Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

Tuesday, 8 September 2009

இன்று கொண்டாட்டம்தான்






நண்பர் பிரபா (விழியும் செவியும் வலைப்பதிவுக்கு சொந்தக்காரரான நம்ம பிரபாதான்) இன்று தனது ................. வது பிறந்த நாளை வெகு விமர்சையாகக் கொண்டாடுகின்ற்றார்


அவரை .............. பல பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்.
இவர் எனக்கு நல்ல ஒரு நண்பர். நேற்று அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இன்று விருந்துபசாரம் இருப்பதாகவும். தனது பிறந்தநாளுக்காக உலகளாவிய ரீதியிலும் (எழுத்தறிவு தினம்), மற்றும் நாட்டிலும் (கிரிக்கெட்) பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் சொன்னார்.
விருந்துக்கு போவதற்கு நான் தயார் நீங்களும் வந்திடுங்க.
இவரைப்பற்றி

ஒரு அறிவிப்பாளர் மட்டுமன்றி சிறந்த தொழினுட்ப உதவியாளரும் கூட. எமது வானொலியின் தொழினுட்ப செயற்பாடுகளில் இவரின் பங்கு அளப்பெரியது.

வலைப்பதிவுகளை வாசிப்பதோடு இருந்த என்னை வலைப்பதிவினை ஆரம்பிக்கத்தூண்டியவர். சூது வாது, பொறாமை என்று சொல்வார்களே அது இவரிடம் நெருங்கவே முடியாது. எல்லோருக்கும் உதவும் உள்ளம் படைத்தவர்

பிரபாதான் என்னை வலை உலகத்துக்குள் நுழைவதற்கு ஊக்கப்படுத்தியவர் என்பதனால் அவருக்கு நான் ஊக்கப்படுத்தல் விருதினை அவரது பிறந்த தினத்திலே வழங்குவதில் மகிழ்வடைகின்றேன்.

இவ்விருதினை எனக்கு நண்பர்களான யோ வாய்ஸ் , குறை ஒன்றுமில்லை, மேனகா சத்தியா, வீட்டுப்புறா சக்தி ஆகியோர் வழங்கி இருந்தனர் அவர்களுக்கு எனது நன்றிகள்.


நான்கு விருதுகளையும் என்னை ஊக்கப்படுத்தும் நாற்பது பேருக்கு வழங்க வேண்டுமே.

LOSHAN - லோஷன்


வந்தியத்தேவன்

புல்லட்டின் *டுமீல்*


SShathiesh


கடலேறி

ஐந்தறைப்பெட்டி

யாழினி

ஆ.ஞானசேகரன்

பிரியமுடன் வசந்த்

ஜமால்

தமிழரசி - எழுத்தோசை

ஹேமா - வானம் வெளித்த பின்னும்

பிரிவையும் நேசிக்கும் காயத்ரி

கானா பிரபா

வால்பையன்

சிந்து

சுசி

ஜெகநாதன்

ilangan

சுப.நற்குணன்

நிலாமதி

சப்ராஸ் அபூ பக்கர்

ஸ்டார்ஜன்


பிரியங்கா

Vidhoosh/விதூஷ்

மிக முக்கிய பின் குறிப்பு : இந்த விருது உங்களை யார் அதிகமாக ஊக்கப்படுத்துகிறார்களோ அதிகமாக பார்வையிடுபவர்கள்,உங்களுக்கு பிடித்த மற்றவர்களின் சமையல் குறிப்புகள் இப்படி பல காரணங்கள் இருக்கு.அதுதான் இந்த அவார்ட்டின் அர்த்தம்

சுசி எனக்கு நட்புக்கு விருது தந்திருக்கிறார் அவருக்கும் நன்றிகள்.


இவர்களோடு எனக்கு விருது தந்த நண்பர்களுக்கும் வழங்குகின்றேன்.

யோ வாய்ஸ்
குறை ஒன்றுமில்லை
மேனகா சத்தியா
வீட்டுப்புறா சக்தி

இவர்களுக்கு நான் நட்புக்கு விருதும் கொடுக்கின்றேன்.
read more...

Wednesday, 29 July 2009

நண்பர்களை மறக்கலாமா.....

ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா.. என்ற இடுகை பலரும் பல்வேறு பட்ட கருத்துக்களோடு ஊடகங்களும் தமிழும் என்ற ரீதியிலே நல்ல ஆரோக்கியமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டு இருக்கின்றார்கள். அதன் தொடர் பதிவாகவே எனது அடுத்த பதிவு இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.


ஆனால் நண்பர்களில் அன்புத்தொல்லை விட்டபாடில்லை. அதுதான் நம்ம நண்பர்கள் திருமதி மேனகாசத்தியா, குறை ஒன்றுமில்லை இருவரும் எனக்கு நட்புக்கே விருது தந்து விட்டார்கள். அவர்களுக்கு நன்றிகள்.



இனி என்ன நானும் பத்துப் பேருக்கு கொடுக்கணுமே. பதிவுலகில் எத்தனை நண்பர்கள் இருக்கின்றார்கள் யாருக்கு கொடுப்பது என்பதே பிரச்சனை.



இதுவரை நட்புக்கான விருது பெறாத பத்துப் பேரை தெரிவு செய்திருக்கிறேன். அவங்கதான் இவர்கள்.

1. லோஷன் (லோஷனின் களம்) நல்ல விடயங்கள் அனைத்து தாராளமாய் தருபவர் விளையாட்டு செய்திகளை பஞ்சமின்றி வழங்குவார்.

2. பிரபா (விழியும் செவியும்) நல்ல கவிதைகளை தொகுத்துத் தருவதோடு நல்ல பல விடயங்களையும் தருபவர்.

3. முனைவர் இரா. குணசீலன் (வேர்களைத்தேடி) நல்லபல விடயங்களோடு தமிழ் இலக்கியத்தை தெவிட்டாமல் தேன் கலந்து தருபர். தொழினுட்ப தகவல்களையும் விட்டு வைக்கவில்லை.

4. ஆ.ஞானசேகரன்(அம்மா அப்பா) . நல்ல பல கருத்துக்களை இவரது பதிவுகளிலே காணமுடிகிறது.

5. சக்தி (வீட்டுப்புறா) நல்ல பல கவிதைகளை தருபவர் தமிழ் பற்று அதிகமானவர் என்பதை இவரது கவிதைகள் வெளிப்படுத்தும். தொப்பூள் கொடி சொந்தங்களை நம்பாதீர்கள்.... எனும் கவிதை இதனை சொல்கிறது.

6. காயத்ரி (பிரிவையும் நேசிப்பவள்..) நல்ல பல கவிதைகளை கவிதைகளுக்கு பொருத்தமான படங்களோடு தருவதில் சிறப்பு மிக்கவர்

7. அக்பர் (சிநேகிதன்) நல்ல பல விடயங்களை இடுகைகளாக தனது பதிவிலே தரும் ஒரு நண்பர்.

8. Starjan ( ஸ்டார்ஜன் ) (நிலா அது வானத்து மேல!) நல்ல பல விடயங்களை தனது பதிவிலே தருபவர்.

9. முனைவர் கல்பனா சேக்கிழார் இவரும் தமிழ் இலக்கியம் தொடர்பாக பல்வேறுபட்ட விடயங்களோடு, இன்னும் பல விடயங்களையும் தந்து வருகின்றார்.

10. நிலாமதி (நிலாமதியின் பக்கங்கள் இவர் வலையுலகுக்கு புதியவர். நிறையவே பல விடயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உடையவர். இந்த விருது அவரை மேலும் ஊக்கப்படுத்துமல்லவா.

இனி என்ன விருதும் கொடுத்தாகி விட்டது. நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஊடகங்கள் தமிழைக் கொலைசெய்கின்றனவா... என்ற பதிவின் தொடர் பதிவு இன்று வர இருக்கின்றது. பல்வேறு கருத்துக்களுடன்.
read more...

Saturday, 25 July 2009

பதிவர்கள் தங்களுக்குள்ளே விருது வழங்குவது சரியா?

இன்று பதிவுலகிலே பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் விருதுகள் பற்றித்தான். பதிவர்களே தங்களுக்குள் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கருத்து மோதல்களால் கிடைக்கின்ற இலாபம் என்னவென்று சொல்லத்தெரியவில்லை.

இக கருத்து மோதல்கள் மூலம் விருது வழங்குதல், போட்டிகள் நடத்துதல். இவற்றை திரட்டிகள் செய்யலாம். பதிவர்கள் தங்களுக்குள் விருதுகளை பரிமாறுதல் போன்ற விடயங்கள் பற்றி பதிவர்களுக்குள்ளே பலதரப்பட்ட ஆதரவான, எதிரான கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன..

]இந்த கருத்து மோதல்கள் வெறுமனே பதிவர்களுக்குள்ளே வெறும் பகைமையினை வளர்ப்பதனை விடுத்து நல்லதொரு தீர்வு கிடைப்பதற்கு வித்திடுமாயின் அது சந்தோசப்பட வேண்டிய விடயமே.

எது எப்படி இருப்பினும் சில விடயங்களை பார்க்கவேண்டி இருக்கின்றது. இன்று விருதுகள் பற்றி இடுகைகள் இடாத பதிவர்கள் குறைவு என்றே சொல்லவேண்டும். அந்த அளவிற்கு விருதுகள் பெரும்பாலான பதிவர்களைச் சென்றடைந்து விட்டது.
பதிவுலகத்துக்கு நானும் ஒரு புதியவன்தான். பதிவர்களுகுள்ளே விருது வழங்குதல் என்பது. புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தும் ஒன்றாக இருக்கின்றது. பதிவர்களுக்கு விருது கொடுப்பதற்காக ஒரு அமைப்பு இல்லை என்கின்ற போது ( நான் புதிய பதிவர் நான் இருப்பதாக அறியவில்லை இருந்தால் மன்னிக்கவும்)பதிவர்களுக்குள்ளே விருது வழங்குவதில் தப்பே இல்லை. புதிய பதிவர்கள் இதனை பதிவுலகில் தங்களுக்கு கிடைத்த ஒரு அங்கிகாரமாகவே பார்க்கின்றனர்.

இந்த விருதுகளை பெறுகின்ற பதிவர்கள் அதனை தமது வலைப்பதிவுகளிலே பொறித்து விட்டு சந்தோசப் படுகிறார்களே தவிர தமது பெயருக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ போடுகிறார்களா. இல்லையே. அல்லது ஒரு வேலைவாய்ப்புகோ வேறு ஏதாவது நேர்முக பரிட்சைக்கோ போகும் போது நான் இந்த விருதெல்லாம் பெற்று இருக்கிறேன் என்று சொல்கின்றார்களா இல்லையே. தமது வலைப்பதிவில் பொறித்து தமக்கு பதிவுலகில் கிடைத்த ஒரு அங்கிகாரமாக நினைத்து சந்தோசப்படுவது மட்டுமே.

பதிவர்களுக்கு விருது வழங்குவதற்கென ஒரு அமைப்போ அல்லது திரட்டியோ முன்வருமாக இருந்தால் அது வரவேற்கத்தக்க விடயமே. எவரும் முன் வராதபோது பதிவர்களே விருது வழங்குவதில் தப்பு இருப்பதாக தெரியவில்லை.

இன்று விருது பெற்ற பல புதிய பதிவர்கள் தங்களுக்கு விருது கிடைத்துவிட்டது. தாங்கள் இன்னும் நிறையவே எழுத வேண்டுமென்று உற்சாகத்துடன் செயற்படுவதை காண முடிகின்றது.
விருது வழங்குவதட்கு தனி ஒரு அமைப்பு இல்லாதவிடத்து பதிவர்களுக்குள்ளே விருது வழங்குவதில் இந்த தப்பும் இல்லை. இது புதிய பதிவர்களை மாத்திரமன்றி பல பதிவர்களை உற்சாகப் படுத்தும் ஒன்றாகவே அமைகின்றது
read more...

Tuesday, 21 July 2009

கடந்து வந்த பாதையை மறக்கலாமா... 50 வது பதிவு...

இன்று நாம் என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் நாம் கடந்து வந்த பாதையினையும், நாம் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு உதவியவர்களையும் அடுத்த கணமே எம்மில் பலர் மறந்து விடுகின்றனர். நாம் எந்த நிலையில் இருந்தாலும் நாம் கடந்து வந்த பாதையினை மறந்து விடக்கூடாது....



நான் பதிவுலகத்துக்கு வந்து என்ன செய்திருக்கிறோம், எதை சாதித்து இருகி்க்கிறேன், எனக்குள்ளே நான் கேட்கும் கேள்விகள். நீங்களும் என்னைபார்த்து கேட்பது புரிகிறது. நான் எதுவும் சாதிக்க வில்லை. சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இன்று எமது சமுகம் எதிர் நோக்கும் பிரட்சனைகளையும், மறைந்து வரும் தமிழர் நம் கலை,கலாசாரங்களையும் வெளி உலகிற்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆதங்கம் என்னை விடுவதாக இல்லை. எமது சமுகம் எதிர் நோக்கும் பிரட்சனைகள்தான் எத்தனை எத்தனை. இவை எல்லாம் வெளி உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் முடியாத காரியமே எனது கருத்துக்கே சுதந்திரம் இல்லை எனக்கு எங்கே சுதந்திரம் வரப்போகிறது. எது எப்படி இருப்பினும் மறைந்து வரும் எமது கலை, கலாசாரம் தொடர்பாக நிறையவே எழுத வேண்டும் என்றொரு எண்ணம் இருக்கிறது.





இது என்னுடைய 50 வது பதிவு நான் பதிவுலகத்துக்கு வந்து படித்தவை ஏராளம், நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். மிகவும் சந்தோசம் அடைகின்றேன். நான் இந்த வலைப்பதிவினை ஆரம்பித்து இன்று சரியாக இரண்டு மாதங்கள் நான் கடந்த 21.05.2009 இல் தான் இந்த வலைப்பதிவினை ஆரம்பித்தேன். எல்லோரும் கேட்பது ஏன் எவ்வளவு விரைவாக பதிவிடுறிங்க எங்களுக்கு வாசிப்பதற்கு இடம் கொடுங்க என்றுதான். இன்னும் அதிகமாக எழுத வேண்டும் என்ற ஆதங்கம் இருக்கிறது அதுதான் எவ்வளவு வேகம்.




நான் பதிவுலகத்துக்கு வந்தது 19.02.2009 இல் தான் அப்போது நான் வேறொரு வலைப்பதிவினை வைத்து இருந்தேன். அது எங்கோ மாயமாகி விட்டது. என்னை பதிவுலகிற்கு அறிமுகம் செய்தவர் எனது நண்பரும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன அறிவிப்பாளரும், தொழிநுட்பக் கலைஞரும் பதிவருமான பிரபா. நண்பர் பிரபாவுக்கு என்றும் நன்றி கூறக்

கடமைப்பட்டுள்ளேன்





நான் எழுதுவதெல்லாம் சரியா நானும் ஒரு பதிவரா? என்றெல்லாம் எனக்குள் நான் அடிக்கடி கேட்கும் கேள்விகள். இன்று அதற்கு விடை கிடைத்து இருக்கின்றது. நானும் ஒரு பதிவர் என்பதற்கான அந்தஸ்த்து கிடைத்திருக்கின்றது. இரண்டு மாதத்திலே 50 பதிவுகள், எனது 50 வது பதிவிலே இரண்டு விருதுகள் வழங்கப்பட்டு இருக்கின்றது எல்லையற்ற சந்தோசம் அடைகின்றேன்.





என்னை உற்சாகப்படுத்திய எனது நண்பர்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். பதிவுலகிற்கு வருவதற்கு முன்னர் கவிதை எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தது ஆனால் எழுதவில்லை. கவிதை என்று இல்லாமல் கிறுக்கல்கள் என்று எனது கவிதைகளை பதிவிட்டேன். நண்பர்களின் பாராட்டுக்கள்தான் நான் எழுதும் அத்தனையும்.



நான் பதிவுலகத்திற்கு வந்து பல நல்ல நண்பர்களை சந்தித்து இருக்கிறேன். நான் அன்று முதல் இன்றுவரை என்றும் மதிக்கின்ற ஒரு நல்ல மனிதர். அறிவிப்பாளர் லோஷன் அண்ணா அவர்கள் எனக்கு முதன் முதலில் பின்நூட்டமிட்டது எனக்கு இன்னும் எழுத வேண்டும் என்ற ஆவலை தூன்டியது. லோஷன் அண்ணாவுக்கும் எனது நன்றிகள். லோஷன் அண்ணா எனக்கு முதன்முதலில் வழங்கிய பின்னூட்டம் இதுதான் "LOSHAN கூறியது... உங்கள் பார்வைக் கோணம் அருமை சகோதரா..இந்த பிஞ்சுகளின் எதிர்காலம் பற்றிப் பெரிதாக கவலைப்பட பெரியவர்கள் முன்வரவேண்டும்." இது எனக்குக் கிடைத்த முதல் அங்கிகாரம்.





அடுத்து நானும் ஒரு பதிவர் என்ற அந்தஸ்தை பட்டாம் பூச்சி விருது மூலமாகத்தந்த முனைவர் இரா. குணசீலன் அவர்களுக்கும் எனது நன்றிகள். இவரது இலக்கியப்படைப்புகளை கண்டு வியந்தவன் நான்.





எனக்கு பல வாசகர்களையும் நண்பர்களையும் தேடித்தந்த தமிழிஸ் தமிழ்மணம் இரண்டுக்கும் எனது விசேட நன்றிகளோடு ஏனைய திரட்டிகளுக்கும் எனது நன்றிகள்.





எனக்கு சந்தோசத்துக்கு மேல் சந்தோசத்தை கொடுக்கும் விடயம்தான். நண்பர் அக்பர் அவர்களினால் வழங்கப்பட்டிருக்கும் சுவையார்வ பதிவு/பதிவர் விருது. அவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.





இந்த விருதினை நானும் கொடுக்கவேண்டுமே.....


1 .பிரபா (விழியும் செவியும்) இவர் தனது வலைப்பதிவிலே நல்ல கவிதைகளை தொகுத்து பதிவிடுவதோடு சிந்தனை கருத்துக்களையும். பல அறிவுபூர்வமான பதிவுகளையும் தந்து வரும் ஒருவர். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திலும் பல அறிவுபூர்வமான பல நிகழ்சிகளோடு ஒரு தொழிநுட்பக் கலைஞராகவும் வலம் வருபவர். நேரத்தை இவர் தேடிப்பிடிக்க வேண்டி இருக்கிறது.


2 யாழினி (நிலவில் ஒரு தேசம்) இவர் பல கவிதைகளையும் பல அறிவுபூர்வமான கட்டுரைகளையும் தரும் ஒருவர்.


3. கானா பிரபா (றேடியோஸ்பதி) இவர் வித்தியாசமான முறையிலே இசைத்துறை சார்ந்ததாகவும் பல்வேறு பட்ட பதிவுகளையும் வழங்கி வருகின்றார். சினிமாப் பாடல்கள் பற்றிய பரந்த அறிவு கொண்டவர் என்று சொன்னால் அது மிகையாகாது. வளர்ந்து வரும் அறிவிப்பாளர்களுக்கு ஒரு சினிமாத் தகவல் களஞ்சியம் என்று சொல்லலாம்.


4. சிந்துகா (சிந்து) இவர் பல கவிதைகளோடு கட்டுரைகள் சிந்தனைக் கருத்துக்களையும் தமது பதிவுகளிலே வழங்கி வருகின்றார்.


5 .டொக்டர்.எம்.கே.முருகானந்தன் (ஹாய் நலமா) இவர் தனது வலைப்பதிவின் மூலமாக பல்வேறுபட்ட மருத்துவத்தகவல்களோடு பல ஆக்கபூர்வமான கட்டுரைகளையும் வழங்கி வரும் ஒருவர்.



6 .கலை (கலை-இராகலை) இவரும் மலையகம் சார்ந்த பல கட்டுரை கவிதைகளோடு பல நல்ல கருத்தாழமிக்க கட்டுரைகளையும் வழங்கி வருகிறார்.




தொடருங்கள் நண்பர்களே இன்னும் பல நல்ல விடயங்களை பதிவுகளாகத் தர வேண்டும் என்பதே எனது அவா...
read more...

Friday, 17 July 2009

இரட்டிப்பு மகிழ்ச்சி

நான் எனது ஐம்பதாவது பதிவினை எட்டிப்பிடிக்கலாம் என்று பதிவுகளை இட்டு வருகின்றேன். விரைவில் எனது ஐம்பதாவது பதிவினை சந்திக்கக் காத்திருக்கும் வேளையிலே ஒரு சந்தோசமான செய்தி கிடைத்தது. அது வேறு ஒன்றுமில்லை. எனக்கும் பட்டாம் பூச்சி விருது கிடைத்ததுதான்.

எனக்கு இந்தப்பட்டாம் பூச்சி விருது கிடைத்ததிலே இரட்டிப்பு மகிழ்ச்சி. நான் மிகவும் மதிக்கின்ற, தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியிலே தனது பங்களிப்பை வழங்கிவரும் முனைவர் இரா. குணசீலன் அவர்களினால் எனக்கு இந்த பட்டாம் பூச்சி விருது கிடைத்திருக்கின்றது. அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு. அவரின் தமிழ் இலக்கியப்பணி தொடர வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் பதிவுலகுக்கு வந்து நானும் ஒரு பதிவர் என்பதற்கு எனக்குக் கிடைத்த முதலாவது அங்கிகாரம் இது என்று நான் நினைக்கிறேன். இந்த வேளையில் என்னை பதிவுலகிற்கு அறிமுகப்படுத்திய நண்பர் பிரபாவுக்கும் நன்றி கூறுவதோடு. எனக்கு உற்சாகமளித்த ஏனைய வலையுலக நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.

எனக்குக் கிடைத்த இந்தப் பட்டாம் பூச்சி விருதினை நானும் ஐவருக்கு கொடுக்கவேண்டுமே.

1. லோஷன் (லோஷனின் களம்) நான் இவரது ரசிகன் என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவருடைய பதிவுகள் பலதுறை சார்ந்ததாக இருப்பதோடு உடனுக்குடன் செய்திகளை பதிவிடுவதிலே வல்லவர். அதிலும் விளையாட்டுச் செய்திகள் என்றால் முந்திக்கொண்டு பதிவிடுபவர்.

2. சுபாங்கன் (ஐந்தறைப்பெட்டி) இவரும் பல துறை சார்ந்த பதிவுகளோடு வலம் வருபவர். தொழினுட்ப தகவல்களை பதிவிடுவதிலே சிறந்தவர்.

3. ஹேமா (வானம் வெளித்த பின்னும்) இவரும் பல கருத்தாழமிக்க சிந்திக்க தூண்டுகின்ற பல கவிதைகளை தந்து வரும் ஒருவர்.

4. சுசி (யாவரும் நலம்) இவரும் பலதுறை சார்ந்ததாக தனது வலைப்பதிவினை முன்னெடுத்து வருகின்றார். இவரது பதிவுகளிலே சிந்தனையை தூண்டக்கூடியதாக பல விடயங்களை நகைச்சுவையாக குறிப்பிட்டு இருப்பார்.

5. sshathies இவர் அண்மையில்தான் எனக்கு அறிமுகமானாலும் இவர் விளையாட்டு, சினிமா, கட்டுரைகள்,தொழினுட்பம் என்று பலதுறைகளிலும் பதிவிட்டு வரும் ஒருவர்.

இவர்கள் ஐவருக்கும் நான் பட்டாம் பூச்சி விருது கொடுப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

read more...