சில நாட்களாக தவிர்க்க முடியாத காரணங்களாக வலைப்பதிவுப் பக்கம் வர முடியவில்லை. மீண்டும் உங்களோடு இணைந்து கொள்வதில் மகிழ்சி.
இலங்கைத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய காலகட்டமிது. எதிர் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலிலே தமிழர்களின் வாக்குகளை வேட்டையாடி தமிழர்களின் ஒற்றுமையை, தமிழர்களின் பலத்தை இல்லாதொழிக்க பல சக்திகள் பல சதித்திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கின்றனர்.
அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை பல அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் இந்தத் தேர்தலிலே களமிறங்கி இருப்பதோடு மக்களை குழப்பமடைய வைத்திருக்கின்றனர். தாங்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக தமிழினத்தை விற்கத் துணிந்திருக்கின்றனர். தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய காலமிது.
எனது பதிவுகளில் சமகால அரசியல் சார்ந்த பல பதிவுகளைத் தர இருக்கின்றேன். இன்னும் ஒரு சில நிமிடங்களில் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பின் கல நிலவரம் பற்றிய ஒரு பார்வை உங்களை வந்து சேரும்.