந்ரு என்று எழுதுவது தமிழிலே சற்று மயக்கத்தை ஏற்படுத்துவதாக சொல்கின்றனர்.

சந்ரு என்பது தவறானது என்றால் தமிழிலே எழுதுவதற்கே முடியாமல் இருக்கின்ற பெயர்கள் பல இருக்கின்றனவே என்று நண்பர் ஒருவரிடம் கேட்டேன் அவர் சொன்னார் அது தமிழ் பெயர் அல்ல ஆனால் சந்ரு என்பது தமிழ் பெயர் சந்ரு எனும் பெயரிலே தமிழ் இலக்கண மயக்கம் இருப்பது தவறு என்றார்.

அப்படியானால் ஜெயகிருஷ்ணா என்பது ஒரு தமிழ் பெயர் இங்கே நாம்  ஷ் போட்டு எழுதுகின்றோம். இவ்வாறு வடமொழி சொற்களை பயன் படுத்தி பல பெயர்களை எழுதுகிறோம் இது சரியா?

ஒருவரின் பெயரை இன்று என் ஜோதிடம் முக்கிய இடம் பெறுகின்றது. பலர் தங்களது பெயரை என் ஜோதிடப்படி வைத்திருப்பார்கள்.  அப்போது அவரது பெயரை மாற்ற சொல்ல முடியுமா? என் பெயர் ஒரு ஜோதிடப் படியும் நான் வைக்கவில்லை.

என் பெயரை சந்ரு என்று எழுதுவதையே நான் விரும்புகிறேன். பல நண்பர்கள் சந்த்ரு  என்று மாற்றும்படி சொல்கின்றனர். என் பெயர் சந்ரு என்று இருப்பது சரியா தவறா? சந்ரு என்று இருக்க வேண்டுமா? சந்த்ரு என்று வரவேண்டுமா உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.


பிரபல பதிவராவது எப்படி...


இன்று பிரபல பதிவராவதட்கு இலகுவான பல வழிகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை தருகிறேன் நீங்களும் பின்பற்றி பிரபல பதிவராகுங்கள்.

1. பிரபல பதிவர்களை தாக்கி பதிவிடலாம்.
இதனால் பிரபல பதிவர் மட்டுமல்ல அவரை பின்தொடர்வோர் அவரது இரசிகர்கள் என்று எல்லோரும் உங்கள் பதிவுக்கு வருவார்கள் அப்போது உங்கள் வலைப்பதிவை பலர் அறிந்து கொள்வார்கள்.

2. பதிவுகளுக்கு எதிராக கருத்துரையிடலாம்.
இதனால் எல்லோரும் பதிவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும்போது நீங்கள் மட்டும் எதிராக கருத்துதெரிவிப்பதால் எல்லோர் பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். அத்தோடு அந்தப் பதிவு ஒரு தேவையற்ற விவாதமாக மாற்றப்படும். எல்லோரும் உங்கள் பதிவுகளை பார்க்க ஆசைப் படுவார்கள். (என்ன எழுதுறிங்க என்றுதான் பார்க்க)

3. ஏனைய வலைப்பதிவர்களின் பதிவுகளுக்கு எதிர் பதிவு போடலாம் இதனாலும் குறிப்பிட்ட வலைப்பதிவர் சார்ந்த எல்லோரும் உங்கள் வலைப்பதிவுக்கு வருவர். இவ்வாறு பல எதிர் பதிவுகளை போடும்போது பலர் உங்கள் வலைப்பதிவை வந்து பார்ப்பார்கள்.

4. நீங்கள் வலைப்பதிவுகளுக்கு கருத்துரை இடும்போது சம்பந்தப் படாத ஒரு பதிவரை வம்புக்கு இழுத்து கருத்துரை இடலாம். அதனால் வம்புக்கு இழுக்கப்பட்ட பதிவரும், அவர் சார்ந்தோரும் உங்கள் பக்கம் பார்வையை திருப்புவார்.

இன்னும் இருக்கிறது சந்தர்ப்பம் வரும்போது மிகுதி வரும்.

சில பதிவர்கள் இவ்வாறுதான் பிரபல்யமாகிக் கொண்டு இருக்கின்றனர். நீங்களும் இதனை கடைப்பிடித்து பிரபல பதிவராக வாழ்த்துக்கள்.


வலைப்பதிவு அறிமுகம்

பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா எனும் வலைப்பதிவானது இலங்கையின் பங்குச் சந்தை தொடர்பாகவும், இப் பங்குச் சந்தையிலே நாளாந்தம் இடம் பெறுகின்ற மாற்றங்கள்.  பங்குச்சந்தை முதலிட்டு வாய்ப்புக்கள், பங்குச் சந்தையில் முதலிடுவது தொடர்பான பல்வேறு பட்ட ஆலோசனைகள். உலக பங்குச்சந்தை மாற்றங்கள் , உலக பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை தினமும் திரட்டித் தருகின்ற ஒரு வலைப் பதிவாகும்.

இந்த வலைப்பதிவின் மூலம் பங்குச் சந்தையில் முதலிட்டவர்களும், முதலிட நினைப்பவர்களும், இத் துறை சார்ந்தவர்களும், வணிகத்துறை சார்ந்த மாணவர்களும் நன்மையடைந்து வருகின்றனர்.

இந்த வலைப் பதிவுக்கு சென்று நீங்களும் நன்மையடையலாம்.
read more...

Monday, 9 November 2009

கொம்பு முளைத்த பதிவர்கள் யார்?

இன்று நாளுக்கு நாள் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பல துறை சார்ந்தவர்கள் வலைப்பதிவுகளிலே பதிவிடுகின்றனர். நல்ல பல விடயங்கள் பதிவிடப்படுகின்றன. இருந்தபோதும் சிலர் எல்லோரும் வலைப்பதிவு வைத்திருக்கின்றார்களே நாங்களும் வைத்திருப்போமே என்று வலைப்பதிவை ஆரம்பிக்கின்றனர். பதிவிடுவதற்கு எதுவும் இல்லை அவர்களிடம் என்ன செய்வது இன்னொருவரின் பதிவினை திருடி பதிவிடுகின்றனர்.

என் வலைப்பதிவு வித்தியாசமான முறையிலே திருடப்படுகின்றது. நான் பதிவிட்டு சில நிமிடங்களிலே எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இன்னோர் வலைப்பதிவிலே பதிவிடப்படுகின்றது. இதிலே விசேசம் என்னவென்றால் என் பதிவு மட்டுமே பதிவிடப்படுகின்றன. என் இடுகைகள் அத்தனையும் நான் பதிவிட்டு சிறிது நேரத்திலே அந்த வலைப்பதிவிலே பதிவிடப்படுகின்றன.

இது ஒருபுறமிருக்க இன்னும் சிலரோ ஒரு சிலரை தாக்குவதற்காகவே வலைப்பதிவுகளை ஆரம்பித்திருக்கின்றனர். போலியான பெயரிலே சிலர் வலைப்பதிவுகளை வைத்துக்கொண்டு ஒரு பதிவரைப் பற்றி தேவையற்ற விதத்திலே, நாகரிகமற்ற முறையிலே பதிவிடுதல், நாகரிகமற்ற முறையிலே கெட்ட வார்த்தைகளால் பின்னூட்டமிடல் போன்ற செயல்களிலே ஈடுபடுவதட்காகவே சிலர் வலைப்பதிவுகளை ஆரம்பித்திருக்கின்றார்கள்.

இன்று இலங்கைப் பதிவர்களைப் பொறுத்தவரை இவர்களில் தொல்லையும் அதிகரித்திருக்கின்றது. இலங்கைப் பதிவர்களுக்கு அனானிகளின் தொல்லையோடு சேர்த்து இன்னுமோர் தலையிடி இந்த போலிப் பதிவர்கள்தான். இவர்கள் நாகரிகமற்ற முறையிலே பதிவர்களைத் தாக்கி பதிவிடுகின்றனர், பின்னூட்டமிடுகின்றனர்.

இந்த போலிப் பதிவர்களின் தொல்லை வேறு நாடுகளிலே எப்படி என்று தெரியவில்லை. இலங்கையைப் பொறுத்தவரை இலங்கைப் பதிவர்களைத் தாக்கவே ஒரு சில போலிப் பதிவர்கள் புறப்பட்டிருக்கின்றனர். தங்களது பதிவுகளிலே ஒரு பதிவரைப் பற்றி தவறான முறையிலே எழுதுதல் தேவையற்ற பட்டங்களை அந்தப் பதிவருக்குச் சூட்டுதல் என்று அவர்களின் அட்டகாசம் தொடர்கின்றன.

பதிவர்கள் என்றால் பெரிய கொம்போ என்று கேட்டு சில போலிப்பதிவர்கள் பதிவர்கள் பதிவிட்டிருந்தனர். இன்று நல்ல பதிவுகளைத் தருகின்ற பலர் இருக்கின்றனர், பல துறைசார்ந்த பதிவுகளைத் தருகின்றனர். இவர்கள் எவரும் வேலையின்றி வீட்டிலே இருப்பவர்களல்ல. இன்று எல்லோரது பார்வையும் பதிவர்கள் பக்கம் திரும்பியிருக்கின்ற இந்த காலகட்டத்தில் இப்படியான போலிப் பதிவர்களால் நல்ல பதிவுகளைத் தருகின்ற பல பதிவர்கள் தாக்கப்படுகின்றனர். இந்நிலை மாறவேண்டும் போலிப் பதிவர்கள் உணர்ந்து திருந்தவேண்டும்.
read more...