Friday 30 July 2010

துப்பாக்கி முனையில் சிறைப்பிடிக்கப்பட்ட ஊடக சுதந்திரம்


இலங்கையைப் பொறுத்தவரை இன்று கருத்து சுதந்திரம் என்பது பறிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது. இன்று ஒருவர் துணிந்து அவரது கருத்துக்களை வெளியிட முடியுமா என்றால் அது கேள்விக்குறியான விடயமே.

தடைகளையும், அடக்கு முறைகளையும் மீறி சவால்களுக்கு மத்தியிலே ஒருவர் தன் கருத்துக்களை வெளியிடுவாராக இருந்தால் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. கருத்துச் சுதந்திரத்தை துப்பாக்கிகள் தட்டிப் பறித்துக் கொண்டிருக்கின்றன.


உண்மைகளை துணிச்சலோடு பல சவால்களுக்கு மத்தியிலே வெளியிட்ட பல நேர்மையான ஊடகவியலாளர்களை நாம் பறிகொடுத்திருக்கின்றோம். ஒருவர் அல்லது ஒரு குழுவினர் செய்கின்ற தவறுகளையும் அடாவடிகளையும் அட்டூழியங்களையும் வெளி உலகிற்கு கொண்டு வருகின்ற எந்த ஒரு ஊடகவியலாளனும் சுதந்திரமாக தன் கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.


ஒருவரை ஒரு குழுவினரைப் பற்றிய கருத்துக்களை வெளியிடுகின்றவர்களை போட்டுத் தள்ளுகின்றபோது இன்னொருவர் தங்களுக்கு எதிராக உருவாக மாட்டார் என்று நினைக்கின்றனர்.


மாற்றுக் கருத்துடையோரை விட்டு வைக்கக் கூடாது என்று நினைப்பவர்களும் செயலில் இறங்குபவர்களும் இருக்கின்றனர்


இன்று ஒருவர் உண்மைகளை வெளியிட முடியாத நிலை இருக்கின்றது. மீறியும் வெளியிடுவாராக இருந்தால் சில வேளைகளில் ஒரு ஊடகவியலாளனால் எழுதப்பட்ட செய்தியை அந்த ஊடகவியலாளனே வாசிக்கும் நிலையில் அவனது உயிருக்கு உத்தரவாதமிருக்காது.



இன்று பேச்சு ஊடக சுதந்திரமென்பது வெறுமனே பேச்சளவில்தான் இருக்கிறது. ஊடக சுதந்திரம் துப்பாக்கிகளினால் சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.



நாளுக்கு நாள் ஊடக சுதந்திரம் பறிக்கப் பட்டு ஊடக அடக்கு முறைகள் அதிகரித்தவண்ணமிருக்கின்றன. ஒரு ஊடகவியலாளன் மீதோ அல்லது ஊடக நிறுவனம் மீதோ தாக்குதல் நடாத்தப் படுகின்றபோது மட்டுமே அறிக்கைகளையும் கண்டனங்களையும் வெளியிடும் அரசியல்வாதிகளும் உரிய அதிகாரிகளும். இதுவரை இடம் பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை ஏதாவது எடுத்திருக்கின்றனரா?


தாக்குதல்கள் இடம் பெறுகின்ற போது மட்டும் அறிக்கைகளையும் கண்டனங்களையும் வெளியிடுவதோடு நின்றுவிடாது இனிவரும் காலங்களிலாவது ஊடக சுதந்திரம் பறிபோகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
read more...

Thursday 29 July 2010

காலம் மாறிப் போச்சு...

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளைக் கிராமமானது விவசாயத்துக்கு பெயர் பெற்ற கிராமமாகும். இக்கிராமத்திலே வெற்றிலைச் செய்கைக்கும் ஒரு தனிச் சிறப்பிருக்கின்றது. இக்கிராமத்திலே அதிகமானவர்கள் விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இக்கிராம விவசாயிகள் வெற்றிலைச் செய்கை மட்டுமன்றி மிளகாய் வெண்காயம் போன்ற பயிர்களையும் செய்து வருகின்றனர். இன்றைய நிலையில் இந்த விவசாயிகளுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கின்றது்

இப்பிரதேசத்து நீர் உவர் நீராக மாறி வருகின்றது் இதனால் பயிர் செய்ய முடியாத நிலை ஏற் பட்டிருக்கின்றது. இக்கிராமமானது கடற்கரைப் பிரதேசம் என்பதோடு சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசமுமாகும்.

சுனாமியின் பின்னர் ஓரிரு வருடங்கள் இப்பிரதேசத்திலே பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தும் படிப்படியாக அந்த நிலை மாற்றமடைந்தது. மீண்டும் தற்போது துரிதமாக உவர் நீராக மாறி வருகின்றது.

இதற்கான காரணம் 40 50 அடி ஆழத்துக்குமேல் பல நூற்றுக்கணக்கான குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டிருப்பதே என்று சொல்லப்படுகின்றது. அனைத்து விவசாயிகளும் இவ்வாறு குழாய்க் கிணறுகளை அமைத்திருக்கின்றனர்.

எதிர் காலத்தில் முற்று முழுதாக இப்பிரதேச நீர் உவர் நீராக மாறக்கூடிய சாத்தியங்கள் அதிகமாக இருப்பதனால் விவசாயிகளும் மக்களும் அச்சமடைந்திருப்பதோடு உரிய இத் துறை சார்ந்த அதிகாரிகள் இக் குழாய்க் கிணறுகளுக்குப் பதிலாக மாற்று வழிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர்.
read more...

தடைகளையும் தாண்டிய பயணம்

எமது மற்றுமோர் சமூக சேவை முயற்சியான அன்னதானம் வழங்கும் சேவையினை களுதாவளை ஸ்ரீ முருகன் ஆலயத்திலே ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தோம். அந்த ஆலயத்திலே குறிப்பிட்ட ஒரு குழுவினர் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். வேறு எவரும் வழங்கக் கூடாது என்று ஆலயத்திலே எங்களுக்கு ஆலயத்திலே அனுமதி கிடைக்கவில்லை.


என்ன தடைகள் வந்தாலும் நாம் அன்னதானம் வழங்குவது என்று தீர்மானம் எடுத்துவிட்டு  ஆலயத்தில் சமைக்க அனுமதி இல்லாததால் வேறு ஒரு இடத்திலே சமைத்து பார்சல்களாக ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர்களுக்கு உணவு கொடுத்தோம். 


நாம் நினைத்த காரியம் வெற்றியடைந்தமையை இட்டு சந்தோசம். பல ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினோம்.


எமது இந்த சேவை தொடரும்


எமது மற்றுமோர் சேவை



















































read more...

Wednesday 28 July 2010

பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி சில ஆலோசனைகள்.

எனது முன்னைய இடுகை ஒன்று மீண்டும்.
ஆண்களுக்குத்தான் அதிகமாக ஆலோசனைகள் வழங்குகிறேன் ஆனால் பெண்களுக்கும் நல்ல ஆலோசனை தரவேண்டும் என்று பல பெண்கள் வேண்டிக்கொண்டனர். சில நன்பிகளோ என்னோடு பேசுவதே இல்லை அவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

இன்று சில (பல) பெண்கள் ( பெண்கள் என்னை திட்டவேண்டாம் எல்லோரும் இல்லை என்று சொல்ல்கிறேன்). ஆண்களை ஏதோ ஒரு வகையில் தன் பின்னால் அலைய வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சில அப்பாவி ஆண்கள் நாய் போல் அலைந்து. கடைசியில் எல்லாம் இழந்து, எல்லாம் புரிந்து..... என்னவோ எல்லாம் நடக்குது...

சில பெண்கள் தங்கள் நண்பிகளிடம் கேட்டுக்கொள்வார்கள் "அடப்பாவி எப்படிடி இப்படி உன்னாலமட்டும் இப்படி ஆண்களை உன் பின்னால அலைய வைக்க முடியும் என்று" அது பெரிய வேலை இல்லை தங்களால் முடியவில்லையே என்று கவலைப்படுபவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

பெண்கள் ஆண்களை தன் பின்னால் அலைய வைப்பது எப்படி

01 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.

02. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள்.

03 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக  இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை... அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.

04 .  நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள்.

05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.

06 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது  ஹாய்  மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள்.

07 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல் பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள் காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக பழகுவது போன்றே பழகுங்கள்.

08. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று  கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.

09. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள விடவேண்டாம்.

10 . இதுதான் முக்கியமானது....  எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

read more...

Monday 26 July 2010

திருந்தாத ஜென்மங்களை திருத்த புறப்பட்டு விட்டோம்.

மனிதர்களிடையே உயர்ந்த சாதிக்காரன் குறைந்த சாதிக்காரன் என்று சாதி வேற்றுமை பார்க்கின்ற ஒரு குட்டம் ஒருபுறமிருக்க. ( இது பற்றி விரிவான ஒரு பதிவு பின்னர் வரும்) சில விடயங்களிலே தனது மேலாதிக்கம் நிலைத்திருக்க வேண்டும் என்று சிலர் எதனை செய்யவும் தயங்கமாட்டார்கள். 

பல விடயங்களை எழுதவேண்டும் என்று நினைத்தாலும் இப்போது எங்கள் கிராமத்திலே களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி சிறி முருகன்  ஆலயத்திலே திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனால் நேரம் என்பது கிடைப்பதில்லை. காரணம் நானும் எனது நண்பர்களும் சமுக சேவைக்கென்றே எங்களை அர்ப்பணித்த வர்களாகிவிட்டோம்.  எமது சமுக சேவைகளில் சிலவற்றை இங்கே சென்று பார்க்கவும்



பல சமுக சேவைகளை செய்து வருகின்ற நாம் எமது மற்றுமொரு முயற்சியாக எங்கெல்லாம் எங்களால் உணவு கொடுக்க முடியுமோ (அன்னதானம்)  இயற்கை அழிவு மக்கள் இடம்பெயர்வு, ஆலயங்கள் போன்றவற்றில் உணவு வழங்குவதற்கு தீர்மானித்திருந்தோம். 


அதன் முதல் கட்ட நடவடிக்கையாக இந்த ஆலயத்திலே ஆலயத்துக்கு வரும் அடியார்களுக்கு  அன்னதானம் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்தோம் அப்போதுதான் பிரச்சினை ஆரம்பமானது.

நாங்கள் ஆலயத்திலே அன்னதானம் வழங்கப்போகின்றோம் என்ற விடயத்தை ஆலய நிர்வாகத்திடம் சொன்னபோது.  அந்த ஆலயத்திலே வருடம்தோறும் அன்னதானம் வழங்குகின்ற ஒரு குழுவினர் எங்களை அன்னதானம் கொடுக்கக் கூடாது தாங்கள் மட்டுமே இங்கே அன்னதானம் கொடுக்க வேண்டும் என்று  எங்களோடு வாக்குவாதப்பட ஆரம்பித்துவிட்டனர்.  


இந்த விடயத்தில் ஆலய நிர்வாக சபையும் ஆலயத்திலே வேறு எவரும் அன்னதானம் வழங்கக் கூடாது என்று சொல்லிவிட்டனர்.  


இன்று பல இடங்களிலே இவ்வாறுதான் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.  சில உரிமைகளை தாங்களே வைத்துக் கொண்டிருக்க வேண்டும். என்று நினைக்கின்றனர். பல ஆலயங்களிலே இது போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன அவை பற்றி பின்னர் விரிவாக எழுத இருக்கின்றேன்.  இங்கே ஒரு சிலரிடம் மட்டுமே சில உரிமைகள் இருக்கவேண்டும் தாங்கள் பெயரெடுக்கவேண்டும் என்ற நிலை இருக்கின்றது. 


இந்த ஆலயத்தைப் பொறுத்தவரை பிரசித்தி பெற்ற ஒரு ஆலயம். பல அடியவர்கள் வருகின்ற ஆலயம்.  இங்கே இன்னொருவர் அன்னதானம் கொடுக்க முடியாத நிலைக்கு வைத்திருக்கின்றார்கள் என்பதனை நினைக்கும்போது கவலையாக இருக்கின்றது.


யார் தடுத்தாலும் பரவாயில்லை என்று நாங்கள் பல எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அன்னதானம் கொடுப்பதென முடிவெடுத்துவிட்டோம்.  திருந்தாதவர்களை திருத்த வேண்டும்.  இத்தனைக்கும் மேல் நாம் எவருடைய உதவி பெற்றும் அன்னதானம் கொடுக்க நினைக்கவில்லை எங்களது பணத்தைக் கொண்டுதான் இந்த ஏற்பாடுகளை செய்கின்றோம். 


ஒரு ஆலயத்திலே ஒரு பக்தன் அன்னதானம் கொடுப்பதையே தடை செய்யும் மனிதர்கள் உண்மையிலே மனிதர்களா?
read more...

Sunday 25 July 2010

கிழக்கின் சுயநிர்ணயமும் சில உண்மைகளும்

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 28  


ஜேர்மனியிலுள்ள ஸருட்காட் நகரில் இலங்கையர் ஜனநாயக அரங்கு சார்பில் 2006-11-11இ12 ஆம் திகதிகளில் இடம் பெற்ற அரசியல் மாநாட்டில் எம்.ஆர்.ஸ்ராலின் அவர்களால் “கிழக்கின் சுயநிர்ணயம்” எனும் தலைப்பில் ஆற்றபட்ட உரை.

அன்பார்ந்த நண்பர்களே தோழர்களே!

இந்த அரங்கில் உரையாடுவதற்காக ‘கிழக்கின் சுயநிர்ணயம்’ எனும் தலைப்பு நிர்ணயிக்கப்பட்டமையானது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். சிலவேளைகளில் கிழக்கு மாகாணம் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சனைப்பாடுகளை ஒட்டிய உரையாடல்கள் ‘பிரதேசவாத நோக்கிலிருந்து எழுபவை என்கின்ற ஒரு தவறான புரிதலும் உங்களில் சிலரை ஆட்கொண்டிருக்கலாம். எனினும் இங்கு கூடியிருப்போரில் பெரும்பாலானோர் மாற்று கருத்துகளின் இருப்புக்காக உயிரையே கொடுத்து போராடும் பாரம்பரியத்தில் வருபவர்கள் என நான் நம்புகிறேன். எனவே பலமுனைகளிலும் ஒடுக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுஇ அலைக்கழிக்கப்பட்டுஇ சிதறடிக்கப்பட்டுள்ள மாகாணமொன்றின் குரலாக ஒலிக்கப்போகும் எனது உரையை பொறுமையுடன் புரிந்து கொள்ள முயலுமாறு தயவாக கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழ் பேசும் மக்கள் எனும் வகையில் நாம் அனைவரும் இணைந்து அல்லது நம்மில் பெரும் பாலானோர் இணைந்து நமது மக்களுக்கான விடுதலையைவேண்டி தமிழீழம் எனும் கோரிக்கையை முன்வைத்து இதுவரை போராடி வந்துள்ளோம் இக்கோரிக்கைக்கு வித்திட்டவர்கள்இ அதை ஜனநாயகவழியில் முன்வைத்தவர்கள்இ அதற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் என பலதரப்பட்டோரும் இங்கு கூடியுள்ளோம் இந்தவேளையில் விரும்பியோ விரும்பாமலோ அந்த தமிழீழம் நம்கண்முன்னாலேயே பலவீனப்பட்டு நிற்பதை நாம் ஏற்று கொண்டே ஆகவேண்டும்.
இந்த நிலையில்தான் தமிழீழம் எனும் கோட்பாட்டின் அடிப்படையான வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என்கின்ற நிலையிலிருந்து விலகி கிழக்குமாகாணம் தனது சுயநிர்ணயம் பற்றி பேசவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையை நாம் ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பதற்கு முன்னால் அந்த மாகாணம் எதிர்கொள்ளுகின்ற ஒடுக்குமுறைகள் என்ன? அதனது தனித்துவம் என்ன? பாரம்பரியம் என்ன? வரலாறு என்ன? என்பன குறித்து எமது பார்வைகளை திருப்புதல் அவசியம் என கருதுகின்றேன்.

வரலாற்று காலத்திற்கு முற்பட்ட புராண இதிகாசங்களில் இராமாயணம் எனும் இதிகாசம் முக்கியமானதொன்றாகும். இந்த இராமாயண காலத்தில் இலங்கையின் வேந்தனாக இராவணன் விபரிக்கப்படுகின்றமை நாமறிந்ததொன்றே. இந்த இராவணன் ஆட்சியின் இருபெரும் தடயங்களான திருகோணமலையையும்இ உகந்த மலையையும் தன்னகத்தே கொண்டதுதான் கிழக்கு மாகாணம் ஆகும்.

வரலாற்று ரீதியாக இலங்கையின் மிக புராதன வரலாற்று தடயங்களை கொண்ட இராசதானியாக கருதப்படுவது ‘தீகவாவி’ ஆகும். புதைபொருள் ஆராய்சிகளின் அவசியங்களுக்கு அப்பால் நேரடியாகவே இப்பழைய இராசதானியின் இடிபாடுகளை இத் தீகவாவியில் இன்றும் காணலாம். இந்த தீகவாவியிலிருந்துதான் கிழக்கு மாகாணத்தில் காணப்பட்ட அரசோற்றும் மையங்களின் உருவாக்கம் தொடங்குவதை நாம் அவதானிக்கலாம். அப்பாறை மாவட்டத்தினுள்ள அக்கரைபற்றுக்கு மேற்கே சுமார் 22 கி.மீ. தூரத்தில் இந்த தீகவாவி காணப்படுகின்றது. இதுபற்றிய சரித்திர சான்றுகளில் புத்தர் இங்கே விஜயம் செய்தமை முக்கியமானதொன்று(1). மகாவம்சத்தில் காணப்படுகின்ற இக்குறிப்புகள் சுமார் 2500 வருடகால வரலாற்று தொடர்ச்சிகொண்ட அரசியல் பாரம்பரியம் கிழக்குமாகாணத்திற்கு உண்டு என்பதை எழுத்துரு வடிவில் எமக்கு சொல்லிநிற்கின்றது. கி.மு. 145 ல் இலங்கை மீது படையெடுத்து வந்த எல்லாளன் திருகோணமலையில் தரையிறங்கியமையும்(2)இ சுமார் 44 ஆண்டுகள் இலங்கை முழுவதிலும் கோலோச்சிய அவனை தோற்கடித்த துட்டகைமுணுவின் படைகள் தீகவாவியிலிருந்தே புறப்பட்டமையும் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே கிழக்கு மாகாணத்தில் ஒவ்வொரு பிரதேசங்களும் அரசியலில் கொண்டிருந்தகேந்திர முக்கியத்துவத்தினை எடுத்தியம்புகின்றன. மாகமம் எனும் இடத்திலிருந்து புறப்பட்ட துட்டகைமுணுவின் படைகளில் மட்டக்களப்பு தமிழர்களே(3) நிறைந்திருந்தார்கள் என்கின்ற உண்மை கிழக்கிலங்கையில் இனஇ மதஇ வேறுபாடுகள் அற்ற ஒரு வாழ்வியல் முறை நீண்டகாலமாகவே பலம்பெற்று இருந்துவந்துள்ளதை புலப்படுத்துகின்றது. ஆனால் இந்த உண்மைகள் எமது வரலாறுகளில் இருந்து மறைக்கப்பட்டிருக்கின்றது. சிங்கள வரலாற்று ஆய்வாளர்கள் துட்டகைமுணுவை சிங்கள குறியீடாக திரிபுபடுத்தினர். பதிலுக்கு தமிழ் வரலாற்றாய்வாளர்களும் எங்கிருந்தோ வந்த அன்னியனான எல்லாளனை இலங்கை தமிழர்களின் குறியீடாகவும் ஆக்கி மகிழ்ந்தனர். இந்த இனநோக்கு வரலாற்று எழுதுதலே கிழக்கிலங்கையின் உயிர்மூச்சான இனஇ மதஇ வேறுபாடற்ற ஒரு மக்கள் பண்பாட்டினை இன்று அந்த மாகாணம் இழந்து நிற்பதற்கான ஊற்றுக்கண் ஆகும்.

இன்றைய உலகிலுள்ள பூகோள வரைபடங்களுள் மிகதொன்மையானது கி.மு. 147 ல் ‘தொலமி’ என்பவர் வரைந்த படமாகும். கடந்த மாதம் இலண்டனில் இடம்பெற்ற ஏலமொன்றில் 3.9 மில்லியன் பவுண்களுக்கு விற்பனையான இந்த வரைபடத்தில் இலங்கை வரையப்பட்டுள்ளதோடு கல்முனைபிரதேசம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது கல்முனை துறைமுகமானது கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த கிரேக்கஇ பாரசீக வியாபாரிகளின் இறங்கு துறையாக இருந்துள்ளதனையும் அதுகொண்டிருந்த சர்வதேச வர்த்தக ரீதியான முக்கியத்துவத்தினையும் இதனூடாக அறியமுடிகின்றது.

இப்படியாக கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் தொட்டு உருவாகியிருந்த கிழக்கு மாகாணத்தின் அரசியல் வரலாறு தீகவாவிஇ மாகமம் போன்ற தலைநகரங்களிலிருந்து கோலோச்சிய உருகுணை ராச்சியரத்துடன் இணைந்தே இருந்து வந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகாலம் நீடித்த உருகுணை ராச்சியத்தின் அரசர்கள் சிங்களவர்களாக இருந்தபோதும் கிழக்கிலங்கையின் ஏழுவகையான குறுநில சுயராச்சிய பிரிவுகளின் இராசபிரதானிகளாக தமிழர்களே ஆண்டு வந்திருக்கின்றனர். கி.பி. 8 ம் நூற்றாண்டில்தான் இந்த நிலையில் முதன்முதலாக மாற்றம் நிகழ்ந்தது. அனுராதபுரத்தை தலைநகராக கொண்டியங்கிய இராசரட்டயின் கீழ் கிழக்கின் பெரும்பகுதிகள் செல்லநேரிட்டது. அதன்பின்னர் 10 நூற்றாண்டில் சோழரது படையெடுப்பு இலங்கை முழுவதையும் ஆக்கிரமித்த வேளைகளில் கிழக்கின் அரசுரிமை மீண்டும் அந்நியர் வசப்பட்டது. இராஜேந்திர சோழனுடைய படைகள் கிழக்கை அடிமைகொண்ட வேளைகளில் ஆதமுனை என்றழைக்கப்பட்ட திருக்கோவிலில் இருந்த சேகு அசனாபள்ளி கரவாகு என்றழைக்கப்படும் கல்முனையிருந்த முகைதீன் பள்ளி போன்றவற்றை அழித்தொழித்தனர்(4). இந்த செய்திகள் இற்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கின் கரையோர பட்டினங்களில் முஸ்லிம்களின் வாழ்விடங்கள் மதவழிபாட்டு தலங்களுடன் கூடிய பலமானதொரு சமூக அமைப்பாக இருந்திருப்பதனை எடுத்து காட்டுகின்றது.

இலங்கையில் 1017 ம் ஆண்டு தொடங்கிய சோழராட்சி 1070 ல் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் 11ம்இ 12ம் நூற்றாண்டுகளில் கிழக்கிலங்கை உட்பட்ட உருகுணை ராச்சியத்தின் கீழ் இருந்த பெரும்பகுதிகள் பொலநறுவையிலிருந்து ஆண்ட பராக்கிரமபாகுவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. இந்த பராக்கிரமபாகுவின் ஆட்சி காலத்தில் மட்டக்களப்பில் குறுநிலமன்னனாக தினசிங்கன் எனும் தமிழ் மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். எனினும் அவனும் அவனது தமிழ் குடிகளும் சமண சமயத்தை பின்பற்றுவோராயிருந்தனர்(5). கரவாகு பகுதியாகிய கல்முனையை ரகுகுமான் ராஜா என்பவர் ஆண்டுகொண்டிருந்தார். இந்த தினசிங்கனது ஆட்சி மீண்டும் இந்தியாவிலிருந்து படையெடுத்து வந்த கலிங்க மாகோன் என்பவரால் தோற்கடிக்கப்பட்டது(6).

இந்த கலிங்க மாகோனே விஜயகாலிங்க சக்கரவர்த்தி எனும் பெயரில் இலங்கை முழுவதையும் ஆண்டான் அவ்வேளைகளில் பழுகாமம் அவனது கிழக்கு பிரதேசத்தின் உபராசதானியாக இருந்தது. கரவாகு பகுதிக்கு திஸ்ஸ அலிபோடி ஆளும் அதிகாரம் பெற்ற இராச பிரதானியாக இருதுள்ளார்(7).
1225 ல் தொடங்கிய மாகோனது ஆட்சி 1256 ல் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் முன்பு போலவே கிழக்கிலங்கை உருகுணை ராச்சியத்தின் கீழ் வந்தது(8). இந்நிலை ஐரோப்பியரது காலணித்துவ ஆட்சி தொடங்கும்வரை நீடித்ததை நாம் காணலாம். இந்த வரலாற்று குறிப்புகளின் பின்னணியின் இடையிடையே ஏற்பட்ட சோழஇ பாண்டியஇ ஆட்சிகாலங்களை தவிர சுமார் 2500 வருடகாலத்தின் பெரும் பகுதியில் கிழக்கிலங்கையானது தீகவாவிஇ மாகமம்இ கண்டி போன்ற தலைநகரங்களை கொண்டிருந்த உருகுணை ராச்சியத்துடன் இணைந்தே காணப்பட்டது. காலாகாலமாக கிழக்கில் வாழ்ந்த மக்கள் தமிழையே பேசினாலும் பௌத்தமும்இ சைவமும்இ இஸ்லாமும்இ ஏன் சமணமும் கூட அவர்களால் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. இனமத வேறுபாடுகள் அவர்களை கூறுபோட்டிருக்கவில்லை. உருகுணையின் கீழ் இருந்த போதும் அம்மக்கள் தத்தம் தனித்துவங்களை பேணும் வகையிலான வன்னிமைகள் என்றழைக்கப்ட்ட சுயராச்சிய பிரிவுகளை பேணியே வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பாக நோக்கற்பாலது.

காலணித்துவத்தின் வருகை

இலங்கையில் காலணித்துவ ஆட்சி ஏற்பட்டபோது மூன்றுவகை அரசுகள் காணப்பட்டிருந்தன. கோட்டை ராட்சியம்இ கண்டி ராட்சியம்இ யாழ்ப்பாண ராட்சியம் எனும் அரசுகளே அவையாகும். 1505 இல் முதன் முதலாக இலங்கையில் காலடி வைத்தவர்கள் போர்த்துக்கேயராகும். இவர்கள் 1597 இல் கோட்டை ராட்சியத்தை தமது முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதன் பின்னர் 1619 இல் யாழ்பபாண ராட்சியத்தையும் போர்த்கேயர் தோற்கடித்து கைப்பற்றினர். இந்த வேளைகளில் கொட்டியாரம் என்றழைக்கப்பட்ட திருகோணமலைஇ மட்டக்களப்புஇ பழுகாகமம்இ பாணமை போன்ற நால்வகை வன்னிமைகள் கண்டிராட்சியத்துடன் இணைந்தே இருந்தன. இறுதியாக 1815 இல் ஆங்கிலேயேர் கண்டிராட்சியத்தை வீழ்த்தும் வரை தமது சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காமல் கண்டி ராட்சியத்தின் பிரசைகள் கடுமையாகப் போராடி வந்தனர்.

1818 ல் ஆங்கிலேயருக்கு எதிராக கண்டியில் ஏற்பட்ட கிளர்ச்சியானது ஆங்கிலேயர் தமது ஆட்சியமைப்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை அவர்களுக்கு உணர்த்தியது. கண்டி பிரசைகளின் தேசிய உணர்வானது ஆங்கிலேயருக்கு அச்சமூட்டியது. எனவேதான் எதிர்கால பாதுகாப்பினை உறுதிபடுத்தி கொள்வதற்காக கண்டி ராச்சியத்தை கூறு போடும் முயற்சியில் ஆங்கிலேயர் இறங்கினர். 1832 இல் கோல்புறுக் – கமறோன் குழுவினரின் ஆலோசனையின் பெயரில் இலங்கை 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மாகாணங்கள் எனும் புதிய நிர்வாக அலகு உருவாக்கப்பட்டது. இதன்படி கண்டிராச்சியத்தின் தூரப்பகுதிகளான (திசாவைகள்) அனுராதபுரத்தின் வடக்கேயிருந்த சில பகுதிகள் மற்றும் மன்னார்இ காளிதேசம் என்று அழைக்கப்பட்டு நீண்டதொரு வரலாற்று காலத்தில் தனியரசாய் திகழ்ந்த முல்லைத்தீவு போன்றவற்றை யாழ்ப்பாண இராச்சியத்துடன் இணைத்து வடமாகாணமாகவும்இ கண்டிராச்சியத்தின் தீகவாவி அடங்கிய மட்டக்களப்பு திருகோணமலை பகுதிகளை ஒருங்கிணைத்து கிழக்கு மாகாணமாகவும் புதிய அலகுகள் உருவாக்கப்பட்டன(9).

ஆட்சி அதிகார ரீதியாக மட்டும் அல்ல கிழக்கு மாகாண மக்கள் தமக்கான சமூகவியல் அம்சங்களிலும் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அங்கு வாழும் மக்களில் இருந்தும் அதிகளவில் வேறுபட்டே நிற்கிறார்கள் என்பதுவும் மிகமுக்கியமானதொன்றாகும்.
கிழக்கு மாகாண மக்கள் தமது கலைஇ கலாசாரம்இ பண்பாடுஇ சடங்கு சம்பிரதாயங்கள்இ மற்றும் உணவு முறைகளிலும் கூட தமக்கான தனித்துவமான பழக்கவழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். இவைகளில் பெரும்பாலானவை ஆரியகலப்பற்றவையாகவும் தாய்வழி உரிமைகளை பேணுபவையாகவும்இ மற்றும் சாதிவாரியாக தீண்டாமை இறுக்கமற்றவையாகவும் காணப்படுகின்றது. இப்பண்புகள் ஒரு சமூகவியல் பார்வையில் முற்போக்கு அம்சங்கள் நிறைந்தனவாகும். இந்த அம்சங்களடங்கிய சமூக ஒழுங்குகளையும் அவைசார்ந்த பண்பாட்டு கூறுகளையும் பேணிபாதுகாப்பதற்காக கிழக்குமாகாணம் தனக்கான தேசவழமைகளை காலா காலமாக கைக்கொண்டு வந்திருக்கின்றது. அந்தவகையில் 1876 ல் ஊ.டீசுஐவுழு என்பவரால் கிழக்கில் நிலவிய இந்த தேசவழமைகள் ஒரு நூலாக தொகுக்கப்பட்டு ‘முக்குவர் சட்டம்’ எனும் அந்தஸ்தை பெற்றது(10).

யாழ்ப்பாண மக்களிடையே காணப்பட்ட இத்தகைய தேசவழமைகள் எப்படி 1707 இல் தொகுக்கப்பட்டு யாழ்ப்பாண தேசவழமை சட்டம் எனும்(11) சட்ட அந்தஸ்தை பெற்றனவோ அதேபோன்று கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் அல்லாத தமிழர்களுக்குரியனவாக இந்த முக்குவர் சட்டமும் ஆங்கிலேயரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பேசுகின்ற மொழியில் தமிழர்களாகவே இருந்தபோதும் கிழக்கும் வடக்கும் ஒரே விதமான சட்டத்திட்டங்களால் கட்டுப்படுத்தப்பட முடியாதவையாக உள்ளன என்பதை இங்கு கூடியுள்ள யாவருக்கும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். இதே போன்றே கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கும் அவர்களது மத நம்பிக்கையின் அடிப்படையிலமைந்த இஸ்லாமிய சரியா சட்டகோவை இலங்கையில் காலணித்துவ ஆட்சியாளர்களினாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை நம் எல்லோரது கவனத்திலும் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.

இந்நிலையில்தான் நாடுபிடித்துவந்த அன்னியரின் வருகை எமது நாட்டினுடைய அரசியலில் மட்டுமல்ல சமூக பொருளாதார கட்டமைப்புகளிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. அவையனைத்தும் முழுஅளவிலான இலங்கையருக்கு பாதகமான அம்சங்களையே பெருமளவில் ஏற்படுத்தியிருந்தாலும் யாழ்ப்பாணத்தவருக்கு இந்த அன்னியரின் வருகை பெரும் வரப்பிரசாதமாய் அமைந்தது. காலணித்துவ ஆட்சியாளர்களின் நவீன அரசியல் செயற்பாடுகளும் நீதி, நிர்வாக சேவைகளும் பெருந்தோட்டத் துறையினூடு விரிவடைந்த போக்குவரத்துஇ தபால்சேவை போன்றவைகளும் அறிமுகப்படுத்திய உத்தியோகங்கள் யாழ்ப்பாண மக்களை கவர்ந்தது. பெருந்தோட்டத் துறையின் மேற்பார்வையார்களாகவும் நீதிநிர்வாகத் துறையின் அடிமட்ட உதவியாளர்களாகவும் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு கைகட்டி சேவை புரிந்த இவர்கள் காலப்போக்கில் நிர்வாகத் தேர்ச்சி பெற்ற உத்தியோகத்தர்களாகவும்இ அரச அதிகாரிகளாகவும்இ ஆசிரியர்களாகவும் இலங்கை எங்கும் வியாபித்தனர். இந்த போக்கு ஆட்சியாளர்களிடம் சம்பளம் பெறும் கணிசமான ஒரு கூட்டத்தினராக யாழ்ப்பாணத்தவரை அடையாளம் காட்டியது.

இந்த உத்தியோகத்தர்களின் சமூக பரம்பலே யாழ்ப்பாணத்தில் ஒரு மத்தியதர வர்க்கத்தின் தோற்றத்துக்கு வித்திட்டது. வெள்ளை ஆதிக்கத்தின் பாதுகாவலராக தம் வாழ்வைத் தொடங்கிய இவ்வர்க்கத்தினரே படிப்படியாக இலங்கையருக்கான அரசியல் போக்குகளை நிர்ணயிப்பவர்களாகவும் உருவாகினர்.படிப்பறிவு, பணம், அந்தஸ்து என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இலங்கை மக்களுக்கான அரசியல் கோபுரத்தை வெள்ளயைர் அத்திவாரம் இட்டனர். ஆகவேதான் இந்த அத்திவாரம் ஆனது யாழ்ப்பாணத்திலேயே கட்டப்பட முடிந்தது. அங்கிருந்து உருவான அரசியல் வாதிகளே இலங்கையின் முதல் தலைமுறை அரசியல் தலைவர்களாகவும் இலங்கை அரசியலில் போக்கை தீர்மானிக்கும் சக்தி பெற்றவர்களாகவும் பரிணமித்தனர். இலங்கையின் சிங்கள மக்கள் இடத்திலும் இதுபோன்றதொரு மத்தியதரவர்க்கம் உஇருவாகியிருந்தது. அங்கு ராஜ பரம்பரையினர் என தம்மைச் சொல்லிக்கொள்ளும் கொவிகம எனப்படுகின்ற ஒருவித சமூக அந்தஸ்துகொண்ட பிரிவினரே மேற்படி மத்தியதர வர்க்கமாக உருவாகியிருந்தனர். இவர்கள் சிங்களவராய் இருந்தபோமுதும் கராவஇ சாலக என்கின்ற சாதிப்பிரிவினரான சிங்களவரை தம்மிலும் கீழானவர்களாகவே கணித்து வந்தனர்.

இந்த வகையில் தமிழ் – சிங்கள உயர்வர்க்க கூட்டின் பிரதிநிதியான சேர்.பொன்.இராமநாதன் எனும் யாழ்ப்பாணத்தவர் வெள்ளையரிடையே பெருமதிப்பைப் பெற்றிருந்தார். ஆங்கிலேயருக்கு மிக நெருங்கிய விசுவாசியான இவர் 1911 ம் ஆண்டு படித்த இலங்கையருக்கான முதல் செனட்சபை உறுப்பினர் ஆகும் வாய்ப்பை பெற்றார். கல்வியறிவு பெற்றவர்களுக்கும் சொத்துரிமைகொண்ட தனவந்தர்களுக்கு மட்டுமே அந்நிலையில் வாக்களிக்கும் தகுதி இருந்தது. ஆதலால் மொத்த சனத்தொகையில் சுமார் 4 வீதமான மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டுமே இந்த வாய்ப்பை பெற்றிருந்தனர். இவ்வகையில் அரசியல் பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் அதிகாரம் கொண்டவர்கள் தமிழ் – சிங்கள வேறுபாடுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. இனவேறுபாடுகளை தாண்டிய உயர்தட்டு வர்க்க ஒற்றுமையே இந்த இரு சமூகங்களின் பிரதிநிதிகளிடம் காணப்பட்டது. 1911ம் ஆண்டு தேர்வில் சேர்.பொன்.இராமநாதன் தெரிவு செய்யப்பட்டமை பற்றி அவ்வேளை கவனர் ஆக இருந்த சேர்.கியு.கிளிபார்ட் கூறுகையில் “படித்த இலங்கையரை தேர்ந்தெடுப்பதில் தமிழர் சிங்களவர் என்ற இனவேறுபாடு இல்லாமல் தமிழர் உயர் சாதியினரும் சிங்கள உயர் சாதியினரும் சேர்ந்த ஓர் உயர்சாதியினரையே தெரிவுதெய்தார்கள்” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1917 ம் ஆண்டு தேர்விலும் இது மேலும் உறுதியானது கரையோர சிங்களவரான மாக்கஸ் பெர்னாண்டோ என்பவரை விடுத்து தமிழராய் ஆனபோதும் வெள்ளாள சமூகத்தை சேர்ந்தவரான சேர்.பொன்.இராமநாதனையே சிங்களவரும் சேர்ந்து தெரிவுசெய்தனர். 1919 இல் உருவான இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராக யாழ்ப்பாண தமிழரான சேர்.பொன்.அருணாசலம் என்பவர் தெரிவானார். ஆனாலும் இன்னிலையை சுதந்திரத்தைநோக்கிய சீர்திருத்தங்களும்இ மாற்றங்களும் தொடர்ந்து அனுமதிக்கவில்லை. இலங்கை முழுக்க தமது ஆதிக்கத்தை பேணிவந்த யாழ்ப்பாண மத்தியவர்க்கத்தினரின் எதிர்கால அந்தஸ்தை அரசியல் மாற்றங்கள் கேள்விக்குறியாக்கியது. அதுவரைகாலமும் இலங்கையின் அரசியல்இ சமூகஇ பொருளாதார கட்டுமானங்களில் நிரம்பியிருந்த யாழ்ப்பாணத்தவரின் செல்வாக்குகளை தொடர்ந்துவந்த காலங்களிலும் காப்பாற்றி கொள்ளும் எத்தனிப்போடு அன்றைய அதிகார ருசி கொண்ட தலைமைகள் முன்னெடுத்த நகர்வுகளே இலங்கை தமிழர்களின் வாழ்வை சீர்குலைத்தது. இத்தலைமைகள் அரசியல் விழிப்புணர்வுகள் பரந்துபட்ட மக்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தனர். அதற்காகவே வெள்ளையாட்சியாளர்களின் அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்கவும் துணிந்தனர். குறிப்பாக அரசியல் சீர்திருத்தத்திற்கான டொனமூர் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் எல்லா பிரசைகளுக்கும் தமது தலைமைகளை தெரிவுசெய்யும் வாய்ப்பை வழங்கும் “சர்வசனவாக்குரிமை” வழங்கப்படுவதை கடுமையாக எதிர்த்து விளக்கமளித்தனர். சர்வனவாக்குரிமை வழங்கப்பட்டால் அது “இந்து மத வாழ்க்கை முறைக்கு பழிகேடு விளைவிக்கும் என்றும்”கும்பலாட்சிக்கு வழிவகுக்கும்” என்றும் வாதிட்டார் சேர்.பொன்.இராமநாதன். அதாவது யாழ்ப்பாணத்திலுள்ள உயர்சாதிப்பிரிவை தவிர மற்றயோரும் கிழக்கிலிருக்கும் முஸ்லிம்கள்இ முக்குகர்கள்இ மற்றும் சூத்திரர்கள் அனைவருமே சமூகத்தின் கீழ்நிலையில் இருக்க வேண்டுமென்பதற்காக பகிரங்கமாக கீழ்தரமான கருத்துகளை தெரிவித்தார் இவர். கிழக்கிலங்கை மக்களெல்லோரும் அரசியலுக்கு வந்தால் அதுவே கும்பலாட்சிக்கு வழிவகுக்கும் என்பதே அவரது வாதமாயிருந்தது. ஆனபோதும் வெள்ளையர்களது நிர்வாகம் இவ்விதவாதங்களை கவனத்தில் கொள்ளாது சர்வனவாக்குரிமை வழங்குவதை உறுதிசெய்தது. சர்வசனவாக்குரிமை விரைவில் வழங்கப்படப்போகுதென்ற எதிர்பார்ப்புகள் உறுதியானதும் இதனால் தமது தலைமைகளை காப்பாற்றி கொள்வதற்காக தமிழ்மக்களை ஏமாற்றி தம்வசம் இழுக்கும் சூது விளையாட்டுக்களில் ஈடுபடத்தயாராகினர் யாழ்ப்பாணத் தலைமைகள்.

இலங்கைத் தேசியகாங்கிரசில் தமிழருக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுடன் 1921 இல் அந்த அமைப்பை விட்டு வெளியேறினார் சேர்.பொன்.அருணாசலம். 1923 இல் இலங்கைத் தமிழ் லீக் எனும் அமைப்பைத் தொடங்கிய கையோடு தமிழீழம் பெறுவதே அதனது குறிக்கோள் என கடுமையான பிரச்சாரத்தில் இறங்கினார்.(12)

1923 இல் நடந்த இலங்கைத் தமிழ் லீக் கூட்டத்தில் “தமிழீழம் என்ற நம் குறிக்கோளை அடைய வேண்டுமானால் எம்மிடையே ஒற்றுமையை வளர்ப்பதோடுஇ எமது கொள்கைகளை நாம் என்றும் கடைப்பிடிக்கவேண்டும். எமது பாரம்பரியத்தை நினைவு கூருவதோடு எமது தனித்துவத்தை நாம் பாதுகாக்கவேண்டுமானால் ஒரு பலமுள்ள சமுதாயமாக எம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்” என சேர்.பொன்.அருணாசலம் முழங்கினார்(13). தமிழர் ஒற்றுமைக்கோஇ தமிழர் பாரம்பரியத்திற்கோஇ தமிழர் தனித்துவத்துக்கோ அன்றைய நிலையில் (1920 களில்) சிங்களவர்களால் எந்தவித ஊறும் விளைவிக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக ஆங்கில மமதையில் ஆட்சி அதிகார பீடமாக உயர்ந்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்தத் தலைமைகளே தமிழ்மக்களின் ஒற்றுமை குறித்து அக்கறைப்படாது இருந்தவர்கள். சொந்தமக்களின் உரிமைகளை மறுத்து சிங்கள அதிகார பீடத்துடன் அதிகாரத்தை பங்கிட்டுக்கொண்டிருந்தவர்கள். தமிழர் பாரம்பரியத்தைகுழிதோண்டிப்புதைத்து தாய்மொழியை ஈனமொழியாக்கியவர்கள். அப்படியிருக்க அவர்களே இவற்றுக்காக அழுவது என்பது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதற்கு ஒப்பாய் இருந்தது.

ஆகவே எந்தவொரு பாரிய அச்சுறுத்தலையும் தமிழ் சமூகம் எதிர்கொள்ளாத வேளையில் வெறும் யாழ்ப்பாணத்து மேல்தட்டினரின் நலங்களுக்கு பலம் சேர்ப்பதற்காகவே இந்த தமிழீழ கோரிக்கை 1923 இல் இருந்தே போலியானதாக எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த எவ்விதத்திலும் அர்த்தபுஷ்டியற்ற ஒரு போலிப் பிரச்சாரத்தினூடு கிழக்கு மக்களையும் உள்வாங்கி ‘வாக்கு பொறுக்கி’ அரசியல் நடத்துவதற்காகவே இந்த தமிழீழத்தை முன்வைத்தனர் என்பதை இனியாவது தமிழர்களாகிய நாமும் கிழக்கு சமூகங்களும் புரிந்துகொள்ள வேண்டும். வெற்று இனவாதக் கூச்சலாகவும், விசமத்தனமானதொன்றாகவும் உருவாக்கப்பட்ட ஒரு நச்சுப்பிரச்சாரமே இந்த தமிழீழம் என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல.

1944 ஆண்டு கொண்டுவரப்பட்ட இலவசக் கல்வித்திட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் எதிர்ப்பதில் ஜீ.ஜீ.பொன்னம்பலம்இ மகாதேவாஇ சிறிபத்மநாதன் என்கின்ற தமிழ் பெரும் தலைவர்கள் ஒற்றுமையாக நின்று எதிர்த்தனர். மத்தியதர வர்க்கம் நிறைந்த யாழ்ப்பாணத்தைத் தவிர கிழக்கிலங்கை மக்களும்இ தென்னிலங்கை மக்களும் கல்வியறிவு பெறக்கூடாது என்பதில் இந்த யாழ்ப்பாணத் தலைமைகள் மிகக் கவனமாக செயற்பட்டனர். பாமர மக்களுக்கு அறிவுப் பொக்கிசத்தைத் திறந்துவிட முனைந்த சிங்கள அரசியல்வாதியான டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா போன்றவர்களுடன் ஒப்பிடுகையில் நமது தலைமைகளே துரோகங்களின் பிறப்பிடமாய் இருந்திருக்கிறார்கள்.கல்வியில் பின்தங்கியிருந்த கிழக்கிலங்கை தென்னிலங்கைப் பிரதேசங்களுக்கு அவ்வாய்ப்புகள் கிடைக்காது தடுக்க முயன்ற யாழ்ப்பாணத் தலைமைகளின் வஞ்சகத் தன்மையை நாம் புரிந்துகொள்ள வரலாறுகள் இதுவரை வாய்ப்பளிக்கவில்லை.

ஐக்கியதேசியக் கட்சி அரசாங்கத்தில் அவ்வேளையில் அமைச்சராய் இருந்த அருணாசலம் மகாதேவா என்பவரை தமிழினத் துரோகி என்றும் தமிழ் பேசும் மக்களின் மீட்பர் தான் மட்டுமே என்றும் திரும்பத் திரும்ப பேசி 1947 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஜீ.ஜீ.. ஆனால் அந்த தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு டி.எஸ்.சேனநாயக்காவின் இரு அமைச்சு பதவிகளுக்காக ஐக்கியதேசியக் கட்சி ஆட்சியில் பொன்னம்பலமும் பங்கெடுத்தார்.

15-நவம்பர்-1948 அன்று பாராளுமன்றத்தில் யு.என்.பி. அரசு கொண்டுவந்த பிரஜாவுரிமைச் சட்த்தின்மீது தமிழ்காங்கிரஸின் பொன்னம்பலம் தலைமை ஆதரவைத் தெரிவித்தது. இதன்மூலம் 10 இலட்சம் தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமையை ஒரேநாளில் பறித்த யு.என்.பி முதலாளித்துவ அரசினது அநாகரிக செயலுக்கு பொன்னம்பலம் உடந்தையாயிருந்தார்.
இந்த செயற்பாட்டின்மீதும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான ஒரு குழுவினர் தமிழ்காங்கிரசின் தலைமைமீது முரண்பட்டனர். இந்த முரண்பாடுகளின் தொடர்ச்சியாகவே இலங்கை தமிழ்காங்கிரசில் இருந்து செல்வநாயகம் வெளியேறி “தமிழரசுக்கட்சி” என்கின்ற ஒரு அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார்.

“தமிழ்த் தேசியம்” என்கின்ற ஒன்று நோக்கி முஸ்லிம்இ மலையகஇ கிழக்குவாழ் தமிழர்களை அணிதிரட்டும் பணியில் அவர் ஈடுபட்டார். மதஇ பிரதேச எல்லைகளைத் தாண்டிய தமிழ்பேசும் மக்களுக்கான ஒருமித்த “ஆன்மா” ஒன்றினை கட்டியமைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார் என இதனைக் கொள்ளலாம். பரந்துபட்ட தமிழ் பேசும் மக்களுக்கான சமஸ்டிக் கோட்பாடுகளுடனும் மலையக மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான கோரிக்கைகளுடனும் மக்களைச் சந்தித்த தமிழரசுக்கட்சி 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில் கடுமையானதொரு தோல்விக்கு முகம்கொடுக்க நேரிட்டது.

1949 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக் கட்சி தான் முதன்முதலாக எதிர்கொண்ட தேர்தலில் மட்டக்களப்பினது கல்லோயக் குடியேற்றத்திட்டத்தையும்இ திருகோணமலை கந்தளாய்க் குடியேற்றத்திட்டத்தையும் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்தனர். திட்மிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் தமிழ் மக்களது பாரம்பரிய தாயகம் பறிபோவதாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இந்தப் பிரச்சாரங்களின் பின்னணியில் உண்மையிலேயே தேர்தலை நோக்கிய அணிதிரட்டலே மேற்கொள்ளப்பட்டது என்பதே உண்மையாகும். 1941 ஆம் ஆண்டு டி.எஸ்.சேனநாயக்காவினால் முன்னெடுக்கப்பட்ட இந்தக் குடியேற்றத்திட்டத்தில் சிங்களவருக்கென்று விசேடமான சலுகைகள் எதுவுமே அளிக்கப்பட்டிருக்கவில்லை. காணிக்கச்சேரிகளில் பொதுக்கூட்டங்கள் நடாத்தப்பட்டு கல்லோயா குடியேற்றத்திட்டத்தில் குடியேற விரும்புவர்களது பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. மட்டக்களப்பு தமிழர்களில் யாருமே அங்கு போய்க் குடியேறுவதை விரும்பவில்லை. ஏனெனில் சுமார் 10000 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையுடைய கிழக்கு மாகாணத்தில் அவ்வேளை இரண்டு லட்சத்துக்கும் குறைவானோரே வசித்து வந்தனர். நிலத்துக்கு பஞ்சமற்ற கிழக்கு மாகாண மக்கள் கல்லோயாவில் போய்க் குடியேறுவதற்கும் கரும்புத் தோட்டத்தில் வேளை செய்வதற்கும் எவ்வித அவசியமும் இருக்கவில்லை. இந்தநிலையில் கல்லோயாவை சிங்களவர் வந்து குடியேறுவதையிட்டு மட்டக்களப்புத் தமிழர்களோ முஸ்லிம்களோ பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இதன்பின்னரே சிங்களவருக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட குடியேற்றத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட 44 கிராமங்களில் ஆறு கிராமங்களில் மட்டுமே தமிழர்கள் குடியேற விண்ணப்பித்திருந்தனர். இதன் காரணமாகவே எஞ்சிய 38 கிராமங்களும் சிங்களவருக்கு வளங்கப்பட்டது. ஆனால் இந்த உண்மைகள் எமது வரலாறுகளில் மறைக்கப்பட்டிருக்கின்றன. நீர்வளம் குறைவாக இருந்த பல ஏக்கர் கணக்கான நெற்காணிகள் இந்த குடியேற்றத்திட்டத்தின் காரணமாக பசுமைமிகு தரைகளாக மாறின. இந்த நிர்வளங்களல் கால்வாய்த் திட்டங்களினால் குடியேற்றத்திட்டங்களில் அண்டிவாழ்ந்த தமிழர்களது நெற்காணிகளும் நீhப்பாசன வசதி பெற்றன. இந்த உண்மை நிலைகளை கவனத்தில் கொள்ளாமல் தமிழ்இ தமிழன்இ தமிழ் பிரதேசம் என்று இனவெறியைக் கிளறுகின்ற நடவடிக்கைகளையே யாழ்ப்பாணத் தலைமைகள் செய்தன.

இதேபோன்றே திருகோணமலையில் இடம்பெற்ற கந்தளாய்க் குடியேற்றத்திட்டத்தையும் தமக்கு வாய்ப்பாக திரித்து தமிழரசுக் கட்சியினர் அரசியலாக்கினர்.

மலையக மக்களின் வாக்குரிமைப் பிரச்சனைகள் மீதும் கிழக்கிலங்கை மக்களது குடியேற்றப் பிரச்சனை மீதும் எவ்வளவு தூரத்திற்கு யாழ்ப்பாண சமூகம் அக்கறை காட்டியதென்கின்ற வேதனைக்குரிய செய்தியே இத்தோல்வி மூலம் வெளியானது. சுயபாஷைகளுக்கு அரச அந்தஸ்து கோருகின்ற குரல்கள் சமூகத்தின் கீழ்தட்டு மக்களிடம் இருந்து ஒலிக்கத்தொடங்கின. “உண்மையில் ஆங்கிலத்தை அரசமொழி ஸ்தானத்தில் இருந்து நீக்கி சிங்கள-தமிழ் மொழிகளை அரசமொழிகளாக மாற்ற வேண்டும் என்கின்ற இயக்கம் 1920 ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்துவிட்டது.”

இந்த சுயபாஷைகளை அரசகரும மொழியாக்குவதில் தடையாக இருந்தவர்கள் யாரென்பதை இனவாத கூச்சல்களில் இருந்து வெளியேவந்து இனியாவது எமது மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஜீ.கே.டபிள்யு.பெரேராஇ ஜே.ஆர்.ஜெயவர்த்தனாஇ எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா போன்ற தலைவர் முன்வைத்த சுதேசமொழிக்கொள்கைகளுக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். மட்டக்களப்பு நல்லையாஇ டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா. தஹாநாயக்காஇ டி.பி.ஜாயாஇ மட்டக்களப்பு எஸ்.ஓ.கனகரெட்னம் போன்ற மூவினத்தைச் சேர்ந்த தலைவர்களும் சுயபாசைகளை அரசகருமமொழியாக்குவதில் அக்கறைகாட்டி அரசசபையில் உரையாற்றினர். இவர்கள் எல்லாம் ஒருமித்து ஆதரவு தருகையில் பெருந்தலைவர்இ தமிழ்காங்கிரஸ்இ தமிழீழம் என்று புரளிகளைக் கிளப்பி தமிழ் மக்களின் தலைவனாக வலம் வந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆங்கிலத்தைக் காப்பதற்காக சுயபாஷைகளை எதிர்த்தமை எப்படிப்பட்ட துரோகம்?

இந்த துரோகத்தின் பின்னால் மறைந்திருந்த சக்திகள் யார்? யாழ்ப்பாண உயர்வர்க்கத்தினுடைய ஆங்கில ஆதிக்கம் இலங்கை எங்கும் தக்கவைக்கப்படுவதற்கேற்ப “ஆங்கிலம் மட்டும்” என்கின்ற மொழிக்கொள்கையில் விடாபிடியாய் நின்ற ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்றவர்கள் எப்படி அடிமட்ட மக்களினதும்இ கிழக்கு மாகாண மக்களினதும் தலைவர்களாய் இருக்கமுடியும்?ஆங்கில பிடியில் இருந்து மாறவிரும்பாத தமிழ்காங்கிரஸ் போன்ற கட்சிகளின் வெகுஜன விரோதப் போக்குகளே காலப்போக்கில் தென்னிலங்கையில் சுடர்விட்ட சுயபாஷைகளுக்கான இயக்கத்தை தமிழை விடுத்து தனிச்சிங்களத்துக்கான இயக்கமாக குறுக்கிவிடும் வாய்ப்புகளை வழங்கியது.

1956 ஆம் ஆண்டு சிங்கள அரசகரும மொழிச்சட்டம்.

1920களில் இருந்து இலங்கையில் உருவான சுயபாஷைகளுக்கான இயக்கம் காலப்போக்கில் ஏற்பட்ட சமூகஇ மதஇ பொருளாதாரஇ கலாச்சார நெருக்கடிகளினாலும்இ தேர்தல் அரசியலை நோக்கிய தமிழ் – சிங்கள அரசியல்வாதிகளின் குறுகிய நலன்களினாலும் உருமாறி சிங்கள அரசகருமமொழிச்சட்டம் ஆக குறுக்கப்பட்டு இறுதியில் (1956இல்) நிறைவேற்றப்பட்டது. இதனையே தனிச்சிங்களச்சட்டம் என திரிவுபடுத்தி சிங்கள பேரினவாதத்தின் செயற்பாடாக தமிழ் தலைமைகள் இன்றுவரை வர்ணித்து வருகின்றன. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டமையை தமிழர்கள் எதிர்கொண்ட விதம் தொடர்ந்துவந்த இலங்கை அரசியலில் பாரிய விளைவுகளுக்கும் மாற்றங்களுக்கும் இட்டுச்சென்றது.

இந்தச் சட்டத்தினூடு இலங்கையின் அரசகரும மொழியாக சிங்களம் பிரகடனப்படுத்தப்பட்டது உண்மைதான். அது காலணித்துவ மொழியான ஆங்கிலத்தை அகற்றும் ஒரு செயற்பாட்டின் இறுதிக்கட்டம் எனும் வகையில் சாதகமான ஒன்றாகவும் சிறுபான்மைமொழியான தமிழையும் அதே தரத்துடன் அரசகரும மொழியாக்கத் தவறியது எனும் வகையில் பெருந்தன்மையற்ற ஒன்றாகவும் மட்டுமே பார்க்கப்பட்டிருக்க வேண்டும்;. தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் தமிழுக்கும் சம அந்தஸ்து கேட்டு போராட முன்வந்தது நியாயமானதொன்று. ஆனால் தமிழ் பேசும் பகுதிகளில் இந்தப் போராட்டம் நியாயமான வடிவங்களில் முன்னெடுக்கப்படவில்லை. “தனிச்சிங்களச் சட்டம்” என்று திரும்பத் திரும்ப பிரச்சாரப்படுத்தியதன் மூலம் இச்சட்டமானது தமிழ்மொழியை அழித்து சிங்களத்தை மட்டும் இலங்கைவாழ் மக்கள் எல்லோர்மீதும் திணிக்கும் ஒரு சட்டமாக உருவகிக்கப்பட்டது. இந்த உருவகிப்பானது சிங்களப் பெரும்பான்மை இனம்மீது ஒரு அச்ச உணர்வை தமிழ் பேசும் மக்கள் எனும் வகையில் கிழக்கு மாகாணத்தமிழர்களிடமும் ஏற்படுத்தியதில் வியப்பு ஏதும் இல்லை.

இதற்கு வசதியாக வடகிழக்குப் பிராந்தியத்துக்கு வெளியே அரச உத்தியோகத்தர்களாய் இருந்த பல யாழ்ப்;பாணத்தவர்கள் இடைநிறுத்தப்பட்டமை அமைந்தது. கிழக்கு மாகாணத்தில் இருந்து வெகுசிலரே இச்சட்டத்தினால் (தென்னிலங்கைப் பகுதியில்) வேலைவாய்ப்பினை இழந்தனர். இது எப்படியிருந்தபோதும் ஆங்கிலம் தெரியாத சிங்கள பாமர மக்களிடையே பணிபுரிகின்ற அரச உத்தியோகஸ்தர்கள் அம்மக்களுக்குப் புரியக்கூடிய சிங்கள மொழியில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும் என கேட்கப்படுவதில் எவ்வித தவறும் இருக்கமுடியாது. இதையே தமிழ் பகுதியில் பணிபுரிந்தவர்களிடமும் சிங்களத்தைக் கற்கக் நிர்ப்பந்தித்திருந்தால் அதுவே இனவாதமாக இருக்கமுடியும். அதைவிடுத்து பொத்தாம் பொதுவாக “சிங்களம் தெரியாவிட்டால் அரசபணி புரியமுடியாது” என்கின்ற நிலை ஏற்பட்டுவிட்டதாக திரிபுபடுத்தல் பிரச்சாரங்களை தமிழரசுக்கட்சி மேற்கொண்டது. இப்படியான ஒரு மாயையை தமிழ் மக்களிடையே பரப்பும் விதமான ஒருபிரச்சாரம் அதிக கல்விபெறாது தமது கிராமிய பொருளாதார வாழ்வினில் நிம்மதியுடன் வாழ்ந்து வந்த கிழக்கிலங்கை மக்களிடத்தில் “கலவர” மனநிலையை உருவாக்கியது. தமிழ் மொழியின் எதிர்காலப் பாதுகாப்புச் சம்பந்தமாக பாரிய ஆபத்தொன்;றை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக யாழ்ப்பாணத்து அரசியல்வாதிகள் மேற்கொண்ட பிரச்சார யுத்தி கிழக்கிலங்கை மக்களை வெகுவாக அச்சமடையச் செய்தது. சிங்களக் கிராமங்களைக் கொண்ட நீண்ட எல்லைப்புறங்களை மிக அண்மித்ததாக உடைய கிழக்கிலங்கை மக்களுக்கு தமது எதிர்காலப் பாதுகாப்பு என்ன என்கின்ற கேள்விகள் எழுந்தது. இதன்காரணமாக தமது பாதுகாப்பு உணர்வினைக் கருத்தில் கொண்டு செயற்படும் பெரும்பான்மை தமிழர்களைக் கொண்ட வடமாகாணத்து அரசியலுடன் இணைந்து கலப்பதே ஒரே வழியென கிழக்கிலங்கை எங்கும் பொதுசன மனநிலையொன்றை தோற்றுவிப்பதில் யாழ்ப்பாணத்து அரசியல்வாதிகள் வெற்றி கண்டனர்.

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் “கொழும்பு” அரசியலை நிராகரித்து வடகிழக்கின் முலை முடுக்கு எங்கும் தமிழ் அரசியலை நுழைத்தவர் எனும் வகையில் 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் சா.ஜே.வே.செல்வநாயகம் பெரு பெற்றியைப் பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கான தலைமையை ஏற்றார்.ஆனால் 1956 ஆம் ஆண்டு வெற்றிக்குப் பின்னர் இந்த செல்வநாயகம் எனும் தலைமையும் சரிஇ தமிழரசுக் கட்சியும் சரி நடந்துகொண்ட விதம் கடுமையான விமர்சனத்துக்குரியது. அதாவது 1957 ஆண்டு கொண்டுவரப்பட்ட நெற்காணிச் சட்டத்தினை எதிர்த்தமைஇ 1957 இல் நிறைவேற்றப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் மலையக மக்களை காட்டிக்கொடுத்து துரோகம் இழைத்தமை, 1965 ஆம் ஆண்டில் யு.என்.பி. அரசுடன் அமைச்சுப் பதவிகளுக்காக இணைந்து விலைபோனமை போன்ற வரலாற்றின் நிகழ்வுகள் இவர்களின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தப் போதுமானவை.

1965 ஆம் ஆண்டு தேர்தல் வரை தமிழரசுக்கட்சியின் “ஸ்ரண்ட்” அரசியல் வடகிழக்குப் பகுதிகளில் அதிகமாகவே களைகட்டியது. சத்தியாக்கிரகப் போராட்டம் (1961)இ தமிழரசு தபால் சேவைப் போராட்டம் (1961)இ 1964 இல் சிறிமா சாஸ்திரி ஒப்பந்த எதிர்ப்புப் போராட்டம் என்று பெரும் கலக சூழல் ஒன்றை வடகிழக்குப் பகுதிகளில் இவர்கள் ஏற்படுத்தினர். ஆனால் இவை அனைத்துமே இந்த போராட்டங்களில் மையங்கொண்டிருந்த அரசியல் கோரிக்கைகளைவிட தேர்தலை ஒட்டிய வாக்கு சேகரிப்பு நாடகங்களாகவே உண்மையில் இருந்தன. ஒவ்வொரு தேர்தலின் பின்னரும் இப்போராட்டங்கள் எல்லாம் மூட்டை கட்டப்பட்டு ஒரு மூலைக்குள் போடப்படும். அதைத்தொடர்ந்து அமைச்சு பதிவிகளுக்காகவும்இ தாம் சார்ந்த வர்க்கத்தினரின் சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் யு.என்.பி. அரசுடன் கொஞ்சுக் குலாவி வந்ததன் மூலம் இதனை அறிந்துகொள்ள முடியும். 1965 இல் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியை வைத்து யு.என்.பி. இன் சார்பில் அரசமைக்கவிருந்த டட்லி சேனநாயக்காவுடன் தமது சலுகைகளை உறுதித் படுத்திக்கொள்வதற்காக இரவிரவாக ரகசியப் பேச்சுக்களில் தமிழ் தலைவர்கள் ஈடுபட்டனர். இதன்பலனாக கொழும்பில் செனட்டராக வாழ்ந்து வந்த திருச்செல்வம் என்பவரை அமைச்சராக்குவதற்காக டட்லி சேனநாயக்காவிடம் இருந்து உறுதி வாங்கிக் கொண்டனர். அதற்கு கைமாறாக யு.என்.பி. அரசு அமைவதற்கு தமிழரசுக் கட்சி எம.பிக்கள் ஆதரவு தெரிவிப்பதற்கு உறுதி கொடுத்தனர். கேவலம் தமது ஆதரவு சக்திகாளாய் இருந்த கொழும்பு கனவான் ஒருவரை அமைச்சராக்குவதற்காக தமிழ் மக்களை உணர்ச்சி பீறிட வைத்து தெருவில் இறக்கி சத்தியாக்கிரகம் செய்தவர்கள் அனைத்தையும் கைவிட்டனர்.

அதுவரைகாலமும் இவர்கள் சொல்லிவந்த கிழக்குமாகாண விவசாயிகளது குடியேற்றப் பிரச்சனையும் கிடப்பிலே போட்டனர். இதற்கு அப்பால் கிழக்கில் வாழ்ந்த லட்சக்கணக்கான விவசாயிகளின் நீர்ப்பாசனப் பிரச்சனைகளையோஇ நீண்ட கடல்பரப்பினைக் கொண்ட கிழக்கு மாகாண கடல் தொழிலாளிகளின் மீன்பிடித்துறைசார்ந்த பிரச்சனைகளையோ பின்தங்கிய நிலையில் இருந்த கிழக்கு மகாண தமிழ் முஸ்லிம் மக்களின் கல்விநிலை குறித்த அக்கறைகளையோ இவர்கள் தமது அரசியல் கட்சியின் கொள்கைகளுக்கான அடிப்படை விசயங்களாகக் கொள்ளவில்லை. மக்களின் தேவைகளை முன்னிறுத்தி அதற்காகப் போராடுவதினூடாக தலைமை வகிக்கும் வாய்ப்பினை பெற்றுக்கொள்வதைவிட ஹர்த்தால்இ வன்முறைஇ கிளர்ச்சி போன்ற குறுக்கு வழியினூடு தலைவர்கள் ஆவதிலேயே தமிழரசுக்கட்சியினர் முனைப்புக் காட்டினர்.1965 – 1970 ஆம் ஆண்டுவரை எவ்வித சலனமும் இன்றி அமைதியாக யு.என்.பி. ஆட்சியில் பங்கெடுத்துவந்த தமிழரசுக்கட்சியினர் 1970 ஆண்டில் கிடைத்த தோல்வியைத் தொடர்ந்தே இந்த வன்முறை வழிகளைத் திட்டமிட்ட ரீதியில் அதிகரித்து வந்திருப்பதனைக் காணலாம்.

மேற்படி எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஊடாக 1977 ஆம் ஆண்டுத் தேர்தல்வரை அரச பிரதிநிதிகளையும் அரசபடைகளையும் எதிர்ப்பதுதான் தமிழ் மக்களின் கடமை எனும் புதிய மரபொன்றினை தமிழர்விடுதலைக் கூட்டணி தோற்றுவித்தது. அதுமட்டுமன்றி சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த தமிழ் பிரதிநிதிகளை தமிழ் மக்களின் துரோகி என பட்டம் சூட்டிவிடுவது என்பதினையும் வழக்கமாகக்கொண்டனர். இதனூடாக தமது அரசியல் எதிரிகளை எதிர்கொண்டு வெல்லுவது என்பதைவிட அழித்து வெல்லும் குறுக்கு வழியை நோக்கி தமிழர்விடுதலைக் கூட்டணியினர் தமது கவனத்தைத் திருப்பினர். அமைச்சர்களுக்கு கறுப்புக்கொடி காட்டுதல்இ குடியரசுத் தினத்தை பகிஸ்கரித்தல் என்பதெல்லாம் தனி ஈழம் ஒன்றை அமைப்பதற்கான முன்னோடி நிகழ்வுகளாக மக்கள் உணரவைக்கப்பட்டனர். ஆனால் தமிழரசுக்கட்சியினர் யு.என்.பி. ஆட்சியில் இருந்த 1965 – 1970 காலப்பகுதியில் தாமும் அந்த அரசில் பங்கெடுத்திருந்தனர். இந்தவேளைகளில் இத்தகைய அரச எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒன்றில் கூட ஈடுபடாதிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்டதை ஏன் அதை பகிஸ்கரிக்கக் கோரவில்லை? ஏன் ஒரு சந்தர்ப்பத்தில் கூட கிழக்கிலங்கையில் தமிழரசுக்கட்சிக்காக உழைத்த தலைவர்களுக்கு அமைச்சுப்பதவி பெறும் அந்த வாய்ப்புகள் வழங்கப்படவில்லை? 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில் வடமாகாணத்தில் ஒருவரைத் தவிர பெரும்தலைவர்கள் எல்லோரும் படுதோல்வி அடைந்த நிலையில் திருகோணமலையில் தமிழரசுக்கட்சிக்கு பெரு வெற்றியீட்டிக் கொடுத்த இராஜவரோதயம் அவர்களுக்கு என் அந்த வாய்ப்புக்கொடுக்கப்படவில்லை? செனட்சபை உறுப்பினர்களான மட்டக்களப்பு கல்விமான் கனகரெட்னம் அவர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. கொழும்புச் சீமான் திருச்செல்வத்திற்கு பெற்றுக்கொடுக்கப்ட்ட உள்ளுராட்சி பதவி 1956 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்களின் தனிப்பெரும் தலைவனாக தொடர்ந்து வெற்றியீட்டி வந்த சொல்லின் செல்வர் இராஜதுரைக்கு ஏன் வழங்கப்பட்டிருக்கக் கூடாது? தமிழரசுக்கட்சியின் தலைமை கதிரையைக்கூட அலங்கரித்த பெருந்தலைவரும் தனித்தமிழ் தொகுதியான பட்டிருப்பின் பிரதிநிதியுமான மு.இராசமாணிக்கம் அவர்கள் அமைச்சுப் பதவிக்கு தகுதி அற்றவரா? என்கின்ற கேள்விகள் அன்று இல்லாவிடினும் இன்று கிழக்கிலங்கை மக்களிடையே கிளறப்படத் தொடங்கியுள்ளன. தமிழ் தமிழ் என்று கிழக்கிலங்கை மக்களை ஏமாற்றிக்கொண்டு அவர்களின் ஆதரவினால் வருகின்ற எல்லாவித அரசியல் இலாபங்களையும் வடக்குக்குள் மட்டுமே சுருட்டிக்கொள்ளும் தமிழரசுக்கட்சியினரின் கபடத்தனங்களை இன்று கிழக்கிலங்கை மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளார்கள்.

இதே போன்று 1971 ஆம் அண்டின் கல்வி தரப்படுத்தல் என்கிற சட்டத்தினூடு யாழ்ப்பாணம் எதிர்கொண்ட பாதிப்புகளை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சனைகளாக பிரச்சாரப்படுத்தி அதில் வெற்றியும்கண்டனர். ஆனால் இந்தப் பிரச்சனையின் உள்நோக்கம் யாழ்-அதிகார-வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் நோக்கு மட்டுமேயன்றி தமிழ் மக்களின் நலன் அல்ல.
இனிமேலாவது அம்பலத்திற்கு வரவேண்டிய ஒன்று.1975 ஆம் ஆண்டின் இலங்கையின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி சிங்களவர்கள் 72 வீதம்மாகவும் இலங்கைத் தமிழர்கள் 11.2 வீதம் மாகவும் இந்தியத் தமிழர்கள் 9.3 வீதம் மாகவும்முஸ்லிம்கள் 7.1 வீதம் மாகவும் ஏனையோர் 0.5 வீதமாகவும் காணப்பட்டனர். இதேவேளை 1970ஆம்ஆண்டில் பல்கலைக்கழக அனுமதியை நோக்கும் இடத்து 40.8 வீதத்தினை பொறியியல்துறையிலும்இ 35 வீதத்தினை விஞ்ஞானத்துறையிலும்இ 50 வீதத்தினை மருத்துவத் துறையிலும்இலங்கைத்தமிழர்கள் பெற்றிருந்தனர். ஒரு நாட்டின் சனத்தொகையில் 11 வீதத்தினை மடடுமேகொண்டுள்ள ஒரு இனம் அந்நாட்டின் பல்கலைக்கழக அனுமதிகளில் மேற்படி அதீத இடங்களைஅனுபவித்து வருவதை ஏனைய சமூகங்கள் அpங்கீகரிக்க வேண்டும் என்று கோருவது எவ்வகையிலும்நியாயமானதாகாது.

இந்த “மாவட்ட ரீதியான கல்வி தரப்படுத்தல்” என்பதன் உள்ளீடு என்ன? கல்வி வாய்ப்புகள் மீதான ஒதுக்கீடு என்பதற்கப்பால் ஏதுமில்லை. இந்தியாவில் தங்களுக்கான தகுதிகளை பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்த தலித்துகளுக்காக வழங்கப்படும்இட ஒதுக்கீடுகளுக்கு ஒப்பானது இந்த தரப்படுத்தல் எனலாம். இலங்கையில் கல்விரீதியாக வளர்ச்சியடைந்த கம்பஹாஇ கொழும்புஇ யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளின் மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழக வாய்ப்புகளை அதிகம் பெற்றுக் கொண்டிருந்தனர். அன்றைய கணிப்பின்படி இருபத்திரெண்டு மாவட்டங்களில் ஏனையவற்றில் பெரும்பாலானவை பல்கலைக்கழகத்திற்கான புகுமுக வாய்ப்புகளை பெறவாய்ப்பின்றி இருந்தனர். இன்னிலையில் இலங்கைத் தீவின் சமத்துவத்திற்கான திட்டங்களில் ஒன்றாகவே இத்திட்டம்முன்னெடுக்கப்பட்டது. பின்தங்கிய மாவட்டங்களுக்கு முடிந்தவரை அதிக இடங்களை பல்கலைக்கழகங்களில் பெற்றுக்கொடுப்பதற்காக இத்திட்டம் பயன்பட்டது. அதுவரை
பெரும்பகுதி பல்கலைக்கழக இடங்களை அபகரித்து வந்த மேட்டுக்குடிகளுக்கும், வாய்ப்புகள்கிடைக்காது அவ்விடங்களை நழுவ விட்டுவந்த அடித்தட்டு மக்களுக்கும் இருந்த ஒரேவித
அளவுகோல் நிறுத்தப்பட்டது. மேட்டுக்குடிகளை அதிகம் கொண்டிருந்த வாய்ப்புகள் கூடிய
மாவட்டங்கள் அதிக எல்லைப் புள்ளிகளை பெறவேண்டும் என்றும் பின்தங்கிய (பிற்படுத்தப்பட்ட) பிரதேசங்களடங்கிய மாவட்டங்கள் என இனங்காணப்பட்டவை குறைந்த எல்லை புள்ளிகளுடன் பல்கலைக்கழக வாய்ப்புகளை பெறலாம் என்பதாக தரப்படுத்தப்பட்டன. ஓவ்வொரு மாவட்டத்திலும் தரங்களுக்கேற்ப குறைந்த பட்ச தகுதிக்கான எல்லை புள்ளிகள் வௌ;வேறாக நிர்ணயிக்கப்பட்டன.
இதன் பின்னர் குறிப்பாக யாழ்ப்பாணம்இ கம்பஹாஇ கொழும்பு போன்ற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பெற்றுவந்த அதிகப்படியான இடங்களை இழந்தனர். அதேவேளை அவ்விடங்கள் பின்தங்கிய மாவட்ட மாணவர்களுக்கு கிடைப்பது ஏதுவாயிற்று. குறிப்பாக தமிழர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களான மன்னார்இ வவுனியாஇ முல்லைத்தீவுஇ திருகோணமலைஇ மட்டக்களப்புஇ அம்பாறை என்பன (கவனிக்க இவையனைத்தும் தமிழ்தேசியம் கட்டமைத்த புவியியல் எல்லைக்குள் வருபவை) பயனடைந்தன. அத்தோடு இந்திய வம்சாவளியினரான மலையக தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் பகுதிகளான பதுளை, நுவெரெலியாஇ மாத்தளை போன்ற பிரதேசங்களின் மாணவர் சமுதாயம் முதன் முதலாக பல்கலைக்கழக வாசல்களை மிதிக்கும் வாய்ப்புகளை இந்த மாவட்டரீதியான தரப்படுத்தலே வழங்கியது. இதுபோன்றுதான் விவசாயிகளையும் மீனவர்களையும் அதிகம் கொண்டிருந்த அம்பாந்தோட்டை, மாத்தறை, மொனறாகலை பீட்டர் கெனமன், என். எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி. சில்வா போன்ற இடதுசாரிகள் இச்சட்டத்தை ஆதரித்தனர் என்பதை கவனிக்க தவறக்கூடாது அதுமட்டுமல்ல இச்சட்டம் கொண்டுவரப்படவேண்டும் என அரசிற்கு அழுத்தம் கொடுத்ததிலும் இவ் இடதுசாரிகளின் பங்கு அதிகமாயிருந்ததை அறிய முடிகிறது.இந்த கல்வி தரப்படுத்தல் அமுலான பின்பு அதுவரை முழு இலங்கைக்குமான உயர்கல்வி வாய்ப்புகளை தமக்குள் பங்கிட்டுக்கொண்டிருந்த மேட்டுக்குடிகளின் மாவட்டங்கள் பாதிப்படைந்தது உண்மை.

மாவட்ட ரீதியான தரப்படுத்தலும்இ ஒதுக்கீடும் 1974 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பும் இது இனரீதியாகவோஇ மொழிரீதியாகவோ தமிழர்களை மட்டும் பாதித்ததாக சொல்வது பிழை இதன் பாதிப்பை எதிர்கொண்ட உயர்வர்க்கத்தினரில் தமிழ் மேட்டுக்குடியினரும் அடங்குவர். அதேவேளை இதனால் லாபமடைந்தவர்கள் சிங்களவர்கள் மட்டுமல்ல அறிக்கையின் முன்பகுதியில் குறிப்பிட்டதுபோல் தமிழ் பேசும் அதிக மாவட்டங்கள் இதனால் பயனடைந்தன.கம்யூனிச விரோதமும் உயர்சாதித் தடிப்பும் கொண்டியங்கிய தமிழரசுக் கட்சியினர் 1970 ம் ஆண்டுத் தேர்தலில் படுதோல்வியடைந்தனர். இடதுசாரிகளது சாதி எதிர்ப்புப் போராட்டங்களின்போது தமிழரசுக்கட்சியினரது காட்டிக் கொடுப்புகள் அத் தேர்தலில்வடபகுதியில் அவர்களை படுதோல்விக்கு தள்ளியது. தமிழ் தளபதி என்றும்இநல்லூர் சிங்கம்என்றும் அழைக்கப்பட்ட பெரும் தலைவர்கள் மக்களிடையே அம்பலமாகினர். இன உணர்வுகளை கிளறிதமிழ் தேசிய வெறிய+ட்டுவது மட்டுமே வாக்கு வேட்டைகளுக்கு உகந்த ஒரே வழியாக எஞ்சிநின்றது. யாழ் மத்தியதர வர்க்கத்தினரது அபிலாசைகள் ஒரு தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளாக முன்னிறுத்தப்பட்டது மட்டுமன்றி யாருக்கு இச்சட்டம் ஒதுக்கீடுகளையும்இ வாய்ப்புகளை வழங்கியதோ அவர்களைக் கொண்டே அதனை எதிர்க்கும் வண்ணம் கிழக்கிலங்கை தமிழர்கள் திசைதிருப்பப்பட்டனர். தாம் ஆதரிக்க வேண்டிய சட்டத்தை எதிர்க்கும்படி யாழ் தவிர்ந்த ஏனைய ஏழு மாவட்டத் தமிழர்களும் ஏமாற்றப்பட்டது மிகவும் பரிதாபமான அதிசயம்.

இதே வேளை யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஆசிரியர்களாக கடமை புரிந்துவந்த யாழ் மத்தியதர வர்க்க உத்தியோகத்தர்கள் தமது பரம்பரையினரை மன்னார்இ வவுனியாஇ முல்லைத்தீவு, திருகோணமலைஇ அம்பாறைஇ மட்டக்களப்பு போன்ற பகுதிககளில் உள்ள பாடசாலைகளில் பதியச் செய்து அங்கே பரீட்சை எடுக்க வைத்து தாம் இழந்துபோன வாய்ப்புகளை மீண்டும் பெற்றுக்கொண்டனர். ஏழ்மையான மாவட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய ஒதுக்கீடுகளின் ஊடாக கிடைக்கப்பெற்ற பல்கலைக்கழக இடங்கள் யாழ்ப்பாண ஆசிரியர்களினால் களவாடப்பட்ட உண்மைகள் வெட்கத்துக்குரியன.

வட்டுக்கோட்டை

கல்விதரப்படுத்தலை தமக்கு சாதகமாக பயன்படுத்திய கூட்டணியினர் தமது கோரிக்கைகளுக்கு பலன் சேர்க்கும் நடவடிக்கைகளாக ஒரு மாநாட்டை நடாத்த தீர்மனித்தனர். இம்மநாட்டில் வடகிழக்கை இணைத்து தமிழீழ தாயகத்தை வென்றெடுப்பதே நோக்கம் என தீhமானம் நிறைவேற்ற ஏற்பாடுகள் ஆகியிருந்தது. கிழக்கில் இருந்தும் மலையகத்தில் இருந்தும் சென்ற தலைமைகள் இக்கோரிக்கையின் பொருத்தமின்மையை சுட்டிக்காட்ட முற்பட்ட வேளையில் அவை கருத்தில் கொள்ளப்படவில்லை. கே.டபிள்யு. தேவநாயகம்இ சௌ.தொண்டமான் போன்றோர் தமது பிரதேசங்கள் குறித்து எடுத்துக்கூறிய நியாயங்களை யாழ்ப்பாணத் தலைமைகள் கருத்தில் எடுக்கவில்லை. மாற்றுக்கருத்துக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் 14-மே-1976 இல் நிறைவேற்றப்பட்டது.

1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலும் இராசதுரையை ஓரங்கட்டிய அமிரும்எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மறைவிற்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராக வந்திருக்க வேண்டியவர் செ.இராசதுரையாகும். இவர் 1956 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியான மக்கள் ஆதரவுடன் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டு வந்திருந்தவர். ஆனால் அமிர்தலிங்கம் அவர்களோ தனது சொந்தத் தொகுதி மக்களாலேயே 1970 ஆண்டுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டவர். இந்த நிலையில் தமிழர்விடுதலைக் கூட்டணியின் தலைவராக அமிர்தலிங்கம் தெரிவுசெய்யப்பட்டமை யாழ்ப்பாணத்துக்கு வெளியே தமிழ்த் தலைமைகளின் பதவி போய்விடக்கூடாது என்கின்ற பிரதேச மேலாதிக்க தன்மை வாய்ந்தது எனக் கூறுவதில் என்ன தவறு இருக்கமுடியும். 1977 ஆம் ஆண்டு தேர்தலில் தனது வெற்றி வாய்ப்பில் சந்தேகம் கொண்ட அமிர்தலிங்கம் இறந்துபோன செல்வநாயகத்தின் அனுதாப வாக்குகளைப் பெற காங்கேசன் துறைத் தொகுதிக்கு தாவினார். அதுமட்டுமன்றி மட்டக்களப்பில் இராசதுரையை தோற்கச் செய்வதற்கான சதி முயற்சிகள் பலவழிகளிலும் மேற்கொள்ளப்பட்டன. ஒரே கட்சிக்குள் நடந்த இந்த குழிபறிப்புகள் கிழக்கில் இருந்து ஒரு தலைமை உருவாகி விடக்கூடாது என்கின்ற கபட நோக்குக் கொண்டவையாகும். காசிஆனந்தனையும், மட்டக்களப்பு தேர்தல் களத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் இறக்கி போட்டியிட வைத்தன் மூலம் தமிழர்களது வாக்குகளைப் பிரிப்பதும் அதனூடாக இராசதுரையை தோற்கடிப்பதும் மிகத் திட்டமிடப்பட்ட முறையில் அமிர்தலிங்கத்தினால் நிறைவேற்றப்பட்டது என்கின்ற உண்மை மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் ரகசியமானதொன்றல்ல. காசியானந்தனுக்கு சார்பாக தேர்தல் மேடைகளில் பிரச்சாரம் செய்வதற்கென ஈழவேந்தன், கோவை மகேசன், மாவை சேனாதிராசா போன்றோரெல்லாம் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து மட்டக்களப்பில் முகாமிட்டிருந்தனர். ஆனாலும் யாழ்;ப்பாண சூதில் அகப்பட்ட காசியானந்தனை மட்டக்களப்பு மக்கள் படுதோல்வியடையச் செய்தனர். வழமைபோன்றே 1977 ஆம் ஆண்டுத் தேர்தலிலும் மட்டக்களப்பில் இருந்து இராசதுரை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார். திட்டமிடப்பட்ட வகையில் தம்மை ஓரங்கட்ட எடுக்கப்பட்ட முயற்சிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தவோ, அதற்காகப் போராடவோ முடியாத நிலையில் யு.என்.பி. அரசாங்கத்தில் சேர்ந்துகொண்டார். இதை பெருந்துரோகம் என்று அமிர்தலிங்கம் உட்பட யாழ்ப்பாணத் தலைமைகள் எல்லாம் கூக்குரலிட்டன. ஆனால் மட்டக்களப்பு மக்களுக்கு இது துரோகமாகப் படவில்லை. இராசதுரை கட்சிமாறிய மறுநாளில் வடகிழக்கு எங்கும் துரோகக் குற்றச் சாட்டுக்களே அள்ளிவீசப்பட்டது. ஆனால் மட்டக்களப்பில் அமைந்திருந்த இராசதுரையின் வீட்டின்மீது ஒரு கல்லெறிகூட விழவில்லை என்பது இந்த அரங்கில் பதிவுசெய்ய விரும்புகிறேன். அதேவேளை இந்தத் தேர்தலை தமிழீழம் பெறுவதற்கான ஆணைகோரும் தேர்தலாக த.வி.கூட்டணியினர் அறிவித்திருந்தனர். உதயசூரியனுக்கு முன்னால் இடப்படுகின்ற ஒவ்வொரு புள்ளடியும் தமிழீழத்துக்கான ஒவ்வொரு ஆணை என பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் கிழக்கில் வாழுகின்ற பல்லின மக்களினதும் அபிலாசைகள் இந்த தமிழீழத்தின் பின்னால் செல்ல விரும்பவில்லையென்பதை தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியது. கிழக்கு மாகாணத்தின் பல்லினச் சூழல் மட்டும் அல்ல இராசதுரைக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட யாழ்ப்பாணத்தின் சதியும் இந்தத் தேர்தலில் தமிழ் ஈழத்தை நிராகரித்தே பெரும்பாலான மக்களை வாக்களிக்கச்செய்தது. கிழக்கில் இருந்து 37 சதவீதத்தினர் மட்டுமே சூரியனுக்கு ஆதரவாய் வாக்களித்ததின் ஊடாக மிகத் தெளிவாக தமிழீழத்தை கிழக்கிலங்கை மக்கள் நிராகரித்திருந்தனர். அதுமட்டும் அன்றி அளிக்கப்பட்ட வாக்குகள் கூட சூரியனுக்கே இடப்பட்டிருந்தாலும் யாழ்ப்பாண மேலாதிக்கத்திற்கு எதிரான வாக்குகளாகவே அவை இருந்தன. அந்தவகையில் அவையும்கூட தமிழீழக் கோரிக்கையை நிராகரித்த வாக்குகளாகவே கொள்ளப்படவேண்டும். யாழ்ப்பாணத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேடைப் பேச்சாளர்கள் ஆதரித்த காசியானந்தனுடைய வீட்டுச் சின்னம் மட்டக்களப்பு மக்களால் தோற்கடிக்கப்பட்டது. அந்தவகையில் கிழக்கு மகாணத்தில் 67 சதவீதத்துக்கும் எதிரான மக்கள் தமிழீழத்தை நிராகரித்திருந்தனர். ஆனாலும் தென்னிலங்கையை பொறுத்தவரையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான சி.சு.கட்சி பரந்துபட்ட இலங்கையில் வரலாறு காணாத தோல்வியடைந்தமையினால் த.வி. கூட்டணி பிரதான எதிர்க்கட்சியாகும் அரிய வாய்ப்பைப் பெற்றது. இந்த எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பயன்படுத்தியே 1977 ஆண்டுத் தேர்தல் தமிழீழம் பெறுவதற்கான ஆணையை தமக்குத் தந்துவிட்டதாக த.வி.கூட்டணியினர் இன்றுவரைக் கூறிவருகின்றனர். உண்மையில் இது ஒரு பொய்ப் பிரச்சாரமேயாகும். கிழக்கு மாகாண மக்கள் விரும்பாத கோரிக்கை ஒன்றை அவர்கள் மீது திணித்து அவசியம் அற்ற போர்ச்சூழல் ஒன்றுக்கு அவர்களை இழுத்துவிட்டமை யாழ்ப்பாணத் தலைமைகள் செய்த மாபெரும் வரலாற்றுக் கொடுமையாகும்.

இந்தநிலையில் வடக்கில் தோன்றிய விடுதலை இயக்கங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இராணு நடவடிக்கைகள் முழுத்தமிழர்களுக்கும் எதிராக திருப்பப்பட்டதன் காரணமாகவே கிழக்கில் இருந்த மக்களும் தவிர்க்கமுடியாமல் அரச எதிர்ப்பினையும் இயக்கங்களை ஆதரிக்க வேண்டிய நிலையினையும் கைக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ப்பட்டார்கள்.

1983 ன் பின்னர் கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலோராயிருந்த உழைக்கும் (அடிப்படையிலேயே போர்க்குணாம்சம் கொண்ட) மக்களின் முழுமையான பங்களிப்பு உளப்ப+ர்வமானதாயும் ஒதுங்கி கொள்ளும் மனப்பாங்கற்றதாகவும் மாறியது. குறிப்பாக இந்தியாவில் தமிழ் தீவிரவாத இயக்கங்கள் பயிற்சி முகாம்களை அமைக்கத்தொடங்கிய போது அங்கு பயிற்சிபெற்ற போராளிகளில் கணிசமானோர் கிழக்குமாகாண (தமிழ்இ முஸ்லிம்) இளைஞர்களாக இருந்தார்கள்(14).

1) 1986 இல் புலிகளால் இவ்வியக்கங்கள் தடைசெய்யப்பட்டபோதும் P.டு.ழு.வு போன்ற அமைப்புகளுக்குள் உடைவுகள் ஏற்பட்ட போதும் தமிழகத்தில் இருந்த யாழ்ப்பாணத்து இளைஞர்களுக்கு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல கிடைத்த வாய்ப்புகள் போல் கிழக்கிலங்கை இளைஞர்களுக்கு கிடைத்திருக்கவில்லை. தமிழகப் பெருவீதிகள் எங்கும் அநாதரவாக அலைந்ததெல்லாம் இந்த கிழக்கு மாகாணத்து இளைஞர்களே.

2) ஆரம்பகாலங்களில் யாழ்ப்பாணத்தை காப்பாற்றுவதிலேயே எல்லா இயக்கங்களும் கவனங்கொண்டதால் கிழக்கு மாகாணம் சிறிலங்கா படைபலங்களின் எல்லாவித ஒடுக்குமுறைகளையும் ஒழுங்கை ஒழுங்கையாக அனுபவிக்க நேர்ந்தது. இதன்காரணமாக ப+சாஇ வெலிக்கடை போன்ற பாரிய தடுப்பு சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்ட இளைஞர்களில் கிழக்குமாகாண இளைஞர்களே ஆயிரக்கணக்கில் காணப்பட்டனர்.

2) கொக்கட்டிசோலை படுகொலை போன்ற சிறிலங்கா இராணுவத்தின் அழித்தொழிப்புகள் பிற்படுத்தப்பட்ட படுவான்கரைக் கிராமங்களான மகிழடித்தீவுஇ முனைக்காடுஇ முதலைக்குடா……. போன்ற கிராமங்களின் அத்தனை இளம் (சுமார் 400 க்கும் மேற்பட்ட) சந்ததியினரையும் அழித்தொழித்தது.

4) மாற்று இயக்கங்களை புலிகள் தடைசெய்தபோது யாழ்ப்பாணத்தில் மாட்டிகொண்டு உயிரிழந்த பல போராளிகள் கிழக்குமாகாணத்தை சேர்ந்தவர்களாகும் இதற்கு “கந்தன் கருணை” படுகொலை நல்ல உதாரணமாகும்.

5) இராணுவத்தினது தாக்குதல்கள் மூர்க்கத்தனமாக இருந்தவேளைகளில் வடமாகாண மக்கள் போல் தப்பியோடி இந்தியாவில் லட்சகணக்கில் தஞ்சம்புகும் வாய்ப்பு கூட புவியியல் ரீதியாக கிழக்கிலங்கை மக்களுக்கு வாய்த்திருக்கவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை எரியும் கிழக்கிலே வாழ்வை எதிர்கொள்வதே அவர்களின் விதியாயிற்று.

6) 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து ‘மாகாணசபையை’ புலிகளிடமிருந்து பாதுகாக்க பலவந்தமாக தமிழ்தேசிய இராணுவத்தில் இணைத்;துக்கொள்ளப்பட்ட சிறுவர்கள் கிழக்கிலிருந்தே அதிகம் பிடித்தெடுக்கப்பட்டார்கள். யாழ்ப்பாணம் போன்று வெளிநாடுகளுக்கு ஓடிதப்பும் ‘வாய்ப்பும் வசதியும்’ அவர்களுக்கு இருக்கவில்லை. இதனால் ஐ.P.மு.கு. வெளியேற்றத்தின் பின்னர் புலிகளால் தமிழ் தேசிய இராணுவம் வெற்றிகொள்ளப்பட்டபோது மட்டக்களப்பு (மீன்பாடும்) வாவியெங்கும் நாட்கணக்கில் பிணங்கள் மிதந்தன. இதில் சுமார் 1800 கிழக்கு மாகாண இளைஞர்கள் கொன்றொழிக்கப்பட்டனர்.

7) புலிகளது முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் உக்கிரமானபோது காத்தான்குடிஇ ஏறாவ+ர்இ அழிஞ்சபொத்தானைஇ கிரான்குளம்இ ….. என்று சுமார் 700 வரையான கிழக்கு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

இவையனைத்தும் முஸ்லிம்கள் தமிழீழ கோரிக்கையிலிருந்து முழுமையாக வெளியேறும் வரையான கிழக்கு மாகாணத்தின் குறிப்பிடும்படியான விலைகொடுப்புகள் ஆகும். இந்தநேரத்தில் நான் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் புலிகள் செய்த மேற்படி கொலைகளினாலேயே கிழக்குப் பிரிப்புக்கான கோரிக்கை முன்னெடுக்கப்படுவதாக புலிகள்மீது பழியைப் போட்டுவிட்டு யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் கடந்தகால வரலாறு முழுவதையும் மூடிமறைக்கின்ற செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த படுகொலைகளுக்கு முன்பே முஸ்லிம்கள் மத்தியில் இருந்து தமிழீழத்தின் மீதான வெறுப்பு வெளிக்காட்டப்பட்ட செய்தி பொய்யானதொன்றல்ல. தமிழ் பேசும் மக்கள் எனும் கதையாடலில் இருந்து முஸ்லிம்கள் 1987 ஆம் ஆண்டுதொடக்கம் மெது மெதுவாக வெளியேறத் தொடங்கினர். 1987 ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் இந்த முஸ்லிம்கள் முழுமையாக ஓரங்கட்டப்பட்டதின் காரணமாக தமக்கான தனித்துவ அரசியல் கோரிக்கைகளை நோக்கி நடைபோடத்தொடங்கினர். காலஞ்சென்ற அஸ்ரப் அவர்களின் முழுமையான ஆளுமை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் அமைப்பினூடு அந்தக் கடமையை முஸ்லிம்களுக்காக செய்ய முன்வந்தது. இன்னிலைமைக்கு புலிகள் மட்டும் காரணமல்ல. இலங்கை இந்திய ஒப்பந்தத்தற்கு உடந்தையாக செயற்பட்ட அனைத்துவித தமிழ் அமைப்புகளுமே பொறுப்பெடுக்க வேண்டும். 1985 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் உருவான முதலாவது முஸ்லிம் கலவரத்தில் புளொட் முஸ்லிம்களுக்கு எதிராக தமது துப்பாக்கிகளை திருப்பியது. 1987 இல் வீரமுனையில் 22 முஸ்லிம்கள் ரெலோவினது தாக்குதலால் உயிரிழந்தார்கள். இந்திய அமைதிப்படை வெளியேறிய காலங்களில் ரி.என்.ஏ. என அழைக்கப்பட்ட மாகாணசபையை அடிப்படையாகக் கொண்ட தமிழ் இராணுவம் மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கெதிராக பல படுகொலைகளில் ஈடுபட்டிருந்தது. ஆகவே முஸ்லிம்களுக்கெதிரான இந்த நடவடிக்கைள் தனியோர் இயக்கத்தினதோ அல்லது புலிகளினதோ விசேடமான பண்பல்ல என்பதை நாங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். முஸ்லிம் எதிர்ப்புவாதம் என்பது யாழ்ப்பாணத்தில் வைசவேளாள கருத்தியலில் இருந்து உருவாவதாகும்.முஸ்லிம்களது தனித்துவமான அரசியல் போக்கினை அங்கீகரிக்க மறுத்த புலிகள் முஸ்லிம்களது இருப்பையே அச்சுறுத்தும் செயற்பாடுகளில் இறங்கினர். கிழக்கில் பள்ளிவாசல் படுகொலைகள், முஸ்லிம் கிராமங்கள் மீதான தாக்குதல்கள், வடக்கில் இருந்து ஒரு இலட்சம் முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டமை என்று 1990 ஆண்டு பாரியதொரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் புலிகள் இறங்கினர். இந்த ஆண்டுதான் புலிகளை ஒரு குறுந்தேசியவாதிகள் என்பதை விட பாஸிஸ்டுகாளாக இனங்காட்டியது. இதன்காரணமாக மொழி ரீதியில் தமிழ் பேசும் மக்களாய் இருந்தபோதும் மத அடையாளத்தைக் கொண்டு முஸ்லிம்களை புலிகள் வேறுபடுத்தினர். இதுவே முஸ்லிம்கள் தம்மை தமிழர்களாய் இருந்தபோதும் முஸ்லிம்கள் எனும் மத அடையாளத்தை முன்னிறுத்திய போராட்டப்பாதையில் செல்வதை துரிதப்படுத்தியது.
இதன்காரணமாக கிழக்குமாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் என்று தந்தை செல்வாவினால் பெயரிட்டு அழைக்கப்பட்ட மக்கள் கூட்டத்தில் சரிபாதியான முஸ்லிம் பிரிவினர் தமிழீழத்தின் பெயரில் தாம் ஏமாற முடியாது என்று முழுமையாக விலகிச் சென்றனர்.

இதன் பின்னரும் கிழக்கிலங்கை வாழ் (முஸ்லிம்கள் அல்லாத) தமிழர்கள் தமிழீழத்தில் நம்பிக்கை வைத்து 2004 ஆம் ஆண்டுவரை தமது முழுமையான பங்களிப்பை செலுத்தி வந்தனர். இதன் பின்னர் கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் இருதுருவங்களாக பிரிந்து வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஒருபுறம் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து அதில் முஸ்லிம்களையும் உள் – அடக்கிய தமிழீழத்தில் நம்பிக்கை கொண்டு போராட வேண்டிய நிலையில் கிழக்குவாழ் தமிழர்களின் தலைவிதியை புலிகள் தீர்மானித்தனர். மறுபுறம் முஸ்லிம்களோ தமிழீழத்தை மறுத்து தமது பலவிதமான தனித்துவக் கட்சிகளினூடாக முஸ்லிம்களுக்கான ஒரு தனி அலகு கிழக்கில் உருவாக்கப்படவேண்டும் எனும் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஜனநாயக வழிகளில் போராடினர். ஒன்றை ஒன்று மறுக்கின்ற இந்த இருவகையான கோரிக்கைகள் கிழக்கு வாழ் சமூகங்களிடையே மென்மேலும் விரிசல்களையே ஆழப்படுத்தியது. 1990 ஆண்டு கசப்புணர்வுகள் மறைந்துவிடாமல் குரோதங்களே கோலோச்சும் நிலை தொடர்ந்தது.புலிகளும் தமது படைப்பிரிவுகளை கிழக்கே நம்பியே விஸ்தரிக்க வேண்டி இருந்தமையால் கிழக்கு மாகாண தமிழர்களிடையே முஸ்லிம் எதிர்ப்புணர்வுகளையே தக்கவைக்கும் வகையிலேயே திட்டமிட்டு செயற்பட்டனர். “முஸ்லிம்கள் அரசினுடைய கைக்கூலிகள்”இ “சிங்களவர்களுடன் சேர்ந்து கிழக்கு மாகாணத்தை ஆக்கிரமிக்க போகிறார்கள்”இ “கிடைக்கப்போகின்ற தமிழீழத்தில் மட்டுமே கிழக்கு வாழ் தமிழர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதப் படுத்தப்பட முடியும்.” என்றவாறான கட்டுக்கதைகளை புலிகளின் பிரச்சார ஊடகங்கள் கிழக்கிலே பரப்பி அதில் வெற்றியும் கண்டனர். இதன்காரணமாகவே ஐ.P.மு.கு. வெளியேற்றத்தின் பின்னர் டு.வு.வு.நு. எனும் அமைப்பின் முதுகெலும்பாக கிழக்குப்போராளிகள் பரிணமித்தனர். இன்று புலிகள் பீற்றிக்கொள்கின்ற ஆனையிறவுஇ முல்லைத்தீவுஇ ஜெயசிகுறு என்கின்ற வெற்றிகள் கிழக்கு மாகாண இளைஞர்கள் இன்றி சாத்தியப்பட்டிருக்க முடியாது. இரண்டுவருடங்கள் தொடர்ச்சியாக நடந்த ஜெயசிக்குறு சமரில் பங்கெடுத்த போராளிகள் 7000 – 9000 ஆகும். இதில் ஜெயந்தன் படையணிஇ அன்பரசிப் படையணி போன்றவற்றில் இருந்து மட்டும் சுமார் 6000 போராளிகள் களத்தில் நின்றனர். புலிகளுக்கு மரபுவழிப்போர் நடத்தும் திறமை கொண்ட கெரில்லா அமைப்பு எனும் சான்றிதழ் சர்வதேச ரீதியாகக் கிடைப்பதற்கு இந்த சமரில் மட்டும் கிழக்கிலங்கை தமது 1090 இளம் உயிர்களை ஓமந்தை வீதிகளில் பலியிட்டது.

13 வது நாடாளுமன்றத் தேர்தல் – 2004

இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலிலும் தமிழீழத்திற்காக ஆணைகோருவதாக புலிகளின் முழு ஆதரவுடன் தமிழ் கூட்டமைப்பினர் போட்டியிட்டனர். இந்த தேர்தலிற்கு இரு மாதத்திற்கு முன்பாக மார்ச் -03 ல் புலிகளுக்குள் கிழக்கு பிளவு ஆனது இடம்பெற்றது. இப்பிளவு ஆனது மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களை அடிப்படையாககொண்டு போட்டியிட்ட கூட்டமைப்பு வேட்பாளர்களிடையேயும் கருத்தியல் ரீதியான பிளவை ஏற்படுத்தியிருந்தது. தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்கள்இ எதிர்ப்பவர்கள் என்று பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இறுதியில் பகிரங்கமாக தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக போட்டியிடுவதாக அறிவித்த யோசப் பரராசசிங்கம் 21940 வாக்குக்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். அதேவேளை தமிழ் தேசியவாதத்தை நிராகரித்தும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் அபிவிருத்தியே தமது இலக்கு என்று போட்டியிட்டோர் அமோக வெற்றியீட்டினர். சுமார் 3 லட்சம் (303928) வாக்காளர்களை கொண்ட மட்டக்களப்பில் சுமார் 1 1ஃ2 தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இடப்பட்டது. அதில் தமிழ் தேசியம் பெற்றுக்கொண்ட வாக்குகள் 25000 மட்டுமே. இது வீதாசார ரீதியாக வெறும் 8.2 மட்டுமேயாகும். பேரினவாத கட்சிகள் என்று சொல்லப்படுகின்ற ஜனநாயக மக்கள் சுதந்திர முன்னணி (26268) இ யு.என்.பி யும் (6151) இணைந்து 32419 வாக்குகளை பெற்றிருக்கின்றன. இவையனைத்தும் புலப்படுத்துவது எதனை? தமிழ் பேரினவாதஇ யாழ் மேலாதிக்க வாதிகளை விட சிங்கள பேரினவாதிகள் பரவாயில்லை எனும் முடிவுக்கு மட்டக்களப்பு மக்கள் வந்துள்ளமையைத்தான் இதே நிலைதான் அம்பாறை மற்றும் திருகோணமலையிலும் தமிழ்தேசியத்திற்கு ஏற்பட்டது. விரிவஞ்சி அவற்றை இங்கே தவிர்த்து கொள்ளுகின்றேன். இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ள மறுத்து எங்கோ இருந்துகொண்டு யாரோ சில தலைமைகள் கிழக்கு மாகாண மக்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பது இனிமேலாவது நிறுத்த வேண்டும்; 2004 மார்ச் மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவானது கிழக்கு மாகாணத்தில் இருந்த முஸ்லிம்கள் அல்லாத தமிழர்களையும் தமிழீழ தாயகக் கோட்பாட்டில் இருந்த இறுதிக்கட்ட நம்பிக்கையும் கைவிடச் செய்திருக்கிறது. . இன்றைய நிலையில் கிழக்கிலங்கையின் தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் தமிழீழத்துக்கு வெளியே தமது அரசியல் அபிலாசைகளை தேடத்தொடங்கியுள்ளனர். இந்நிலைமையானது கிழக்கு மாகாணத்தில் தமிழீழ தாயகக் கோட்பாட்டினுடைய பொருத்தப்பாட்டின் மீது பாரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. அதேவேளை சிறுபான்மை முஸ்லிம்களை மற்றய தமிழர்களின் எதிரிகளாகக் கட்டமைத்து அதனூடாக கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் அல்லாத தமிழர்களை தமிழீழத்தின் பக்கம் தக்கவைத்திருந்த நிலையும் முடிவுக்கு வந்துள்ளது. தமிழீழ ப+ச்சுத்தலில் இருந்து விடுபட்ட கிழக்கிலங்கை வாழ் மக்கள் எல்லோரும் தமது கால் நூற்றாண்டுகால தமிழீழம் எனும் கனவுலக வாழ்வில் இருந்து விடுபட்டு யதார்த்தம் குறித்து ஒருமித்து சிந்திக்கத் தலைப்பட்டுள்ளனர்.
இந்த வரலாற்றுப் பின்னணிகளின் ஊடாக குறிப்பாக சில அவதானங்களை எடுத்துக்காட்டி எனதுரையை முடிக்க விளைகிறேன்.

1) கிழக்கு மாகாணமானது வாய்மொழி வரலாறுகள் ஊடாகவும்இ எழுதப்பட்ட வரலாறுகள் ஊடாகவும் அறியப்பட்டிருக்கின்ற வரலாற்றுப் பின்புலத்தில் ஒருபோதும் யாழ்ப்பாணத்துடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என்பதாலும்;

2) அங்கு வாழும் மக்கள் தமது சமூக, பொருளாதார, கலாச்சார, பண்பாட்டு அம்சங்கள் அனைத்திலும் தனித்துவமான தேசவழமைகளை கைக்கொண்டு வருவதனாலும்

3) கிழக்கில் தமிழ், முஸ்லிம், சிங்கள, பறங்கியர் என்று தனியொரு மொழியினருக்கோ, இனத்தினருக்கோ, மதத்தினருக்கோ மட்டும் உரிமைகோர முடியாதவாறு ஒரு பன்மைத்துவ மக்கள் கூட்டம் ஐக்கியமாக வாழ்நது வந்திருப்பதனாலும்

4) 1977, 1989, 2004 போன்ற முக்கிய தேர்தல்களில் யாழ்ப்பாணத் தலைமைகளையும் அவர்களது கோரிக்கைகளையும், அவர்களது பிரதிநிதிகளையும் கிழக்குமக்களில் பெரும்பான்யோர் நிராகரித்து வந்துள்ளமையினாலும்

5) இவற்றைக் கருத்தில் எடுக்காத வகையில் கிழக்கு மண்ணுக்கு பொருந்தாத ஒரு தமிழ்த் தேசியம் எனும் ஒற்றை அடையாளம் அங்கு திணிக்கப்பட்டமையினாலேயே வரலாற்றில் என்றும் இல்லாதவாறான இரத்த ஆறு எங்கள் பள்ளிவாசல்களிலும்இ எங்கள் எல்லைக் கிராமங்களிலும்இ எங்கள் வெருகல் ஆற்றிலும் ஓட நேர்ந்தது என்பதாலும்

6) கடந்த நூற்றாண்டு முழுக்கவும் இந்த நூற்றாண்டிலும் தொடர்ந்து வருகின்ற எல்லாவிதமான யாழ்ப்பாண தலைமைகளும் கிழக்குமாகாணத்துக்கு தீங்கிழைத்துஇ மட்டம் தட்டி எமது உரிமைகளை நாமே தீர்மானித்துக்கொள்ள முடியாதவாறு தடையாக இருந்து வருவதனாலும்

7) கிழக்கில் அமைதியும் சமூக நல்லிணக்கவும் பேணப்பட்டு மீண்டும் அங்கு ஒரு சமாதான சகவாழ்வு ஏற்பட வேண்டுமானால் அது கிழக்கு மாகாணத்தின் அரசியல் தலைவிதியை அங்கு வாழும் மக்களே தீர்மானிக்கும் நிலை ஒன்று ஏற்படுவதனாலேயே சாத்தியமாகும். அதுவே இலங்கை தேசத்திலும் இனக்குரோதங்கள் மறைந்து மீண்டும் சமாதானம் நிலவ முன்நிபந்தனையும், முன்னுதாரணமாகவும் அமைய முடியும்.

இலங்கையின் ஆகவே இனச்சிக்கலுக்கு தீர்வைநாடி நடத்தப்படப் போகின்ற எந்தவொரு பேச்சு வார்த்தை மேடையிலும் கிழக்கு மாகாணத்தின் பிரதிநிதிகளுக்கு சம அந்தஸ்தை வழங்குகின்ற ஒரு முத்தரப்பு பேச்சுவார்தையே பொருத்தமானதொன்றாக இருக்கும். அதேபோன்று எடுக்கப்படுகின்ற எந்வொரு தீர்விலும் வடக்கை வடக்காகவும்இ கிழக்கை கிழக்காகவும் கொண்ட தனித்தனி அலகுகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

அடிக்குறிப்புகள்

1 – மட்டக்களப்பு தமிழகம் பக்:398 (வீ.சி.கந்தையா)
2 – யாழ்ப்பாண சரித்திரம் பக்:07 (ஆ.முத்துதம்பிபிள்ளை)
3 – மட்டக்களப்பு தமிழகம் பக்:401 (வீ.சி.கந்தையா)
4 – கரவாகு வரலாறு பக்:04 (எம்.எம்.காசீம்)
5 – மட்டக்களப்பு மாண்மீகம் பக்:52இ பக்:55 (எவ்.எக்ஸ்.சி.நடராசா)
6 – யாழ்;பாண சரித்திரம் பக்:36 (ஆ.முத்துதம்பிபிள்ளை)
7 – கரவாகு வரலாறு பக்:05 (எம்.எம்.காசீம்)
8 – மாகோன்வரலாறு பக்:127 (தங்கேஸ்வரி கந்தையா)
9 – ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சனைகள் ஐஏ பக்:220 (அ.முகமது சமீம்)
10 – இலங்கை தமிழர் தேசவழமைகளும் சமூக வழமைகளும் பக்:257 (சி.பத்மநாதன்)
11 – இலங்கை தமிழர் தேசவழமைகளும் சமூக வழமைகளும் பக்:06 (சி.பத்மநாதன்)
12 – “மற்றது” சஞ்சிகைஇ இதழ்-01 பக்:38 (எம்.ஆர்.ஸ்ராலின்)
13 – இலங்கை தமிழ் தேசியவாதம் அதன் ஆரம்பதோற்றம் பற்றியதோர் ஆய்வு பக்:315 (கலாநிதி முருகர் குணசிங்கம்)
14 – “மற்றது” சஞ்சிகைஇ இதழ்-02 பக்-62 (எம்.ஆர்.ஸ்ராலின்)

பிரசுர வெளியீடு : “ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி.
நன்றி www.thuuu.net
read more...

திருந்தாத ஜென்மங்கள்

மக்களை நல்வழிப்படுத்துகின்ற, மக்களை ஒற்றுமைப் படுத்துகின்றவர்களே அதற்கு எதிராக செயற்பட்டு வருவது மிகவும் கவலைக்குரிய விடயமே. 


கடவுள் மீது அதிக  நம்பிக்கையும் சமயப்பற்றும் கொண்ட நான்  சில ஆலயங்கள், அதனோடு சார்ந்த சிலர் செய்கின்ற நடவடிக்கைகள், மூட நம்பிக்கைகள் என்பவற்றை முற்றாக வெறுக்கின்றேன். 


கடவுள் எனக்கு மாளிகைபோல் கோவில் கட்ட வேண்டும். ஆடம்பரமாக திருவிழாக்கள் செய்யவேண்டும் அப்போதுதான் நான் எல்லோருக்கும் வரம் தருவேன் என்று சொல்லவில்லை. ஆனால் மக்களின் பணத்தினைப் பெற்று தேவையற்ற ஆடம்பரங்களையும், செலவுகளையும் சிலர் செய்து வருவது கவலைக்குரியது.

எனது கிராமத்திலே பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றிலே திருவிழா நடைபெற்று வருகின்றது அங்கே நடைபெறுகின்ற விடயங்கள் மிகவும் கவலைப்படவேண்டிய விடயமாக இருக்கின்றது. 

திருவிழா நடைபெறுகின்றபோது பல்வேறுபட்ட ஆடம்பரங்கள் மூலம் அதிகம் செலவு செய்யப்படுவதை காண முடிகின்றது.  உதாரணமாக அதிகமான பணம் கொடுத்து  வாணவேடிக்கைகள் வாங்கப்படுகின்றது. பணம் வீணடிக்கப்படுகின்றது.  இந்தப் பணத்தை உணவின்றி கஸ்ரப்படுகின்ற எத்தனையோ பேருக்கு ஒரு வேலை உணவுக்காவது பயன் மடுத்தலாம். 


இது ஒரு புறமிருக்க இங்கே ஆடம்பரங்களுக்காக செலவு செய்யப்படுகின்ற இந்தப் பணம் எங்கிருந்து வந்தது. இக்கிராமத்திலே இருக்கின்ற ஒவ்வொரு குடும்பத்திலும் பணம் அறவிடப்படுகின்றது. பல குடும்பங்கள் அன்றாட சாப்பாட்டுக்கே வழியின்றி இருக்கும்போது பணம் கொடுத்திருக்கின்றனர். அவர்களின் பனமும் இங்கே வீணாக்கப்படுகின்றது. 

இன்று நடந்த ஒரு சம்பவம். சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்த ஆலயத்திலே தீர்த்தோற்சவ தினத்தன்று  ஆலயத்துக்கு வருகின்ற பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்குரிய ஏற்பாடுகளையும் செய்தபொழுது வழமையாக ஆலயத்திலே அன்னதானம் கொடுக்கின்ற ஒரு அமைப்பு நீங்கள் அன்னதானம் கொடுக்கக் கூடாது நாங்கள் மட்டும்தான் இங்கே அன்னதானம் கொடுப்போம் என்று  சொல்லியிருக்கின்றார்கள். 


ஆலயத்திலே அன்னதானம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நண்பர்கள் இது தொடர்பாக ஆலய நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டபோது ஆலய நிர்வாகம் அவர்கள் மட்டும்தான் அன்னதானம் கொடுக்கவேண்டும் வேறு எவரும் இங்கே கொடுக்க வேண்டாம் என்று சொல்லப்பட்டது. 


இது தொடர்பில் இன்று ஆலய நிர்வாகத்தோடு சம்மந்தப் பட்டவர்களோடும் நான் வாக்குவாதப் பட்டும் வேறு எவரும் இந்த ஆலயத்திலே அன்னதானம் கொடுக்கக் கூடாது என்றுதான் ஆலயத்தின் பரிபாலன சபைத்தலைவரே சொல்லிவிட்டார்.  


இந்த ஆலயத்தைப் பொறுத்தவரை பல இடங்களில் இருந்தும் மக்கள் வருகின்ற ஒரு ஆலயம் பலருடைய பக்களிப்பும் இருக்கின்ற ஆலயம். அந்த ஆலயத்துக்கு ஒரு பக்தனால் அன்னதானம்  வழங்க தடை விதிக்கின்ற ஆலய நிர்வாக சபை எல்லாம் தேவையா? எதற்கு அந்த ஆலயம்?  





read more...

Wednesday 21 July 2010

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற செம்மொழி விழாவும் சில விமர்சனங்களும்.



கிழக்கு  மாகாண  செம்மொழி விழா முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் சிரார்த்த தினமான நேற்று (20 .07 .2010 ) சுவாமி விபுலானந்தர் பிறந்த இடமான காரைதீவிலே இடம்பெற்றது.

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியிலே இடம்பெற்ற இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அழைக்கப்பட்டிருந்ததோடு.  பல கல்வியாளர்களும், புத்திஜீவிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பல கலை, கலாசாரம் சார்ந்த நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்ததோடு.  இவ்விழா சிறப்பாக இடம்பெற்றதை இட்டு பலரும்  ஏற்பாட்டாளர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர். உண்மையாகவே இவ்விழா மிகவும் சிறப்பான முறையிலே இடம்பெற்றது.


இவ்விழாவுக்கு வருகை தந்திருந்த பிரமுகர்களை நீலாவணையில் இருந்து தமிழர் கலை, கலாசார, பாரம்பரியங்கள் சார்ந்த நிகழ்வுகளோடு அலங்கார ஊர்த்திகள்சகிதம் காரைதீவு மத்திய கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

காலைமுதல் இரவுவரை இடம்பெற்ற இவ்விழாவிலே எல்லோராலும் பாராட்டப்படவேண்டிய விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன என்று இதில் கலந்து கொண்டவர்கள் பாராட்டுகின்றனர்.

இது ஒரு புறமிருக்க இவ்விழா தொடர்பிலே பல குற்றச்சாட்டுக்களை அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பியசேன உடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.

 அவர் தன்னுடைய கருத்திலே இவ்விழாவிற்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை ஆனால் இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டவர் எந்த விதத்திலும் இவ்விழாவிற்கு தகுதி அற்றவர் என்றும் குற்றம் சாட்டி இருக்கின்றார். தாங்கள் இவ்விழாவிற்கு அழைக்கப்படாதது திட்டமிட்ட சதி என்றும் மக்கள் மத்தியிலே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு இல்லை என்பதனை எடுத்துக்காட்டும் நோக்கோடு ஏற்பாட்டாளர்கள் செய்த சதி என்றும் தெரிவித்திருக்கின்றார்.

இவரது குற்ற சாட்டுக்கள் நியாயமற்றது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் ஊடகப்பிரிவு ஒரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கின்றது அதனை அப்படியே தருகின்றேன்.


கிழக்கு மாகாணத்தில் மிக விமர்சையாக நடைபெற்ற முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் நினைவு ஏற்பாடாக கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தமிழ் செம்மொழி தினவிழா குறித்து அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ பியசேன அவர்கள் இன்றைய (20.07.2010) சுடர்ஒளி பத்திரிகையில் தெரிவித்திருக்கும் விமர்சனமானது அவரது அரசியல் சமூகம் சார்ந்த அறிவு குறித்த மந்தப் போக்கினையே வெளிக்காட்டுகின்றது.

உரிய முறையில் அறியப்படாமல் நிகழ்வின் நோக்கம் எற்பாட்டாளர்கள் குறித்த பொதிய தெளிவில்லாமல் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் விமர்சனம் அமைந்திருப்பது கவலை தரும் விடயமாகும். தமிழ் மொழி நிகழ்வானது முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் நினைவாக தமிழ் மொழியின் பெருமையினையும் அதன் தொன்மையினையும் வெளிப்படுத்தும் நோக்கில் எற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியல் சாரா நிகழ்வாகும். தமிழ் மொழியின் சீரும் சிறபபும்தான் இவ் விழாவின் மையமாக அமைந்திருந்தது. எனவே தமிழ் மொழி குறித்த பற்றுக் கொண்டவர்களும் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களுமே இதில் பங்காற்ற முடியும். தமிழ் மொழி அறிவு குறித்த போதிய அறிவில்லாத அதன் தொன்மை பாரம்பரியம் வரலாறு சிறப்பு குறித்த பூரண விளக்கமில்லாத ஒரு நபர் அம் மாநாடு குறித்தும் அதில் கலந்துகொண்டோர் குறித்தும் விமர்சிக்க தகுதியற்றவர்.

தமிழ் மொழி தினமானது தமிழ் மொழியின் பெருமையினை இலங்கையில் வேரூன்றச் செய்ய வேண்டும் என்ற நோக்கிலும் சுவாமி விபுலானந்தர் கல்விக்கு ஆற்றிய செவையினை மெச்சும் முகமாகவும் கிழக்க மாகாண முதலமைச்சர் கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்வி மொழி தொடர்பான நிகழ்வில் பக்கச் கார்பில்லாமல் அதற்குரிய மகத்துவத்துடன் நடைபெற வேண்டும் என்பதே ஏற்பாட்டுக் குழுவினரது நோக்கமாக இருந்தது. அதற்கிணங்கவே புத்திஜீவிகளும் தமிழ் ஆர்வலர்களும் கல்விமான்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுகின்ற ஒரு நிகழ்வு என்ற அடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் நிருவாகங்களுக்கு பொறுப்பாக உள்ள கெளரவ முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். ஏனெனில் இத் தமிழ் செம்மொழியானது வீரியத்துடன் இடம்பெற வேண்டுமாக இருந்தால் முதலமைச்சரின் பிரசன்னமானது தலையாயதாகும். எனவேதான் ஏற்பாட்டுக் குழுவினரால் முதலமைச்சரின் தலைமையில் பத்திஜிவிகளையும் தமிழ் ஆர்வலர்களையும் கொண்டு அவ்விழா சிறப்பாக நடந்து முடிந்திருக்கின்றது. தமிழில் பற்றுக் கொண்டவர்கள் தமிழ் தாய்மீது வற்றா அன்பு கொண்டவர்களும் இதற்காக பெருமைப்பட வேண்டுமே தவிர இதனை விமர்சிப்பதானது குறுகிய அரசியல் நோக்கங்களுக்கானதே ஆகும். அதை விமர்சிப்பதன் மூலம் இவர்கள் தமிழ் மக்கள் மீதும் தமிழ் மொழி மீதும் கொண்டுள்ள வண்மம் நன்கு வெளிப்படுகின்றது.

இந் நிகழ்வில் மதலமைச்சரின் பிரசன்னத்துடன் கலந்து கொண்ட கல்வியாளர்கள் புத்திஜீவிகள் தமிழ் பற்றுக் கொண்டவர்களை ஏற்பாட்டுக் குழுவினர் மனதார ஏற்று பெருமிதம் அடைந்தார்கள். இந் நிலையில் இவ் விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டதனை விமர்சிப்பதன் மூலம் தமிழையும் தமிழ் மொழிமீது பற்றுக் கொண்டவர்களையும் கலந்து கொண்ட அறிஞர்களையும் ஏற்பாட்டாளர்களான மாகாண கல்வித் திணைக்களத்தினையும் அவமதிக்கும் செயலாகும்.

இவ்வாறான விமர்சனங்களை தெரிவிக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ பியசேன அவர்கள் தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் எந்தளவு சேவையினை ஆற்றியிருக்கின்றார். என்பதனை எம் தமிழ் மக்கள் நன்கு அறிவர்.

என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

 என்னைப் பொறுத்தவரை வீண் குற்ற சாட்டுக்களை  தவிர்த்து தமிழ் மொழியில் பற்றுள்ள எவரும் இவ்விழாவில் கலந்திருக்கலாம்.


















read more...