Showing posts with label பாராளுமன்றம். Show all posts
Showing posts with label பாராளுமன்றம். Show all posts

Saturday, 27 March 2010

தமிழர்கள் மஹிந்தவின் கரங்களை பலப்படுத்துவார்களா?

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பதிலே பல சக்திகள் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கு சில தமிழர்களும் துணை போகின்றார்கள் என்பதுதான் கவலைக்குரிய விடயம்.

அன்றுதொட்டு இன்றுவரை சிங்கள பேரினவாத அரசுகள் மாறி, மாறி தமிழர்களின் எதிர்காலத்தையும், அரசியல் சக்தியையும் இல்லாதொழிக்க பல சதித் திட்டங்களை தீட்டி வருகின்றன.

இந்தத் தேர்தலிலே தமிழர்களின் அரசியல் எதிர் காலத்தை இல்லாதொழிக்க உச்ச கட்ட சதித் திட்டங்களை தீட்டி வருகின்றன. தமிழர்களின் அரசியல் எதிர் காலத்தை இல்லாதொழிக்க தமிலர்கழலே பயன்படுத்தப்படுவது வேதனைக்குரிய விடயமே. பணத்துக்கும், சுகபோகங்களுக்காக  தமிழர்கள் தமிழினத்தை விற்பது வேதனைக்குரிய விடயமாகும்.

தமிழர்களின் வாக்குகளை வேட்டையாடி தமிழர் பிரதிநிதித்துவத்தையும், தமிழரின் அரசியல் பலத்தையும் இல்லாதொழிக்க பேரினவாத அரசு தனது கட்சியிலே தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்தி இருப்பதோடு பல சுயேட்சைக் குழுக்களையும் களமிறக்கி இருக்கின்றது.

இந்த வேட்பாளர்கள் சொல்கின்றனர் அரசோடு சேர்ந்தால்தான் அபிவிருத்திகளை செய்ய வேண்டும் என்று. அரசோடு சேர்ந்தால்தான் அபிவிருத்திகளை செய்ய முடியுமா? தமிழர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பதன் மூலம் அரசோடு பேரம் பேசி பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கலாம்தானே.

அது ஒரு புறமிருக்க இந்த மகிந்தவின் அரசு தமிழர்களை இல்லாதொழிக்கின்றது. புலிகளே தமிழர்களின் ஏக பிரதி நிதிகள் என்று வீர வசனம் பேசியவர்கள் எல்லாம் இன்று மகிந்தவே சிறந்த தலைவர் என்று வால்ப்பிடிக்கின்றனர். இவர்களின் கொள்கைதான் என்ன? இன்று ஒரு கொள்கை நாளை ஒரு கொள்கையா? நாளுக்கொரு கொள்கை மாற்றும் இவர்களால் தமிழர்களுக்கு என்னதான் செய்ய முடியும். தமிழினத்தை விற்று தாம் சுகபோக வாழ்க்கை வாழ்வதைத் தவிர.

கிழக்கு மாகாணம் வன்னித் தலைமையினால் புறக்கணிக்கப்படுகின்றது. கிழக்கு மக்களுக்கு தனியே ஒரு தலைமைத்துவம் வேண்டும் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்று புலிகளில் இருந்து பிரிந்து வந்தவர் என்ன செய்கிறார். அவர் புலிகளில் இருந்து பிரிந்து வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றுகின்றாரா? கிழக்கு மாகாண மக்களுக்காக ஒரு தனித்துவக் கட்சியை ஆரம்பித்தார?

இன்று இந்த அரசாங்கத்தின் கட்சியிலே போட்டியிடுபவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப் பட்டாலும் அவர்களால் தன்னிட்சயாக செயற்பட முடியுமா? அரசின் பொம்மைகளாக அரசு சொல்வதற்கு தலையாட்டவேண்டியவர்கலாகத்தான் இருக்க வேண்டும். மீறி செயற்பட்டால் பதவிகள் பறிக்கப்படும் என்பது எல்லோரும் அறிந்த விடயமே.

தமிழர்கள் சிந்தித்து செயற்படவேண்டிய காலமிது. பேரினவாதக் கட்சிகளுக்கு தமிழினத்தை விற்காமல் தமிழர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதிலே ஒவ்வொரு தமிழர்களும் உறுதியாக இருக்கவேண்டும்.
read more...

Tuesday, 23 March 2010

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலில் விலை போகும் தமிழர்கள்

இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் சூடு பிடித்திருக்கும் காலமிது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ம் திகதி இடம்பெற இருக்கின்ற இந்த பாராளுமன்றத் தேர்தலிலே. தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை
இந்தத் தேர்தலிலே தமிழர்கள் சிந்தித்து செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். சிங்கள பேரினவாத அரசும், தீய சக்திகளும் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சிக்கு சில கேள்விக்குறியாக்கும் முயற்சியிலே பல தீய சக்திகள் சதித்திட்டங்களை தீட்டி வருகின்றன.

தமிழர்களே அவர்களின் அடிவருடிகளாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.


இந்தத் தேர்தலை பொறுத்தவரை மட்டக்களப்பு மாவட்டத்திலே பல தமிழ் கட்சிகளும் , சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இந்த தமிழ் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் ஏன் இவ்வாறு பிரிந்து தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கின்றார்கள் என்று பார்க்கும்போது. அங்கே தமிலர்களுக்கேதிராக பல சதித்திட்டங்கள் இருப்பது புலனாகின்றது
 
தொடர்ந்து பார்க்க....
read more...

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலில் விலை போகும் தமிழர்கள்

இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல்  சூடு  பிடித்திருக்கும்  காலமிது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ம் திகதி இடம்பெற இருக்கின்ற இந்த பாராளுமன்றத் தேர்தலிலே.   தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சியிலே பல தீய சக்திகள்  சதித்திட்டங்களை தீட்டி வருகின்றன.

இந்தத் தேர்தலிலே   தமிழர்கள் சிந்தித்து செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். சிங்கள பேரினவாத அரசும், தீய சக்திகளும் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சிக்கு சில தமிழர்களே அவர்களின் அடிவருடிகளாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

இந்தத் தேர்தலை பொறுத்தவரை மட்டக்களப்பு மாவட்டத்திலே பல தமிழ் கட்சிகளும் , சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.   இந்த தமிழ் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் ஏன் இவ்வாறு பிரிந்து தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கின்றார்கள் என்று பார்க்கும்போது. அங்கே தமிழர்களுக்கெதிராக பல சதித்திட்டங்கள்  இருப்பது புலனாகின்றது.

பேரினவாதக் கட்சிகளும், ஏனைய சில தீய சக்திகளும் தமிழர்களின் வாக்குகளை சிதறடிப்பதன் மூலம் தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநித்தித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு முயற்சி செய்து வருகின்றார்கள். இங்கே பணம் கொடுத்து சில தமிழ் வேட்பாளர்கள் வாங்கப்பட்டிருக்கின்றனர். பணத்துக்கும், சுகபோக வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு இவர்கள் தமிழினத்தையே விற்கவும் துணிந்து விட்டனர்.


 சிங்கள பேரினவாதக் கட்சிகளிலே பல தமிழர்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் சிலர் அரசியலுக்கு புதியவர்கள். ஆனாலும் தமிழர் உரிமைகளை  வென்றெடுக்கப் போகின்றோம். நாங்கள் தமிழர்கள், தமிழர்களுக்காக குரல் கொடுக்கப்போகின்றோம் என்றெல்லாம் வீர வசனம் பேசியவர்கள்.  இன்று எங்கே போனது இந்த வீர வசனங்கள். இவர்கள் தமிழ் பற்றாளர்கள் என்றால் ஒரு தமிழ் கட்சியிலே போட்டியிட்டிருக்கலாமே.

அன்று தமிழ் தேசிய  கூட்டமைப்பிலே இருந்து கொண்டு புலிகள்தான் தமிழர்களின் ஏக பிரதி நிதிகள் என்றும், இந்த அரசாங்கம் தமிழர்களை கொலை செய்கின்றது, என்றெல்லாம் அரசாங்கத்துக்கு எதிராகப் பேசியவர்கள் இன்று பேரினவாதக் கட்சியிலே போட்டியிடுகின்றனர். இவர்களின் நோக்கம்தான் என்ன? தமிழர்களை முட்டாள்கள் என்று நினைத்துவிட்டார்களா? இவர்களுக்கு இன்று ஒரு கொள்கை நாளை ஒரு கொள்கை. இப்படிப்பட்டவர்கள் மக்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள்?

கடந்த பாராளுமன்றத் தேர்தலிலே 22 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலிலே கோட்டை விட்டுவிடும் போலிருக்கிறது.  இவர்களால் நிறுத்தப் பட்டிருக்கின்ற வேட்பாளர்களுக்கு மக்கள் மத்தியிலே செல்வாக்கு இருக்கின்றதா என்று பார்த்தால் கேள்விக்குறியே. அது ஒரு புறமிருக்க இவர்கள் தமிழர்களுக்காக என்ன செய்தார்கள்? அன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் முள்ளி வாய்க்காலிலே கொலை செய்யப்பட்டபோது ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராயினமா செய்தாரா? தமிழர்களுக்காக குரல் கொடுத்தாரா? வெளி நாடுகளிலே சுகபோக வாழ்க்கைதான் வாழ்ந்தார்கள்.

இது ஒரு புறமிருக்க அரசியலிலே இன்னொரு சக்தியாக இன்று உருவெடுத்திருக்கின்றது சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)  தலைமையிலான கட்சியினர்.  இவர்களைப் பொறுத்தவரை பாராளுமன்றத் தேர்தலுக்கு புதியவர்களாக இருந்தாலும் கிழக்கு மாகாண சபையை தன் வசம் வைத்திருப்பதோடு கிழக்கு மாகாண சபையின் மூலம் பல அபிவிருத்தி திட்டங்களை செய்து  மக்கள் மத்தியிலே இவர்களுக்கு வரவேற்பு இருக்கின்றது.

இவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மானோடு பிரிந்து வந்தாலும் சில காரணங்களினால் கருணா அம்மானிடமிருந்து பிரிந்து தனி ஒரு தமிழ் கட்சியாக இன்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்திருக்கின்றனர். இவர்களால் இந்தத் தேர்தலிலே களமிறக்கப் பட்டிருக்கின்றவர்கள் மக்கள் மத்தியிலே செல்வாக்குள்ள பல துறை சார்ந்தவர்களாக இருக்கின்றனர். இத் தேர்தலிலே   தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (T.M.V.P) கட்சியும் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒரு பலம் பொருந்திய கட்சியாக இருக்கின்றது.

அடுத்து பார்க்கின்றபோது தமிழர் விடுதலைக் கூட்டணியும் மட்டக்களப்பு மாவட்டத்திலே இத்தேர்தலிலே களமிறங்கி இருக்கின்றது. இக் கட்சியின் அண்மைக்கால செயற்பாடுகள் காரணமாகவோ என்னவோ மக்கள் மத்தியிலே வரவேற்பு குறைந்திருப்பது போன்று தெரிகின்றது.

தேர்தல் தினம் நெருங்க, நெருங்க தேர்தல் பிரச்சாரங்களும் அதிகரித்த வண்ணமிருப்பதோடு.  ஒரே கட்சியின் வெட்பாளர்களுக்குள்ளே அதிக விருப்பு வாக்குகளை யார் பெறுவது என்பதிலே பலத்த போட்டி நிலவுகின்றது. இதன் காரணமாக ஒரே கட்சியின் வேட்பாளர்கள் தங்களுக்குள்ளே முட்டி மோதிக் கொள்கின்றனர்.  தங்களுக்குள்ளே முட்டி மோதிக்கொள்ளும் இவர்களால் தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியுமா?

இத் தருணத்திலே தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
read more...