Monday, 31 May 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி -8

1920 ம் ஆண்டுவரை அரசியல் அதிகாரம் குறிப்பிட்ட ஒரு சிலரிடையே மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் 1920 ன் பின்னர் ஏற்பட்ட மனிங் சீர்திருத்தம் கொண்டுவந்த மாற்றங்கள் இனவாரியான ஒதுக்கீட்டை மக்கள் பிரதிநிதித்துவத்திற்கு வழங்கியது. அதனு}டாக அரசியல் உரிமைகள் பொதுமக்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

read more...

Sunday, 30 May 2010

விஜயுடன் போட்டி போடும் அஜித், சூர்யா, விக்ரம் யாருக்கு வெற்றி

திரையுலகத்திற்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் 2010

read more...

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி -7

யாழ்ப்பாணம்

read more...

Friday, 28 May 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 6

தமிழீழப் போராட்டம்
நமது நாட்டில் வாழும் சிறுபான்மை இனமான நாம் தமிழர்கள் எனும் வகையில் தனிநாடொன்றுக்கான கோரிக்கையை முன்வைத்து போராடி வந்தோம். இன்று அந்தக் கோரக்கை நம் கண்முன்னேயே பலமிழந்து நிற்கின்றது.

read more...

Thursday, 27 May 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 5

ஊ) காலனித்துவரின் வருகை

1505 ல் முதன் முதல் இலங்கையில் காலடி எடுத்து வைத்த போத்துகேயர் 1597ல் தான் கோட்டை ராச்சியத்தை தமது முழுக்கட்டுபாட்டில் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து 1619ல் யாழ்ப்பாண ராச்சியமும் போத்துகீசர் வசம் வீழ்ந்தது.
read more...

Wednesday, 26 May 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 4

read more...

Tuesday, 25 May 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 3

read more...

Monday, 24 May 2010

ஏதோ செய்கிறாய்

உன்னால்
 கவிஞனாக்கப்பட்டவன் நான்
என் உளறல்களையும்
கிறுக்கல்களையும்
கவிதை என்று
முகவரி கொடுத்து
கவிஞன் எனும்
மகுடம் சூட்டியவள் நீ...
read more...

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 2

2) கிழக்கு மாகாணம்

அ) புவியியல் அமைப்பு

இலங்கையின் கிழக்கு கரையோரமாக அமைந்துள்ளது இந்த மாகாணம். மத்திய மலைப்பகுதியில் ஆரம்பித்து வங்க கடலில் பாயும் இலங்கையின் மிகப்பெரும் நதியான மகாவலி கங்கை இம்மாகாணத்தை இரு பகுதிகளாக கூறாக்கி கடலில் கலக்கிறது.
read more...

Sunday, 23 May 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 1

தமிழர்களுக்கென்று  தனித்துவமான வரலாறுகள் இருக்கின்றன. அந்த வரலாறுகள் மறுக்கப்படவோ, மறைக்கப்படவோ முடியாதவை, ஒவ்வொரு கதைகளை சொல்வார்கள். இருந்தபோதும் எது உண்மை, எது  பொய் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். 

தமிழர் நம் வரலாறு கூறும் கதைகள் எனும் இந்த தொடர் மூலம் நமது வரலாறுகளைக் கூறுகின்ற ஒரு தொடராகவே அமைய இருக்கின்றது.  என் கருத்துக்களோடு நீங்கள் உடன்படவில்லையாயின் தாரளமாக உங்கள் கருத்துக்களை சொல்லலாம்.

வேறொரு வலைப் பதிவிலே எழுதப்படுகின்ற விடயங்களை நான் தொகுத்துத் தருகிறேன் தமிழர் நம் வரலாறுகளின் உண்மைத் தன்மை வெளி வர வேண்டும் என்பதற்காக. உங்களது மாற்றுக் கருத்துக்களையும் எதிர் பார்க்கின்றேன். மாற்றுக் கருத்துக்களும்  முட்டி மோதுகின்ற போதுதான் உண்மைகள் வெளிவரும்.

1) அறிமுகம்

அரசியல் சூழல் பற்றிய பொதுநோக்கு பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் வாழ்வதற்காகவே பிறக்கின்றான். ஆனால் இவ்வுலகில் எந்த ஒரு மனிதனும் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாகவும் வாழமுடிகிறதா? வாழுகின்ற ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்வதற்கான போராட்டங்களிலேயே அவனது காலம் கழிகின்றதே? அதனால்தான் இந்த மனித குலத்தின் வரலாறு என்பதே போராட்டங்களின் வரலாறாக……. புரட்சிகளின் வரலாறாக…… நிரம்பிக் கிடக்கிறது.

உலகின் வரலாற்றினுடைய ஒவ்வொரு போராட்டமும், ஒவ்வொரு புரட்சியும் தமக்கான சுதந்திரத்தை கொண்டுவரும் என்று எல்லா மனிதர்களும் காலம் காலமாக நம்பிக்கிடக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏமாற்றப்படுவது மட்டுமே நடந்துவருகிறது.

அதேவேளை விடுதலையை கொண்டுவருவதாக வீறு கொண்டு எழுபவர்கள் அதிகாரங்கள் தம்மிடம் வந்ததும் அவரவர்களே புதிய எசமானர்களாகவும் வலம் வரத் தொடங்குகிறார்கள். ஆனாலும் அவர்களின் புதிய அரியாசனங்களும் மக்களின் கோபகனலிலிருந்து தப்பமுடியாது போகும் என்பதையும் வரலாறுகள் நமக்கு நிறையவே கற்றுத் தந்திருக்கின்றன.

நமது நாட்டின் கடந்த நூற்றாண்டின் இறுதிதசாப்தங்கள் மிக மோசமான முறையில் இனவாதம் கோலோச்சும் நாடாக இலங்கையை அடையாளப்படுத்தி வந்திருக்கின்றன. இலங்கை அரசினது பேரினவாத போக்கும் தமிழர்தம் தேசியவாத போக்கும் ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைப்பதில் ஒன்றிலிருந்து ஒன்று சளைத்தவை அல்ல என்பதை நிரூபித்திருக்கின்றன.பெரும்பான்மை சிங்கள அரசு சிறுபான்மைத் தமிழர்களை ஓரவஞ்சகமாக நடத்துகிறது என்பதற்காக உரிமைக்குரல் எழுப்பிய தமிழர்தம் தேசியவாதம் ஆயுதபோராட்டத்தை முன்மொழிந்தது. தமிழ்பேசும் இருவேறு மாகாணங்களாய் இருந்த வடக்கும் கிழக்கும் இணைந்து இந்த ஆயுதபோராட்டத்தை நடாத்தியும் வந்தன.

இந்த ஆயுத போராட்டத்தின் களபலிகளின் தொடக்கமாக கருதக்கூடியது 1974.06.05எனும் நாள். இலங்கை அரச படைகளிடம் பிடிபடகூடாது என்பதற்காக உரும்பிராய் பொன்.சிவகுமாரன் எனும் இளைஞன் தானே தன்னுயிரை மாய்த்துக்கொண்ட அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

அன்று ஆரம்பித்த இழப்பு ஆனது ஏறக்குறைய போராளிகளாக 27000 இளம் உயிர்களையும் பொதுமக்கள் 70000 பேருமாக தமிழர் தரப்பில் மட்டும் மொத்தம் ஒரு இலட்சத்திற்கு அதிகமானோரை பலிகொண்டுள்ளது.கிட்டத்தட்ட 30 ஆண்டுகால ஆயுத போராட்டத்தில் மிக முக்கியமான இராணுவ பலம் வாய்ந்த அமைப்புத்தான் தமிழீழ விடுதலை புலிகள். இந்த இயக்கத்தினது இராணுவ தந்திரோபாயங்களின் முதுகெலும்பாகவும் அமைப்பின் இரண்டாம் தலைமையாகவும் இருபத்தியொரு வருடகாலம் களத்தில் நின்றவர் தான் கேர்ணல் கருணா அம்மான் என அழைக்கப்படும் முரளிதரன் ஆகும்.இவர் 2004.03.02 ம் திகதி எடுத்த பாரிய முடிவானது முழுமொத்த போராட்டத்தையே ஒரு உலுப்பு உலுக்கியது.

ஐம்பது வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த “வட-கிழக்கு இணைந்த தாயகம்” என்கின்ற தமிழ் அரசியலின் உயிர் மூச்சு கோஷம் தகர்த்தெறியப்பட்டது. இதுவே எதிர்கால இலங்கையின் அரசியல் போக்கிலும் பென்னம் பெரிய மாறுதல் ஒன்றிற்கு வழிகோலியுள்ளது.மட்டக்களப்பு-அம்பாறை பிரதேசங்கள் இனிமேல் வடக்கு தலைமைக்கு கட்டுப்படாது என்று அதுவரை தன்மூச்சையே தமிழீழத்திற்கு அர்ப்பணித்து வாழ்நாள் முழுக்க உழைத்த ஒரு மூத்ததளபதி விசுவாசமான தளபதி அறிவிப்பதென்பது பலருக்கும் அதிர்ச்சியானதொன்று தான்.

அதேநேரம் கிழக்குவாழ் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அது அதிர்ச்சியுடன் மகிழ்ச்சியையும்சேர்த்தே கொடுத்திருந்ததென்பதும் நாம் கண்ணால் கண்டதே.ஏன் இப்படி நடந்தது? இது சரியானதா? எப்படி இப்படியொரு வெடிப்புக்கான நியாயங்கள் கவனிக்கப்படாமல் போனது? வெடிப்பின் பின் இதை எப்படி அணுகியிருக்க வேண்டும்? இதன் தொடர்ச்சி எங்கேபோய் முடியும்? என்கின்ற கேள்விகள் நம் ஒவ்வொருவர் மனதுள்ளும் மட்டுமல்ல இந்த அரசியலின் போக்கில் அகப்பட்டு தவிக்கின்ற பலரது மனதிலும் எழுந்துள்ள கேள்விகள் தான். ஆனால் இதுபோன்ற அரசியல் மாற்றங்களால் விரும்பியோ விரும்பாமலோ பாதிக்கப்படுகின்ற சாதாரண வட, கிழக்கு பிரஜைகளிடம் இவற்றுக்கான பதில்கள் கதைகதையாய் உள்ளன. ஆனால் அதற்காக வாய் திறத்தல்கள் என்பது எழுதாத சட்டங்களாக தடைசெய்யப்பட்டுள்ளன.
read more...

Thursday, 20 May 2010

கலையுலக, திரையுலக, பதிவுலக நண்பர்களே கொஞ்சம் நில்லுங்கள்

இது என்னுடைய 200 வது பதிவு இது என்னுடைய 200௦௦ வது பதிவாக இருந்தாலும் நான் எதனையும் சாதித்து விடவில்லை. வலையுலகுக்கு வந்து நிறையவே படித்திருக்கின்றேன். நல்ல பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். மிக மிக மோசமான வார்த்தைகளால் அனானிகளால் அதிகமாக திட்டு வங்கி இருக்கின்றேன். இவ்வாறு நான் வலையுலகுக்கு வந்து பலவற்றை சம்பாதித்திருக்கின்றேன்.

என்னுடைய கருத்துக்களை வெளியிடுகின்ற ஒரு ஊடகமாகவே நான் வலைப் பதிவைப் பயன்படுத்துகின்றேன். தவறுகளை சுட்டிக்காட்டவும் உண்மைகளை வெளியிடவும் நான் ஒரு போதும் தயங்குவதில்லை.

என் கருத்துக்கள் தவறானவைகளாக இருந்தால் சுட்டிக்காட்டுகின்றபோது திருத்திக் கொள்ளும் மனப் பான்மையும் கொண்டவன் நான்.

நான் வலையுலகில் ஏதோ கிறுக்கியிருக்கிறேன். எனக்கு உற்சாகமூட்டிய வலையுலக நண்பர்கள், அனானிகள் ( என்னை அதிகம் எழுதத் தூண்டியவர்கள்) திரட்டிகள் குறிப்பாக தமிழிஷ், தமிழ்மணம், தமிழ் 10 போன்ற திரட்டிகளுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். சில நாட்களாக என் இடுகைகளை இணைத்து என் வலைப்பதிவுக்கு அதிகமான பார்வையாளர்களை அனுப்பியிறுக்கின்ர தினமணிக்கும் எனது நன்றிகள் தொடர்ந்தும் பல  பதிவுகளோடு உங்களை சந்திப்பேன் உங்கள் உங்கள் ஆதரவு என்றும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு.

குறும்படம் தயாரிக்க நாம் தயார். நீங்கள் தயாரா?
என்னுடைய நீண்டநாள் ஆசை எமது கலைஞர்களைக் கொண்டு ஒரு குறும் படம் தயாரிக்க வேண்டும் என்பதே.. பல கலைஞர்கள் வாய்ப்புக்கள் கிடைக்காமல் இருக்கின்றனர் அவர்களை வெளி உலகுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எனது ஆசை.

ஆனால் பல துறை சார்ந்த கலைஞர்கள் இருந்தும் ஒரு குறும்படம் தயாரிக்க வேண்டுமாக இருந்தால் முக்கியமாக தேவைப்படுகின்ற நிதி, தொழிநுட்பம் போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல்தான் கலைஞர்கள் பின் வாங்குகின்றனர்.

அது ஒரு புறமிருக்க என்னுடைய நண்பர்கள் சிலர் தடைகளையும் தாண்டி நாம் குறும்படம் ஒன்றினை தயாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கின்றனர்.

இதற்காக இலங்கை மற்றும் வெளிநாட்டுகளில் இருக்கின்ற ஆர்வமுடைய பல துறை சார்ந்தவர்களின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும்  நாம் எதிர்பார்க்கின்றோம்.  

தொடர்புகளுக்கு shanthruslbc@gmail.com
read more...

யாழ்தேவியின் கடிதமும் என் பதிலும்

யாழ்தேவி திரட்டி தொடர்பாக நான் இரண்டு இடுகைகளை இட்டிருந்தேன். அவற்றுக்கு விளக்கமளித்து யாழ்தேவி நிர்வாகத்திடமிருந்து சற்று நேரத்துக்கு முன்னர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருக்கின்றது அந்த மின்னஞ்சலையும் எனது விளக்கத்தையும் தருகிறேன்.

வணக்கம் சந்ரு….

யாழ்தேவி இணையம் தொடர்பாக தங்களுடைய குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களை அண்மைக்காலத்தில் காணக் கிடைத்தது. மகிழ்ச்சி.

யாழ்தேவியில் தாங்கள் நட்சத்திரமாக அறிவிக்கப்பட்டு குறைந்தது 4 மாதங்களாவது சென்றிருக்கும். ஆனால், இன்னும் தங்களை தினக்குரல் பத்திரிகையில் அறிமுகப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை தாங்கள், பதிவர்கள் உள்ளிட்ட பலரிடமும் முன்வைத்துள்ளீர்கள். அது தொடர்பில் நாங்கள் அறிவோம்.

யாழ்தேவியில் நட்சத்திரமாக அறிமுகமாகும் பதிவர் அடுத்த வாரம் தினக்குரல் பத்திரிகையில் அறிமுகப்படுத்தப்படுகிறார். அதற்கு அந்த நட்சத்திரப்பதிவர் நட்சத்திர வாரத்திலேயே ( முடிவடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அதாவது குறைந்தது சனிக்கிழமைக்கு முன்) தங்களுடைய விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுது தான் தினக்குரல் பத்திரிகை ஆசிரிய பீடத்துக்கு நட்சத்திரத்தின் விபரங்களை அனுப்ப முடியும். (தினக்குரல் பத்திரிகைக்கு குறைந்தது 6 நாட்களுக்கு முன்னர் விபரங்களை அனுப்ப வேண்டும்). இவைதான் நட்சத்திர வாரத்தில் கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறை.

தாங்கள் நட்சத்திரமாக அறிவிக்கப்பட்டதும் விபரங்களையும், படத்தினையும் அனுப்புமாறு கோரியிருந்தோம். ஆனால், நீங்கள் அனுப்பவில்லை. அதுதவிரவும், பதிவர் சந்திப்பொன்றில் தங்களை நேரில் சந்தித்த நான் (புருஜோத்தமன் தங்கமயில்) விபரங்களை சீக்கிரத்திலேயே அனுப்புமாறு கோரியிருந்தேன். அப்பொழுதும் நாட்கள் சில கடந்து விட்ட நிலையிலேயே தங்களுடைய விபரங்களை அனுப்பியிருந்தீர்கள். அப்பொழுது தினக்குரல் பத்திரிகைக்கு நட்சத்திரத்தின் விபரங்களை அனுப்பவேண்டிய காலக்கெடு முடிந்து விட்டது. அதனாலேயே, யாழ்தேவியில் ஆரம்ப காலத்தில் நட்சத்திரமாக இருந்த பதிவர் ஒருவர் அறிமுகப்படுத்தப்பட்டார்.

தற்பொழுதும், சில நட்சத்திர பதிவர்கள் விபரங்களை காலம் தாழ்த்தி அனுப்புவதால் பழைய நட்சத்திரங்களை தினக்குரலில் அறிமுகப்படுத்தி வருகிறோம். அவர்கள் தினக்குரலில் அறிமுகமாகியிருக்கவில்லை. அவை, ஒரு கிரமத்திலேயே நடைபெறுகிறது. அப்படியே தங்களுடைய விபரங்களும் எம்முடைய சேமிப்பில் இருக்கிறது. காலக் கிரமத்தில் தாங்களும் அறிமுகப்படுத்தப்படுவீர்கள். நீங்கள் யாழ்தேவியில் இணைத்தாலும், இணைக்காவிட்டாலும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் அது நடக்கும்.

அத்துடன், தங்களுடைய பதிவுகளை இணைக்க முடியவில்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்பில் சில தொழிநுட்ப காரணங்கள் இருக்கலாம். அது தொடர்கில் எங்களுக்கு நீங்கள் எந்த தருணத்திலும் அறியத்தரவில்லை. அதாவது, யாழ்தேவி இணையத்தில் பக்க வடிவமைப்பு எமது வடிவமைப்பாளர்களினால் மீளமைக்கப்பட்டது. அதனால், பல பதிவர்களின் பதிவுகளை இணைக்க முடியாமல் இருந்தது. அவர்கள் எமக்கு அறிவுறுத்தியதன் பெயரில் அது திருத்தப்பட்டது. தங்களுடைய பதிவுகளை இணைக்க முடியவில்லை என்று தாங்கள் யாழ்தேவிக்கு அறிவிக்கவேயில்லை. (ஆனால், யாழ்தேவியில் நீங்கள் தற்போது பதிவுகளை இணைப்பதில்லை என்று சிலரிடம் கூறிய விடயமும் எம் காதுகளுக்கு கிடைத்தது. அது தொடர்பில் நாங்கள் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில், சில முறையற்ற வார்த்தை மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு நாங்கள் பதிலளிப்பதில்லை.)

யாழ்தேவி இணையம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்பிலிருந்த சந்ரூ என்கிற பதிவர், தன்னுடைய அறிமுகம் தினக்குரலில் ஏன் வரவில்லை என்று எங்களிடம் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சலினூடாகவே கேட்டிருக்கலாம். அதுதானே சிறந்த பண்பு. அதை விடுத்து எங்களின் மீது நியாயமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.

யாழ்தேவி இணையம் தொடர்ந்தும் தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுக்கும். விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் எம்மை வளப்படுத்த உதவினால் அதனை நாங்கள் உள்வாங்கத் தயாராகவே இருக்கிறோம்.

(கடந்த இரு வாரங்களாக ஒரு பதிவரே நட்சத்திரமாக அறிவிக்கப்பட்டதற்கு யாழ்தேவியின் சில மேம்படுத்தல் வேலைகளே காரணமாக இருந்தது. அது, யாழ்தேவியின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியபீடம் கலந்தாலோசித்து எடுத்த முடிவே)

அரசியல் சமூக இலக்குகளை நோக்கி பயணிக்கிற பதிவர்களையும் யாழ்தேவி தொடர்ந்தும் இணைத்து வருகிறது. ஒவ்வொரு தனி நபரின் அரசியல் மற்றும் சமூக விருப்பு வெறுப்புக்களில் யாழ்தேவி தலையிடுவதில்லை.

(இந்தக் கடிதத்தை தங்களுடைய வலைப்பக்கத்தில் வெளியிட கோருகிறோம். தங்களுடன் உரையாடுவதற்காக அலைபேசியில் அழைத்தபோதும் அது சாத்தியமாகவில்லை)

நன்றி,

புருஜோத்தமன் தங்கமயில்.
யாழ்தேவி இணையம்.

--
PURUJOTHTHAMAN THANGAMAYL (PRAVEEN)
Editor,
WWW.YAALDEVI.COM
+94773236285

நான் நட்சத்திரமாக அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும் இன்னும் தினக்குரலில் பிரசுரிக்கப்படாமைக்கான காரணம் நான் எனது விபரங்களை காலம் தாழ்த்தி அனுப்பியதாக சொல்லப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக என்னுடைய பதிவுகளிலே சொல்லி இருக்கின்றேன்.

நான் நட்சத்திரமாக தெரிவு செய்யப்படும் நாளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னரே நான் நட்சத்திரமாக தெரிவு செய்யப்படுகிறேன் என்று மின்னஞ்சல் அனுப்பப் பட்டிருக்கின்றது. அந்தக் காலப்பகுதி நான் பதிவேளுதுவதிளிருந்து விலகி இருந்த காலம் ஏன் மின்னஞ்சல்களையும் பார்வையிட முடியாத நிலையில் இருந்தேன்.

நான் நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட்ட விடயம் எனக்கு தெரியாது. நான் நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட்ட அன்று காலையில் தங்க முகுந்தன் தொலைபேசியில் அழைத்து நட்சத்திரமானதுக்கு வாழ்த்த்துக்கள் என்றபோதுதான் விபரங்களை தங்க முகுந்தனிடமிருந்து அறிந்து கொண்டேன்.

நான் அந்தக் காலப்பகுதியில் வேறு இடத்தில் இருந்ததால் பதிவிட முடியாத நிலையில் இருந்தேன். பதிவர்களைப் பொறுத்தவரை பதிவு இடுதலோ   முழு நேரத் தொழிலல்ல. எப்பொழுதும் வலைப் பதிவோடு இருக்கப்போவதில்லை. பல நாட்களுக்கு இணையப் பக்கமோ, வலைப்பதிவு பக்கமோ வரமுடியாத நிலை இருக்கும்.

நட்சத்திரமாக தெரிவு செய்யப்படுகின்ற பதிவருக்கு ஒரு வாரத்துக்கு முன்னரோ அதற்கு முன்னரோ தெரியப்படுத்த வேண்டும் என்று யாழ்தேவி நிரவாகத்திடம் கேட்டு பல பதிவர்கள் ஆரம்ப நாட்களிலே பதிவிட்டிருக்கின்றனர்.

ஓரிரு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கின்றபோது பதிவர்கள் தங்களை ஆயத்தப் படுத்துவதிலே பல சிக்கல்கள் இருக்கின்றன. பதிவர்கள் முழுநேர தொழிலாக பதிவிடுதலை  செய்யவில்லை.

நட்சத்திரமாக நான் அறிவிக்கப்பட்ட காலத்தில் பல நாட்கள் நான் கொழும்பிலே இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது அதனால் என்னால் உடனடியாக என்னைப் பற்றிய விபரங்களை அனுப்ப முடியவில்லை.  என்னால் இணையப் பக்கமே வர முடியாமல் இருந்தபோது நான் நட்சத்திரப் பதிவராக அறிவிக்கப்பட்டதை ஓரிரு வாரத்துக்கு முன்னர் தெரியப் படுத்தாதது தவறா? பல மாதங்கள் கடந்தும் ஏன் இன்னும் தினக்குரலில் பிரசுரிக்கவில்லை?

யாழ்தேவியில் பதிவுகளை இணைக்க முடியாமைக்கு காரணம் சில மேம் படுத்தல்களால் பல பதிவர்கள் இணைத்துக் கொள்வதிலே சிக்கல் இருப்பதாக மின்னஞ்சலிலே சொல்லப்பட்டிருக்கிறது. இந்த விடயங்களை பதிவர்களுக்கு தெரியப் படுத்தி இருக்கலாம்தானே. யாழ்தேவி தொடர்பிலே அந்த பதிவர்கள் சந்தேகப்படவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

//(ஆனால், யாழ்தேவியில் நீங்கள் தற்போது பதிவுகளை இணைப்பதில்லை என்று சிலரிடம் கூறிய விடயமும் எம் காதுகளுக்கு கிடைத்தது. அது தொடர்பில் நாங்கள் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில், சில முறையற்ற வார்த்தை மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு நாங்கள் பதிலளிப்பதில்லை.) //

நான் எங்கேயும் எந்தப் பதிவரிடமும் முறையற்ற வார்த்தைப் பிரயோகத்தை மேட்கொள்ளவில்லை. நான் யாழ்தேவி தொடர்பிலே எவரிடமும் தவறாக கதைத்ததில்லை. எனக்கு தவறாக படுகின்றவைகளை பதிவிடுவேன். அதை விடுத்து எவரிடமும் பேசவேண்டிய அவசியமும் எனக்கில்லை.

சில பதிவர்கள் ஏன் யாழ்தேவியில் இணைப்பதில்லை என்று கேட்டபோது. நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரை தினக்குரலில் பிரசுரிக்கவில்லை அதனால் நான் இணைப்பதில்லை என்று மட்டுமே சொல்லி இருக்கின்றேன். அதனைவிடுத்து தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை எங்கே பயன் படுத்தினேன் என்று சொல்லுங்கள். எந்த விடயத்துக்கும் தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை பயன் படுத்துவதில்லை.

நான் எனது முந்திய பதிவிலே சொல்லி இருந்தேன் ஏன் இரண்டு வாரங்கள் ஒருவர் நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்று பல பதிவர்கள் இதுவரை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்படாமல் இருக்கும்போது ஏன் ஒருவர் இரு வாரங்கள் நட்சத்திர பதிவராக இருக்க வேண்டும் இன்னொருவருக்கு இடம் கொடுக்கலாமே என்றுதான் சொல்லி இருக்கின்றேன். உங்கள் நிரவாகத்தின் முடிவுகளில் நான் தலையிட முடியாது.

முதலாவது பதிவர் சந்திப்புக்கு பின்னர் யாழ்தேவி தொடர்பாகா யாழ்தேவிக்கு எதிராக எழுதிய பதிவுகளுக்கு யாழ்தேவிக்கு அதரவாக கருத்துரையிட்டவர்களில் நானும் ஆனாலும் இலங்கைப் பதிவர்களின் திரட்டி என்று சொல்லிக்கொண்டு இலங்கைப் பதிவர்களை புறக்கணிப்பதை பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிட முடியாது. நானும் ஒரு இலங்கைப் பதிவர் என்ற ரீதியில். இலங்கைப் பதிவர்கள் எனும்போது இலங்கையில் இருக்கின்ற அத்தனை பதிவர்களையும்தான்  குறிக்கும்.

எனது பதிவுகளை யாழ்தேவியில்  இணைக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. இருந்தாலும் இலங்கை தமிழ் பதிவர்களின் திரட்டி என்று சொல்லிக்கொண்டு சில இலங்கைப் பதிவர்களை புறக்கணிக்கப் படுவதனையும் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. நானும் ஒரு இலங்கைப் பதிவர் என்ற ரீதியில்.

இன்று காலை 08 .21 க்கு யாழ்தேவி நிர்வாகத்திடமிருந்து ஒரு  அழைப்பு வந்தது அந்த நிலையில் எனக்கு தொலைபேசியை பதிலளிக்க முடியாத நிலையில் இருந்தேன். அழைப்பு வரும்போது யாழ்தேவியின் தொலைபேசி அழைப்பு என்பது தெரியாது எப்போது அவர்களின் மின்னஞ்சல் முலம்தான் அறிந்தேன்.

யாழ்தேவி தொடர்பாக நான் இட்ட இடுகைகள்.

read more...

Wednesday, 19 May 2010

யாழ்தேவி இலங்கைப் பதிவர்களுக்கான திரட்டி அல்ல

இலங்கை வலைப்பதிவர்களின் பதிவுகளின் திரட்டி என்று சொல்லிக்கொண்டிருக்கின்ற யாழ்தேவி திரட்டி உண்மையாகவே இலங்கைப் பதிவர்களின் திரட்டியா? சில நடவடிக்கைகளைப் பார்க்கின்றபோது அது ஒரு சிலரின் நலனுக்காக செயற்படுகின்றது போன்று தெரிகின்றது.

இந்தத் திரட்ட்டியானது வாரம் ஒரு பதிவரை நட்சத்திரப்பதிவராக அறிமுகம் செய்து அடைத்த வாரத்தில் தினக்குரல் பத்திரிகையில் அப்பதிவர் தோழர்பாக அறிமுகம் செய்கின்றார்கள் இது வரவேற்கத்தக்க விடயமே.

இன்று இலங்கையைப் பொறுத்தவரை பல பதிவர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் பலர் எந்தத் திரட்டிகளிலுமே இணைப்பதில்லை அது வேறு விடயம். ஆனால் யாழ்தேவியில் பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே நட்சத்திரமாக தெரிவு செய்யப்படுகின்றனர்.

யாழ்தேவியில் பதிவு செய்யப்பட்ட பதிவர்கள் அனைவரும் நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட்டுவிட்டனரா? இன்னும் எத்தனையோ பதிவர்கள் நட்சத்திரமாக பதிவு செய்யப் படாமல் இருக்கின்றனர்.

அது ஒரு புறமிருக்க சில பதிவர்கள் இரண்டு, மூன்று வாரங்கள் நட்சத்திரப் பதிவராக அறிமுகம் செய்யப்படுகின்றனர். இதற்கான காரணம் என்ன? பல பதிவர்கள்  இதுவரை தெரிவு செய்யப்படாமல் இருக்கின்றபோது ஒரு சிலருக்கு மாத்திரம் ஏன் இரண்டு ,மூன்று வாரங்கள் நட்சத்திரப் பதிவராக இருக்க வேண்டும்.

நான் நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் தினக்குரலில் அறிமுகம் செய்யப்படாமைக்கான காரணம் என்ன? இன்று எனது பதிவுகளை யாழ் தேவியில் இணைக்க முடியாமல் இருக்கின்றது ஏன் இந்த பாகுபாடு?  எனது பிரட்சினைகள் இங்கே

எனக்கு மட்டுமல் சிதறல்கள் ரமேஸ்க்கும் இதே நிலைதான அவரது வலைப்பதிவையும் யாழ்தேவியில் இணைக்க முடியாதுள்ளது. அவர் சில காலம் அரசியல் சார்ந்த பதிவுகளை இட்டார்.  அதன் பின்புதான் அவரால் பதிவுகளை இணைத்துக் கொள்ள முடியவில்லை.

யாழ்தேவியில் அரசியல் சார்ந்த பதிவர்களை இணைத்துக் கொள்வதில்லையா? அப்படியானால்  எத்தனையோ அரசியல் சார்ந்த பதிவர்கள் யாழ்தேவியில் இணைக்கப்பட்டிருக்கின்றார்களே?
read more...

Sunday, 16 May 2010

இன்னும் என்ன செய்யப் போகிறாய்

உன்னிடம் இருந்த -என்
இதயத்தைத் தூக்கி
எறிந்துவிட்டாய் இன்னும்
என்னிடம் வந்து சேரவில்லை
அலைமோதி திரிகின்றது
என் இதயம்.....


என்னிடம் இருந்த
உன் இதயத்தை - நான்
தரமறுத்தபோது
தட்டிப்பறித்துவிட்டாய்......


சொர்க்கம், நரகம்
இரண்டும் இருப்பதாக
அறிந்தேன் - பின்
உணர்ந்தேன் உன்னை
காதலித்ததனால்.....


அன்று உன்னைக்
காதலித்தபோது - நாம்
சொர்க்கத்தில் வாழ்கின்றோம்
என்று நீயே சொன்னாய்
நானும் சொர்க்கத்தில்
வாழ்வதாய் உணர்ந்தேன்....


இன்று என்னை - நீ
தூக்கி எறிந்தபோது
நரகத்தின் வேதனையில்
தவிக்கின்றேன்.....


இன்று என்னிடம்
மீதமிருப்பது - உன்
நினைவுகளைத்தவிர
வேறெதுவுமில்லை....


அன்று நீ என்னோடு
பேசிய இரவுகள்
குறுகியதென்று - அந்த
இரவுகளோடு நான்
கோபப்பட்டதுண்டு...


இன்று இரவுகளோ - உன்
நினைவுகளால் என்னை
வதைக்கின்றன - என்
துன்ப துயரங்களில்
சரி பாதி நீ என்றாய்
இன்று ??????????????


இன்றைய இரவுகளில்
என் கண்ணிரைத்
துடைத்து என்னைத்
தாலாட்டும் -என்
தலையணைக்கு தெரியும்
உன்னால் நான் படும்
நரக வேதனை....


இன்று உணர்ந்து
கொள்கின்றேன் - இது
உன் தவறல்ல
நான் ஏழையாய்
பிறந்ததுதான்
தவறென்று...
read more...

Saturday, 15 May 2010

போகிற போக்கில்

வறட்சியால் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திலே கடும் வரட்சி நிலை காணப்படுகின்றது. பகல் நேரங்களில் விடுகளுக்குள்ளேயும் இருக்க முடியாத அளவில் வெயிலின் கொடுரம் இருக்கின்றது.

சிறு மழை கூட  இல்லாத நிலை காணப்படுகின்றன இதனால் அதிகமாக விவசாயிகளே பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடும் வறட்சியின் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு மேட்டுநில பயிர்கள் பயிர்கள் மட்டுமல்லாது வேளாண்மையும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

மேட்டு நிலப் பயிர்களைப் பொறுத்தவரை அதிகமான விவசாயிகளைக் கொண்ட களுதாவளை, களுஞ்வாசிகுடி, தேற்றாத்தீவு போன்ற பிரதேசங்களிலே இருக்கின்ற விவசாயக் குடும்பங்களே பாதிக்கப்பட்டிருக்கின்றன.

கடும் வறட்சியால் பயிர்களுக்குரிய நீரைப் பெருவதிலேயும் பல சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர். மழை இல்லாததாலும், கடும் வறட்சியின் காரணமாகவும் மரங்கள், புற்கள் போன்றன  அளிவடைந்திருப்பதனால் கால்நடைகளுக்குரிய உணவுகளைப் பெறுவதிலும் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

அதிகரிக்கும் வீதிவிபத்துக்கள்
 இலங்கையிலே பரவலாக வீதி அபிவிருத்திகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.   மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியும் மிக நீண்ட காலத்துக்குப் பின் துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டு இப்போது இறுதிக்க கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த வீதிகளில் இப்போது அதிகமான விபத்துக்கள் இடம்பெறுகின்றன. காரணம் வீதிகள் அகலமாகப்பட்டு சிறப்பாக செய்யப்பட்டிருப்பதனால் வாகன சாரதிகள் மிக அதிகமான வேகத்தில் வாகனங்களை ஒட்டி  செல்கின்றனர்.

அதேபோன்று தடங்கல்கள் அற்ற முறையிலே நேர்த்தியாக இருப்பதனால் வாகன சாரதிகள் போட்டி போட்டுக்கொண்டு ஓடுகின்றனர். இதனாலும் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இன்னொரு புரத்திலே பாதசாரிகளைப் பொறுத்தவரை பாதையைக் கடப்பதற்கு இரு பக்கங்களையும் பார்க்கின்றபோது வாகனங்கள் நீண்ட தூரத்தில் வருவதனால் பாதையைக் கடக்க முற்படுகின்றனர். ஆனால் அதிக வேகத்தில் வந்த வாகனம் விரைவாக வந்து வாகனத்தின் வேகத்தை சடுதியாக கட்டுப் படுத்த முடியாமல் பல விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.
read more...

Friday, 14 May 2010

காலம் மாறிப் போச்சு

ஞாபகங்களை மீட்டுப்பார்க்கும்போது ஏன் அன்று போல் இன்று எதுவும் இல்லையே என்று தோன்றுகின்றது. இந்த நவின உலகில் எல்லாமே மாறிவருகின்றது. எல்லாமே மாறி வருகின்றது என்பதற்காக நாம் எல்லாவற்றையும் இழக்கமுடியாது எமது கலை, கலாச்சார, பாராம் பரியங்களை மறக்க முடியாது.

என்னடா இவன் கலை, கலை என்றே பேசிக்கொண்டு இருக்கிறான் இன்று நினைக்கிறீங்களா. கலைகளில் அதிக நாட்டம் அத்தோடு கலைகளோடு பின்னிப்பிணைந்த கிராமிய சூழலில் வளர்ந்தவன். அதனால் கலைகளில் அதிக நாட்டம். மறைந்து வரும் கலைகள் பற்றி சிந்தித்தபோது எனது கடந்தகால நினைவுகள் என் கண்முன்னே வந்தது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாமே இன்று நினைக்கிறேன்....

அன்று கலைகளோடு மக்கள் பின்னிப்பிணைந்து வாழ்ந்தார்கள் இன்று நிலை என்ன? இவற்றுக்கு பல காரணங்கள் இருந்தாலும். நம் கலைகளை வளர்க்கவேண்டியது நம்ம கடமை அல்லவா.

எனக்கு வயது 5 இருக்கும் அன்று நடந்த அந்த பசுமையான நினைவுகளை இன்று மீட்டு பார்க்கும் பொது எத்தனையோ நினைவுகள் கண் முன்னே. என் தந்தை கலைகளிலே ஆர்வம் மிக்கவர். தமிழர்களோடு பின்னிப்பினைந்திருந்த கலைகளில் ஒன்றான கூத்து ஆடுவதிலே அதித ஈடுபாடு கொண்டவர். பல கூத்துக்களை ஆடி இருக்கிறார்.


கூத்து ஆரம்பித்தாலே கிராமப்புறங்களே விழாக்கோலம் பூண்டு இருக்கும். கூத்து பழகி சதங்கை கட்டி அரங்கேற்றம் செய்யும் வரை, இரண்டு, மூன்று மாதங்கள் செல்லும் தினமும் மாலை நேரத்தில் ஆரம்பித்து இரவு 11,12 மணிக்கே நிறைவு பெறும் கூத்து பழகுவதை பார்ப்பதற்கு கிராமத்தில் இருக்கின்ற எல்லோரும் கூத்து இடம் பெறும் இடத்துக்கு வந்து விடுவார்கள். வட்டமான ஒரு களரியிலே கூத்து இடம் பெறும் மின்சார வசதி இருந்தாலும் மின்னொளி பயன் படுத்தமாட்டார்கள் மரபினை மாற்ற விரும்பமாட்டார்கள்.

நெறியாள்கை செய்பவர், அண்ணாவியார் பக்கப்பாட்டு படிப்பவர்கள் இப்படி ஒரு பட்டாளமே களரியை சுற்றி இருப்பார்கள். கிராமத்திலே இருக்கின்ற மக்கள் அனைவரும் ஆவலோடு கூத்தினை கண்டு கழித்து கொண்டு இருப்பார்கள். எமது புராண இதிகாசங்களை பற்றிய கதைகளை மையமாக வைத்து கூத்துக்கள் ஆடப்படும். கூத்திலே வடமோடி, தென்மோடி என்று இரு வகை உள்ள போதிலும் மட்டக்களப்பை பொறுத்தவரை தென்மோடி நாட்டுக்குத்தே பிரசித்தி பெற்றது.

இப்பொழுது கூத்துக்களை காண முடியாமல் இருக்கின்றது. கடந்த எட்டு வருடங்களுக்கு முன் எனது நண்பர்கள் கூத்தினை புத்துயிர் ஊட்ட வேண்டும் என்று நினைத்து முன்று நான்கு கூத்துக்களை அரங் கேற்றினார்கள். அதிலே பல சுவாரசியமான சம்பவங்கள் இடம் பெற்றன. அவற்றையும் தர இருக்கின்றேன். இன்று அவர்களும் கை விட்டு விட்டார்கள் இன்றைய அவசர யுகத்தில் அவர்களாலும் அவற்றை முன்னெடுக்க முடியவில்லை. எது இப்படி இருந்தாலும் இரண்டு , முன்று வருடத்தில் ஒரு தடவையாவது ஒரு கூத்தினை அரங்கேற்றினால் எமது எதிர்கால சந்ததி இதுதான் கூத்து என்பதை அறிவார்கள் அல்லவா. என்றைய இளைஞர்கள் முன்வரவேண்டும்


கூத்து ஆடுபவர்களுக்கு அவர்களின் பெயர் மருவி அவர்கள் ஏற்று நடித்த கதா பாத்திரத்தின் பெயர் இன்று வழங்கப்பட்டு வருகின்றது.
கூத்து ஆடுவதாக இருந்தால் ஆட, பாட தெரிய வேண்டும், எனது நண்பர்கள் பல்ர் கூத்து ஆட ஆசை பட்டு ஆட, பாட முடியாமல் போனது. நான் ஒதுங்கி இருந்துவிட்டேன் கூத்து ஆடும் ஆசையை விட்டு. ஆட, பாட தெரியும் இருந்தும்.... சில நண்பர்கள் இந்த ஆசையால் முக்குடை பட்டதும் உண்டு. ஒரு நண்பர் எங்களுடன் கதைப்பதே எங்களுக்கு விளங்குவதில்லை அவருக்கும் ஆசை வந்துவிட்டது. அவரிடம் பல தடவை சொல்லியும் கேட்கவில்லை. சரி என்று விட்டு விட்டோம். ஊர் மக்களே திரண்டு இருக்கின்றனர். அவரோ கலரிக்கு வருகின்றார். எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக்காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
இவருக்கு வழங்கப்பட்ட பாடல் "கரடிகள் கூட்டமே கதறிக்கொண்டு ஓடுதே" அவரோ பாடினார் கதடிகள் கூத்தமே கததிக்கொண்டு ஓதுதே. எல்லோரும் சிரித்து விட்டார்கள் பல தடவை சொல்லிப்பார்த்தார்கள் அவரால் முடியவில்லை மூக்குடை பட்டதுதான் மிச்சம்.

பக்கப்பாட்டு பாடுபவர்களோ சற்று உற்சாகமாகவே இருப்பார்கள் அவர்களுக்கு ஆரம்பத்திலே உற்சாக பானம் வழங்கப்பட்டு இருக்கும் உற்சாக பானம் வழங்கினால்தான் அன்று கூத்து களை கட்டும்.

எல்லோரும் கூத்து பார்க்க வருவார்கள் எங்களை போன்ற சில நண்பர்கள் வருவது கூத்து பார்க்க அல்ல அங்கெ வருகின்ற இளம் பெண்களை பார்ப்பதற்குத்தான். இளம் பெண்கள் மட்டும் சும்மாவா. இருப்பாங்க அவங்க கண்ணாலேயே நம்ம பசங்கள கவிள்கிரவங்க இல்லையா.

இந்த நாட்கள் பல காதலர்களை சேர்த்து வைத்து இருக்கின்றது. நம்ம நண்பர்கள் பல பெண்களிடம் திட்டு வாங்கியதும் உண்டு. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நம்ம தெரு நாய்களுக்கும் நித்திரை இல்லை எல்லோரையும் வெருட்டுவதிலே பொழுது போய்விடும்.

என்னும் பல நினைவுகளை சொல்லிக்கொண்டே போகலாம். நம் கலைகள் புத்துயிர் ஊட்டப்பட வேண்டும் என்பதே உண்மை.
read more...

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைமையிலான உள்ளுராட்சி மன்றங்களில் எதுவித ஊழல்களும் இடம்பெறவில்லை- கிழக்கு மாகாண அளுனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையிலான திருகோணமலை நகரசபையில் ஊழல்கள் இடம்பெறுவதாக அறிவிப்பு.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் வழிநடத்துகின்ற உள்ளுராட்சி மன்றங்களில் எவ்வித ஊழல் மோசடிகளும் நடைபெறவில்லை. முறைகேடுகள் நடைபெற்றதாக நிருபிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த தவிசாளர் தலைமையிலான திருகோணமலை நகராட்சி மன்றத்தில் ஊழல்கள் மலிவடைந்திருப்பதாக கிடைக்கப்பெற்றிருக்கின்ற முறைப்பாடுகளை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த சபையின் தலைவருக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன என கிழக்கு மாகாண ஆளுனர் அட்மிரல் மொஹான் விஜய விக்ரம தெரிவித்துள்ளார்.


அண்மையில் ஆங்கில வார இதழான சன்டே ரைம்ஸ்சில்(கொழும்பு பதிப்பு) வெளியான வெளியான செய்தி தொடர்பான மறுப்பறிக்கையினை வெளியிடுகின்ற போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில் நடந்து மடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் முதலமைச்சர் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது தனித்து போட்டியிட்டது. அதனால் அக்கட்சியின் சில அரசியல் எதிர்ப்பாளர்கள் மாகாண சபையில் வழமையான சில நடவடிக்கைகளை ஊடகங்கள் மூலம் திரிவு படுத்துவதன் ஊடாக முதலமைச்சருக்கும் அவரது கட்சியினருக்கும் களங்கம் ஏற்படுத்த முனைந்தார்கள். இலங்கையில் உள்ள அனைத்து மாகாண சபைகள், அமைச்சுக்கள்,திணைக்களங்கள், உள்ளுராட்சி மன்றங்களில் கணக்காய்வுகள் வருட இறுதியில் மேற்கொள்வது வழமையான விடயமாகும். இதனைக்காரணம் காட்டி முதலமைச்சருக்கோ அல்லது அவரது கட்சிக்கு எதிராக திசைதிருப்ப முனைவது வேடிக்கையான விடயம் எனவும் குறிப்பிட்டார் அதே நேரம் முதலமைச்சரின் கட்சி கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டதனால் அரசிற்கும் முதலமைச்சரது கட்சிக்கும் இடையில் பாரிய பிளவு ஏற்பட்டதுபோல் மாயையை தோற்றுவிக்க ஊடகங்கள் மூலம் சிலர் எத்தணிக்கின்றார்கள் எனவும் அவர் தனது மறுப்பறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
read more...

Thursday, 13 May 2010

படுவான்கரை மக்களுக்கு விடிவு விரைவில் கிடைக்கட்டும்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலே படுவான்கரை, எழுவான்கரை என்று சொல்வார்கள்.  சூரியன் உதிக்கின்ற திசையினை எழுவான்கரை என்றும், சூரியன் மறைகின்ற பகுதியை படுவான்கரை என்றும் சொல்வார்கள். எழுவான்கரை, படுவான்கரை என்பதனை மட்டக்களப்பு வாவியை வைத்துப் பிரித்துக் கொள்வார்கள்.

படுவான்கரைப் பிரதேசம் அழகிய வயல்வெளிகளையும், சிறிய மலைகள், காடுகள் என்று பல இயற்கை அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆனாலும் அப்பிரதேசங்களிலே இருக்கின்ற மக்கள் பல பிரட்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர். பல இடங்களிலே அடிப்படை வசதிகளற்ற மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

உள் நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தினால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசமும் இதுவாகும். கடந்த காலங்களிலே இப் பிரதேசங்கள் புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் அப்பிரதேசத்தின் அத்தனை கிராமங்களுக்கும் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

பல வீதிகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன தப்போது பல வீதிகள் விஷ்த்தரிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன.   அதிகமான பகுதிகளிலே மின்சார வசதி இல்லை. காட்டுப் பிரதேசமாக இருப்பதனால். யானையின் அட்டகாசம், பாம்புகளின் தொல்லை என்று பல பிரச்சினைகளை மின்சார வசதி இன்மையால் எதிர் நோக்கி வருகின்றனர்.

மின்சார வசதி இன்மையால் தொலைக்காட்சி வசதிகளோ, வானொலி கேட்கின்ற வசதிகளோ இல்லை. பின்தங்கிய பிரதேசங்களாகையால் பத்திரிகைகள் வாசிக்கின்ற பழக்கங்களும் பல மக்களிடம் இல்லை. உலக நடப்பு விவகாரங்களையும்  இந்த மக்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர். அத்தோடு படிக்கின்ற மாணவர்களும் மின்சாரமின்றி பல சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர்.

போக்குவரத்துப் பிரச்சினையே மக்களின் மற்றுமோர் பிரச்சினையாகும். வாகன போக்குவரத்து வசதிகள் மட்டுப் படுத்தப் பட்ட அளவில் குறிப்பிட்ட சில பிரதேசங்களிலேயே  இருப்பதனால் நீண்ட தூரம்  என்றாலும்  மக்கள் நடந்து செல்லவேண்டி இருக்கின்றது.

அத்தோடு அப்பிரதேசங்களிலே சுகாதார வசதிகளோ, வைத்தியசாலைகளோ இல்லை என்பதனால் வாகன போக்குவரத்து வசதி இல்லாததனால் பல மரணங்களை எதிர் கொள்ளவேண்டி இருக்கின்றனர். இலகுவாக காப்பாற்றப் படக் கூடிய நோயாளர்கள் நீண்ட  தூர வைத்திய சாலைகளுக்கு  மாட்டு வண்டிகளில் கொண்டு சென்று மரணம் சம்பவித்த பல நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றன.

இவ்வாறு பல்வேறுபட்ட இன்னல்களை படுவான்கரை மக்கள் எதிர் நோக்கி வருகின்றனர்.

இன்று பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அப்பிரதேசங்களிலே கிழக்கு மாகாண சபை மூலம் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இருந்தாலும் அப்பிரதேசத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்களையும், அம்மக்களின் நலனில் அக்கறையினையும் துரிதப் படுத்தவேண்டிய பொறுப்பு கிழக்கு மாகாண முதலமைச்சரையும், அப்பிரதேச மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையுமே சாரும். 
read more...

Wednesday, 12 May 2010

கையேந்தும் நாளைய தலைவர்கள்

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்று சொல்கின்றோம். இன்று பல சிறுவர்களின் நிலை கேள்விக்கிடமாகி உள்ளது. ஒரு நேர சாப்பாட்டுக்கு மற்றவர்களிடம் பிச்சை கேட்டு கையேந்தும் சிறுவர்கள். உணவுக்காக, தன் குடும்பத்தை காப்பாற்ற குடும்ப சுமையோடு படிக்கவேண்டிய வயதிலும் தொழில் செய்யும் சிறுவர்கள் பலர்.

இந்த நிலை இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளிலேதான் அதிகம். இதற்கு முக்கிய காரணம்   நாட்டில் இடம்பெற்ற யுத்தமேயாகும். சிறுவர் உரிமைகள், உரிமைகள் என்று பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இச் சிறுவர்கள் பற்றி சிந்திப்போர் மிக, மிகக் குறைவு என்றுதான் சொல்லவேண்டும்.

இன்று வீதிகளிலே நாம் எத்தனை பிச்சை எடுக்கின்ற சிறுவர்களைப் பார்த்திருக்கின்றோம். அவர்களின் எதிர்காலம்தான் என்ன. அவர்களுக்கும் அபிலாசைகள் இருக்கின்றன. இந்த சிறுவர்களை வைத்து உழைக்கின்றவர்களும் அதிகம்பேர் இருக்கின்றனர். இந்த சிறுவர்களை பிச்சை எடுக்க அனுப்புவது கிடைக்கும் பணத்தை தான் வாங்கி எடுத்துவிட்டு ஒரு நேர சாப்பாட்டுக்கு போதுமான அளவுக்கேனும் பணம் கொடுக்காமல் சிறுவர்களை வைத்து உழைக்கின்றவர்களும் இருக்கின்றனர்.

தாய், தந்தை, சொந்தங்கள், உடமைகளை இழந்து அநாதரவற்று வீதிகளிலும், மரநிழல்களிலும் வாழுகின்ற பல சிறுவர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி, அவர்களின் எதிர் காலத்தைப் பற்றி யாராவது சிந்தித்து இருக்கின்றோமா?

இது ஒரு புறமிருக்க சிறுவர்களை வைத்து வேலை வாங்குகின்றவர்களும் பலர் இருக்கத்தான்   செய்கின்றனர்கள். சிறுவர்களை வேலை வாங்கக் கூடாது என்பது தெரிந்திருந்தும் பலர் சிறுவர்களை வேலைக்கு வைத்திருந்து அதிகமாக வேலை வாங்குவதோடு மட்டுமல்லாமல். வேலைகளை செய்ய மறுக்கின்ற சிறுவர்களை சித்திரவதை செய்கின்ற பலரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இன்னொரு புரத்திலே படிக்க ஆசை, கெட்டித்தனம் இருந்தும் படிக்க முடியாமல் எத்தனையோ சிறுவர்கள் தமது கல்வியை இடை நடுவில் விட்டிருக்கின்றனர். 

தாய், தந்தையரை இழந்த பல சிறுவர்கள் சிறுவர் இல்லங்களிலே இருக்கின்றனர் அவர்கள் தொடர்பிலே நாம் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற பெண் பிள்ளைகளின் எதிர் காலத்தைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். 

மொத்தத்தில் எமது சிறுவர்களில் நாம் ஒவ்வொருவரும் அக்கறை கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம்.  
read more...

மட்டக்களப்பு ,திருகோணமலை மாவட்டங்களில் கைத்தொழில் வலயங்கள்.

வட கிழக்கு மாகாணங்களில் நான்கு விசேட கைத்தொழில் வலயங்கள் அமைக்கவுள்ளதாக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் உதவி செயலாளர் எஸ்.கே.ஜயசிங்க தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் வட மாகாணத்தில் மன்னார்இயாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் இக்கைத்தொழில் வலயங்கள் அமைக்கப்படவுள்ளன. திருகோணமலை மாவட்ட கைத்தொழில் வலயம் 35 ஏக்கர் நிலப்பரப்பில் தம்பலகமப் பிரதேசத்தில் அமைக்கப்படுகிறது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி பிரதேசத்தில் கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

நன்றிகள் மீன்மகள்
read more...

பதிவுலக அரசியல்

பதிவுலகம் எனக்கு பல நல்ல நண்பர்களைத் தேடித்தந்திருக்கின்றது. ஏதோ நானும் எழுதுகிறேன் என் எழுத்துக்களையும் மற்றவர்கள் பார்க்கின்றார்களே. நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்களே என்பதை நினைக்கும்போது சந்தோசமடைகின்றேன்.

மறுபுறத்திலே சில விடயங்களைப் பார்க்கின்றபோது என் இந்தப் பதிவுலகத்துக்கு வந்தேன் என்று எண்ணத் தோன்றுகின்றது.

என் பதிவுகளைப் பொறுத்தவரை தவறுகள் நடக்கின்றபோது சுட்டிக் காட்டுகின்றேன். உண்மைகளை சொல்லவேண்டும் என்பதே எனது நோக்கம்.  என் கருத்துக்களுடன் நீங்கள் உடன்படவில்லையா அதனை சுட்டிக் காட்டுங்கள் சரியானதாக இருந்தால் ஏற்றுக் கொள்கிறேன்.

அதனைவிடுத்து அனானியாக வந்து மிரட்டுகின்றபோது நான்பயப்படப் போபவன் அல்ல.  அதிலும் சில பதிவர்களே அனானியாகவந்து தகாத வார்த்தைகளால் கருத்துரையிடுவது கவலைக்குரிய விடயமே. எனக்கு இரண்டு பதிவர்கள் அனானியாக கருத்துரையிட்டு வருகின்றனர்.

அண்மையில் என்னைப் பற்றிய தனிப்பட்ட ஒரு தகவலை ஒரு பதிவரோடு அரட்டையில் பகிர்ந்து கொண்டேன். என்னைப் பற்றிய அந்த விடயம் வேறு எவருக்குமே தெரியாது. நான் அந்த விடயத்தை அரட்டையில் தெரிவித்து சில நிமிடங்களிலே அந்த விடயம் தொடர்பாக மோசமான முறையிலே அனானியாக கருத்துரை இடப்பட்டிருந்தது. இது ஒரு பதிவருக்கு அழகல்ல.

ஒவ்வொருவரது கருத்துக்களும் வேறுபடலாம். உங்கள் மாற்றுக் கருத்துக்களை முன்வையுங்கள் அதனைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். மாற்றுக் கருத்துக்கள் வருகின்றபோதுதான் உண்மைகள் தெரியவரும்.

எனது வலைப் பதிவிலே புலிகளுக்கு சார்பாக நான் ஒருபோதும் எழுதியதில்லை. ஆனால் தமிழ் மக்கள் படுகின்ற அவலங்களை அதிகமாகவே எழுதி இருக்கின்றேன். அன்று தமிழர்கள் படுகின்ற அவலங்களை பதிவிட்டபோது. புலிகளின் அடிவருடி என்றும் புலிகளின் எச்ச சொச்சம் என்றும் சொன்னிர்கள்.

ஒருவர் மீது உங்களுக்கு தனிப் பட்ட  கோபங்கள் இருந்தாலும் அவர் செய்கின்ற சேவைகளை நாம் மறைக்கக் கூடாது. உண்மைகளை வெளியிடவேண்டும் என்பதே எனது எண்ணம்.

என்னைப் பொறுத்தவரை கிழக்கு மாகாண சபை மூலம் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் நடை பெறுகின்றன அவற்றை பதிவிட்டிருக்கிறேன். உண்மைகளை உண்மைகளாக சொல்லுங்கள். அதைவிடுத்து தமிழின துரோகி பட்டம் வழங்கவேண்டாம்.

தமிழர்களின் அவலங்களை எழுதுகின்றபோது புலிகளின் அடிவருடி. உண்மைகளை எழுதுகின்றபோது தமிழினத் துரோகியா? இன்று தமிழன் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் இதுதான்.

யார்தான் என்னதான் சொன்னாலும் தமிழர்களின் அவலங்களை பதிவிடுவேன். உண்மைகளைப் பதிவிடுவேன். எந்த மிரட்டல்களுக்கும் அஞ்சப் போவதில்லை. ஒவ்வொருவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. அதற்காக அனானியாக வரவேண்டாம்.

யாழ்தேவியின் கவனத்துக்கு.....
இலங்கை வலைப் பதிவர்களின் திரட்டியாக இருக்கின்ற யாழ்தேவி வாரம்தோறும் ஒருவரை நட்சத்திரப் பதிவராக அறிவித்து அந்தப் பதிவர் பற்றிய விபரங்களை தினக்குரல் பத்திரிகையிலம் பிரசுரித்து வருகின்றது இது பாராட்டப்படவேண்டிய விடயம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் என்னையும் நட்சத்திரப் பதிவராக அறிமுகம் செய்திருந்தனர். அந்தக் காலப்பகுதி நான் பதிவெழுதாமல் இருந்த காலப்பகுதி. நட்சத்திரப் பதிவராக அறிமுகம் செய்யப்பட்ட அன்று தங்க முகுந்தன் அவர்கள் எனக்கு தொலைபேசியில் தெரிவித்தார் நீங்கள்தான்  இன்றுமுதல் யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவர் என்று அன்றுதான் எனது மின்னஞ்சலைப் பார்த்தேன் ஓரிரு நாட்களுக்கு முன்னர் நான் நட்சத்திரப் பதிவராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன் என்று மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது.

அத்தோடு தினக்குரலில் பிரசுரிப்பதற்கு என்னைப் பற்றிய விபரங்களையும் புகைப்படம் ஒன்றையும் அனுப்பும்படியும் கேட்கப்பட்டிருந்தது. நான் எனது சொந்த இடத்தில் இல்லாத காரணத்தால் ஒரு, சில நாட்கள் தாமதித்தே அனுப்பினேன் ஆனால் பல மாதங்களாகியும் இன்னும் தினக்குரலில் பிரசுரிக்கவில்லை.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பதிவர் அறிமுகம் செய்யப்படுகின்றனர். என்னை பற்றிய விடயங்களை பிரசுரிக்காததட்கான காரணம் என்ன?

ஒருவர் நட்சத்திரப் பதிவராக தெரிவு செய்யப்பட்டால் அந்தப் பதிவருக்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அறிவிப்பது நல்லது அவர் நட்சத்திரப் பதிவராக இருந்து நல்ல பதிவுகளைத் தர தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ளமுடியும்.

எல்லாப் பதிவர்களும் எப்பொழுதும் இணையத்தோடு இருக்கப் போவதில்லை அவர்களுக்கு முன்னர் அறிவிப்பதே சிறந்தது.

எனக்கு நடந்த நிலை வேறு எந்தப் பதிவர்களுக்கும் நடக்காமல் பார்த்துக் கொள்வது நல்லதே.
read more...

Monday, 10 May 2010

என்ன செய்யலாம்

எனது வலைப் பதிவிலே சில சிக்கல்கள் தென்படுகின்றன. வலைப் பதிவை மாற்றி அமைக்க முடியவில்லை. கேஜெட்டைச் சேர்க்கவும் முடியவில்லை. கேஜெட்டை  இடம் மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. எந்த ஒரு மாற்றமும் செய்ய முடியவில்லை.

வேறு பல temlete களையும் மாற்றிப் பார்த்தேன். வலைப் பதிவில் மாற்றம் செய்ய முடியவில்லை.

கேஜெட்டைச் சேர்ப்பதற்கு சென்றால் சேர்க்க முடியவில்லை கீழே  இருக்கின்ற தகவல் வருகிறது.

இதனை நிவர்த்தி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று தொழிநுட்பப் பதிவர்கள்தான் சொல்லவேண்டும்.
read more...

Sunday, 9 May 2010

மனதைத் தொட்டவை

என் மனதைத் தொட்ட சில கவிதைகள்...

என் இதயம் கல் என்று
எல்லோரும் சொல்கிறார்கள்.
ஆனால்!
அவர்களுக்கு எனன தெரியும்?
என் இதயத்தில்
சிற்பமாகஇருப்பவள் நீ என்று.....!

***************************************

அழ வைப்பது
அவள் என்று தெரிந்தும்
அடம்பிடிக்கிறது
என் கண்கள்...
அவளைத்தான்
காணவேண்டும் என்று....

***************************************

இறைவனின் உற்பத்திக்
கலவையில் ஏற்பட்ட
பிழை ........... மனிதன்

***************************************
ஒரு மலரின்
மேல் ஆசைப்பட்டதால்
பல மலர்கள் வந்தன
என்னைத் தேடி
என் கல்லறைக்கு

நன்றிகள் - காயத்திரி
read more...

Saturday, 8 May 2010

மட்டக்களப்பில் பாடசாலை மாணவிகள் கடத்தப் பட்டதாக சொல்லப்படுவதன் உண்மை என்ன?

கடந்த 5    திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலே பல மாணவிகள் கடத்தப் பட்டதாக செய்தி பரவி இருந்தது இதனால் பல பாடசாலைகள் இடை நடுவில் மூடப்பட்டதும் பெற்றோரால் மாணவர்கள் அலைத்துஸ் செல்லப்பட்டதும் ஒருபுறமிருக்க. நிமிடத்துக்கொரு கதை, செய்தி என்று வதந்திகள் பரப்பப் பட்டுக் கொண்டிருந்தன. இதனால் மக்கள் குழப்பமடைந்திருந்தனர்.

இதன் உண்மை நிலை அறியாமல் சில ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டமையும்.சில அரசியல்வாதிகள் இதனை அரசியல் துருப்பு சீட்டாகப் பயன்படுத்த நினைத்ததையும் பார்க்கும்போது சிரிக்கத் தோன்றுகின்றது.

கடத்தப்  பட்டு தப்பி வந்து போலிஷ் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டதாக சொல்லப்படும் மாணவி சொன்னதாக சொல்லப்படுகின்ற கருத்துக்களை பார்த்தால் நேரடியாகவே உண்மை விளங்கும்.

காலை 7 .30 மணியளவில் பாடசாலைக்கு செல்லும்போது கடத்தப்பட்டதாக அந்த பிள்ளை சொல்கிறது. இந்த நேரம் வீதியில் சன நடமாட்டம் அதிகமான நேரம். கடத்தப்பட சாத்தியங்கள் குறைவே.

தன்னுடன் 6 ,7 மாணவர்கள்  கடத்தப்பட்ட வாகனத்திலே இருந்ததாக அந்த மாணவி சொல்கின்றார். ஆனால் இதுவரை எந்த மாணவர்களும் கடத்தப் பட்டதாக எங்கேயும் பதிவாகவில்லை. தன்னுடன் கடத்தப் பட்டதாக சொல்லப்படுகின்ற மாணவர்கள் யார்? இது முற்று முழுதான பொய் அல்லவா?

கடத்தியவர்கள் வாகனத்தை விட்டுவிட்டு சாப்பிடப் போகும்போது தான் தப்பி ஓடியதாக சொல்லி இருக்கின்றார் இது சாத்தியமா? கடத்தியவர்கள் இவாறு தனியே விட்டுவிட்டு சாப்பிட செல்வார்களா?

இது போன்ற நம்ப முடியாத முன்னுக்குப் பின் முரணான பல கதைகள் கடத்தப் பட்டு தப்பியதாக சொல்லப்படுகின்ற மாணவியால் சொல்லப்படுகின்றன.  உண்மை  இதுவல்ல என்பது புலனாகின்றதல்லவா? பிள்ளையின் வேறு ஒரு தனிப்பட்ட சம்பவத்தை மூடி மறைப்பதற்காக சொல்லப்பட்ட கட்டுக்கதைகளே இவைகள் என்பது புலனாகின்றது.

உண்மை நிலையை அறியாது எழுதுகின்ற, சொல்லுகின்ற ஊடகங்கள் உண்மைகளை அறிந்து செயற்படுவது நல்லது.

இதன் உண்மை நிலை அறியாது அரசியலாக்க நினைக்கின்ற அரசியல்வாதிகளும் திருந்தப் பார்க்கணும்.

read more...

Friday, 7 May 2010

ஊதுகுழலாக செயற்படும் சில தமிழ் ஊடகங்கள்

இன்று இலங்கையிலே இருக்கின்ற பல தமிழ் ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான பக்க சார்பான  விடயங்களை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலை அச்சு, இலத்திரனியல் இரு ஊடகங்களிலும் இருக்கின்றது. ஒரு ஊடக நிறுவனமோ,  ஊடகவியலாளனோ  நடுநிலையாக செயற்பட வேண்டும். ஆனால் இன்று பக்க சார்பின்றி எத்தனை ஊடக நிறுவனகள், ஊடகவியலாளர்கள் செயற்படுகின்றார்கள்?

ஒரு அரசியல் கட்சியை அல்லது ஒரு தலைவரை சார்ந்து செயட்படுகின்ற பலர் இருக்கின்றனர். இது ஊடக தர்மமல்ல. ஒரு கட்சியை அல்லது ஒரு தலைமைத்துவத்தை சார்ந்து செயற்பட வேண்டும் என்பதற்காக உண்மைகளை மறைத்து உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுகின்ற அல்லது உண்மைகளை வெளியிடத் தயங்குகின்ற பல ஊடகங்கள் இருக்கின்றன.

சின்ன, சின்ன விடயங்களுக்கெல்லாம் பக்கம், பக்கமாக எழுதுகின்ற, பல தடவை ஒளி, ஒலிபரப்பு செய்கின்ற சில ஊடக நிறுவனங்கள் சில முக்கிய விடயங்களை வெளியிடுவதிலே தயக்கம் காட்டுகின்றன. ஏன் இந்த நிலை?

சில தமிழ் ஊடகங்கள் பக்கம் சார்ந்து செயத்படுகின்றன என்பதனை எவராலும்  மறுக்க முடியாது. இன்று நடைபெறுகின்ற விடயங்களை ஆராய்ந்து பார்க்கின்றபோது இது புலனாகின்றது.

இன்று கிழக்கு மாகாண சபை மூலம் பல்வேறு பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மேட்கொள்ளப்பட்டு  வருகின்றது. மக்களுக்கான அத்தியாவசிய சேவைகள், உதவிகள் என்று நாள்தோறும் பல்வேறுபட்ட சேவைகள் மக்கள் நலனுக்காக செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இவைகளைப் பற்றி பேசாத பல ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான நடைபெறாத  விடயங்களையும். பொய் பிரசாரங்களையும் மேட்கொள்வது ஏன்? மாகாண சபை மூலமாக, அல்லது முதலமைச்சரால்   மக்களின் நன்மை கருதி ஒரு வைத்திய முகாம் செய்தால் கூட அதனை மக்களுக்கு தெரியப்படுத்துவதட்கு கூட சில ஊடக நிறுவனங்கள் தயங்குவது ஏன்?

இன்று கிழக்கு மாகாணத்திலே பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மேட் கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த அபிவிருத்தித் திட்டங்களைக் கூட பொய்யான தகவல்களாக வெளியிடுகின்ற பல ஊடகங்கள் இருக்கின்றன, பல இணையத் தளங்கள் இருக்கின்றன.

அந்த ஊடக நிறுவனங்களிடமும், இணையத்தள உரிமையாளர்களிடமும் கேட்கின்றேன் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி அடைவது பிடிக்கவில்லையா? இன்று தமிழர்களுக்கு கிடைத்திருக்கின்ற ஒரேயொரு உரிமை கிழக்கு மாகாண சபை மட்டுமே. கிழக்கு மாகாண சபை மூலமாக எத்தனை அபிவிருத்தி திட்டங்கள் செய்யப்படுகின்றன என்பதனை நேரில் வந்து பார்த்துவிட்டு பேசுங்கள். உண்மைகளை மறைக்காதீர்கள்.

பல காலமாக அபிவிருத்தி இன்றி இருக்கின்ற எமது பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்ற நோக்கோடு செயட்பட்டுக்கொண்டிருக்கின்றார் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன். ஆனால் ஊடகங்கள் என்ன சொல்கின்றன உண்மைக்கு புறம்பான பொய்களை  எழுதிக் கொண்டிருக்கின்றன.

இன்று சில விடயங்களுக்கு அரசாங்கத்தோடு சேர்ந்துதான் போகவேண்டி இருக்கின்றது. அப்போதுதான் கிழக்கு மாகாணசபை மூலமாக எமது அபிலாசைகளை வென்றெடுக்க முடியும்.

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்பதற்காக ஊடகங்கள் எதனையும் எழுதிவிட முடியாது. தமிழீழம், தமிழீழம் என்று வீர வசனம் பேசிக்கொண்டிருந்த தமிழரசுக் கட்சியே இன்று அரசாங்கத்தோடு சேர்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.

அன்று தொட்டு இன்றுவரை எத்தனை வட பகுதி தமிழர்கள் ஆளும் கட்சியோடு இருந்திருக்கின்றார்கள். அப்போது அவர்களை தமிழின துரோகி என்று யாராவது சொன்னார்களா? அல்லது இன்று அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடாத்தவும் தயாராக இருக்கின்ற தமிழரசுக் கட்சியினருக்கு தமிழினத் துரோகி பட்டம் யாராவது வழங்கினார்களா?

உண்மைகளை உண்மையாக வெளிப்படுத்தவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஊடகவியலாளனுக்கும் உண்டு. அதனைவிடுத்து ஒரு கட்சி சார்ந்தோ, ஒரு தலைவர் சார்ந்தோ செயற்படுவதை தவிர்ப்பது நல்ல விடயமே.

நான் இதனை எழுதியதனால் நீங்கள் தமிழின துரோகி பட்டம் வழங்குவீர்கள். பிரதேச வாதம் பேசுகின்றான் என்பீர்கள். உண்மைகளை எழுத வேண்டும் உண்மைகளை எழுத நான் ஒருபோதும் தயங்கியவன் அல்ல.
read more...

Thursday, 6 May 2010

மக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கம் - சந்திரகாந்தன்

கடந்த 01.05.2010 மேதினமன்று மட்டக்களப்பு பேருந்து தரிப்பிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரை .

தமிழர் பிரதிநிதித்துவத்தின் இருப்பை தக்க வைக்கவே நாம் தேர்தலில் தனித்த போட்டியிட்டோம்.கிழக்கு மாகண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்.

இம் மாநகரத்தில் பேருந்து நிலைய கல் நாட்டும் விழாவிற்கு தலைமை தாங்கி நடாத்துகின்ற மட்டக்களப்பு மாவட்ட மேயர் சிவகீத்தா பிரபாகரன் அவர்களுக்கும், இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைத்து மதப் பெரியார்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களான கௌரவத்திற்குரிய துரைரெட்ணம், கிருஸ்னாணந்தராஜா, பூ.பிரசாந்தன், மாசிலாமணி ஐயா அவர்களுக்கும், மாநகர சபை அரசியல் உறுப்பினர்களுக்கும், அரசாங்க அதிபருக்கும், பிரதேச செயலாளருக்கும், பாதுகாப்புப் பிரிவினருக்கும், ஊடகவியலாளர்களுக்கும், ஏனைய பிரமுகர்களுக்கும், கட்டட ஒப்பந்த காரர்க்கும் அனைவருக்கும் வணக்கம்.

இந்த அடிக்கல் நாட்டப்பட்டிருக்கும் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இது பாட்டாளி புரம் என்பதனாலும், இன்று பாட்டாளி தினம் என்பதனாலும் இந்த முக்கியத்தவம் வாய்ந்த நாளில் பஸ் பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கின்ற மகிழ்ச்சியான செய்தியோடு இந்த மட்டக்களப்பு மாநகரிலே பல்வேறு தரப்பட்ட அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் இவ்வேளையிலே, இன்று மட்டக்களப்பிலே பேருந்து நிலையம் மிக அழகாக, ஏனைய மாகாணத்திலிருக்கும் பஸ் பேருந்து நிலையத்தை ஒத்த பேருந்து தரிப்பிடம் ஒன்றை இங்கு எதிர்வரும் பத்தாம் மாதம் திறந்து வைக்கப்படும் என்ற நம்பிக்கை. அந்த காட்சியை நாமும் கண்டு கழிப்போம் என்ற சந்தோசமான நாளிலே இங்கு அமர்ந்திருக்கும் மட்டக்களப்பு வாழ் பெருமக்கள் ஒருவிடயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாங்கள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றால் அக்குழந்தையை அழகுபடுத்த வேண்டும், படிப்பிக்க வேண்டும் என்றெல்லாம் இருப்போம். அதே போன்றுதான் இந்த மட்டக்களப்பு மாவட்டம் மீன் மகள், வாவி மகள் என்று பேர் வாங்கிய இம் மாவட்டம் ஒரு அழகான மாவட்டமாக வரவேண்டும் எனறு பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றது. உண்மையிலே இது ஒரு அழகான மாநகரம். ஏதிர்காலத்தில் இதன் எழிச்சியோடு இதன் அடையாளங்களை காப்பாற்றிக்கொண்டு அழகு பெற வேண்டும் என்ற பெரு முயற்சி எனக்கு மாத்திரம் அல்ல அனைவருக்கும் இருக்கின்றது அதன் வெளிப்பாட்டு தன்மை மிகக் குறைவாக இருக்கின்றது என்பது அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

அந்த அடிப்படையில் கடந்த காலங்களில் முடிந்த அனைத்து பணிகளையும் செய்வதற்கு முன்வரவேண்டும். இந்த பேருந்து நிலையம் என்பது முன்னரும் அடிக்கல் நாட்டி கட்டப்பட்டிருந்தது. நான் நினைக்கின்றேன் 1979ம் ஆண்டு ராஜம் செல்வநாயகம் இருந்த காலப்பகுதியிலே இப்பொழுது அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற அமைச்சரான தயா என்கின்ற அவர்களால் அடிக்கல் நாட்டி கட்டப்பட்டதாக கதை கூறுகின்றது. இருந்தும் அந்த நேரத்திலே இருந்த பணவசதிக்கும், அந்த நேரத்தில் இருந்த தொழில் வசதிக்கும் ஏற்றவாறு அமைத்திருக்கின்றார்கள். அவர்கள் அந்த நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டம் அழகு பெற வேண்டும் என்ற முயற்சிக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும். தற்போது இருக்கின்ற நவீன உலகத்தில் எங்களது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதில் இந்த திட்டம் மிக நீண்ட காலமாக இந்த மட்டக்களப்பை நலன் விரும்பிகள் ஊடாகவும், மக்கள் ஊடாகவும் இதைச் செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்தது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதிகளிலே நாங்கள் நிச்சயமாக செய்து கொடுக்க வேண்டும் என்று முயற்சி எடுத்த பொழுது இதனை மாகாண கட்டிட பொறியியலாளர் வேல்மாணிக்கம் மூலம் இதனை படமாக்கி இருந்தோம்.

படங்களை வரைந்த பின் அதற்குரிய பணத்தினை பெற்றுக் கொள்ள மிக சிரமமாக இருந்தது. மாகாண சபையிலும், மாநகர சபையிலும் பணம் இல்லாத காரணத்தினால் இங்கு இயங்கிக் கொண்டிருந்த வடக்கு கிழக்கு கரையோர அபிவிரத்தி திட்டத்திற்குள் உள்வாங்கிய பொழுது இத்திட்டம் முடிவடையும் காலப்பகுதியில் இருப்பதால் இதனை எடுக்க முடியாது என்று கூறியிருந்தார்கள். இருந்தாலும் இது ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதி என்பதனால் இதனை ஜனாதிபதியின் சகோதரரான பசில் ராஜபக்ஸவிடம் கூறியிருந்தபோது இதை உடனடியாக செய்து தருவேன் என கூறினார்.

இத்திட்டம் முடிந்தாலும் விசேட நிதியின் மூலம் இதனை செய்து தருவதாக கூறிவிட்டு, 10 நிமிடம் கழித்து எனக்கு போன் பண்னி P.னு குறூஸ் அவர்களை பேசச் சொல்லி இருந்தார். நான் குறூஸ் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் மன்னார் மாவட்டத்திலே இருப்பதாக கூறியிருந்தார். நான் அவரிடம் கூறியிருந்தேன், பசில் ராஜபக்ஸ உடனடியாக பேச சொல்லியிருக்கிறார். கட்டிடம் சம்மந்தமாக பேச இருக்கிறார். மட்டக்களப்பு மாநகரம் சம்மந்தமாக 08 கோடி ரூபாய் கட்டடம் சம்மந்தமாக பேசுவார் அதை செய்துகொடுக்க அனுமதியை பெற்றுக்கொள்ளுங்கள் என கேட்டிருந்தேன் அவர் பேசியதன் அடிப்படையில் அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

நாம் பசில் ராஜபக்ஸவிற்கு நன்றி கூற வேண்டும் இங்கு பிறக்காமல் இருந்தாலும் மட்டக்களப்பு மாநகரம் அழகாக வரவேண்டும் இங்கும் மீனினங்கள் மிக அழகான தங்கநகைகளிட்டு அழகான சேலைகளோடும் இருக்கவேண்டும் என்ற ஒரு அர்ப்பணிப்போடு செயற்படுகின்ற பணிப்பாளர் குரூஸ் அவர்களுக்கும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் சாமித்தம்பி ஐயா அவர்களுக்கும் மிக நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன் எனினும் இந்ததிட்டம் அமுலாகி இருக்கின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் இது முழுமை பெற்று அனைவரும் எதிர்பார்த்த கட்டிடமாக பத்தாம் மாதம் திறப்பதற்கு வழிவகை செய்யவேண்டிய பொறுப்பு எமது ஒப்பந்தகாரரான மட்டக்களப்பு அழகுபெற நினைக்கின்ற ஒப்பந்தகாரரான ஆஞ்சநேயர் ஐயாவே காரணம் என நினைக்கின்றேன் நாங்கள் பலதரப்பட்ட அபிவிருத்தி முயற்சி எடுத்திருந்தாலும் எமது மக்கள் எதிர்பார்த்த அளவு அபிவிருத்திப்பணிகள் நடக்கவில்லை என்பதை உரைக்க முடிகின்றது மாநகரசபை உறுப்பினர்கள் மிக அக்கறை எடுக்கவேண்டும் நான் இரவு கொழும்பிலிருந்து வந்தபோது ஓட்டமாவடி பாலம் தாண்ட எல்லாப்பகுதிகளிலும் மின்விளக்கு எரிந்துகொண்டிருந்தது.

மட்டக்களப்பிற்குள் வந்ததும் அரசடி கோவில் தாண்டியதும் எந்தவித மின்குமிழ்களும் இல்லை. இந்தபாதையில் மாத்திரம் ஐந்தாறு மின்குமிழ்கள் இருந்தது இதையெல்லாம் நடைமுறைப்படுத்த உள்நாட்டு உதவியோ வெளிநாட்டு உதவியோ அல்லது மாகாணசபை உதவியோ தேவையில்லை இங்கிருக்கின்ற மாநகரசபையே இங்கிருந்து எடுக்கின்ற வரிப்பணத்தில் செய்யமுடியும.; இதற்கு வேறு பணம் தேவையில்லை. இங்கிருக்கின்ற மாநகரசபையை இயக்குபவரும் வர்த்தகர்களும் இப்பகுதியை வெளிச்சமுள்ள பகுதியாக ஆக்கலாம். இந்த சிறிய விடயத்தை கூட செய்யமுடியாமல் இருப்பதை விட்டு மனவருத்தம் அடைகிறோம். இங்கு வேலை செய்கின்றவர்கள் ஆகக்குறைந்தது ஒருமாத சம்பளத்தை கொடுத்தாவது ஒரு பத்து மில்லியன் ரூபாவில் இந்த மட்டக்களப்பு மாநகரத்தை மின்குமிழ் ப+ட்டி அழகபடுத்தலாம் என நினைக்கின்றேன.; இருந்தாலும் தேர்தல் காலத்தில் எனது சம்பளத்தை எமது பிரதிமேயர் ஜோர்ஜ்பிள்ளை அவர்களிடம் கொடுத்திருந்தேன் அவர் அந்த பணத்தில்தான் இப்பாதையில மின்விளக்கு எரிந்ததாக கூறியிருந்தார் நான் இதை குற்றம் கூறுவதாக கூறவில்லை.

அனைவரும் அபிவிருத்தி, அபிவிருத்தி என்ற கூறுவோம் செய்யக்கூடிய விடயத்தை நாம் செய்வதில்லை எங்கிருந்தோ வரும் பிரச்சினைகளையும் யாரையாவது பிரச்சினைக்கு இழுப்பதையும் விட்டுவிட்டு நடைமுறை சாத்தியமான எங்களது பகுதியை துப்பரவாக அழகாக வைத்து கொள்ளக்கூடிய எங்களால் முடிந்த முயற்சிகளில் இறங்கவேண்டும். இங்கு வந்திருக்கின்றவர்கள் புத்திஜீவிகளும் மாவட்டத்தை வடிவமைக்கக்கூடியவர்களும் எதிர்காலத்தில் அபிவிருத்தி சார்ந்த , அரசியல் ரீதியான வழிகளில் இட்டுசெல்லக்கூடியவர்களும் என்ற வகையில் பேசுகின்றேன். இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு சந்தோசப்படுகின்றேன். இங்கு எடுத்துக்கொண்டால் இதுவும் பாட்டாளிபுரம் என்று கூறுவார்கள்.

இந்த பாட்டாளிபுரம் என்பது பாட்டாளி வர்க்கத்தினர் கடந்தகாலங்களில் இந்த பேரூந்து நிலையம் அமைப்பதற்கு முன்னர்கூட பாட்டாளி வர்க்கத்தினர் உழைத்து கழைத்து இந்தப்பகுதியில்தான் வந்து மது அருந்துவதாக, நிகழ்ச்சிகள் நடத்துவதாக கூறுவார்கள் இந்த பாட்டாளி தினம் என்பது அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட தினமாக இருந்தாலும் அதற்கு உலகளவில் விடுமுறை கொடுக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றது. தொழிலாளர்கள் 18 மணித்தியாலமாக வேலை வாங்கப்படுவதாகவும், அதனை 8 மணித்தியாலமாக குறைத்து போராட்டம் நடத்தப்பட்டு அதில் உயிர்நீத்தவர்களுக்காக அர்ப்பணிப்புடன் மடிந்தவர்கள் வெற்றியீட்டியதன் காரணமாக கொண்டாடப்படுகின்றது.

இது அப்போது அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றம் இப்போது இங்கே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை கொண்டாடாவிட்டாலும் பத்திரிகை அல்லது இந்த சந்தர்ப்பத்தில் பேச வாய்ப்பு கிடைத்திருக்கின்றது

எமது பகுதியில் இருக்கும் தொழிலாளர் பிரச்சினைகள் வருமானம் குறைந்தவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் இந்த தொழிலாளர் தினத்தை மறக்கமுடியாத நாளாக நான் பார்க்கிறேன் எனது தனிப்பட்ட வாழ்விலே 1993ம் ஆண்டு தொழிலாளர் தினத்தன்று என்னால் மறக்கமுடியாது நான் முதல் தடவையாக விடுதலை போராட்டத்தில் இருந்தபொழுது யாழ்ப்பாணதத்pற்கு சென்றிருந்தேன் 1993ம் ஆண்டு இத்தினத்திலே புலிகள் அமைப்பின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திக்க வாய்ப்புக் கிடைத்திருந்தது. ஆகையால் அந்த நாளை மறக்கமுடியாது. அந்தநாளில் முக்கிய தளபதியாக இருந்து இன்று இங்கு முரண்பட்ட அரசியலும் செய்துகொண்டிருக்கும் முரளிதரன் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றிருந்தது. அதுமட்டுமல்ல அன்றுதான் எமது முன்னாள் ஜனாதிபதியாக இருந்த பிறேமதாஸ அவர்களும் கரும்புலிகளால் வெடித்து கொல்லப்பட்ட தினம் என்ற அடிப்படையிலே எங்களது தனிப்பட்ட வாழ்வில் மறக்கமுடியாத நாளாக பார்க்கின்றேன் அந்தவகையில் இந்தகட்டடமும் என்னால் கல் நட்டப்பட்டு நினைவில் அழியாத நாளாக பார்க்கின்றேன்.

எங்கோ இருந்து பிரச்சினைகளுக்கு எடுக்கப்பட்ட முடிவுகள் யாருக்காகவோ எங்கோ எடுக்கப்பட்ட முடிவுக்கு கொண்டாட்டம் நடாத்துவதும் எங்களது பிரச்சினைகளை முடிப்பதற்கு முடிவுகளை எடுக்காத சமூகமாக இருப்பதை எங்களால் அவதானிக்கமுடிகின்றது. குறிப்பாக நாங்கள் கடந்த தேர்தலிலே கொண்டாட்ட நாளாக கொள்ளலாம் என்ற அடிப்படையில் மாகாணத்தை வலுப்படுத்தவும் ஆளுமைப்படுத்த மாகாணசபைக்கு ஆணை தாருங்கள் என்று பொதுமக்களிடம் ஆணை கேட்டு நின்றோம் நீங்கள் மாறாக எங்களுக்கு வாக்களிக்காமல் வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்து மீண்டும் எமது மக்களை பிழையான வழிக்கு இட்டுச்செல்லக்கூடிய வாய்ப்பினை நீங்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றீர்கள்.

அதற்கான விளைவையும் வாக்களித்த மக்கள் அனுபவிக்க போகின்றீர்கள் காரணம் என்னவென்றால் மத்தியில் அமைந்திருக்கின்ற அரசாங்கம் மிகப்பலமான அரசாங்கமாக அமைந்திருக்கின்றது ஏனென்றால் தமிழர்கள் தமிழ்த்தேசியம் பேசினார்கள் சிங்களவர்ககள் சிங்கள தேசியம் பேசினார்கள் இதன்காரணமாக சிங்களவர்கள் அனைவரும் அவர்களுக்கு வாக்களித்து இருக்கின்றார்கள் முக்கியமான விடயங்களை அவர்கள் அமுல்படுத்தபோகின்றார்கள். ஒரு உதாரணத்தை உங்களுக்கு நான் சுட்டி காட்டவேண்டும்.

கடந்தமுறை உள்ள+ராட்சி மறுசீரமைப்பு சட்டமூலம் கிழக்குமாகாணசபைக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது இந்த வட்டார முறையை கொண்டுவருவதற்கும் சிறுபான்மை மக்கள் சிறிதாக பிரிந்து வாழ்கின்ற பகுதிகளில் வட்டாரமாக பிரிந்து சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு கொண்டுவரப்பட்ட சட்டமூலமாகும். இதை கிழக்குமாகாணசபை திருப்பி அனுப்பியிருந்தது மீண்டும் அந்த சட்டமூலத்தை அமுலாக்கி தாருங்கள் என்று என்னிடம் கேட்டிருந்தார்கள் கடந்த ஒன்பதாம் திகதிக்கு முன்னர் இருந்த முதலமைச்சர் வேறு இப்பொழுது இருக்கின்ற முதலமைச்சர் வேறு என்பதை நான் மட்டக்களப்பான் என்ற வகையில் நான் கூறியே ஆகவேண்டும்.

அன்று நான் திருப்பி அனுப்பிய மகஜரை இன்று அமுலாக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன். இதன் காரணமாக வட்டாரமுறை கொண்டுவரப்பபடும் பின்னர் தேர்தல் மாற்றங்கள் கொண்டுவரப்படும் அதன் பின்னர் இன்னும் கணிசமான மாற்றங்கள் கொண்டுவரப்படும். இதை எதிர்ப்பதற்கு எமது மக்கள் எம்மை வலு இல்லாதவர்களாக தள்ளி அனுப்பியிருக்கின்றார்கள் இது வேதனைக்குரிய விடயம் இங்கு வாக்களித்து 14 பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிவைத்திருக்கின்றார்கள் இவர்கள் கூறிய வடக்கு கிழக்கு இணைக்கமுடியுமா? இணைத்து தருவார்களா? இதைத்தான் இவர்கள் 50 வருடகாலமாக பெற்றுத்தந்திருக்கின்றார்கள்.

என்னத்தை கிழித்திருக்கின்றார்கள்? எதையுமே அவர்கள் செய்யவில்லை. இதில் நீங்கள் மீண்டும் மீண்டும் பிழைகளை விட்டுவிட்டு எமது சமூகத்தின் தலைவிதிகளை கையில் இருக்கின்ற விடயங்களைக் கூட இழக்கின்ற சமூகமாக ஆகப்போகின்ற எமது மக்கள்தான் இதற்கு பொறுப்புக்களையும் எடுத்துக்கொள்ளவேண்டும். கடந்தகாலத்தில் நீங்கள் அளித்த வாக்குகளுக்காக பணி செய்யவேண்டிய மாகாணத்தை பாதுகாத்து கொடுக்கவேண்டிய பொறுப்பு மாத்திரம் எனக்களித்திருக்கின்றது.

அதற்காக நான் பணி செய்வேன் ஏனென்றால் காலம் காலமாக இந்த விடுதலைப்போராட்டம் வளரவேண்டும் தனித்தமிழீழம் எங்களுக்கு தேவையென்று சொல்லிவிட்டு 1976ம் ஆண்டு அமிர்தலிங்கம் அவர்கள் இரத்தத்தை கீறி பொட்டுவைத்து பிரகடனத்தை செய்துவிட்டு 1977ம் ஆண்டு எதிர்க்கட்சியில் அமர்ந்து சபாநாயகருக்கு முன்னால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாங்கள் வாழ்வோம் என சத்தியப்பிரமாணம் எடுத்தவர்கள் இன்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வுகளை பேசுவோம் என்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வோம் என்றால் எமது மாகாணம் வலுப்பெற வேண்டும் எமது சமூகம் வளம்பெற வேண்டும் என்றுதான் ஒரு அரசியல்வாதி சிந்திக்கவேண்டும்

அன்று மாற்றுக்கருத்ததுக்களை வேறு வீராப்பு கதைகளையும் பேசிக்கொண்டு இன்னமும் செல்லமுடியாது எனினும் அவர்களை பேசிக்குற்றமில்லை இன்னமம் கடந்தகால வரலாறுகள் தெரியாமல் அவர்கள் மீண்டும் தேர்தலில் வாக்கெடுக்கவும் அவர்களின் ஆசனங்களை வைத்துக்கொண்டிருப்பதற்காகவும் அவர்கள் அரசியலுக்கு வந்தவர்கள் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும் மாறாக நாங்கள் அப்படியல்ல அடுத்தமுறை ஆட்சிக்கு வரவேண்டும் உழைத்துவிட்டு நாங்கள் கொழும்பில் வீடு வாங்கவேண்டும் என்ற கட்சியுமில்லை.


உயிர்கொடுக்கவேண்டும் என்ற மாற்று அரசியலுக்காகவும் கிழக்குமாகாணத்தில் ஒரு ஜனநாயத்தை கொண்டுவரவேண்டும் என்பதற்காக நாங்கள் அரசியலுக்கு வந்தவர்கள் என்பது அந்த உண்மையை விளங்கிகொள்ளவில்லை என்ற கவலை எங்களுக்குள் புதைந்திருக்கின்றது கடந்தகால தேர்தலில் ஏன் நீங்கள் அரசாங்கத்தோடு சேரவில்லை என்று கேட்டிருந்தார்கள் நாங்கள் அரசாங்கத்தோடு வெற்றிலை சின்னத்தில் கேட்டிருந்தால் இந்த முதலமைச்சர் ஆசனத்தை பெற்றுக்கொண்டோம் இல்லையென்று கூறவில்லை இந்த தேர்தலில் வெற்றிலையில் கேட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை சிந்திக்கவேண்டும் மொத்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கும் மகிழ்ச்சியான விடயம் கொழும்பை பொறுத்தவரைக்கும்.

இந்த கிழக்குமாகாணசபை உருவாக்கப்பட்டு கட்டியெழுப்பட்ட சமூக நல்லுறவு சமூக இணக்கப்பாடெல்லாம் குலைந்திருக்கும் என்ற உண்மையை நீங்கள’; விளங்கிகொள்ளவேண்டும். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் கேட்டிருந்தால் மட்டக்களப்பில் ஒருகாலமும் நடக்காத நிகழ்வு நடந்திருக்கும் எங்களது வாக்கை வைத்து வந்திருக்கும் ஹிஸ்புல்லா அங்க அமீர் அலி ஏறாவூரில் அலிஸாகிர் மௌலானா வந்திருப்பார்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் பசீர் சேகுதாவூத் வந்திருப்பார் ஒருகாலத்திலும் நடக்காத நிகழ்வு நடந்து நான்கு முஸ்லிம் எம்பிக்கள் வந்திருப்பார்கள் எங்களுக்கும் எந்தவிதமான பிரச்சினையுமில்லை சமூகம் அடிபட்டிருக்கும் காரணம் என்ன நூறுவீத மக்களில் இருபத்தைந்துவீத முஸ்லிம்களும் எழுபத்தைந்துவீத தமிழர்களும் வாழ்கின்றார்கள்.

காலத்தால் நடக்காத தவறை இங்கு வந்திருக்கும் முதலமைச்சரோ தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளோ விடக்கூடாது என்பதற்காக நாங்கள் தனித்துவமாக நின்றோம் முஸ்லிம் வேறு அரசியல் வேற என்று கூறவில்லை இனத்துவேசம் பேசவில்லை உரிமையென்னும்போது ஒரு சமூக உரிமையை பாதுகாக்கும் விடயம் ஒரு அரசியல்வாதிக்குள்ளது. சமூகம் சார்ந்த அரசியல் செய்யும் ஒரு கட்சிக்கு இருக்கின்ற அடிப்படையில் அரசியல் செய்தோம் என்ற உண்மையை விளங்கிக்கொள்ளவேண்டும் கடந்தகாலத்தில் மட்டக்களப்பு மக்கள் பெரும்பிழை விட்டார்கள் யாழ்மக்கள் ஆளும் கட்சியில் மூன்றுபேரை அனுப்பியிருக்கின்றார்கள். பாராளுமன்றம் சென்று கூச்சலிடவும் ஆட்கள் அனுப்பியிருக்கின்றார்கள்.

கூச்சலிடுபவர்கள் கூச்சலிட்டுக்கொண்டு இருப்பார்கள் இங்க வந்திருக்கின்ற யோகேஸ்வரன் ஐயா என்ன செய்யப்போகின்றார் இங்கு வந்திருக்கின்ற அரியநேத்திரன் என்ன செய்யப்போகின்றார் கடந்தமுறை பாராளுமன்றம் வந்திருந்தார் இந்தமுறையும் வந்திருக்கின்றார் அவர் சாகும்வரை அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கும் என நினைக்கின்றேன் ஆகையால் இங்கு சுயநிர்ணய உரிமையையோ வடக்கு கிழக்க இணைப்பையோ செய்து தரமுடியாது அரசாங்கம் அவர்களை கூப்பிட்டுபேச எந்தவிதமான அருகதையும் இல்லாதவர்கள் என்பதையும் நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.

கடந்தகாலங்களைப்போல் இன்னமும் சிங்கள பேரினவாதம் என்று பேசிப்பேசி இருக்கின்றவர்கள் பின்னால் இழுபட்டால் நாங்கள் இருக்கின்றோமா இல்லையோ என்று தெரியாது இருக்கின்றதையும் இழந்த சமூகமாக இருக்கின்றதையும் இல்லாமல் தொலைத்த சமூகமாக மீண்டும் மாவட்ட அட்சிமுறையை கொண்டு திணித்த சமூகமாக மாறுவீர்கள் என்ற உண்மையை சொல்லி எதிர்காலத்தில் நடந்த தவறுகளை மறந்து உண்மையான அரசியல் தெளிவுள்ள சமூகமாக மாறவேண்டும் அரசியல் ரீதியாக நீங்கள் சிந்திக்கவேண்டும் மாறாக எங்கிருந்தோ எழுகின்ற வடபகுதியை மாத்திரம் தலைமைத்துவங்களை வைத்துக்கொள்கின்ற பத்திரிகைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பின்னால் இழுபட்டு நீங்கள் அழியக்கூடாது. உங்களது பிரச்சினை உங்களது சமூகப்பிரச்சனை உங்களுக்கும் பிரச்சினை என்ற ஆழமான அரசியல்பார்வை உள்ள அரசியல் சமூகமாக மாறவேண்டும் என்று வண்மையாக கேட்டுக்கொண்டு இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்த அனைவருக்கும் நன்றிகூறி முடிக்கின்றேன் நன்றி வணக்கம் .
read more...

Tuesday, 27 April 2010

இருந்த இடத்திலிருந்து இலகுவாக அதிகம் சம்பாதிக்க சில வழிகள்.

இன்று பலரும் எப்படி இலகுவாக அதிகம் உழைக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்காகவே இலகுவாக இருந்த இடத்திலேயே இருந்து அதிகம் சம்பாதிக்கக் கூடிய சில வழிகளைத் தருகின்றேன். இது ஒரு நகைச்சுவைப் பதிவுபோல் இருந்தாலும் எல்லோரும் சிந்திக்க வேண்டிய பதிவு.

இதோ வழிகள்...

1. ஆசாமியாக மாறலாம்.....

இதன் மூலம் பல்வேறு வழிகள் மூலம் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம். எப்படி என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை இப்போ எல்லோருக்கும் தெரியும்தானே. பணம் சம்பாதிப்பது ஒருபுறமிருக்க ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் என்னை அனுபவி ராஜாண்ணு அனுப்பி வைத்தான் என்று நிறையவே அனுபவிக்கலாம்

2. வட்டிக்குக் கொடுக்கலாம்....

இன்று வட்டிக்குக் கொடுத்து உழைப்பது இருந்த இடத்திலிருந்த அதிகம் உழைக்கும் ஒரு தொழிலாகிவிட்டது. 100 க்கு 10 வீதம் மாதம் அறவிடுபவர்கள் ஒருபுறமிருக்க. வங்கிகள் வியாபார நிலையங்களுக்கு பக்கத்தில் இருக்கம் சிலர் அவசர பணத் தேவைகளுக்காக வட்டிக்குக் கொடுக்கின்றனர்.

ஒரு மணித்தியாலயத்துக்குள் அவர்களுக்கு பணத்தைக் கொடுக்க வேண்டும். வட்டியாக ஒரு இலட்சத்தக்கு இரண்டாயிரம் கொடுக்க வேண்டும்.

இது ஒரு புறமிருக்க சிலரோ ஏழைகளின் அவசரத் தேவைக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு அவர்களின் வீடு காணி போன்ற சொத்தக்களை அபகரிக்கின்றனர்.


3. அரசியல்வாதியாகலாம்......

இது அதிகம் சம்பாதிக்கின்ற ஒரு வழியாகும். பல வழிகளிலும் உழைக்க முடியும். ஒரு நிரந்தர கொள்கை இன்றி நமது சுகபோக வாழ்க்கைக்கு ஏற்றாற்போல் கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொள்ளலாம். ஏழைகளுக்கு வருகின்ற உதவிகளைக்கூட நாம் சுருட்டிக் கொள்ளலாம்.

அரசியல்வாதியாகி எப்படி உழைக்கலாம் என்று ஒரு தொடர் பதிவே எழுதலாம். வேண்டுமானால் பின்னர் பட்டியலிடுகிறேன்.

மக்களுக்காகவே சேவை செய்து வாழ்கின்ற அரசியல்வாதிகளும் இல்லாமல் இல்லை.

4. உயரதிகாரியாகலாம்....

இதன் மூலம் நாம் கடமையாற்றும் நிறுவனத்திலே இருக்கின்ற வேலை வாய்ப்புக்களை பணக்கார வர்க்கத்தினருக்கு பெருந்தொகை பணத்தை வாங்கிவிட்ட வேலைவாய்ப்புக்களை வழங்கலாம். கஸ்ரப்பட்டு படித்து நல்ல முறையிலே தகுதியோடு இருப்பவர்களைப் பற்றி எமக்கு கவலையில்லை பணமே எமக்கு முக்கியம்.

அதனைவிட நமக்கு கீழே வேலை செய்கின்ற பெண்களை நமது தேவைகளுக்கும் பயன் படுத்திக் கொள்ளலாம். (எல்லா அதிகாரிகளும் அப்படியல்ல)

5. வியாபாரியாகலாம்....

நிறைய வழிகளில் உழைக்க முடியும். பட்டியலிடாமல் ஒரு உதாரணத்தை மட்டும் செல்கிறேன்.

ஒரு மரக்கறி வியாபாரியால் செய்யப் படும் கொடுமை இது. எனது கிராமம் ஒரு விவசாயக் கிராமம். ஒரு கிலோ வெண்டிக்காய்க்கு வியாபாரியால் விவசாயிக்கு 15 ரூபா வழங்கப் படுகிறது. ஆனால் அந்த வியாபாரி சந்தையில் ஒரு கிலோ 50 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றார்.

இரவு பகல் கஸ்ரப் பட்ட விவசாயிக்கு 15 ரூபா ஓரிரு மணித்தியாலத்துக்குள் வியாபாரிக்கு 35 ரூபா விவசாயிக்கு வரும் 15 ரூபாவில் உரம் நிரிறைத்தல் ஏனைய செலவுகள் போனால் 5 ரூபா கூட மிஞ்சப் போவதில்லை.

6. மந்திரவாதியாகலாம்.....

மந்திர மாய ஜாலங்கள் மூலம் நிறையவே சம்பாதிக்கலாம். சூனியம் மூலம் அதிகம் உழைத்தக் கொண்டிருக்கின்றனர். ஒருத்தருக்கு நான் சூனியம் செய்ய வேண்டும் என்றால் ஒரு மந்திர வாதியை பிடித்து செய்யலாம். மந்திரவாதியோ என்னிடம் ஒரு தொகைப் பணத்தை வாங்குவார்.

நான் கூனியம் செய்தவர் சூனியம் பலிக்க ஆரம்பித்ததும் உடனே அந்த மந்திரவாதியைத்தான் நாடுவார் சூனியம் எடுப்பதற்கு. மந்திரவாதி அவரிடம் ஒரு தொகைப் பணத்தை வாங்கிவிட்டு சூனியத்தை எடுத்து வீடுவார். மீண்டும் நான் சூனியம் செய்ய மந்திரவாதியிடம் செல்வேன் இப்படி ஒரு சக்கரமாக தொடரும்.


7. பிச்சைக்காரனாகலாம்...

இதன் மூலம் பல பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்துவதோடு உண்மையான பிச்சைக்காரர்களின் பிழைப்பையும் கெடுக்க முடியும.

இன்னும் பல வழிகளைச்சொல்லிக் கொண்டே போகலாம்...


இவை அனைத்தும் உண்மையாகவே நடக்கும் விடயங்கள்.... நாம் சிந்திக்கவேண்டிய விடயங்கள்.
read more...

Saturday, 24 April 2010

யாருக்காகக் காத்திருக்கிறேன்?...


காத்திருப்பின்
அருமை
இன்றுதான்
தெரிகிறது
உன்னோடு
வரும் - உன்
தோழி வரவில்லையே.....

உன்னோடு - இன்று
நான் பேசிய
ஒரு சில
நிமிடங்கள்- பல
வருடங்கள்
பேசியதுபோல்
வாழ்க்கையே
வெறுத்துவிட்டது - என்
அருகில் - உன்
தோழி இல்லை
என்பதனால்....

இனிமேலாவது -நீ
வரவில்லை
என்றாலும் - உன்
தோழியை
அனுப்பிவிடு
அவளுக்காக
காத்திருக்கிறேன்.....

*************************************

நேற்று - நீ
சொன்னாய் - என்
இதயம்
பிடித்திருக்கிறது
என்று - இன்றுதான்
புரிந்து கொண்டேன்
நேற்றைய
என் கவிதையின்
தலைப்பு
இதயம் என்று....
read more...

Friday, 23 April 2010

கருணா அம்மான் பிரதி அமைச்சராகிவிட்டார்.....

பிரதி அமைச்சர்கள் விபரம்

Salinda Dissanayake ==  PlantationIndustries Deputy Minister

Dilan Perera  ==  Public Administration and Home Affairs Deputy Minister

Susantha Puchinilame  ==Fisheries and Aquatic Resources Deputy Minister

Lakshman Yapa Abeywardena == Economic Development Deputy Minister

Chandrasiri Gajadeera ==  Finance and Planning Deputy Minister

Jagath Pushpakumara == Agriculture Deputy Minister

T.B. Ekanayaka  ==  Education Deputy Minister


Mahinda Amaraweera ==  Health Deputy Minister


Rohitha Abeygunawardena  == Ports and Aviation Deputy Minister


S.M. Chandrasena == Irrigation and Water Resources Management Deputy Minister


Gunaratne Weerakoon ==   National Heritage and Cultural Affairs Deputy Minister

Mervyn Silva == Mass Media and Information Deputy Minister

Pandu Bandaranaike == Indigenous Medicine Deputy Minister

Jayaratne Herath == Industry and Commerce Deputy Minister


Dayashritha Tissera ==  Ports and Aviation Deputy Minister

Duminda Dissanayaka ==  Posts and Telecommunication Deputy Minister


Ranjith Siyambalapititya == Economic Development Deputy Minister


Lasantha Alagiyawanna  == Construction, Engineering Services, Housing and Common Amenities Deputy Minister


Rohana Dissanayake == Transport Deputy Minister


H.R. Mithrapala ==  Livestock Development Deputy Minister


Nirmala Kotelawala == Highways Deputy Minister


Premalal Jayasekara ==  Power and Energy Deputy Minister


Geethanjana Gunawardena ==  External Affairs Deputy Minister


Vinayagamoorthy Muralitharan ==  Resettlement Deputy Minister


Indika Bandaranaike ==  Local Government and Provincial Councils Deputy Minister


Muthu Sivalingam ==  Economic Development Deputy Minister


Siripala Gamlath ==  Lands and Land Development Deputy Minister


W.B. Ekanayake  == Disaster Management Deputy Minister


Chandrasiri Suriyarachchi ==  Social Services Deputy Minister


Neomal Perera ==  Co-operative and Internal Trade Deputy Minister


Sarath Gunawardena  == State Resources and Enterprise Development Deputy Minister


Nandimithra Ekanayake ==  Higher Education Deputy Minister


Nirupama Rajapaksa ==  Water Supply and Drainage Deputy Minister


Lalith Dissanayaka == Technology and Research Deputy Minister


Sarana Gunawardena ==  Petroleum Industries Deputy Minister


Reginold Cooray  == Justice Deputy Minister


Vijithamuni Zoysa ==  Rehabilitation and Prison Reforms Deputy Minister
  M.L.A.M. Hisbullah ==  Child Development and Women’s Affairs Deputy Minister


Weerakumara Dissanayaka == Traditional Industries and Small Enterprise Development Deputy Minister
read more...

இலங்கையின் பதிய அமைச்சர்கள் விபரம்

இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தலை தொடந்து 37 அமைச்சரவை அமைச்சர்களும் 39 பிரதி அமைச்சரவை அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷ ==>> பாதுகாப்பு,நிதி,துறைமுக மற்றும் நெடுஞ்சாலைதுறை

மைத்திரிபால சிறிசேன ==>>> சுகாதார அமைச்சர்

ஜி.எல்.பீரிஸ் ==>> வெளிவிவகாரத்துறை அமைச்சர்

சுசில் பிரேம் ஜெயந்த ==>> பெற்றோல் மற்றும் கனியவளத்துறை அமைச்சர்

தினேஷ் குணவர்த்தன ==>>  நீர்பாசன மற்றும் வடிகால்துறை அமைச்சர்

ரிஷாத் பதியுதீன் ==>> தொழில் அபிவிருத்தி அமைச்சர்

ஏ.எல்.எம்.அதாவுல்லா ==>> உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சர்

சம்பிக்க ரணவக்க ==>> மின்சாரத்துறை அமைச்சர்

விமல் வீரவன்ஸ ==>> வீடமைப்புதிட்ட மற்றும் மக்கள் நலன்புரி அமைச்சு

சுமேத ஜெயசிங்க ==>> பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்

குமார வெல்ஹம ==>>  போக்குவரத்துத்துறை அமைச்சர்

மஹிந்தயாப்பா அபயவர்த்தன ==>> விவசாயத்துறை அமைச்சர்.

சி.பி.ரத்னாயக்க ==>> விளையாட்டுத்துறை அமைச்சர்.

ஜனக்க பண்டார தென்னக்கோன் ==>> நில மற்றும் நில அபிவிருத்தித்துறை அமைச்சர்

பீலிக்ஸ் பெரேரா ==>> சமூகவேவை மற்றும் சமூகநலத்துறை அமைச்சர்.

பஷில் ராஜபக்‌ஷ ==>> பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்.

பந்துல குணவர்த்தன ==>> கல்வி அமைச்சர்
ரட்ணசிறி விக்ரமநாயக்க ==>> அரச முகாமைத்துவ மற்றும் சீர்திருத்தல் அமைச்சு.
நிமல் சிறிபாலடி சில்வா ==>> நீர்பாசன மற்றும் வடிகால்துறை அமைச்சு.

ஏ.எச்.எம்.பௌசி ==>> அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்.

டளஸ் அழக பெரும ==>> இளைஞர் விவகார மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர்

டி.எம்.ஜெயரட்ன ==>> பௌத்த மற்றும் சமய விவகாரத்துறை அமைச்சர்

டி.இ.டபள்யூ.குணசேகர ==>> புணருதாரண மற்றும் சிறைச்சாலை அமைச்சர்

ரஜித சேனரத்ன ==>> மீன்பிடிவளத்துறை அமைச்சர்

அதவுத செனவிரத்ன ==>> நீதி அமைச்சர்

பியசேன ஹமஹே ==>> தேசிய வைத்திய அமைச்சர்

எஸ்.பி.நாவீன ==>> தேசிய மொழி அமைச்சர்

ஜோன்ஸ்டன் பெர்னாந்து ==>> கூட்டுறவு அமைச்சர்

காமினி லொக்குகே ==>> தொழிலாளர் உறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்

மில்ரோய் பெர்னாந்து ==>> மீள்குடியமர்வு அமைச்சர்

ஜீவன் குமாரதுங்க ==>> தபால் மற்றும் தொலைத்தொர்பு அமைச்சர்

பவித்ரா வன்னியாரச்சி ==>> தேசிய விழாக்கள் மற்றும் காலாச்சார அமைச்சர்

அநுரபிரிய தர்ஷன யாப்பா ==>> சுற்றுப்புரச்சூழல் அமைச்சர்

திஸ்ஸ ஹரலியத்த ==>> சமூக அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சர்

பி.தயாரத்ன ==>> வர்த்தக அபிவிருத்தி அமைச்சர்

டக்ளஸ் தேவானந்தா ==>>பாரம்பரிய தொழில்சார் மற்றும் சிறி உட்கட்டமைப்பு அமைச்சர்

டபள்யூ.டி.ஜே.செனவிரத்ன ==>>மக்கள் மற்றும் உறைவிட விவகார அமைச்சர்

மஹிந்த சமரசிங்க ==>> பயிர்ச்செய்கை அமைச்சர்
read more...

கண்களால் கைது செய்யப் பட்டேன்

ஏன் இந்தக்
கவிஞர்கள் எல்லாம்
பெண்களின் கண்களை
பற்றி பாடுகிறார் என்று
யோசித்த நாட்கள் பல
இன்று நானே - உன்
கண்களை பற்றி
கவிதை எழுதுகிறேன் - உன்
கண்களினால்தான் - நான்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

பெண்களின் கண்களில்
இத்தனை சக்தி
இருப்பதை இன்றுதான்
உணர்கிறேன்
உன்னை காதலிப்பதால்

இந்த உலகத்தில்கூட
ஒரு பெண்ணின்
கடைக்கண் பார்வை
பட்டு இருக்கிறது
போலும் இவ்வளவு
வேகமாக சுற்றுகின்றதே...

நான் நினைக்கிறேன்
இரவுகள் கூட
இருளாக இருப்பது - நீ
தூங்கி விடுவதால்
உன் பார்வை
படாததனால்தானோஎன்னவோ...

எனக்கு ஒருஆசை
இருக்கிறதுஉன்னை
பாலை வனத்துக்கு
அழைத்து செல்லவேண்டும்
பாலைவனம்கூட
பசுமையாகிவிடுமல்லவா...
read more...

Thursday, 22 April 2010

விதவையின் கண்ணீரில்

இன்று பெண் தலைமை தாங்கும் குடும்பம் அதிகமாக இருக்கின்றது. அதிலும் கிழக்கு மாகானத்திலேதான் பெண் தலைமை  தாங்கும் குடும்பம் அதிகமாக இருக்கின்றது. இதற்குக் முக்கிய காரணம் நாட்டில் நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தமேதான்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கணவனை இழந்த, விதவைகள் அதிகம் காணப்படும் ஒரு பிரதேசமாகும். யுத்தத்தின் மூலம் உயிரிழந்தவர்கள், காணாமல் போனோர், கடத்தப்பட்டோர், இனம் தெரியாதோரால் சுடப்பட்டவர் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

இந்த விதவைகளைப் பொறுத்தவரை. பல்வேறுபட்ட கஷ்டங்களை எதிர் நோக்கி  வருகின்றனர். அதிகமாக விதவைகளைப் பொறுத்தவரை பணக்கார வர்க்கத்தை செர்ந்தவர்களைவிட மிகவும் வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களே அதிகம்.

இவர்களேதான் தனது குடும்பத்தை தலைமை தாங்கி வழி நடத்துவதோடு. உழைத்து தனது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் சொல்லொண்ணா துயரங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

அதிகமான விதவைகளுக்கு நிரந்தர வருமானம் என்பது இல்லை. கூலித் தொழில் செய்து வந்தாலும் குடும்ப செலவை கவனிப்பதா தனது பிள்ளைகளைப் படிப்பிப்பதா என்ற பிரச்சினை இருக்கின்றது.

நன்றாக படிக்கின்ற பல பிள்ளைகள் படிக்க வசதியின்றி படிப்பை இடை நடுவில் கைவிட்டிருக்கின்றார்கள். ஆனாலும் சிலர் இரவு பகல் உழைத்து பல நாள் பட்டினி இருந்து தமது பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டு வருகின்றனர். இது எல்லா தாயாலும் முடியாத  காரியமே.

கஸ்ரப் பட்டு தனது பிள்ளைகளை படிப்பித்து நல்ல ஒரு நிலைக்கு கொண்டு வந்தால் வேளை வாய்ப்பு இல்லை வேளை பெறுவதென்றால். படிப்புக்கோ, பட்டத்துக்கோ முன்னுரிமை இல்லை. பணமுள்ளவனுக்கும், பணத்துக்குமே முன்னுரிமை கொடுக்கப் படுகின்றது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

இவர்கல் வாழ்க்கையில் விடிவு கிடைக்க வேண்டும். இவர்கள் சந்தோசப் படுகின்ற  நாட்கள் மிக மிகக் குறை வென்றுதான் சொல்ல வேண்டும். இவர்களுக்காக அரசாங்கம் பல திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் ஒவ்வொரு பொறுப்புள்ள அதிகாரியும் இவர்கள் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்.

நானும் பத்து வயது முதல் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் பல்வேறு கஸ்ரங்களுக்கு மத்தியில் வாழ்ந்தவன் என்பதனால் ஒவ்வொரு தாயின் வேதனையையுன் அறிந்தவன்.
read more...

Wednesday, 21 April 2010

பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி சில ஆலோசனைகள்.

ஆண்களுக்குத்தான் அதிகமாக ஆலோசனைகள் வழங்குகிறேன் ஆனால் பெண்களுக்கும் நல்ல ஆலோசனை தரவேண்டும் என்று பல பெண்கள் வேண்டிக்கொண்டனர். சில நன்பிகளோ என்னோடு பேசுவதே இல்லை அவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

இன்று சில (பல) பெண்கள் ( பெண்கள் என்னை திட்டவேண்டாம் எல்லோரும் இல்லை என்று சொல்ல்கிறேன்). ஆண்களை ஏதோ ஒரு வகையில் தன் பின்னால் அலைய வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சில அப்பாவி ஆண்கள் நாய் போல் அலைந்து. கடைசியில் எல்லாம் இழந்து, எல்லாம் புரிந்து..... என்னவோ எல்லாம் நடக்குது...

சில பெண்கள் தங்கள் நண்பிகளிடம் கேட்டுக்கொள்வார்கள் "அடப்பாவி எப்படிடி இப்படி உன்னாலமட்டும் இப்படி ஆண்களை உன் பின்னால அலைய வைக்க முடியும் என்று" அது பெரிய வேலை இல்லை தங்களால் முடியவில்லையே என்று கவலைப்படுபவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

பெண்கள் ஆண்களை தன் பின்னால் அலைய வைப்பது எப்படி

01 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.

02. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள்.

03 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை... அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.

04 . நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள்.

05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.

06 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது ஹாய் மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள்.

07 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல் பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள் காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக பழகுவது போன்றே பழகுங்கள்.

08. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.

09. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள விடவேண்டாம்.

10 . இதுதான் முக்கியமானது.... எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
read more...